search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "doubled"

    நீலகிரி மலை ரெயில் கட்டணம் அடுத்த மாதம் 8-ந் தேதி முதல் இரு மடங்காக உயர்த்தப்படுகிறது என ரெயில்வே அதி காரிகள் தெரிவித்தனர்.
    குன்னூர்:

    நீலகிரி மலை ரெயில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ரெயிலாக உள்ளது. இதனால் நீலகிரி மலைரெயிலுக்கு யுனெஸ்கோ நிறுவனம் பாரம்பரிய மலை ரெயில் அந்தஸ்து வழங்கி உள்ளது. இதன்காரணமாக நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எப்போதும் இந்த மலை ரெயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.

    நீலகிரி மலை ரெயில் மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்கும், பின்னர் குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கும் பர்னஸ் ஆயில் நீராவி என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இதுதவிர குன்னூர்-ஊட்டி இடையே டீசல் என்ஜின் மூலம் மலை ரெயில் இயக்கப்படுகிறது.

    முகரம் பண்டிகையையொட்டி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சனி, ஞாயிறு விடுமுறையாக உள்ளதால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் மலை ரெயிலில் குடும்பத்துடன் பயணிக்கின்றனர்.

    அப்போது இயற்கை காட்சிகளை ரசிப்பதுடன், அதனை புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். நேற்று குன்னூர் ரெயில் நிலையத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனால் போலீசார் சுற்றுலா பயணிகளை வரிசையில் நிறுத்தி பின்னர் மலை ரெயிலில் ஏற அனுமதித்தனர்.

    தற்போது குன்னூர்-ஊட்டி இடையே 2-ம் வகுப்பு கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூ.10 வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணத்தை ரெயில்வே அதிகாரிகள் தற்போது இருமடங்காக உயர்த்தி உள்ளனர். இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

    குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே பயணிக்க நபர் ஒன்றுக்கு ரூ.15-ம், ஊட்டி-குன்னூர் இடையே பயணிக்க ரூ.10-ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணம் தற்போது இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட கட்டணம் அடுத்த மாதம் (அக்டோபர்) 8-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    அம்பை மாஞ்சோலை தேயிலை தோட்டத்துக்கு செல்ல வாகன நுழைவு கட்டணம் இருமடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
    அம்பை:

    நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் குற்றாலம் அருவி, பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. மேலும் புலிகள் காப்பகமும் உள்ளது. இங்குதான் மாஞ்சாலை தேயிலை தோட்டமும் உள்ளது. இந்த சுற்றுலா தலங்களை பார்த்து ரசிக்கவும், அருவிகளில் குளித்து மகிழவும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் எப்போதும் வந்து செல்வார்கள். தற்போது அங்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தையும் ஏராளமானவர்கள் வந்து பார்த்து ரசித்து செல்கிறார்கள்.

    மாஞ்சோலை பகுதியில் குதிரைவெட்டி, காக்காச்சி உள்ளிட்ட 5 தேயிலை தோட்டங்கள் உள்ளன. இந்த தோட்டங்கள் பசுமை போர்த்தி மிகவும் ரம்மியமாக காட்சி அளிக்கின்றன. இதன் அழகை ரசிப்பதற்காகவே ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகிறார்கள். இங்கு செல்ல வேண்டுமானால், அம்பை புலிகள் காப்பக துணை இயக்குனர் அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும். மேலும் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டு உள்ள சுங்கச்சாவடியில் உரிய கட்டணத்தை செலுத்தி செல்ல வேண்டும்.

    இதற்கு முன்பு மாஞ்சோலை செல்ல வாகனங்களுக்கு நுழைவு கட்டணமாக ரூ.300 வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த கட்டணம் இருமடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது, தற்போது ரூ.950 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இருப்பினும், மணிமுத்தாறு அருவியில் குளிக்க வசூலிக்கப்படும் கட்டணத்தில் மாற்றம் இல்லை. அங்கு கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்படுகிறது. 
    ×