என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "airspace closed"

    • பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.
    • இந்திய விமான நிறுவனங்களுக்கான வான்வெளித் தடையை பாகிஸ்தான் செப்டம்பர் 23 வரை நீட்டித்தது.

    இஸ்லாமாபாத்:

    பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக கடந்த மே 7 அன்று இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் தொடர்ச்சியாக இரு நாடுகளும் மோதலில் ஈடுபட்டன. மே 9 அன்று பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டப்பட்டது.

    பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவின் வான்வெளியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. பாகிஸ்தானும் தங்கள் வான்வெளியை பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு தடை விதித்தது.

    இந்நிலையில், இந்திய விமான நிறுவனங்களுக்கான தனது வான்வெளித் தடையை செப்டம்பர் 23 வரை பாகிஸ்தான் நீட்டித்துள்ளது.

    • பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்க இந்தியா சிந்து நதி நீரை நிறுத்தியது.
    • பாகிஸ்தான் பாராளுமன்ற கூட்டத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இந்தியாவுடன் மோதல் போக்கை கொண்டுள்ள பாகிஸ்தான் இரண்டு மாதங்களில் 127 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்க இந்தியா சிந்து நதி நீரை நிறுத்தியது.

    அதைத்தொடர்ந்து பாகிஸ்தான் இந்திய விமானங்கள் பயன்படுத்த முடியாதபடி அதன் வான்வெளியை மூடியது.

    இந்திய விமானங்கள் இயக்கப்படாததால் ஏப்ரல் 24 முதல் ஜூன் 30 வரை பாகிஸ்தான் 127 கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது.

    பாகிஸ்தான் பாராளுமன்ற கூட்டத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.  இழப்புகள் இருந்த போதிலும் பாகிஸ்தான் விமான நிலைய ஆணையத்தின் ஒட்டுமொத்த வருவாய் 2019 இல் 508,000 டாலரிலிருந்து 2025 இல் 760,000 டாலராக அதிகரித்துள்ளது.

    • இந்திய விமான நிறுவனங்களுக்கான தனது வான்வெளித் தடையை ஆகஸ்ட் 24 வரை நீட்டித்தது.
    • அமைச்சர் முரளிதர் மோஹோல் அறிவித்தார்.

    பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக மே 7 அன்று இந்தியா ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் தொடர்ச்சியாக இரு நாடுகளும் மோதலில் ஈடுபட்டன. மே 9 அன்று பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டப்பட்டது.

    பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவின் வான்வெளியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. பாகிஸ்தானும் தங்கள் வான்வெளியை பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு தடை விதித்தது. அண்மையில் பாகிஸ்தான் ஏற்கனவே இந்திய விமான நிறுவனங்களுக்கான தனது வான்வெளித் தடையை ஆகஸ்ட் 24 வரை நீட்டித்தது.

    இந்நிலையில் இந்தியாவும் பாகிஸ்தான் விமானங்களுக்கான தடையை மேலும் 1 மாதம் நீட்டித்துள்ளது.

    மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் மோஹோல் வெளியிட்ட எக்ஸ் பதிவில் "பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் நுழைவதற்கான அதிகாரப்பூர்வ தடை 2025 ஆகஸ்ட் 23 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு தற்போதைய பாதுகாப்பு நெறிமுறைகளை பிரதிபலிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

    • 12 நாள் மோதலுக்குப் பிறகு, இரு தரப்பிற்கும் இடையே செவ்வாய்க்கிழமை போர் நிறுத்தம் எட்டப்பட்டது.
    • பாதுகாப்பு மதிப்பீடுகள் முடிந்ததைத் தொடர்ந்து வான்வெளியை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஈரான் தனது மத்திய மற்றும் மேற்குப் வான்வெளியை சர்வதேச விமானங்களுக்காக மீண்டும் திறந்துள்ளதாக அதன் சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

    ஈரானின் டெஹ்ரான் மற்றும் பிற பகுதிகளில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து ஜூன் 13 அன்று ஈரான் தனது வான்வெளியை மூடியது. 12 நாள் மோதலுக்குப் பிறகு, இரு தரப்பிற்கும் இடையே செவ்வாய்க்கிழமை போர் நிறுத்தம் எட்டப்பட்டது.

    இந்நிலையில் ஈரானிய சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் (CAO) ஒப்புதல் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளின் பாதுகாப்பு மதிப்பீடுகள் முடிந்ததைத் தொடர்ந்து வான்வெளியை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    முன்னதாக, நாட்டின் கிழக்குப் பகுதி வான்வெளியை உள்நாட்டு, சர்வதேச மற்றும் கடந்து செல்லும் விமானங்களுக்காக ஈரான் திறந்துவிட்டது.

    இருப்பினும், வடக்கு, தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் உள்ள ஈரானிய விமான நிலையங்களில் இருந்து எந்த விமானமும் தரையிறங்கவோ அல்லது புறப்படவோ அனுமதிக்கப்படவில்லை. இந்த பகுதிகள் ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரம் 2:00 வரை மூடப்பட்டிருக்கும் CAO தெரிவித்துள்ளது. 

    தொழில்நுட்ப கோளாறு காரணமாக தனது வான் போக்குவரத்து எல்லையை பெல்ஜியம் மூடியதால், பல விமானங்கள் வேறு பாதைக்கு திரும்பி விடப்பட்டுள்ளன. #Belgium
    பிரசெல்ஸ்:

    ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தின் விமான போக்குவரத்து சர்வரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரனமாக வழக்கமான பணிகள் முடங்கின. விமானம் வருகை, புறப்பாடு குறித்த தகவல்களை பார்க்க முடியாத காரணத்தால் தனது வான் போக்குவரத்து எல்லையை தற்காலிகமாக மூடுவதாக பெல்ஜியம் அறிவித்துள்ளது.

    இதனால், விமானங்கள் புறப்படமுடியாமல் மற்றும் தரையிறங்க முடியாத நிலை உள்ளது. மேலும், பெல்ஜியத்தின் வான் எல்லையை பயன்படுத்தும் விமானங்களும் வேறு பாதைக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 
    ×