என் மலர்
நீங்கள் தேடியது "newlywedcouples"
- டிசம்பர் 3ம் தேதி ஹூப்பள்ளியில் வரவேற்புக்கான ஏற்பாடு செய்யப்பட்டது.
- டிசம்பர்-2 காலை முதல் மறுநாள் அதிகாலை வரை விமானம் தாமதம் என இன்டிகோ ஊழியர்கள் கூறினர்.
பெங்களூரு:
கர்நாடகத்தின் ஹூப்பள்ளியைச் சேர்ந்தவர் மேகா க்ஷீரா சாகர். இவர் ஒடிசாவின் புவனேஸ்வரைச் சேர்ந்த சங்கிராம் தாஸ் என்பவரை காதலித்து நவம்பர் 23-ம் தேதி திருமணம் செய்துகொண்டார். டிசம்பர் 3ம் தேதி மேகாவின் சொந்த ஊரான ஹூப்பள்ளியில் ரிசப்ஷனுக்கான ஏற்பாடு செய்யப்பட்டது.
ரிசப்ஷனில் கலந்து கொள்வதற்காக மணமக்கள் இருவரும் புவனேஸ்வரிலிருந்து பெங்களூருவிற்கும், அங்கிருந்து ஹூப்பள்ளிக்கும் டிசம்பர் 2ம் தேதி விமானத்தில் முன்பதிவு செய்தனர். அதேபோல், சில உறவினர்களுக்கும் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர்.
இதற்கிடையே, டிசம்பர் 2-ம் தேதி காலை முதல் மறுநாள் அதிகாலை வரை விமானம் தாமதம் என இன்டிகோ ஊழியர்கள் கூறினர். அதன்பின், விமானம் ரத்து செய்யப்பட்டது என தெரிவித்தனர். ஊழியர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விமானங்கள் ரத்தானது என விமான நிறுவனம் தெரிவித்தது.
இந்நிலையில், விமானம் ரத்தானதால் மணமக்கள் ஹூப்பளி செல்ல முடியவில்லை. இதனால் வேறு வழியின்றி புவனேஸ்வரில் இருந்தபடியே வீடியோ காலில் பங்கேற்றனர். ஹூப்பள்ளியில் உறவினர்கள் இருந்தபடி வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
ஹூப்பள்ளியில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்த மேடையில், மணமக்களுக்குப் பதிலாக மணமகளின் பெற்றோர் அமரவைக்கப்பட்டு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
- மூன்று பேரின் உடல்கள் பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
- புதுமண தம்பதி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த சித்திக் (29) என்பவருக்கும் நவுபியா (25) என்ற பெண்ணுக்கும் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், புதுமண தம்பியான இவர்கள் பாரிப்பள்ளியை அடுத்த பள்ளிக்கால் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு விருந்திற்காக சென்றனர்.
விருந்து முடிந்த நிலையில், சித்திக் மற்றும் நவுபியா அங்குள்ள ஆற்றுப் பகுதிக்கு சென்றனர். இவர்களுடன், உறவினர் அன்சில் என்பவரும் சென்றிருந்தார்.
புதுமண தம்பதி ஆற்றின் கரையோரத்தில் இருந்த பாறை மீது ஏறி நின்று செல்பி எடுக்க முயன்றனர். அப்போது, நிலைத்தடுமாறிய இருவரும் ஆற்றுக்குள் விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இவர்களை காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்த அன்சிலும் நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நேற்று காலையில் புதுமண தம்பதி உடல்கள் பாறை இடுக்கில் சிக்கியபடி சடலமாக மீட்டனர். இதேபோல், அன்சிலும் சடலமாக மீட்கப்பட்டார்.
இதைதொடர்ந்து, 3 பேரின் உடல்கள் பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமாகி ஒரு வாரம் மட்டுமே ஆன நிலையில், தம்பதி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






