என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் இருந்து புறப்பட்ட விமானத்தின் டயர் வெடித்ததால் பரபரப்பு
- விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் ஓடுதளத்திலேயே அதன் டயர் வெடித்தது.
- பயணிகளை இறக்கிவிடப்பட்டு பழுதடைந்த டயர் மாற்றப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று மாலை 166 பயணிகளுடன் மும்பைக்கு இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட்டது.
விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் ஓடுதளத்திலேயே அதன் டயர் வெடித்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து சுதாரித்துக் கொண்ட விமானி ஓடுதளத்தில் பயங்கரமாக குலுங்கியபடி ஓடிய விமானத்தை, சாமர்த்தியமாக இயக்கி நிறுத்தினார்.
பின்னர், பயணிகளை இறக்கிவிடப்பட்டு பழுதடைந்த டயர் மாற்றப்பட்டது.
இதனால், 2 மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story






