என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "10 Gift Vouchers"

    • நாடு முழுவதும் இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவையின் பாதிக்கப்பட்டது.
    • விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது பயணிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்தது.

    நாடு முழுவதும் இந்த மாதம் இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவையின் பாதிப்பால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் டிக்கெட் எடுத்துக் காத்திருந்த பயணிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்தது.

    கடந்த டிசம்பர் 1-7ம் தேதி வரை இண்டிகோ விமானங்கள் ரத்தான நிலையில் பணத்தை திருப்பி கொடுக்க மத்திய அரசு கெடு விதித்தது. இதனையடுத்து , டிக்கெட் கட்டணத்தை இண்டிகோ நிறுவனம் ரீபண்ட் செய்தது.

    இந்நிலையில், இந்தியா முழுவதும் டிசம்பர் 3, 4, 5 தேதிகளில் விமான சேவை ரத்து, தாமதத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.10,000 மதிப்புள்ள பயண வவுச்சர்களை டிசம்பர் 26ம் தேதி முதல் வழங்க உள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

    இந்த வவுச்சர்கள் அடுத்த 12 மாதங்களுக்கு செல்லுபடியாகும். இது அரசு விதிகளின்படி வழங்கப்பட வேண்டிய ரூ. 5000-10,000 இழப்பீடு தொகையுடன் சேர்த்து கூடுதலாக இண்டிகோ நிறுவனம் சார்பில் வழங்கப்படும் தொகையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்
    • சைபர் கிரைம் போலீசார் விசாரணை

    வேலூர் :

    வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தியின் செல்போன் எண்ணிற்கு இன்று காலை வாட்ஸ் அப்பில் ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் கலெக்டர் படத்துடன் வந்த அந்த வாட்ஸ்அப் எண்ணில் கிப்ட் வவுச்சர் குறைந்த கட்டணத்தில்ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனை செய்ய படுகிறது. உடனடியாக 10 கிப்ட் வவுச்சர் வாங்கவும் என அதில் கூறியிருந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி உடனடியாக இது குறித்து கலெக்டர் அலுவலக பொது மேலாளர் பாலாஜிக்கு தகவல் தெரிவித்தார். அவர் இது குறித்து ஆய்வு செய்தபோது கலெக்டர் பெயரில் மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட முயன்றது தெரியவந்தது.

    இது தொடர்பாக வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதில் கலெக்டர் படத்துடன் மோசடி செய்ய முயன்ற கும்பல் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து தகவல் அனுப்பியது தெரியவந்துள்ளது.

    இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    ×