என் மலர்
நீங்கள் தேடியது "இண்டிகோ நிறுவனம்"
- நாடு முழுவதும் இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவையின் பாதிக்கப்பட்டது.
- விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது பயணிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்தது.
நாடு முழுவதும் இந்த மாதம் இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவையின் பாதிப்பால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் டிக்கெட் எடுத்துக் காத்திருந்த பயணிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்தது.
கடந்த டிசம்பர் 1-7ம் தேதி வரை இண்டிகோ விமானங்கள் ரத்தான நிலையில் பணத்தை திருப்பி கொடுக்க மத்திய அரசு கெடு விதித்தது. இதனையடுத்து , டிக்கெட் கட்டணத்தை இண்டிகோ நிறுவனம் ரீபண்ட் செய்தது.
இந்நிலையில், இந்தியா முழுவதும் டிசம்பர் 3, 4, 5 தேதிகளில் விமான சேவை ரத்து, தாமதத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.10,000 மதிப்புள்ள பயண வவுச்சர்களை டிசம்பர் 26ம் தேதி முதல் வழங்க உள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
இந்த வவுச்சர்கள் அடுத்த 12 மாதங்களுக்கு செல்லுபடியாகும். இது அரசு விதிகளின்படி வழங்கப்பட வேண்டிய ரூ. 5000-10,000 இழப்பீடு தொகையுடன் சேர்த்து கூடுதலாக இண்டிகோ நிறுவனம் சார்பில் வழங்கப்படும் தொகையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
- தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் ஆல்பர்ஸ் தெரிவித்துள்ளார்.
- எங்கள் செயல்பாடுகளில் பெரும் இடையூறு ஏற்பட்டபோது நாங்கள் உங்களை சிரமப்படுத்தினோம்.
கடந்த எட்டு நாட்களாக பல்வேறு காரணங்களால் நாடு முழுவதும் பல விமானங்களை ரத்து செய்து இண்டிகோ நிறுவனம் பயணிகளுக்கு மிகுந்த சிரமம் தந்தது.
இந்நிலையில் இப்போது அனைத்தும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் ஆல்பர்ஸ் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், டிசம்பர் 5 ஆம் தேதி, இண்டிகோ 700 விமானங்களை மட்டுமே இயக்க முடிந்தது. அதன் பின்னர், அது படிப்படியாக ஆனால் சீராக மேம்பட்டுள்ளது.
டிசம்பர் 6 ஆம் தேதி 1,500 விமானங்களும், டிசம்பர் 7 ஆம் தேதி 1,650 விமானங்களும், டிசம்பர் 8 ஆம் தேதி 1,800 விமானங்களும், இன்று(நேற்று) 1,800க்கும் மேற்பட்ட விமானங்களும் இயக்கப்பட்டன.
நேற்று(திங்கள்கிழமை) முதல், எங்கள் நெட்வொர்க்கில் உள்ள 138 நகரங்களுக்கும் நாங்கள் விமானங்களை இயக்குகிறோம், மேலும் எங்கள் நேரமின்மையும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
எங்கள் செயல்பாடுகளில் பெரும் இடையூறு ஏற்பட்டபோது நாங்கள் உங்களை சிரமப்படுத்தினோம், அதற்காக நாங்கள் வருந்துகிறோம். எங்கள் மன்னிப்பை ஏற்றுக்கொண்டதற்கும், மீண்டும் இண்டிகோ டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ததற்கும் வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார். இதற்கிடையே இண்டிகோ விமானங்கள் இயக்கப்படுவதை 10 சதவீதம் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
- கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இண்டிகோ நிறுவனம் விமான சேவைகளை ரத்துசெய்து வருகிறது.
- பாராளுமன்றத்தின் மக்களவையில் இன்று இண்டிகோ விமான நிறுவன பிரச்சனை எழுப்பப்பட்டது.
புதுடெல்லி:
மத்திய அரசின் புதிய விதிமுறைகளை கடைப்பிடிக்காத இண்டிகோ விமான நிறுவனம் கடும் நெருக்கடி சிக்கித் தவிக்கிறது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இண்டிகோ நிறுவனம் விமான சேவைகளை ரத்துசெய்து வருகிறது.
இந்நிலையில், பாராளுமன்றன் மக்களவையில் இன்று இண்டிகோ பிரச்சனை எழுப்பப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ராம் மோகன் நாயுடு பதிலளித்துப் பேசியதாவது:
எந்த விமான நிறுவனமும் சரி, அது எவ்வளவு பெரிய விமான நிறுவனமாக இருந்தாலும் சரி. பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்த மத்திய அரசு அனுமதிக்காது.
கடுமையான, தகுந்த நடவடிக்கைகள் கண்டிப்பாக எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு கட்டணத்தைத் திருப்பி தருமாறு இண்டிகோ நிறுவனத்துக்கு உத்தரவிட்டு இருக்கிறோம்.
இதுவரை ரூ.750 கோடி பயணிகளுக்கு வினியோகிக்கப்பட்டு இருக்கிறது. பயணிகளின் உடமைகள் உரிய முறையில் அவர்களுக்கு திருப்பி தரப்பட்டு இருக்கிறதா என்பதையும் மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது என தெரிவித்தார்.
பெங்களூருவில் 121, ஐதராபாத்தில் 58, சென்னை 41, கேரளா 4 என இன்றும் 200க்கும் அதிகமான விமான சேவைகள் ரத்தாகின. தொடர்ந்து ரத்து அறிவிப்பு வெளியாகிக் கொண்டே வருவதால் உள்நாட்டு விமான போக்குவரத்தில் இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவைகளை குறைக்கலாம் என மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
- இண்டிகோ விமானங்கள் ரத்தான நிலையில் பணத்தை திருப்பி கொடுக்க மத்திய அரசு கெடு விதித்தது.
- டிக்கெட் எடுத்துக் காத்திருந்த பயணிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்தது.
நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவையின் பாதிப்பால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் டிக்கெட் எடுத்துக் காத்திருந்த பயணிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்தது.
இந்நிலையில், பணியாளர்கள் பிரச்சனையால் ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளுக்கு இதுவரை ரூ.827 கோடி திருப்பித்தந்துள்ளதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
வரும் டிசம்பர் 1-7ம் தேதி வரை இண்டிகோ விமானங்கள் ரத்தான நிலையில் பணத்தை திருப்பி கொடுக்க மத்திய அரசு கெடு விதித்தது. இந்நிலையில், டிக்கெட் கட்டணத்தை இண்டிகோ நிறுவனம் ரீபண்ட் செய்துள்ளது.
மேலும், பயணிகளுக்கு டிக்கெட் தொகையை திருப்பித்தந்த இண்டிகோ நிறுவனம் 48 மணி நேரத்தில் பயணிகளின் 4500 உடமைகளை திருப்பித் தந்துள்ளது.
பயணிகளின் 9000-க்கும் மேற்பட்ட லக்கேஜூகளில் 4,500 லக்கேஜ்கள் திருப்பி தரப்பட்டதாக இண்டிகோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இன்று நாடு முழுவதும் சுமார் 1800 இண்டிகோ விமானங்கள் இயக்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
- சில இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக புறப்பட்டன.
- விமானங்கள் ரத்து செய்ய்யப்பட்டதால் பயணிகள் கடுமையாக பாதிப்பு அடைந்தனர்.
புதுடெல்லி
இண்டிகோ விமான நிறுவனம் கடந்த 3 நாளாக விமான சேவைகளை நிறைவேற்றுவதில் சொதப்பி வருகிறது. மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் பிறப்பித்த புது விதிகளை காரணம் காட்டி, பல்வேறு விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்தது. நேற்றும்கூட ஏராளமான விமான சேவைகளை ரத்து செய்தது.
உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் அனைத்து இண்டிகோ விமான சேவைகளை ரத்துசெய்தது. சில இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக புறப்பட்டன. இதனால் பயணிகள் கடுமையாக பாதிப்பு அடைந்தனர்.
இந்நிலையில், இண்டிகோ நிறுவனம் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ரத்து செய்யப்பட்ட இண்டிகோ விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு விமான கட்டணம் தானாகவே திருப்பிச் செலுத்தப்படும் என அந்நிறுவனம் அறிவித்தது. டிசம்பர் 5 முதல் 15ம் தேதி வரை பயணிகள் டிக்கெட் ரத்து செய்தல் அல்லது வேறு தேதிகளுக்கு மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளுக்கும் எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துகிறோம் என பதிவிட்டுள்ளது.
- 2021-22-ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான அபராதமாக இந்த தொகையை விதித்து இருக்கிறது.
- தவறான புரிதல் காரணமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக இண்டிகோ நிறுவனம் கூறியுள்ளது.
இண்டிகோ விமான நிறுவனத்துக்கு வருமான வரித்துறை ரூ.944.20 கோடி அபராதம் விதித்து உள்ளது. 2021-22-ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான அபராதமாக இந்த தொகையை விதித்து இருக்கிறது.
ஆனால் தங்கள் நிறுவனம் வருமான வரி (மேல்முறையீடு) கமிஷனர் முன்பு தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது என்ற தவறான புரிதல் காரணமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக இண்டிகோ நிறுவனம் கூறியுள்ளது.
வருமான வரித்துறையின் இந்த அபராதத்தை எதிர்த்து வழக்கு தொடுத்து சட்ட நிவாரணம் காண உள்ளதாக கூறியுள்ள இண்டிகோ நிறுவனம், இந்த நடவடிக்கையால் நிறுவனத்தின் நிதி, இயக்கம் அல்லது பிற நடவடிக்கைகளில் எந்த தாக்கமும் ஏற்படாது என்றும் கூறியுள்ளது.
- சிவில் விமான பாதுகாப்பு அமைப்பு ரூ.1.20 கோடி அபராதம்.
- சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ரூ.30 லட்சமும் அபராதம்.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் விமான ஓடுபாதையில் பயணிகள் உணவருந்திய விவகாரத்தில் இண்டியோ நிறுவனத்திற்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதில், சிவில் விமான பாதுகாப்பு அமைப்பு ரூ.1.20 கோடியும், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ரூ.30 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- காலநிலை சீராகும் போது சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- பாம்பன், மண்டபம் பகுதிகளில் கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்படுகிறது.
வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் குறிப்பாக கடலோர பகுதிகளில் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
அதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் கடல் பகுதியில் சூறைக்காற்று வீசி வருவதால் பாம்பன், மண்டபம் பகுதிகளில் கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்படுகிறது.
இந்த நிலையில், மோசமான வானிலையால் சென்னை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, சேலத்தில் இருந்து புறப்படும் விமான சேவைகளில் பாதிப்பு ஏற்படலாம் என இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், காலநிலை சீராகும் போது சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- பல்வேறு வெளி நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.
- விமானத்தில் பயணம் செய்ய இருந்த 120 பயணிகள் பெரும் அவதியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது .
திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவைகளாக சென்னை, ஐதராபாத், பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் இயக்கி வருகிறது. இவை தவிர வெளிநாட்டு சேவைகளாக பல்வேறு வெளி நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. திருச்சியில் இருந்து ஐதராபாத் நோக்கி தினமும் காலை 6 மணிக்கு இண்டிகோ நிறுவனத்தின் விமானம் புறப்படுவது வழக்கம்.
இந்த விமானம் இன்று காலை ஐதராபாத் நோக்கி புறப்படுவதற்கு தயாரானது.
இதில் 120 பயணிகள் பயணம் செய்வதற்காக காத்திருந்தனர். இந்த நிலையில் விமானம் புறப்படுவதற்கு சற்று நேரம் முன்பாக விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டு கோளாறை சரி செய்யும் பணியில் விமான பொறியாளர்கள் ஈடுபட்டனர்.
எனினும் அதனை சீர் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இதை தொடர்ந்து மாற்று விமானம் ஏற்பாடு செய்து அதில் பயணிகள் ஐதராபாத் செல்வதற்கான ஏற்பாடுகளை விமான நிறுவனத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். மாற்று விமானம் ஆனது மதியம் 12.40 மணிக்கு திருச்சி விமான நிலையத்திலிருந்து ஐதராபாத் நோக்கி புறப்பட்டுச் செல்லும் என எதிர்பார்க்கப்படுவதாக விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதனால் இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த 120 பயணிகள் பெரும் அவதியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது .






