என் மலர்
நீங்கள் தேடியது "Indigo Flight"
- சென்னையில் இருந்து புறப்படும் 32 விமானங்களின் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
- பிற இடங்களில் இருந்து சென்னை வரும் 33 விமானங்களின் சேவையும் ரத்து.
நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ நேற்று 3-வது நாளாக திட்டமிட்டபடி விமானங்களை இயக்குவதில் சிக்கல்களை எதிர்கொண்டது.
மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் 550-க்கும் மேற்பட்ட விமானங்களை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்தது. இதனால் 3-வது நாளாக பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.
தேவையான விமான பணியாளர்களை அமர்த்துவதில் ஏற்பட்ட சிக்கல் மற்றும் விமான போக்குவரத்து அட்டவணைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் அந்த விமான நிறுவனத்தின் செயல்பாடுகளை பாதித்தது.
இந்த நிலையில், 4-வது நாளாக இன்று சென்னையில் 65 இண்டிகோ விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புறப்படும் 32 விமானங்களின் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
பிற இடங்களில் இருந்து சென்னை வரும் 33 விமானங்களின் சேவை என நேற்று இரவு 8 மணி முதல் தற்போது வரை 65 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
- இந்திய வான்பரப்புக்குள் நுழைந்தபோது இறத்தல் வந்தது.
- 1984 சென்னை விமான நிலைய குண்டுவெடிப்பைப் போலவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் இருந்து இன்று காலை 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் விமான நிலையத்திற்கு இண்டிகோ விமானம் வந்து கொண்டிருந்தது.
விமானம் இந்திய வான்பரப்புக்குள் நுழைந்தபோது ஐதராபாத் விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும் இந்தத் தாக்குதல் 1984 சென்னை விமான நிலைய குண்டுவெடிப்பைப் போலவே இருக்கும் என்றும், ஐஎஸ்ஐ இந்த தாக்குதலைத் திட்டமிட்டிருந்ததாகவும் அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உஷாரான விமான நிலைய அதிகாரிகள் விமானிக்கு தகவல் தெரிவிக்கவே விமானம் மும்பையில் தரையிறக்கப்பட்டு சோதனை நடந்தது. வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவரவே விமானம் மீண்டும் ஐதராபாத் புறப்பட்டு சென்றது.
ஆகஸ்ட் 2, 1984 அன்று சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் மொத்தம் 33 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- விமான கட்டுப்பாட்டு அறைக்கு இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.
- டெல்லி விமான நிலையத்தில் முழு அவசரநிலை அறிவிக்கப்பட்டது.
புதுடெல்லி:
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து தலைநகர் டெல்லிக்கு இன்று காலை இண்டிகோ விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் சுமார் 200 பேர் பயணித்தனர்.
விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது அந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. விமான கட்டுப்பாட்டு அறைக்கு இ-மெயில் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதை தொடர்ந்து டெல்லி விமான நிலையத்தில் முழு அவசரநிலை அறிவிக்கப்பட்டது. அந்த விமானம் டெல்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனை நடத்தினர்.
சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இன்று மாலை மும்பையில் இருந்து 176 பயணிகளுடன் தாய்லாந்துக்குக்கு விமானமானது புறப்பட்டது.
- சென்னை விமான நிலையத்தில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு மும்பை விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
மும்பை - தாய்லாந்து இடையே இயக்கப்படும் இண்டிகோ விமானம் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக சென்னையில் தரையிறங்கியது.
இன்று மாலை மும்பையில் இருந்து 176 பயணிகளுடன் தாய்லாந்துக்குக்கு விமானமானது பயணத்தை தொடங்கியது.
இதற்கிடையே மும்பை விமான நிலையத்திற்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து, விமானத்தின் கழிவறைக்குள் வெடிகுண்டு மறைத்து வைத்திருப்பதாகவும், நடுவானில் அது வெடித்துச் சிதற இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து உடனே சென்னை விமான நிலையத்தில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு மும்பை விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த விமானம் சென்னைக்கு திருப்பிவிடப்பட்டு இரவு 7.20 மணியளவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு விமானத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், விமானத்துக்குள் இதுவரையில் சந்தேகப்படும்படியான பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.
முழுமையான சோதனைக்கு பிறகு விமானம் சென்னையில் இருந்து தாய்லாந்து நாட்டுக்கு மீண்டும் புறப்பட்டு செல்லும் எனத் தெரிகிறது. மிரட்டல் விடுத்த மர்ம நபரை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
- ஓடுபாதையில் வேகமாகச் சென்ற விமானம் திடீரென நின்றதால் பயணிகள் சிறிது நேரம் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
- ஒரே வாரத்தில் இண்டிகோ விமானங்களில் இதுபோன்ற இரண்டாவது சம்பவம் இதுவாகும்.
அகிலேஷ் யாதவ் மனைவியும் சமாஜ்வாதி கட்சி எம்பியுமான டிம்பிள் யாதவ் உட்பட 150க்கும் மேற்பட்ட பயணிகளுடன் டெல்லிக்கு சென்ற இண்டிகோ விமானம் பெரும் விபத்தில் இருந்து தப்பியது.
இன்று விமானம் லக்னோவிலிருந்து டெல்லிக்கு திட்டமிட்டபடி புறப்படுவதற்காக ஓடுபாதையில் வேகமாகச் சென்று கொண்டிருந்தபோது, தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை ஊழியர்கள் கண்டறிந்தனர்.
உடனடியாக விமானிகள், பயணத்தை ரத்து செய்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தை மீண்டும் முனையத்திற்கு கொண்டு வந்தனர்.
ஓடுபாதையில் வேகமாகச் சென்ற விமானம் திடீரென நின்றதால் பயணிகள் சிறிது நேரம் குழப்பத்தில் ஆழ்ந்தனர். பின்னர், அனைவரும் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர்.
ஒரே வாரத்தில் இண்டிகோ விமானங்களில் இதுபோன்ற இரண்டாவது சம்பவம் இதுவாகும். செப்டம்பர் 6 ஆம் தேதி, கொச்சியிலிருந்து அபுதாபிக்குச் சென்ற இண்டிகோ விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழில்நுட்பக் கோளாறால் கொச்சிக்கு திரும்பியது.
- அகமது என்பவர் இண்டிகோ விமானத்தில் மும்பையில் இருந்து கொல்கத்தா சென்றுகொண்டிருந்தார்.
- சக பயணி அறைந்ததால் அகமதுவுக்கு Panic attack ஏற்பட்டது.
அசாமின் கச்சார் மாவட்டத்தைச் சேர்ந்த ஹுசைன் அகமது மஜும்தார் (32) மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஜிம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.
கடந்த வியாழக்கிழமை அன்று இண்டிகோ விமானத்தில் மும்பையில் இருந்து கொல்கத்தா சென்றுகொண்டிருந்தார். கொல்கத்தாவில் இருந்து அசாமில் சில்சார் விமான நிலையம் செல்வதாக திட்டம்.
அகமது உடல்நிலை சரியில்லாத நிலையில் பயணம் மேற்கொண்டுள்ளார். விமானத்தில் இரண்டு விமான பணிப்பெண்கள் அகமதுவை அவரது இருக்கைக்கு அழைத்துச் சென்றபோது திடீரென மற்றொரு பயணி அகமதுவை கன்னத்தில் அறைந்தார்.
உடல்நிலை சரியில்லாதபோது காரணமே இல்லாமல் ஒருவர் தன்னை அறைந்ததால் அகமதுவுக்கு Panic attack ஏற்பட்டது. உடனே பணிப்பெண்கள் அவருக்கு முதலுதவி அளித்தனர். தாக்குதல் நடத்தியவரை மற்ற பயணிகள் கண்டித்தனர். கொல்கத்தா விமான நிலையத்தை அடைந்ததும் தாக்குதல் நடத்திய நபர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்நிலையில், விமானத்தில் சக பயணியை தாக்கியவருக்கு வாழ்நாள் பயணத் தடை விதிக்கப்படுவதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே கொல்கத்தாவில் இருந்து சில்கார் விமான நிலையம் வர வேண்டிய அகமது காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். சில்கார் விமான நிலையத்தின் அகமதுவின் வருகைக்கு காத்திருந்த குடும்பத்தினர் அவர் வரவில்லை என்றும் செல்போன் மூலமும் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
- இண்டிகோ விமானத்தில் மும்பையில் இருந்து கொல்கத்தா சென்றுகொண்டிருந்தார்.
- உடல்நிலை சரியில்லாதபோது காரணமே இல்லாமல் ஒருவர் தன்னை அறைந்ததால் அகமதுவுக்கு Panic attack ஏற்பட்டது.
அசாமின் கச்சார் மாவட்டத்தைச் சேர்ந்த ஹுசைன் அகமது மஜும்தார் (32) மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஜிம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.
கடந்த வியாழக்கிழமை அன்று இண்டிகோ விமானத்தில் மும்பையில் இருந்து கொல்கத்தா சென்றுகொண்டிருந்தார். கொல்கத்தாவில் இருந்து அசாமில் சில்சார் விமான நிலையம் செல்வதாக திட்டம்.
ஆனால் இண்டிகோ விமானத்தில் கொல்கத்தா சென்று கொண்டிருந்தபோது அவர் சக பயணியால் கன்னத்தில் அறையப்பட்டார்.
அகமது உடல்நிலை சரியில்லாத நிலையில் பயணம் மேற்கொண்டுள்ளார். விமானத்தில் இரண்டு விமான பணிப்பெண்கள் அகமதுவை அவரது இருக்கைக்கு அழைத்துச் சென்றபோது திடீரென மற்றொரு பயணி அகமதுவை கன்னத்தில் அறைந்தார்.
உடல்நிலை சரியில்லாதபோது காரணமே இல்லாமல் ஒருவர் தன்னை அறைந்ததால் அகமதுவுக்கு Panic attack ஏற்பட்டது. உடனே பணிப்பெண்கள் அவருக்கு முதலுதவி அளித்தனர். தாக்குதல் நடத்தியவரை மற்ற பயணிகள் கண்டித்தனர். கொல்கத்தா விமான நிலையத்தை அடைந்ததும் தாக்குதல் நடத்திய நபர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதற்கிடையே கொல்கத்தாவில் இருந்து சில்கார் விமான நிலையம் வர வேண்டிய அகமது காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். சில்கார் விமான நிலையத்தின் அகமதுவின் வருகைக்கு காத்திருந்த குடும்பத்தினர் அவர் வரவில்லை என்றும் செல்போன் மூலமும் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
- அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
- வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு கடந்த மாதம் 12-ந்தேதி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானத்தில் விமானத்தில் பயணித்த 241 பேர் (மொத்தம் 260பேர்) உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் விமான பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே, சில இடங்களில் விமானம் புறப்படும் நேரத்தில் பறவை மோதல் போன்ற சம்பவங்களால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சூரத் மாநிலத்தில் இருந்து ஜெய்பூருக்கு புறப்பட வேண்டிய விமானத்தை தேனீக்கள் சூழ்ந்ததால் சுமார் 1 மணிநேரத்திற்கு மேலாக பயணிகள் காத்திருந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சூரத் சர்வதேச விமான நிலையத்தில் ஜெய்ப்பூருக்கு செல்ல இண்டிகோ விமானம் தயாரானது. விமானத்தில், பைலட்கள், பயணிகள் என அனைவரும் வந்து அமர்ந்திருக்க, விமானத்தின் லக்கேஜ் கதவு திறப்பின் ஒரு பகுதியில் தேனீக்கள் சூழ்ந்து கொண்டதால் செய்வதறியாது விமான ஊழியர்கள் தவித்தனர். இதனால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, தேனீக்களை விரட்ட முதலில் புகை பயன்படுத்தப்பட்டது. ஆனால் அது வேலை செய்யவில்லை. கடைசியாக, ஒரு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு லக்கேஜ் கதவில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. இதையடுத்து தேனீக்கள் அப்புறப்படுத்தப்பட்டு சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு விமானம் தாமதமாக ஜெய்ப்பூருக்கு புறப்பட்டு சென்றது.
இந்த சம்பவத்தால் விமான நிலைய பகுதியில் சில மணிநேரம் பரபரப்பு சூழ்ந்து காணப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது.
- விமானம் இயக்க முடியாமல் போகும் தருணத்தில் விமானி விமான கட்டுப்பாட்டு அறைக்கு "மேடே" என தகவல் அனுப்புவார்.
அசாம் மாநிலம் கவுஹாத்தியில் இருந்து 168 பயணிகளுடன் சென்னை புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் எரிப்பொருள் தீர்ந்ததை அடுத்து, விமானி "மேடே" என அறிவித்ததை தொடர்ந்து, அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 12ம் தேதி அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதில், 241 பயணிகள் உயிரிழந்தனர்.
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் கட்டுப்பாட்டை இழந்ததை அடுத்து, விமான கட்டுப்பாட்டு அறைக்கு விமானி "மேடே" என அறிவித்தார். விமானி அதை அறிவித்த சில நொடிகளில் விமானம் விபத்துக்குள்ளானது.
"மேடே" என்பது தொழில்நுட்ப கோளாறு, எரிப்பொருள் காலி உள்பட விமானம் இயக்க முடியாமல் போகும் தருணத்தில் விமானி விமான கட்டுப்பாட்டு அறைக்கு "மேடே" என தகவல் அனுப்புவார்.
ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான சில நாட்களில், கடந்த வியாழக்கிழமை அன்று கவுஹாத்தியில் இருந்து- சென்னை புறப்பட்ட இண்டிகோ விமானத்தில், எரிப்பொருள் தீர்ந்ததை அடுத்து விமானிகள் 'மேடே' என்று விமான கட்டுப்பாட்டு அறைக்கு அறிவித்தனர்.
இதைஅடுத்து, பெங்களூரில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அபாய அழைப்பு வந்தவுடன், பெங்களூரு விமான நிலையத்தில் விமான ஊழியர்கள் தயார் நிலையில் இருந்தனர்.
மேலும், மருத்துவ மற்றும் தீயணைப்புப் படை வீரர்களும் சம்பவ இடத்தில் இருந்தனர். பின்னர், விமானம் இரவு 8:20 மணிக்கு பாதுகாப்பாக தரையிறங்கியது. இதனால், பயணிகள் பெருமூச்சுவிட்டனர்.
- மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
- விமானத்தை சோதனையிடும் பணி நடைபெற்று வருகிறது.
சமீப காலமாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. இதனை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
அந்தவகையில், ஜெர்மனியின் பிராங்க்புட் விமான நிலையத்தில் இருந்து ஐதராபாத் நோக்கி புறப்பட்ட 'லுப்தான்சா' நிறுவனத்தின் போயிங் 787-9 டிரீம்லைனர் ரக விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் மிரட்டல் போலியானது என தெரியவந்தது. அதனை தொடர்ந்து விமானம் புறப்பட்டது. இதேப்போல், டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கொச்சியில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விமானம் அவசரமாக நாக்பூரில் தரையிறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விமானத்தை சோதனையிடும் பணி நடைபெற்று வருகிறது.
நேர விரயம் தவிர்க்கப்படும் என்பதால் தொழிலதிபர்கள், நடுத்தர வர்க்கத்தினர் என பலராலும் விமான பயணம் விரும்பப்படுகிறது. ஆனால் சமீபகாலமாக வெடிகுண்டு மிரட்டல் ஒருபுறம் இருக்க, அகமதாபாத் விமான விபத்து போன்ற காரணங்களால் விமானத்தில் பயணிகள் ஒருவித பயத்திலேயே பயணிப்பதாக கூறப்படுகிறது.
- டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு இண்டிகோ விமானம் சென்று கொண்டிருந்தது.
- ஆலங்கட்டி மழையில் சிக்கி குலுங்கிய அந்த விமானம் ஸ்ரீநகரில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்கு இண்டிகோ விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் உள்பட 220-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நடுவானில் பறந்தபோது பலத்த காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையில் சிக்கி அந்த விமானம் குலுங்கியது. இருப்பினும் அந்த விமானம் ஸ்ரீநகரில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
இதற்கிடையே நடுவானில் அந்த விமானம் அவசர நிலையில் சிக்கித் தவித்தபோது, நிலைமையை சமாளிப்பதற்காக விமானி பாகிஸ்தான் வான்வெளி வழியாக செல்வதற்கு லாகூர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு அனுமதி கோரினார். ஆனால் அவசரகால பயன்பாட்டுக்கும் அந்நாட்டு வான்வெளியை பயன்படுத்த லாகூர் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் அனுமதி மறுத்துவிட்டது.
அதன்பின் விமானி மோசமான வானிலைக்கு மத்தியிலும் வழக்கமான வான்வழியிலேயே விமானத்தை பத்திரமாக இயக்கிச் சென்று தரையிறக்கியது தற்போது தெரிய வந்துள்ளது.
- விமானத்தின் உள்ளே பயணிகள் கடும் அச்சத்தில் இருந்தனர்.
- விமானம் ஸ்ரீநகரில் நல்வாய்ப்பாக பத்திரமாக தரையிறங்கியது.
ஸ்ரீநகர்:
தலைநகர் டெல்லியில் புழுதிப் புயல் வீசிய நிலையில் பல இடங்களில் கனமழை பெய்தது. சில இடங்களில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழையும் பெய்தது.
இதற்கிடையே, டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் புறப்பட்ட இண்டிகோ விமானம் ஆலங்கட்டி புயலால் நடுவானில் சிக்கி குலுங்கியது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். விமானத்தின் உள்ளே பயணிகள் கடும் அச்சத்தில் இருந்தனர். இதையடுத்து, அந்த விமானம் ஸ்ரீநகரில் நல்வாய்ப்பாக பத்திரமாக தரையிறங்கியது. முன்பகுதியில் சேதமடைந்த விமானம் பத்திரமாக ஸ்ரீநகரை அடைந்ததால் பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இந்த விமானத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் டெரிக் ஓ பிரையன், நடிமுல் ஹக், மம்தா தாக்குர், சகரிகா கோஷ் மற்றும் மனஸ் புனியா ஆகியோரும் பயணம் செய்திருந்தனர். அவர்கள் காஷ்மீரில் பயங்கர்வாதிகளால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க உள்ளனர்.
இந்நிலையில், நடுவானில் விமானம் குலுங்கியது தொடர்பாக திரிணாமுல் காங்கிரசின் சகரிகா கோஷ் கூறியதாவது:
அது ஒரு மரண அனுபவமாக இருந்தது. என் வாழ்க்கையே முடிந்துவிட்டது என நினைத்தேன். மக்கள் அலறிக் கொண்டிருந்தார்கள், பிரார்த்தனை செய்தார்கள், பீதி அடைந்தார்கள்.
அந்த வழியாக எங்களை அழைத்துச் சென்ற விமானிக்கு பாராட்டுகள். நாங்கள் தரையிறங்கியபோது விமானத்தின் மூக்கு உடைந்திருப்பதைக் கண்டோம் என தெரிவித்தார்.






