search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fares"

    • சிறப்பு கட்டண ரெயில் கூடுதலாக வருகிற பிப்ரவரி 4,11,18 மற்றும் 25-ந் தேதிகளில் இயக்கப்படும்.
    • மறுமார்க்கமாக வருகிற பிப்ரவரி 5,12,19 மற்றும் 26-ந் தேதிகளில் இயக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தெற்கு ரெயில்வே வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    எர்ணாகுளம் -வேளாங்கண்ணி (வண்டி எண்:06035) இடையே மதியம் 1.10 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரெயில் கூடுதலாக (4 சேவைகள்) வருகிற பிப்ரவரி 4,11,18 மற்றும் 25-ந் தேதிகளில் (சனிக்கிழமைகள்) இயக்கப்படும்.மறுமார்க்கமாக வேளாங்கண்ணி-எர்ணாகுளம் (06036) இடையே மாலை 6.40 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரெயில் கூடுதலாக (4 சேவைகள்) வருகிற பிப்ரவரி 5,12,19 மற்றும் 26-ந் தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமைகள்) இயக்கப்படும்.

    இதுவரை இயக்கப்பட்டு வந்த சிறப்பு கட்டண ரெயில் மேலும் நீட்டிக்கப் பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பண்டிகை விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.
    • பொதுமக்கள் ஆம்னி பஸ்களில் பயணம் செய்யவே ஆர்வம் காட்டு கின்றனர். இதை சாதகமாக்கி ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பது வழக்கமாக உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் வசித்தும் வரும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பண்டிகை விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். பின்னர் விடுமுறை முடிந்த பிறகு மீண்டும் சேலம் திரும்புகின்றனர்.

    இதையொட்டி தமிழக அரசு சார்பில், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறது. அதேபோல் ரெயில்வே நிர்வாகம் சார்பில் சிறப்பு ரெயில்களும் இயக்கப்படுகிறது.

    இதற்காக முன்கூட்டியே ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்யப்படுகிறது. ஆனால் பெரும்பாலான பொதுமக்கள் ஆம்னி பஸ்களில் பயணம் செய்யவே ஆர்வம் காட்டு கின்றனர். இதை சாதகமாக்கி ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பது வழக்கமாக உள்ளது.

    ெதாடர்விடுமுறை

    இந்த நிலையில் நடப்பாண்டு வருகிற 2-ந்தேதி காந்தி ெஜயந்தி, 4-ந்தேதி ஆயுதபூைஜ, 5-ம் தேதி விஜயதசமி என 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. அதே போல் 24-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    இதனை முன்னிட்டு பொதுமக்கள் ஆம்னி பஸ்களில் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் நடப்பாண்டும் வழக்கம்போல் ஆம்னி பஸ் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

    டிக்கெட் கட்டணம் உயர்வு

    உதாரணமாக சேலத்தில் இருந்து சென்னைக்கு செல்வதற்கான ஆம்னி ஏ.சி. பஸ்களின் டிக்கெட் கட்டணம் குறைந்தபட்டசம் ரூ.1500 முதல் அதிகபட்சமாக ரூ.3000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏ.சி. அல்லாத பஸ்களில் ரூ.1000 முதல் ரூ.1800 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர் ேகாவில், மார்த்தாண்டம் திருவனந்தபுரம், எர்ணா குளம், கொல்லம் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களிலும் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

    கோரிக்கை

    இந்த கட்டணம் உயர்வால் அதிர்ச்சி அடைந்துள்ள பயணிகள், அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பண்டிகை காலத்தை முன்னிட்டு விமான கட்டணங்களில் 70 சதவீதம் வரை தள்ளுபடி சலுகையை ஏர் ஏசியா நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. #AirAsia #AirAsia70pcdiscount
    ஐதராபாத்:

    ஏர் ஏசியா நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அக்டோபர் 15 முதல் 28 வரை முன்பதிவு செய்து அக்டோபர் 15 முதல் 30-6-2019 வரை பயணம் செய்ய விரும்புவர்களுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடி சலுகை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உள்நாட்டு வழித்தடங்களான பெங்களூரு, புதுடெல்லி, கொல்கத்தா, கொச்சி, கோவா, ஜெய்ப்பூர், சண்டிகர், புனே, கவுகாத்தி, இம்பால், விசாகப்பட்டினம், ஐதராபாத், ஸ்ரீநகர், பக்டோக்ரா, ராஞ்சி, புவனேஸ்வர், நாக்பூர், இந்தூர், சூரத், அம்ரிஸ்டர் மற்றும் சென்னை ஆகிய 21 முக்கிய நகரங்களுக்கான பயணச்சீட்டுகளுக்கு இந்த சலுகை பொருந்தும்.

    மேலும், சர்வதேச வழித்தடங்களான கோலாலம்பூர், பாங்காக், கிராபி, சிட்னி, ஆக்லாந்து, சிங்கப்பூர், பாலி உள்ளிட்ட பிற நகரங்களுக்கான விமான பயணத்துக்கும் இந்த சலுகையை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சிறப்பு கட்டணச் சலுகையை பெறுவதற்கான முன்பதிவுகள் அனைத்தும் ஏர் ஏசியா டாட்காம் மற்றும் ஏர் ஏசியா மொபைல் ஆப் (airasia.com and the AirAsia mobile app) மூலமாக செய்யப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. #AirAsia #AirAsia70pcdiscount
    நீலகிரி மலை ரெயில் கட்டணம் அடுத்த மாதம் 8-ந் தேதி முதல் இரு மடங்காக உயர்த்தப்படுகிறது என ரெயில்வே அதி காரிகள் தெரிவித்தனர்.
    குன்னூர்:

    நீலகிரி மலை ரெயில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ரெயிலாக உள்ளது. இதனால் நீலகிரி மலைரெயிலுக்கு யுனெஸ்கோ நிறுவனம் பாரம்பரிய மலை ரெயில் அந்தஸ்து வழங்கி உள்ளது. இதன்காரணமாக நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எப்போதும் இந்த மலை ரெயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.

    நீலகிரி மலை ரெயில் மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்கும், பின்னர் குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கும் பர்னஸ் ஆயில் நீராவி என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இதுதவிர குன்னூர்-ஊட்டி இடையே டீசல் என்ஜின் மூலம் மலை ரெயில் இயக்கப்படுகிறது.

    முகரம் பண்டிகையையொட்டி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சனி, ஞாயிறு விடுமுறையாக உள்ளதால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் மலை ரெயிலில் குடும்பத்துடன் பயணிக்கின்றனர்.

    அப்போது இயற்கை காட்சிகளை ரசிப்பதுடன், அதனை புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். நேற்று குன்னூர் ரெயில் நிலையத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனால் போலீசார் சுற்றுலா பயணிகளை வரிசையில் நிறுத்தி பின்னர் மலை ரெயிலில் ஏற அனுமதித்தனர்.

    தற்போது குன்னூர்-ஊட்டி இடையே 2-ம் வகுப்பு கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூ.10 வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணத்தை ரெயில்வே அதிகாரிகள் தற்போது இருமடங்காக உயர்த்தி உள்ளனர். இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

    குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே பயணிக்க நபர் ஒன்றுக்கு ரூ.15-ம், ஊட்டி-குன்னூர் இடையே பயணிக்க ரூ.10-ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணம் தற்போது இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட கட்டணம் அடுத்த மாதம் (அக்டோபர்) 8-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×