என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "flight service fare"

    • இண்டிகோ விமானங்கள் ரத்தான நிலையில் பணத்தை திருப்பி கொடுக்க மத்திய அரசு கெடு விதித்தது.
    • டிக்கெட் எடுத்துக் காத்திருந்த பயணிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்தது.

    நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவையின் பாதிப்பால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் டிக்கெட் எடுத்துக் காத்திருந்த பயணிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்தது.

    இந்நிலையில், பணியாளர்கள் பிரச்சனையால் ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளுக்கு இதுவரை ரூ.827 கோடி திருப்பித்தந்துள்ளதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

    வரும் டிசம்பர் 1-7ம் தேதி வரை இண்டிகோ விமானங்கள் ரத்தான நிலையில் பணத்தை திருப்பி கொடுக்க மத்திய அரசு கெடு விதித்தது. இந்நிலையில், டிக்கெட் கட்டணத்தை இண்டிகோ நிறுவனம் ரீபண்ட் செய்துள்ளது.

    மேலும், பயணிகளுக்கு டிக்கெட் தொகையை திருப்பித்தந்த இண்டிகோ நிறுவனம் 48 மணி நேரத்தில் பயணிகளின் 4500 உடமைகளை திருப்பித் தந்துள்ளது.

    பயணிகளின் 9000-க்கும் மேற்பட்ட லக்கேஜூகளில் 4,500 லக்கேஜ்கள் திருப்பி தரப்பட்டதாக இண்டிகோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இன்று நாடு முழுவதும் சுமார் 1800 இண்டிகோ விமானங்கள் இயக்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • மதுரைக்கு வருகை, புறப்பாடு என தினமும் 12 விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில் தற்போது 14 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
    • விமான கட்டணங்கள் உயர்ந்த நிலையிலும், விமான டிக்கெட்டுகள் விற்று தீர்வதாக அதிகாரிகள் தகவல்.

    கிறிஸ்துமஸ், புத்தாண்டு, அரையாண்டு விடுமுறையை ஒட்டி சென்னையில் விமான சேவை மற்றும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    பண்டிகை கால விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு அதிகம் செல்லக்கூடும் நிலையில், சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை செல்ல கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகிறது.

    மதுரைக்கு வருகை, புறப்பாடு என தினமும் 12 விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில் தற்போது 14 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    தூத்துக்குடிக்கு 6ஆக இருந்த விமான சேவை தற்போது 8 ஆகவும், கோவைக்கு 16ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடிக்கு வழக்கமாக ரூ.5300 என கட்டணம் உள்ள நிலையில் தற்போது ரூ.14,500 வரை வசூல் செய்யப்படுகிறது.

    மதுரைக்கு வழக்கமாக ரூ.3,600 என கட்டணம் உள்ள நிலையில் தற்போது ரூ.14,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

    கோவைக்கு ரூ.13,500 வரையும், திருச்சிக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.19,500 வரையிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    விமான கட்டணங்கள் உயர்ந்த நிலையிலும், விமான டிக்கெட்டுகள் விற்று தீர்வதாக அதிகாரிகள் தகவல் வெளியாகி உள்ளன.

    ×