search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tire burst"

    • வேன் தஞ்சை அருகே புனல்குளம் பகுதியில் வந்த போது திடீரென முன்பக்க டயர் வெடித்து.
    • காயம் அடைந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை இனாத்துக்கன்பட்டி யை சேர்ந்தவர் அஞ்சம்மாள் (வயது 70 ). இவர் அதே பகுதியை சேர்ந்த வேம்பரசி, ரங்கநாதன், ராஜா, மகாலட்சுமி உள்பட சிலருடன் ஒரு வேனில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் துக்க வீட்டுக்கு சென்றனர்.

    பின்னர் அங்கிருந்து அதே வேனில் தஞ்சைக்கு புறப்பட்டனர். அந்த வேன் தஞ்சை அருகே புனல்குளம் பகுதியில் வந்த போது திடீரென முன்பக்க டயர் வெடித்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு கம்பியில் மோதியது. இதில் அஞ்சம்மாள் உள்பட 9 பேர் பலத்த காயமடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையில் டயர் வெடித்ததால் மினி வேன் தலைகுப்புற கவிழந்தது.
    • டிரைவர், கிளீனர் உயிர் தப்பினர்.

    திருமங்கலம்

    மதுரை கருப்பாயூரணி அருகே தனியார் சிமெண்ட் கல் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கிருந்து சிமெண்ட் கல் ஏற்றிக்கொண்டு மினி வேன் புறப்பட்டது. இதனை விக்கி என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் கிளீனர் உட்பட 2 பேர் இருந்தனர்.

    திருமங்கலம் அருகே கப்பலூர் 4 வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென வேனின் முன்பக்க டயர் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    உயிர் தப்பினர்

    விபத்தில் மினி வேன் டிரைவர் மற்றும் கிளீனர் உட்பட 3 பேரும் கதவைத் திறந்து உடனடியாக வெளியே குதித்ததால் உயிர் தப்பினர். சாலையின் நடுவே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மதுரை கப்பலூர் 4 வழிச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்து வந்த பெருங்குடி போலீசார் டிரைவர் விக்கியிடம் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×