என் மலர்
நீங்கள் தேடியது "flights"
- பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்க இந்தியா சிந்து நதி நீரை நிறுத்தியது.
- பாகிஸ்தான் பாராளுமன்ற கூட்டத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவுடன் மோதல் போக்கை கொண்டுள்ள பாகிஸ்தான் இரண்டு மாதங்களில் 127 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்க இந்தியா சிந்து நதி நீரை நிறுத்தியது.
அதைத்தொடர்ந்து பாகிஸ்தான் இந்திய விமானங்கள் பயன்படுத்த முடியாதபடி அதன் வான்வெளியை மூடியது.
இந்திய விமானங்கள் இயக்கப்படாததால் ஏப்ரல் 24 முதல் ஜூன் 30 வரை பாகிஸ்தான் 127 கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது.
பாகிஸ்தான் பாராளுமன்ற கூட்டத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இழப்புகள் இருந்த போதிலும் பாகிஸ்தான் விமான நிலைய ஆணையத்தின் ஒட்டுமொத்த வருவாய் 2019 இல் 508,000 டாலரிலிருந்து 2025 இல் 760,000 டாலராக அதிகரித்துள்ளது.
- ஒரு நாளைக்கு சுமார் 400 முதல் 500 குண்டு பட்டாசுகளும், 100 ராக்கெட் பட்டாசுகளும் வெடிக்கப்படுகிறது.
- ஒரு நாளைக்கு பட்டாசு வெடிக்க மட்டும் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் செலவு செய்யப்படுகிறது.
திருவனந்தபுரம்:
திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம், அரபிக்கடலோரத்தில் அமைந்துள்ளது. பீமா பள்ளி முதல் சங்கு முகம் வரையில் உள்ள மீனவ கிராம பகுதியில் இந்த விமான நிலையம் உள்ளதால், இங்கு மீன்களை இரையாக தேடி வரும் பறவைகளின் தொல்லை அதிகம். இதன் காரணமாக விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்படும் போதும், விமானங்கள் வந்து இறங்கும் போதும் கூட்டம் கூட்டமாக பறந்து திரியும் பறவைகளால் தினமும் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. கடந்த ஒரு வருடத்தில் பறவைகள் மோதி 10 விமானங்களுக்கு மேல் சேதம் ஏற்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன.
பறவைகளின் அச்சுறுத்தலை கட்டுப்படுத்தும் வகையில் விமான நிலையத்தின் நாலாபுறமும் சுமார் 12 இடங்களில், அவ்வப்போது அதி சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க செய்து பறவைகளை விரட்டியடித்து வருகிறார்கள். விமானங்கள், தரை இறங்குவதற்கும், புறப்படுவதற்கும் முன்பாக இந்த பட்டாசுகள் முழங்கும். சில நேரங்களில், வானில் சென்று வெடிக்கும் பட்டாசுகளும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு நாளைக்கு சுமார் 400 முதல் 500 குண்டு பட்டாசுகளும், 100 ராக்கெட் பட்டாசுகளும் வெடிக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு பட்டாசு வெடிக்க மட்டும் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் செலவு செய்யப்படுகிறது.
அதாவது ஆண்டுக்கு சராசரியாக ரூ.12 கோடிக்கு பட்டாசுகள் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வெடிக்கப்படுகிறது. இது தவிர பட்டாசு வெடிக்கும் பணிக்கு 30 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களது மாத சம்பளம் ரூ.24 ஆயிரம் ஆகும். சம்பள வகையில் மட்டும் மாதம் ரூ.7 லட்சத்து 20 ஆயிரம் செலவு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
- கடந்த சில நாட்களாக ஏர் இந்தியா விமானங்கள் ரத்துசெய்யப்பட்டு வருகின்றன.
- பயணிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஏர் இந்தியா மேற்கொள்ளும்.
புதுடெல்லி:
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 12-ந்தேதி லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அதில், விமானத்தில் பயணம் செய்த 241 பேரும், விபத்து பகுதியில் இருந்த 29 பேரும் பலியானார்கள்.
இதையடுத்து, கடந்த சில நாட்களாக ஏர் இந்தியா விமானங்கள் ரத்துசெய்யப்பட்டு வருகின்றன. கடந்த ஜூன் 17-ம் தேதி ஏர் இந்தியாவின் 6 சர்வதேச விமானங்கள் ரத்துசெய்யப்பட்டன. கடந்த 6 நாட்களில் மட்டும் 83 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஏர் இந்தியா சர்வதேச சேவைகளை 15 சதவீதம் குறைக்க முடிவு செய்துள்ளது.
விமானச் செயல்பாடுகளின் நம்பகத்தன்மையை மற்றும் சிறந்த செயல்திறனை உறுதி செய்வதற்கும் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நடவடிக்கை ஜூன் 20 முதல் குறைந்தபட்சம் ஜூலை 15-ம் தேதி வரை தொடரும். சேவை குறைப்பால் பாதிக்கப்படும் பயணிகளிடம் ஏர் இந்தியா மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது.
பயணிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஏர் இந்தியா மேற்கொள்ளும். திருத்தப்பட்ட புதிய அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.
- பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
- ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து பாதுகாப்பு அமைச்சகம் இன்று விளக்கம அளிக்கவுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. கோட்லி, பஹவல்பூர், முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது நடத்தப்படவில்லை என இந்திய ராணுவம் உறுதிப்படுத்தியது.
இன்று காலை 10 மணிக்கு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து செய்தியாளர் சந்திப்பை நடத்தி விளக்கம் அளிக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்ற சூழலால், ஜம்மு, ஸ்ரீநகர், லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், ஜாம் நகர், சண்டிகர், ராஜ்கோட் உள்ளிட்ட இடங்களில் ஏர் இந்தியா விமானங்கள் பிற்பகல் வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், போர் பதற்றம் காரணமாக காஷ்மீரில் உள்ள 5 எல்லை மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு, சம்பா, கதுவா, ரஜோரி, பூஞ்ச்சில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை இன்று மூட உத்தரவிடபட்டுள்ளது. அதன்படி இந்த 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
- பெங்களூருவில் நேற்று மாலையில் திடீரென்று மழை பெய்தது.
- பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 14 விமானங்கள் நேற்றிரவு சென்னைக்கு திருப்பி விடப்பட்டன.
பெங்களூரு:
பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்தநிலையில் 11 மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. பெங்களூருவை பொறுத்தவரையில் 93 சதவீதத்திற்கு மேல் பதிவாகி வருகிறது. இதனால் காலை முதல் மதியம் வரை வெயில் வறுத்தெடுக்கிறது. ஆனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்து மக்களை குளிர்வித்து வருகிறது.
அதன்படி நேற்று பெங்களூரு நகரில் 93.56 சதவீதம் வெயில் பதிவாகி இருந்தது. இதனால் காலை முதல் மதியம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த வெயிலால் மக்கள் வெளியே நடமாட முடியாத நிலை ஏற்பட்டது.
பெங்களூருவில் நேற்று மாலையில் திடீரென்று மழை பெய்தது. சூறைக்காற்றுடன் பெய்த இந்த மழையால் மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன.
கன மழையால் இரவு நேரங்களில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி விட்டு ஊழியர்கள், அதிகாரிகள் தங்களது வாகனங்களில் வீட்டுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். பெங்களூருவில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்தநிலையில் பெங்களூருவில் பெய்த பலத்த கனமழை, மோசமான வானிலை காரணமாக பெங்களூருவில் விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 14 விமானங்கள் நேற்றிரவு சென்னைக்கு திருப்பி விடப்பட்டன. வெளிநாட்டு, உள்நாட்டு விமானங்கள் நேற்றிரவு சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கின.
5 வெளிநாட்டு விமானங்கள், 8 உள்நாட்டு விமானங்கள் மற்றும் ஒரு கார்கோ விமானம் சென்னையில் தரையிறங்கின. பின்னர் பெங்களூருவில் வானிலை சீரடைந்ததும் இன்று அதிகாலை 3 மணிக்கு அந்த விமானங்கள் புறப்பட்டுச் சென்றன.
- கொல்கத்தா விமான நிலையத்தில் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
- இன்று மதியம் முதல் நாளை காலை 9 மணி வரை விமான சேவை நிறுத்தம்.
வங்கக்கடலில் உருவான ரீமால் புயல், அதி தீவிர புயலாக வலுவடைந்த நிலையில் இன்று இரவு மேற்குவங்கம் சாகர் தீவுகளுக்கும், வங்கதேசத்தின் கெபுபாராவுக்கு இடையே கரையை கடக்க உள்ளது.
இந்நிலையில், ரீமால் புயல் எதிரொலியாக கொல்கத்தா விமான நிலையத்தில் விமான சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதனால், கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் சர்வதேச என 394 விமானங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று மதியம் முதல் நாளை காலை 9 மணி வரை விமான சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா விமான நிலையத்தில் தங்களின் செயல்பாடுகளை நிறுத்துவதாக விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளது.
- தேங்காய் தென்னிந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
- விமான நிலைய விதிமுறைகள் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
விமானப் பயணத்தின்போது நம்முடன் எடுத்துச் செல்லும் பொருட்களுக்கு விமான நிறுவனங்கள் சில நிபந்தனைகளை விதிக்கின்றன. விமானத்தில் பயணம் செய்யும்போது நாம் சில விதிகளை பின்பற்ற வேண்டும். விமானத்தில் ஏறும்போது எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படாத பல விஷயங்கள் உள்ளன.
கூர்மையான ஆயுதங்கள், துப்பாக்கிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் உட்பட பல பொருட்களை விமானத்தில் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. இது தவிர, தேங்காய் விமானத்தில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தேங்காய் தென்னிந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் விமானத்தில் தேங்காய் கொண்டு செல்ல அனுமதி இல்லை.
இதற்கு ஒரு முக்கிய காரணம், தேங்காயில் அதிக அளவு எண்ணெய் உள்ளது. இந்த எண்ணெய் எரியக்கூடிய பொருளாக வகைப்படுத்தப்பட்டு இருக்கிறது. எனவே, பாதுகாப்பு காரணங்களுக்காக விமானத்தில் தேங்காய் கொண்டு செல்ல அனுமதி இல்லை.
விமான நிலைய விதிமுறைகள் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு நடவடிக்கைகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதுவரை பயணிகள் தங்கள் கைப்பையில் மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். இருப்பினும், புதிய விதிமுறைகள் இப்போது சில மருந்துகளை துபாய்க்கு விமானங்களில் எடுத்துச் செல்வதைத் தடை செய்துள்ளன.
இந்த மருந்துகள் குறித்த மாற்றங்கள் பயணிகள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி அனுமதிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே பேக் செய்வதை உறுதிசெய்ய வேண்டும்.
- உள்நாட்டு விமானங்களின் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
- சென்னை - கோவை இடையே விமான டிக்கெட் கட்டணம் ரூ.3,290-ல் இருந்து ரூ.10,996-ஆக அதிகரித்துள்ளது.
சென்னை:
ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை ஒட்டி சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுத்து வரும் நிலையில், சென்னையில் உள்நாட்டு விமானங்களின் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, கோவை, சேலம், தூத்துக்குடி செல்லும் விமானங்களின் டிக்கெட் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது நவரத்திரி, ஆயுத பூஜை, விஜயதசமி போன்ற தொடர் விடுமுறைகள் காரணமாக சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் உள்நாட்டு விமானங்களின் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை - மதுரை வழக்கமான விமான கட்டணம் ரூ.4,200 என இருந்த நிலையில் தற்போது ரூ.12,026-லிருந்து ரூ.18,626-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை - தூத்துக்குடி விமான டிக்கெட் கட்டணம் ரூ.5006-ல் இருந்து ரூ.11,736 முதல் ரூ.13,626 வரை அதிகரித்துள்ளது.
சென்னை - கோவை இடையே விமான டிக்கெட் கட்டணம் ரூ.3,290-ல் இருந்து ரூ.10,996-ஆக அதிகரித்துள்ளது.
சென்னை - சேலம் இடையே வழக்கமான டிக்கெட் கட்டணம் ரூ.3317-ல் இருந்து 10,792-ஆக அதிகரித்துள்ளது.
தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்பவர்களை குறிவைத்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
- இ-மெயில் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக இதுபோன்ற மிரட்டல்கள் விடுக்கப்படுவது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
- துபாயில் இருந்து ஜெய்ப்பூருக்கு நேற்று நள்ளிரவு 189 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டு வந்தது.
புதுடெல்லி:
நாடு முழுவதும் சமீப காலமாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 40 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த விமானங்களில் சோதனை நடத்தப்பட்டபோது அவை புரளி என்பது தெரியவந்தது.
இ-மெயில் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக இதுபோன்ற மிரட்டல்கள் விடுக்கப்படுவது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுபோன்ற மிரட்டல்களை தடுப்பதற்காக கடும் சட்டம் இயற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக இதுபோன்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைதாகும் குற்றவாளிகளை விமானத்தில் பறக்க தடை விதிப்பது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் மேலும் 2 விமானங்களுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் இருந்து லண்டனுக்கு நேற்றிரவு விஸ்தாரா விமானம் புறப்பட்டு சென்றது.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக விமான போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் வந்தது.
இதனால் சுதாரித்துக்கொண்ட அதிகாரிகள் விமானிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அந்த விமானத்தை நள்ளிரவு 12.40 மணி அளவில் ஜெர்மனியில் உள்ள பிராங்பர்ட் விமான நிலையத்தில் தரை இறக்க முடிவு செய்தனர்.
அதன்படி பிராங்பர்ட் விமான நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த விமானம் அங்கு தரையிறக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இதில், விமானத்தில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதும், மிரட்டல் வெறும் புரளி என்பதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து விமானம் 2½ மணி நேரம் தாமதமாக லண்டனுக்கு புறப்பட்டு சென்றது.
துபாயில் இருந்து ஜெய்ப்பூருக்கு நேற்று நள்ளிரவு 189 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டு வந்தது. விமானம் நடுவானில் பறந்து வந்த போது இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
இதைத்தொடர்ந்து விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக இறங்கினர். தொடர்ந்து பயணிகளின் உடமைகள் மற்றும் விமானத்தில் சந்தேகத்திற்கிடமாக ஏதேனும் பொருட்கள் இருக்கிறதா? என சோதனை நடத்தப்பட்டது.
இதில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. அதன் பிறகே பயணிகள் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இந்த மிரட்டல் சம்பவத்தால் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

கடன் சுமை, நிதி நெருக்கடி காரணமாக இந்தியா முழுவதும் ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமான சேவை பெரும் அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து நள்ளிரவு 1.15 மணிக்கு பாரீஸ், காலை 11.25 மணி, மாலை 4.50 மணிக்கு மும்பைக்கும் என 3 விமானங்களை அந்த நிறுவனம் இயக்கி வந்தது.
இந்தநிலையில் அந்த நிறுவன விமானங்களுக்கு எரிபொருள் வழங்குவதை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்திவிட்டன. இதையடுத்து சென்னையில் இருந்து இயக்கப்பட்ட 3 விமானங்களையும் மறுஅறிவிப்பு வரும்வரை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.இதுபற்றி முன்கூட்டியே பயணிகளுக்கு தகவல் தரப்பட்டு, மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். #JetAirways
மலிவு கட்டணத்தில் விமானப் பயணம் என்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களுடன் விமான போக்குவரத்து துறையில் தடம்பதித்த சில தனியார் நிறுவனங்கள் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றன.
அவ்வகையில், நிதி நெருக்கடியால் தள்ளாட்டம் போட்டுவரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் விமானிகள், பணிப்பெண்கள் மற்றும் பொறியாளர்களுக்கு சரியானபடி சம்பளம் வழங்காமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.
பின்னர், செப்டம்பர் மாதத்துக்கான சம்பளத்தொகை அரைகுறையாக சிலருக்கு வழங்கப்பட்டுள்ளது. அக்டோபர், நவம்பர் மாதங்களுக்கான சம்பளம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
இதனால், அதிருப்தியடைந்த விமானிகள் நிர்வாகத்துக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அனைவரும் ஒருசேர நேற்று ‘சிக் லீவ்’ போட்டு மறைமுகமான போராட்டத்தில் குதித்தனர். இதனால் நாட்டின் பல பகுதிகளுக்கு செல்ல வேண்டிய 14 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

இதுதொடர்பான செய்திகள் வெளியானதும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் சார்பில் இன்று விளக்க அறிக்கை வெளியாகியுள்ளது.
நேற்று 14 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதற்கு விமானிகள் விடுமுறை எடுத்தது காரணமல்ல. விமான இயக்கம் தொடர்பான வேறுசில விவகாரங்கள்தான் காரணம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #JetAirways #JetAirwaysPilots #Flightscancel #Pilotssick






