என் மலர்
நீங்கள் தேடியது "IndiGo Airlines"
- தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் ஆல்பர்ஸ் தெரிவித்துள்ளார்.
- எங்கள் செயல்பாடுகளில் பெரும் இடையூறு ஏற்பட்டபோது நாங்கள் உங்களை சிரமப்படுத்தினோம்.
கடந்த எட்டு நாட்களாக பல்வேறு காரணங்களால் நாடு முழுவதும் பல விமானங்களை ரத்து செய்து இண்டிகோ நிறுவனம் பயணிகளுக்கு மிகுந்த சிரமம் தந்தது.
இந்நிலையில் இப்போது அனைத்தும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் ஆல்பர்ஸ் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், டிசம்பர் 5 ஆம் தேதி, இண்டிகோ 700 விமானங்களை மட்டுமே இயக்க முடிந்தது. அதன் பின்னர், அது படிப்படியாக ஆனால் சீராக மேம்பட்டுள்ளது.
டிசம்பர் 6 ஆம் தேதி 1,500 விமானங்களும், டிசம்பர் 7 ஆம் தேதி 1,650 விமானங்களும், டிசம்பர் 8 ஆம் தேதி 1,800 விமானங்களும், இன்று(நேற்று) 1,800க்கும் மேற்பட்ட விமானங்களும் இயக்கப்பட்டன.
நேற்று(திங்கள்கிழமை) முதல், எங்கள் நெட்வொர்க்கில் உள்ள 138 நகரங்களுக்கும் நாங்கள் விமானங்களை இயக்குகிறோம், மேலும் எங்கள் நேரமின்மையும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
எங்கள் செயல்பாடுகளில் பெரும் இடையூறு ஏற்பட்டபோது நாங்கள் உங்களை சிரமப்படுத்தினோம், அதற்காக நாங்கள் வருந்துகிறோம். எங்கள் மன்னிப்பை ஏற்றுக்கொண்டதற்கும், மீண்டும் இண்டிகோ டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ததற்கும் வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார். இதற்கிடையே இண்டிகோ விமானங்கள் இயக்கப்படுவதை 10 சதவீதம் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
- இண்டிகோ விமானங்கள் ரத்தான நிலையில் பணத்தை திருப்பி கொடுக்க மத்திய அரசு கெடு விதித்தது.
- டிக்கெட் எடுத்துக் காத்திருந்த பயணிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்தது.
நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவையின் பாதிப்பால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் டிக்கெட் எடுத்துக் காத்திருந்த பயணிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்தது.
இந்நிலையில், பணியாளர்கள் பிரச்சனையால் ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளுக்கு இதுவரை ரூ.827 கோடி திருப்பித்தந்துள்ளதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
வரும் டிசம்பர் 1-7ம் தேதி வரை இண்டிகோ விமானங்கள் ரத்தான நிலையில் பணத்தை திருப்பி கொடுக்க மத்திய அரசு கெடு விதித்தது. இந்நிலையில், டிக்கெட் கட்டணத்தை இண்டிகோ நிறுவனம் ரீபண்ட் செய்துள்ளது.
மேலும், பயணிகளுக்கு டிக்கெட் தொகையை திருப்பித்தந்த இண்டிகோ நிறுவனம் 48 மணி நேரத்தில் பயணிகளின் 4500 உடமைகளை திருப்பித் தந்துள்ளது.
பயணிகளின் 9000-க்கும் மேற்பட்ட லக்கேஜூகளில் 4,500 லக்கேஜ்கள் திருப்பி தரப்பட்டதாக இண்டிகோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இன்று நாடு முழுவதும் சுமார் 1800 இண்டிகோ விமானங்கள் இயக்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
- சில இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக புறப்பட்டன.
- விமானங்கள் ரத்து செய்ய்யப்பட்டதால் பயணிகள் கடுமையாக பாதிப்பு அடைந்தனர்.
புதுடெல்லி
இண்டிகோ விமான நிறுவனம் கடந்த 3 நாளாக விமான சேவைகளை நிறைவேற்றுவதில் சொதப்பி வருகிறது. மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் பிறப்பித்த புது விதிகளை காரணம் காட்டி, பல்வேறு விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்தது. நேற்றும்கூட ஏராளமான விமான சேவைகளை ரத்து செய்தது.
உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் அனைத்து இண்டிகோ விமான சேவைகளை ரத்துசெய்தது. சில இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக புறப்பட்டன. இதனால் பயணிகள் கடுமையாக பாதிப்பு அடைந்தனர்.
இந்நிலையில், இண்டிகோ நிறுவனம் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ரத்து செய்யப்பட்ட இண்டிகோ விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு விமான கட்டணம் தானாகவே திருப்பிச் செலுத்தப்படும் என அந்நிறுவனம் அறிவித்தது. டிசம்பர் 5 முதல் 15ம் தேதி வரை பயணிகள் டிக்கெட் ரத்து செய்தல் அல்லது வேறு தேதிகளுக்கு மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளுக்கும் எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துகிறோம் என பதிவிட்டுள்ளது.
- விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் ஓடுதளத்திலேயே அதன் டயர் வெடித்தது.
- பயணிகளை இறக்கிவிடப்பட்டு பழுதடைந்த டயர் மாற்றப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று மாலை 166 பயணிகளுடன் மும்பைக்கு இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட்டது.
விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் ஓடுதளத்திலேயே அதன் டயர் வெடித்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து சுதாரித்துக் கொண்ட விமானி ஓடுதளத்தில் பயங்கரமாக குலுங்கியபடி ஓடிய விமானத்தை, சாமர்த்தியமாக இயக்கி நிறுத்தினார்.
பின்னர், பயணிகளை இறக்கிவிடப்பட்டு பழுதடைந்த டயர் மாற்றப்பட்டது.
இதனால், 2 மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- 2021-22-ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான அபராதமாக இந்த தொகையை விதித்து இருக்கிறது.
- தவறான புரிதல் காரணமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக இண்டிகோ நிறுவனம் கூறியுள்ளது.
இண்டிகோ விமான நிறுவனத்துக்கு வருமான வரித்துறை ரூ.944.20 கோடி அபராதம் விதித்து உள்ளது. 2021-22-ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான அபராதமாக இந்த தொகையை விதித்து இருக்கிறது.
ஆனால் தங்கள் நிறுவனம் வருமான வரி (மேல்முறையீடு) கமிஷனர் முன்பு தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது என்ற தவறான புரிதல் காரணமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக இண்டிகோ நிறுவனம் கூறியுள்ளது.
வருமான வரித்துறையின் இந்த அபராதத்தை எதிர்த்து வழக்கு தொடுத்து சட்ட நிவாரணம் காண உள்ளதாக கூறியுள்ள இண்டிகோ நிறுவனம், இந்த நடவடிக்கையால் நிறுவனத்தின் நிதி, இயக்கம் அல்லது பிற நடவடிக்கைகளில் எந்த தாக்கமும் ஏற்படாது என்றும் கூறியுள்ளது.
- சுமார் 20 நிமிடங்கள் விமான நிலையத்திற்கு மேலே வானில் வட்டமடித்த விமானம் பத்திரமாக தரையிறங்கியது.
- இந்த சம்பவத்திற்கு வழக்கமான தகவல் தொடர்பு பிரச்சனையே காரணம் என்று விமானி கூறியிருக்கிறார்.
அகமதாபாத்:
சண்டிகரில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு நேற்று முன்தினம் இரவு சுமார் 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன், இண்டிகோ விமானம் வந்தது. அகமதாபாத் சர்தார் வல்லபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது. ஆனால் ரன்வேயை தொட்ட அடுத்த வினாடி திடீரென வீமானம் மீண்டும் டேக் ஆப் ஆகி வானில் பறந்தது.
உள்ளே இருந்த பயணிகளுக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. கடும் குழப்பமும், அச்சமும் அடைந்தனர். சிலருக்கு உடல் வியர்த்து கொட்டி உடல்நிலை பாதிக்கப்பட்டது. சிலர் பயத்தில் கதறி அழுதுள்ளனர். சுமார் 20 நிமிடங்கள் விமான நிலையத்திற்கு மேலே வானில் வட்டமடித்த விமானம், அதன்பின்னர் பத்திரமாக தரையிறங்கியது. அதன்பிறகே பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இந்த சம்பவத்திற்கு வழக்கமான தகவல் தொடர்பு பிரச்சனையே காரணம் என்றும், விமானத்தை தரையிறக்க விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையத்தில் (ஏடிசி) அனுமதி கிடைக்கவில்லை என்றும் விமானி கூறியிருக்கிறார்.
எனினும், விமானி சரியான நடைமுறையை பின்பற்றினாரா, இல்லையா? என்பது குறித்து விமான போக்குவரத்து இயக்குநரகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
- வாரத்தில் திங்கள், வியாழன், சனி, ஆகிய 3 தினங்களில் இந்த விமான சேவைகள் இயக்கப்பட உள்ளன.
- தினசரி விமான சேவையாக மாற்றப்பட வாய்ப்பு உள்ளது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆலந்தூர்:
சென்னையில் இருந்து வங்காளதேச தலைநகர் டாக்காவுக்கு ஏற்கனவே, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனமும், யூ.எஸ். பங்களா விமான நிறுவனமும், தினசரி நேரடி விமான சேவையை இயக்கி வருகின்றன. இந்நிலையில் சென்னை- டாக்கா இடையே பயணிகள் போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதையடுத்து பீமன் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் என்ற விமான நிறுவனம், டாக்கா- சென்னை இடையே, புதிதாக நேரடி விமான சேவையை, இன்று முதல் தொடங்கியது. வாரத்தில் திங்கள், வியாழன், சனி, ஆகிய 3 தினங்களில் இந்த விமான சேவைகள் இயக்கப்பட உள்ளன.
இந்த விமானம் வாரத்தின் 3 நாட்களிலும், பகல் 12.50 மணிக்கு டாக்காவில் புறப்பட்டு, மாலை 3.20 மணிக்கு, சென்னை விமான நிலையம் வருகிறது. அதே விமானம் மீண்டும், மாலை 4.15 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு,
இரவு 7.30 மணிக்கு டாக்கா விமான நிலையம் சென்றடைகிறது.
இப்போது வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயக்கப்படும் இந்த விமான சேவை, பயணிகளின் வரவேற்பை பொறுத்து, தினசரி விமான சேவையாக மாற்றப்பட வாய்ப்பு உள்ளது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.






