என் மலர்
நீங்கள் தேடியது "dead"
- கடைமுன்பு இறந்து கிடந்த முதியவர் யார்? என்பது தெரியவில்லை.
- மேல்மதுரை கிராம உதவியாளர் கொடுத்த புகாரின்பேரில் திலகர்திடல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மதுரை
மதுரை மேலவெளிவீதி பிரேமாவிலாஸ் கடைமுன்பு நேற்று (31-ந் தேதி) காலை 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. அடிவயிற்றின் இடதுபுறம் கருப்பு மச்சமும், வலது முன்னங்காலில் பழைய காயத்தழும்பும் காணப்படுகிறது.
முதியவரின் உடல் மதுரை அரசு மருத்துவனை சவக்கிடங்கில் உள்ளது. இதுகுறித்து மேல்மதுரை கிராம உதவியாளர் கொடுத்த புகாரின்பேரில் திலகர்திடல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு.
- வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த விவகாரம் குறித்து மேற்கொண்டு விசாரணை.
சென்னை பெருங்குடியில் குடிநீர் உறை கிணற்றை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
கிணற்றில் சுத்தம்செய்து கொண்டிருந்த காளிதாஸ் என்பவர் உயிரிழந்த நிலையில் அவரை காப்பாற்றச் சென்ற சரவணனும் பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார், உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த விவகாரம் குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசு மருத்துவமனைகளில் இன்னும் சுமார் 30 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு (ஏடிஎஸ்) மற்றும் அகமதாபாத் குற்றப்பிரிவும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
குஜராத்தின் பொடாட் மாவட்டத்தில் கள்ள சாராயம் குடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தைச் சேர்ந்த 16 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக பொடாட்டில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறை உறுதிப்படுத்தியுள்ளது.
அண்டை மாவட்டமான அகமதாபாத்தின் தண்டுகா தாலுகாவைச் சேர்ந்த ஐந்து பேர் நேற்று சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளனர்.
பாவ்நகர், பொடாட், பர்வாலா மற்றும் தண்டுகாவில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் இன்னும் சுமார் 30 பேர் சிகிச்சை பெற்று வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, குஜராத் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஆஷிஷ் பாட்டியா கூறுகையில், " போலி நாட்டு மதுபானம் தயாரித்து விற்பனை செய்த பொடாட் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்துள்ளோம்.
நேற்று அதிகாலை பர்வாலா தாலுகாவின் ரோஜித் கிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பிற கிராமங்களில் வசிக்கும் சிலரின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து பர்வாலா மற்றும் பொடாட் நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டபோது இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது" என்றார்.
மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும், போலி மது விற்பனை செய்பவர்களை பிடிக்கவும் துணை போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்து அதிகாரியின் கீழ் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) அமைக்கப்படும் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (பாவ்நகர் ரேஞ்ச்) அசோக் குமார் யாதவ் தெரிவித்தார்.
குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு (ஏடிஎஸ்) மற்றும் அகமதாபாத் குற்றப்பிரிவும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
- தோட்டப் பகுதியில் உள்ள சுமார் 5 அடி ஆழமுள்ள தண்ணீர் தேங்கி நின்ற ஒரு குழியில் மூழ்கி இறந்த நிலையில் கிடந்ததை பார்த்து அவரது பெற்றோர்கள் கதறி அழுதனர்.
- இது குறித்து பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி அருகே உள்ள தேவி பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன்.
இவர் தனது குடும்பத்தினருடன் அதே பகுதியில் உள்ள மகாலிங்கம் என்பவரது தோட்டத்தில் தங்கி கூலிவேலை செய்து வருகிறார். இவரது மகன் ஹரிக்குமார் (வயது 14). இவர் பரமத்தியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாணவர் ஹரிக்குமார் காலையில் அங்கிருந்த தோட்டப்பகுதிக்கு சென்றவர் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் தோட்டப் பகுதியில் உள்ள சுமார் 5 அடி ஆழமுள்ள தண்ணீர் தேங்கி நின்ற ஒரு குழியில் மூழ்கி இறந்த நிலையில் கிடந்ததை பார்த்து அவரது பெற்றோர்கள் கதறி அழுதனர்.
பின்னர் இது குறித்து பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக
பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனை க்கு அனுப்பி வைத்தனர். சிறுவன் குழியில் தவறி விழுந்து இறந்தது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
- சம்பவத்தன்று மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் வீடு திரும்பவில்லை.
- நாய்கள் துரத்தியபோது தப்பிப்பதற்காக கிணற்றில் விழுந்ததா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
தச்சநல்லூர் அருகே உள்ள சேந்திமங்கலம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன் ( வயது 65). இவர் சொந்தமாக ஆடு வளர்த்து வருகிறார். தினமும் ஆடுகளை மேய்சலுக்கு திறந்து விடுவார். மாலையில் அவை மீண்டும் வீடு திரும்புவது வழக்கம்.
சம்பவத்தன்று மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் வீடு திரும்பவில்லை. இதனால் அவர் அப்பகுதியில் தேடிச்சென்றார். ஆனால் அவைகளை அங்கு காணவில்லை.இந்நிலையில் சேந்திமங்கலத்தில் உள்ள ஒரு கிணற்றில் 4 ஆடுகள் இறந்த நிலையில் மிதந்து கொண்டிருந்தது.
மேலும் கிணற்றின் அருகில் நாய்கள் கடித்து குதறிய நிலையில் மேலும் ஒரு ஆடு இறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த முருகேசன் தச்சநல்லூர் போலீசில் புகார் செய்தார். ஆடுகள் மேய்ச்சலுக்கு சென்றபோது தவறி கிணற்றில் விழுந்த இறந்ததா? அல்லது நாய்கள் துரத்தியபோது தப்பிப்பதற்காக சென்றபோது கிணற்றில் விழுந்ததா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வண்ணார்காடு பகுதியில், நேற்று விவசாயநிலத்தில் 2 ஆண்மயில் மற்றும் 2 பெண்மயில் என நான்கு மயில்கள் உயிரிழந்து கிடந்தது.
- மேலும் ஒரே நேரத்தில் 4 மயில்கள் உயிரிழந்ததால், அப்பகுதியில் உள்ள யாரேனும் மயில்களுக்கு விஷம்வைத்து கொன்றார்களா?
எடப்பாடி:
எடப்பாடி அடுத்த குரும்பபட்டி ஊராட்சிக்குட்பட்ட, நாச்சியூர் அடுத்த வண்ணார்காடு பகுதியில், நேற்று விவசாயநிலத்தில் 2 ஆண்மயில் மற்றும் 2 பெண்மயில் என நான்கு மயில்கள் உயிரிழந்து கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அலுவலர்கள், மயில்களின் உடலினை கைப்பற்றி , கொங்கணாபுரம் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் ஒரே நேரத்தில் 4 மயில்கள் உயிரிழந்ததால், அப்பகுதியில் உள்ள யாரேனும் மயில்களுக்கு விஷம்வைத்து கொன்றார்களா? மேலும் புதர்பகுதியில் மயில்கள் இறந்து கிடக்கின்றனவா? என வனவர் குமரேசன் தலைமையிலான வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
தேசியபறவையான மயில்கள் மர்மமான முறையில் இறந்துகிடந்த நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
- ரெயில் மோதி வாலிபர் இறந்தார்.
- அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை.
மதுரை
மதுரை கூடல்நகர்-சமயநல்லூர் இடையே சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் சம்பவத்தன்று நள்ளிரவு தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது மதுரையில் இருந்து திண்டுக்கல் மார்க்க மாக சென்ற ெரயில் மோதியது. இதில் அந்த நபர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
அவர் சிகப்பு, நீல கலர் கோடு போட்ட முழுக்கை சட்டை, வெள்ளை கலர் முண்டா பனியன், சிமெண்ட் கலர் பேண்ட் அணிந்திருந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக விளாங்குடி கிராம நிர்வாக அலுவலர் நாகராஜ் கொடுத்த புகாரின் பேரில் ெரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியானவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பலியான நபர் பற்றி யாருக்கேனும் அடையாளம் தெரிந்தால் மதுரை இருப்பு பாதை போலீஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 2007 முதல் 2012 வரை பஞ்சாப் விதான் சபாவின் சபாநாயகராகவும் பணியாற்றினார்.
- இவரது மறைவுக்கு சிரோமணி அகாலி தள தலைவர் சுக்பீர் சிங் பாதல் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் சட்டசபை சபாநாயகரும், மூத்த எஸ்ஏடி தலைவருமான நிர்மல் சிங் கஹ்லோன் நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை அவர் காலமானார்.
நிர்மல் சிங்கின் மறைவை உறுதி செய்த அகாலி தளத்தின் மூத்த தலைவர் தல்ஜித் சிங் சீமா தனது டுவிட்டர் பக்கத்தில், " குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஃபதேகர் சூரியன் அருகே உள்ள தாதுஜோத் கிராமத்தில் கஹ்லோனின் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
கஹ்லோன் 1997 முதல் 2002 வரை அகாலி அரசாங்கத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துகளுக்கான அமைச்சராக இருந்தார். அவர் 2007 முதல் 2012 வரை பஞ்சாப் விதான் சபாவின் சபாநாயகராகவும் பணியாற்றினார்.
இந்நிலையில், இவரது மறைவுக்கு சிரோமணி அகாலி தள தலைவர் சுக்பீர் சிங் பாதல் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் பாதல் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், "மூத்த அகாலி தலைவரும் முன்னாள் பஞ்சாப் விதான் சபா சபாநாயகருமான நிர்மல் சிங் கஹ்லோனின் மறைவு குறித்து அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். கஹ்லோன் நம் அனைவருக்கும் உத்வேகம் அளித்தவர். அவருடைய புத்திசாலித்தனமான ஆலோசனை எப்போதும் தவறவிடப்படும். இந்த நேரத்தில் கஹ்லோன் குடும்பத்திற்கு ஆதரவாக நிற்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
- பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்த தொழிலாளி கிடந்தார்.
- தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி திருத்தங்கல் அருகே உள்ள தரகன் தோட்ட தெருவை சேர்ந்தவர் கார்த்தீஸ்வரன்(வயது 23), கூலித்தொழிலாளி. இவரது மனைவி நந்தினி.இருவருக்கும் திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது.
கடந்த 6-ந் தேதி நந்தினி கடைக்கு சென்றார். அதன்பிறகு அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து கணவர் நந்தினியிடம் கேட்ட போது, அவர் தனது தாய் வீட்டிற்கு வந்து விட்டேன் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 9-ந் தேதி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக கார்த்தீஸ்வரனின் தந்தையிடம் நந்தினி கூறியுள்ளார். உடனடியாக வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கார்த்தீஸ்வரன் வீட்டுக்குள் தூக்கில் பிணமாக தொங்கினார்.
அவர் மனைவியின் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இது குறித்து திருத்தங்கல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கார்த்தீஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கார்த்தீஸ்வரன் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 11 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
- துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தென்னாப்பிரிக்கா தலைநகரின் தென்கிழக்கில் ஜோகன்னஸ்பர்க்கின் மிகப்பெரிய நகரமான சோவெட்டோவின் ஆர்லாண்டோ மாவட்டத்தில் பார் உள்ளது. இந்த மதுக்கடையில் நுழைந்த மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இதில் 14 பேர் கொல்லப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
போலீஸ் அதிகாரி எலியாஸ் மாவேலா கூறியதாவது:-
நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் அழைப்பு வந்தது. அப்போது, பாரில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக தகவல் கிடைத்தது. நாங்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, 12 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும், 11 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் மேலும் இருவர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் லாரி ஓட்டுனர் உள்பட இருவரை கைது செய்தனர்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹர்தய் மாவட்டம் ஒட்ரா கிராமம் அருகே பிரயாக்ராஜ்- அயோத்தி புறவழிச்சாலையில் இ- ரிக்ஷா மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் இ- ரிக்ஷாவில் பயணம் செய்த பூல் காளி (60), ராஜேந்திரா (45), ரகுவிர் (55), நிர்மலா (52) மற்றும் அடையாள தெரியாத நபர் என 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை அம்மாவட்ட மாஜிஸ்திரேட் ரவீஷ் குப்தா, போலீஸ் சுப்பிரண்டு சோமன் பர்மா ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் லாரி ஓட்டுனர் உள்பட இருவரை கைது செய்தனர்.
- ஆட்டோ மீது மின்சாரம் பாய்ந்து தீப்பிடித்தது.
- போலீசார் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆந்திரா மாநிலம் ஸ்ரீசத்யசாய் மாவட்டத்தில் விவசாய பணிக்காக 8 பேர் ஆட்டோவில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, தாடிமரி மண்டலம் கொண்டம்பள்ளி அருகே ஆட்டோ மீது உயர்மின் அழுத்தம் மின்கம்பி அறுந்து விழுந்தது. இதில், ஆட்டோ மீது மின்சாரம் பாய்ந்து தீப்பிடித்தது.
ஆட்டோவிற்குள் இருந்து 8 பேரும் மின்சாரம் பாய்ந்து, தீயில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததை அடுத்து, போலீசார் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், மின்கம்பி அறுந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.