என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இண்டிகோ"

    • 2026 ஆம் ஆண்டிலேயே மும்பையிலிருந்து ஷாங்காய்க்கு நேரடி சேவைகளைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளது.
    • இண்டிகோ நிறுவனம் சமீபத்தில் டெல்லியில் இருந்து சீனாவின் குவாங்சோவிற்கு தினசரி விமானங்களை இயக்க தொடங்கியது.

    6 வருட இடைவெளிக்குப் பிறகு சீனாவிற்கு தனது சேவைகளை மீண்டும் தொடங்குவதாக டாடா குழுமத்தின் விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

    அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி 1 முதல் டெல்லி மற்றும் சீனாவின் ஷாங்காய் இடையே நேரடி விமானங்களை இயக்கப்போவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

    அதன் அறிவிப்பில், இந்த வழித்தடத்தில் வாரத்திற்கு நான்கு முறை போயிங் 787-8 விமானங்கள் இயக்கப்படும்.

    2026 ஆம் ஆண்டிலேயே மும்பையிலிருந்து ஷாங்காய்க்கு நேரடி சேவைகளைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இண்டிகோ நிறுவனம் சமீபத்தில் டெல்லியில் இருந்து சீனாவின் குவாங்சோவிற்கு தினசரி விமானங்களை இயக்க  தொடங்கியது.

    முன்னதாக கடந்த 2019 இல் லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தி இந்திய வீரர்கள் 20 பேரை கொன்றனர். இதனால் இரு நாடுகளிடையே விரிசல் வலுப்பெற்றது.

    எல்லை பிரச்சனைகள் மற்றும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியா - சீனா இடையேயான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

    அண்மையில் சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து விமான சேவைகள் படிப்படியாக மீண்டும் தொடங்கி வருவது குறிப்பிடத்தக்கது.   

    • கொல்கத்தாவில் இருந்து ஸ்ரீநகர் புறப்பட்டு சென்றது.
    • நடுவானில் பறந்த போது எரிபொருள் கசிவு ஏற்பட்டதாக சந்தேகம்.

    கொல்கத்தாவில் இருந்து ஸ்ரீநகருக்கு இண்டிகோ 6E-6961 விமானம் 166 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.

    டெக்னிக்கல் பிரச்சினை (எரிபொருள் கசிவு) சந்தேகத்தில் விமானி, விமானத்தை உடனடியாக தரையிறக்க முடிவு செய்தார். அதன்படி ஏடிசி-யிடம் வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி கோரப்பட்டது.

    ஏடிசி அனுமதி வழங்க விமானம் பத்திரமாக தரையிறங்கியது. விமானத்தில் பயணம் செய்த 166 பேர் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    பின்னர், ஸ்ரீநகர் செல்ல பயணிகளுக்கு இண்டிகோ நிறுவனம் மாற்று ஏற்பாடு செய்து கொடுத்தது.

    • டெல்லியில் இருந்து இரவு 9:45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4:50 மணிக்கு குவாங்சோ சென்றடையும்.
    • ஏர்பஸ் ஏ320 ரக விமானங்கள் பயன்படுத்தப்படும்.

    கடந்த 2019 இல் லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தி இந்திய வீரர்கள் 20 பேரை கொன்றனர். இதனால் இரு நாடுகளிடையே விரிசல் வலுப்பெற்றது.

    எல்லை பிரச்சனைகள் மற்றும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியா - சீனா இடையேயான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

    சமீபத்தில் சீனாவில் நடந்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    இந்நிலையில் இந்திய தலைநகர் டெல்லியில் இருந்து சீனாவுக்கும் இடையே நேரடி விமானங்களை நவம்பர் 10 முதல் இயக்க உள்ளதாக இந்திய விமானச் சேவை நிறுவனமான இண்டிகோ (IndiGo) அறிவித்துள்ளது.

    அதன் அறிவிப்பின்படி, புதிய நேரடி தினசரி விமானங்கள் டெல்லி மற்றும் சீனாவின் குவாங்சோ நகருக்கு இடையே நவம்பர் 10 முதல் தொடங்கவுள்ளன.

    ஏற்கனவே அக்டோபர் 26 முதல் கொல்கத்தா மற்றும் குவாங்சோ இடையே தினசரி விமானப் சேவையை தொடங்குவதாக இண்டிகோ அறிவித்திருந்த நிலையில் தற்போது டெல்லியில் இருந்தும் நேரடி விமான சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதன்படி தினசரி, இண்டிகோ விமானம், டெல்லியில் இருந்து இரவு 9:45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4:50 மணிக்கு குவாங்சோ சென்றடையும்.

    பின்னர் குவாங்சோவில் இருந்து அதிகாலை 5:50 மணிக்கு புறப்பட்டு காலை 10:10 மணிக்கு டெல்லி வந்துசேரும்.

    அதேபோல் டெல்லி மற்றும் வியட்நாமின் ஹனோய் நகருக்கு இடையே புதிய நேரடி தினசரி விமானச் சேவை டிசம்பர் 20 முதல் தொடங்கவுள்ளதாகவும் இண்டிகோ இன்று அறிவித்துள்ளது.

    இந்த இரண்டு வழித்தடங்களிலும் இண்டிகோவின் ஏர்பஸ் ஏ320 ரக விமானங்கள் பயன்படுத்தப்படும்.

    "உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா, சீனா இடையேயான சேவைகள் மீண்டும் தொடங்குவது, கலாச்சார பரிமாற்றம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கு அபரிமிதமான ஆற்றலை வழங்குகிறது" என்று இண்டிகோவின் விற்பனைப் பிரிவுத் தலைவர் வினய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

    ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாகக் கூறி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவிற்கு 50% கூடுதல் வரி விதித்த பிறகு இந்தியா-சீனா உறவு வலுப்பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. 

    • விமானப் பணிப்பெண்கள் இந்த சம்பவத்தை அலட்சியம் செய்ததாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
    • அலட்சியமான பதில் தனக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இண்டிகோ விமானத்தில் கடந்த . ஆகஸ்ட் 8 அன்று மும்பையைச் சேர்ந்த ரியா சட்டர்ஜி என்ற பெண் பயணம் செய்துள்ளார்.

    இந்நிலையில் தான் விமானத்தின் கழிவறையில் இருந்தபோது, இணை விமானி ஒருவர் திடீரென கதவைத் திறந்துவிட்டதாகக் அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் அவர் தனது LinkedIn பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    இது தனக்கு அதிர்ச்சியையும் அவமானத்தையும் ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

    கதவைத் திறந்த இணை விமானி "ஓ" என்று சொல்லிவிட்டு உடனடியாக கதவை மூடிவிட்டதாகவும், பின்னர்  விமானப் பணிப்பெண்கள் இந்த சம்பவத்தை அலட்சியம் செய்ததாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார். விமான ஊழியர்களின் இத்தகைய அலட்சியமான பதில் தனக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

    சம்பவம் குறித்து விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாகக் குழுவுக்கு மின்னஞ்சல் அனுப்பியும், நிறுவனம் முறையாகப் பதிலளிக்கவில்லை என்றும், வருத்தம் தெரிவிப்பதற்குப் பதிலாக, இது ஒரு சாதாரண சிரமம் என்று கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    தனக்கு இழப்பீடு வேண்டாம் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதே தனது நோக்கம் என்றும் சட்டர்ஜி தெரிவித்துள்ளார்.

    இண்டிகோ நிறுவனம் இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டு, சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. 

    • இந்த புகாரை டெல்லி மாவட்ட நுகர்வோர் குறைதீர் தீர்வு ஆணையம் விசாரித்தது.
    • மேலும் வழக்குச் செலவாக ரூ.25,000 செலுத்தவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    பயணி ஒருவருக்கு அழுக்கான கறை படிந்த இருக்கையை வழங்கியதற்காக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    இந்த ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி பாகுவிலிருந்து டெல்லிக்கு பயணம் செய்யும் போது அழுக்கு மற்றும் கறை படிந்த இருக்கை வழங்கப்பட்டதாகக் கூறி பிங்கி என்ற பெண் புகார் அளித்தார்.

    இந்த புகாரை டெல்லி மாவட்ட நுகர்வோர் குறைதீர் தீர்வு ஆணையம் விசாரித்தது.

    இந்நிலையில், குறைபாடுள்ள சேவையால் பயணிக்கு ஏற்பட்ட சிரமம் மற்றும் மன வேதனைக்கு இழப்பீடாக ரூ.1.5 லட்சம் வழங்க விமான நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்குச் செலவாக ரூ.25,000 செலுத்தவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    • அகமது என்பவர் இண்டிகோ விமானத்தில் மும்பையில் இருந்து கொல்கத்தா சென்றுகொண்டிருந்தார்.
    • சக பயணி அறைந்ததால் அகமதுவுக்கு Panic attack ஏற்பட்டது.

    அசாமின் கச்சார் மாவட்டத்தைச் சேர்ந்த ஹுசைன் அகமது மஜும்தார் (32) மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஜிம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.

    கடந்த வியாழக்கிழமை அன்று இண்டிகோ விமானத்தில் மும்பையில் இருந்து கொல்கத்தா சென்றுகொண்டிருந்தார். கொல்கத்தாவில் இருந்து அசாமில் சில்சார் விமான நிலையம் செல்வதாக திட்டம்.

    அகமது உடல்நிலை சரியில்லாத நிலையில் பயணம் மேற்கொண்டுள்ளார். விமானத்தில் இரண்டு விமான பணிப்பெண்கள் அகமதுவை அவரது இருக்கைக்கு அழைத்துச் சென்றபோது திடீரென மற்றொரு பயணி அகமதுவை கன்னத்தில் அறைந்தார்.

    உடல்நிலை சரியில்லாதபோது காரணமே இல்லாமல் ஒருவர் தன்னை அறைந்ததால் அகமதுவுக்கு Panic attack ஏற்பட்டது. உடனே பணிப்பெண்கள் அவருக்கு முதலுதவி அளித்தனர். தாக்குதல் நடத்தியவரை மற்ற பயணிகள் கண்டித்தனர். கொல்கத்தா விமான நிலையத்தை அடைந்ததும் தாக்குதல் நடத்திய நபர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

    இந்நிலையில், விமானத்தில் சக பயணியை தாக்கியவருக்கு வாழ்நாள் பயணத் தடை விதிக்கப்படுவதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே கொல்கத்தாவில் இருந்து சில்கார் விமான நிலையம் வர வேண்டிய அகமது காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். சில்கார் விமான நிலையத்தின் அகமதுவின் வருகைக்கு காத்திருந்த குடும்பத்தினர் அவர் வரவில்லை என்றும் செல்போன் மூலமும் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

    • சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
    • பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

    டெல்லியில் இருந்து கோவா நோக்கிச் சென்று கொண்டிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 6E-6271, இன்று (புதன்கிழமை) இரவு மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

    விமானத்தின் ஒரு எஞ்சினில் கோளாறு ஏற்பட்டதே இதற்குக் காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சுமார் இரவு 8 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்ட விமானம், நடுவானில் எஞ்சின் கோளாறை சந்தித்தது. இதையடுத்து, மும்பைக்கு திருப்பி விடப்பட்டு, இரவு 9.52 மணியளவில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர். 

    விமானத்தின் பாதுகாப்பான தரையிறக்கத்திற்குப் பிறகு, பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். 

    • மூன்று மூத்த அதிகாரிகள் சாதி ரீதியாக இழிவுபடுத்தியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
    • புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், காவல்துறையில் புகார் அளித்ததாக தெரிவித்துள்ளார்.

    அரியானாவில் இண்டிகோ விமான நிறுவனத்தில் பயிற்சி விமானியாக பணிபுரிந்த 35 வயது இளைஞர் ஒருவர், தான் சாதி அடிப்படையிலான துன்புறுத்தலுக்கு ஆளானதாகப் புகார் அளித்துள்ளார்.

    பட்டியலினத்தைச் சேர்ந்த தன்னை, இண்டிகோவின் மூன்று மூத்த அதிகாரிகள் சாதி ரீதியாக இழிவுபடுத்தியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    "விமான ஓட்டத் தகுதியற்றவன், போய் செருப்பு தைக்கும் வேலை செய்" என்று அதிகாரிகள் பேசியதாக அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

    இந்தத் துன்புறுத்தலால் தான் வேலையை ராஜினாமா செய்ய நேர்ந்ததாகவும், தனது சம்பளம் குறைக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

    இது குறித்து நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளிடம் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், காவல்துறையில் புகார் அளித்ததாக தெரிவித்துள்ளார்.

    புகாரின் அடிப்படையில், இண்டிகோ அதிகாரிகள் தபஸ் தே, மணீஷ் சாஹ்னி மற்றும் கேப்டன் ராகுல் பாட்டீல் ஆகியோர் மீது பட்டியல் சாதியினர்/பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து இண்டிகோ தரப்பிலிருந்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

    • இன்று (ஜூன் 20) காலை, சென்னையில் இருந்து புறப்பட்டது.
    • முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இன்று (ஜூன் 20) காலை, சென்னையில் இருந்து மதுரை கிளம்பிய இண்டிகோ விமானம் புறப்பட்டவுடன் மீண்டும் சென்னையிலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

    தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் மீண்டும் சென்னை விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

    விமானி சுமார் அரை மணி நேரம் பறந்த பிறகு கோளாறைக் கண்டறிந்து, திரும்பிச் செல்ல அனுமதி கோரியதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    விமானத்தில் 68 பயணிகள் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

    • ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது துருக்கி பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தது.
    • இந்தியாவில் செயல்படும் துருக்கி நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருகிறது.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. முப்படைகளும் சேர்ந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது. இதில் 100-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டதால், இந்திய எல்லையில் உள்ள குடியிருப்புகள், வழிபாட்டு தலங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    மே 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெற்ற பாகிஸ்தான் டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் இந்தியாவை தாக்க முயற்சி செய்தது. இந்தியா திறமையாக செயல்பட்டு பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்தது. இருந்தபோதிலும் ஒன்றிரண்டு டிரோன்கள் குடியிறுப்புகளை தாக்கியது.

    பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளை மட்டுமே இந்தியா தாக்கியது. ஆனால், இந்தியாவில் உள்ள அப்பாவி மக்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. என்றபோதிலும் துருக்கி நேரடியாக பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்தது. டிரோன்கள் அதிக அளவில் வழங்கியது.

    இதனால் இந்தியாவில் செயல்பட்டு வரும் துருக்கி நிறுவனங்களுக்கு எதிராக இந்தியா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்திய விமான நிலைங்களில் செய்பட்டு வந்த நிறுவனத்திற்கான பாதுகாப்பு அனுமதியை திரும்பப் பெற்றது.

    இந்த நிலையில் துருக்கி ஏர்லைன்ஸ் உடனான ஒப்பந்தத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் என இண்டிகோ நிறுவனத்தினம் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

    இண்டிகோ இரண்டு போயிங் 777s விமானங்களை துருக்கி ஏர்லைன்சிடம் இருந்து குத்தகைக்கு பெற்று இயக்கி வருகிறது. மே 31ஆம் தேதி வரை இந்த குத்தகைக்கான அவகாசம் உள்ளது. ஆனால், இண்டிகோ நிறுவனம் மேலும் 6 மாதங்களுக்கு அனுமதி கேட்டுள்ளது. ஆனால், இந்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது.

    இருந்தபோதிலும் உடனடியாக பயணிகளுக்கு சிரமம் ஏற்படுவதால், 3 மாதங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் அனுமதி அளிக்க முடியாது என மத்திய அரசு தி்ட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    • மொத்த வருமானம் 23,097.5 கோடி ரூபாய்.
    • 31.9 மில்லியன் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

    2024-25 நிதியாண்டின் 4ஆவது காலாண்டில் (ஜனவரி-மார்ச்) இண்டிகோ நிறுவனம் 3,068 கோடி ரூபாய் லாபம் ஈட்டியதாக அதன் தாய் நிறுவனமான இன்டர்குளோப் (InterGlobe) தெரிவித்துள்ளார்.

    கடந்த நிதியாண்டில் இதே காலாண்டில் 1,894.8 கோடி ரூபாய் லாபம் ஈட்டிய நிலையில், தற்போது 62 சதவீதம் அதிகரித்து 3,068 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. இண்டிகோவில் பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கை 19.6 சதவீதம் அதிகரித்து 31.9 மில்லியனாக உயர்ந்துள்ளது.

    மொத்த வருமானம் கடந்த ஆண்டு இதே காலாண்டில் 18,505.1 கோடி ரூபாயாக இருந்த நிலையில், இந்த நிதியாண்டில் 23,097.5 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 2024-2025 நிதியாண்டில் 11.8 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளதாக இண்டிகோ சிஇஓ பீட்டர எல்பர்ஸ் தெரிவித்துள்ளார்.

    • நேற்று முதல் விமான நிலையங்கள் செயல்பட தொடங்கின.
    • பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவதாகவும் தெரிவித்துள்ளன.

    இந்தியா- பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றம் காரணமாக 32 விமான நிலையங்கள் வருகிற 15-ந்தேதி வரை தற்காலிகமாக மூடப்படும் என்று கடந்த வாரம் விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்தது. இதனிடையே, இந்தியா- பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றம் தணிந்ததை தொடர்ந்து நேற்று முதல் விமான நிலையங்கள் செயல்பட தொடங்கின.

    இந்த நிலையில் ஸ்ரீநகர், ஜம்மு, அமிர்தசரஸ், சண்டிகர், ராஜ்கோட் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், ஜம்மு, லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், பூஜ், ஜாம்நகர், சண்டிகர் மற்றும் ராஜ்கோட் ஆகிய இடங்களுக்குச் செல்லும் இருவழி விமானச் சேவைகளை ஏர் இந்தியா ரத்து செய்துள்ளதாகவும், ஜம்மு, அமிர்தசரஸ், சண்டிகர், லே, ஸ்ரீநகர் மற்றும் ராஜ்கோட் ஆகிய இடங்களுக்குச் செல்லும் விமானங்களை இண்டிகோ ரத்து செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    பயணிகளின் பாதுகாப்பை கருதியும், நிலைமையை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்த விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவதாகவும் தெரிவித்துள்ளன. 

    ×