search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dead"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மொரோக்கோ நாட்டில் இருந்து படகுகள் மூலம் 32 அகதிகள் புலம்பெயர முயன்றுள்ளனர்.
    • ஜனவரி 1 மற்றும் நவம்பர் 15 க்கு இடையில் 13,000 க்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் வருகை.

    வட ஆப்பிரிக்காவில் உள்ள மொரோக்கோ நாட்டை சேர்ந்த 4 அகதிகளின் சடலம் ஸ்பெயின் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

    மொரோக்கோ மற்றும் அல்ஜீரியாவிலிருந்து படகுகளில் வெளியேறும் அகதிகள் மேற்கு மத்தியதரைக் கடல் வழியாக, ஐரோப்பாவிற்குள் குடியேற முக்கிய நுழைவுப் புள்ளிகளில் ஒன்றாக ஸ்பெயின் நாட்டில் நுழைகின்றனர்.

    அந்த வகையில், மொரோக்கோ நாட்டில் இருந்து படகுகள் மூலம் 32 அகதிகள் புலம்பெயர முயன்றுள்ளனர். இதில், 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்க கூடும் என்றும் அவர்களின் சடலங்கள் கரை ஒதுங்கி இருக்கக்கூடும் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதேபோல், பயணத்தில் தப்பிய புலம்பெயர்ந்தவர்களில் நான்கு பேர் மயக்க நிலையில் காணப்பட்டனர் என்றும் அவர்களில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

    இந்த விவகாரம் தொடர்பாக, ஸ்பெயின் போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.

    இதுதொடர்பாக, ஸ்பெயினின் உள்துறை அமைச்சகத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, ஜனவரி 1 மற்றும் நவம்பர் 15 க்கு இடையில் 13,000 க்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் ஸ்பெயின் நிலப்பரப்பு அல்லது பலேரிக் தீவிற்கு வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த இரண்டு நாட்களில் ஆயுர்வேத சிரப் குடித்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • இரண்டு பேர் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

    குஜராத் மாநிலம், கேதா மாவட்டத்தில் ஆயுர்வேத சிரப் குடித்து 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்களைத் தவிர, மேலும் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கேதா மாவட்டத்தில் உள்ள நடியாட் டவுன் அருகே பிலோதரா கிராமத்தில் உள்ள கடை ஒன்றில் "கல்மேகசாவ்- அசாவா அரிஷ்டா" என்கிற பெயரில் ஆயுர்வேத சிரப் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.

    இந்த சிரப் குறைந்தது 50 பேருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த சிரப்பில் மிகவும் விஷத்தன்மை கொண்ட "மெத்தில் அல்கோஹால்" என்கிற வேதியியல் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், சிரப்பை உட்கொண்ட கிராமவாசி ஒருவரின் ரத்த மாதிரியும் சோதனை செய்யப்பட்டது. அதில், மெத்தில் ஆல்கோஹால் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேதா போலீஸ் கண்காணிப்பாளர் ராஜேஷ் காதியா தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர், "கடந்த இரண்டு நாட்களில் ஆயுர்வேத சிரப் குடித்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டு பேர் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மேற்கொண்டு விசாரணைக்காக கடைக்காரர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" எனவும் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சேலம் அருகே ரெயில் வந்தபோது கான்பட் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு ரெயில்வே டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.
    • உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கை சேர்ந்தவர் கான்பட் (68). இவர் மனைவியுடன் மதுரையில் இருந்து தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று புனேக்கு புறப்பட்டார். நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சேலம் அருகே ரெயில் வந்தபோது கான்பட் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு ரெயில்வே டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இது தொடர்பாக அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலைய 1-வது பிளாட்பாமில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று இரவு மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை பார்த்த போலீசார் அவரை மீட்டு ரெயில்வே டாக்டர்கள் மூலம் பரிசோதித்தனர். அப்போது அவர் இறந்து விட்டது தெரிய வந்தது. அவரது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மினி பஸ் மோதி சிறுவன் பலியானான்
    • தவறான பாதையில் மினி பஸ்சை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய டிரை வரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    அருப்புக்கோட்டை

    நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்தவர் திவான். இவரது தாய் மீரான்பீவி (வயது 70), மனைவி, 3 வயது மகன் தானிஷ்அகமது ஆகியோர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைக்கு விசேஷ நிகழ்ச்சிக்காக இன்று காலை வந்தனர்.

    அருப்புக்கோட்டை புது பஸ் நிலையத்தில் இறங்கி ஆட்டோ பிடிப்பதற்காக மதுரை சாலையில் நடந்து சென்றனர். அப்போது தவறான வழியில் வேகமாக வந்த மினி பஸ் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த தானிஷ்அகமது சம்பவ இடத்திலேயே பரி தாபமாக இறந்தான். மீரான் பீவி, திவானின் மனைவி மற்றும் அங்கு நின்றிருந்த கருப்பசாமி, லட்சுமிபிரியா ஆகியோர் காயம் அடைந்த னர்.

    தகவல் அறிந்த அருப்புக்கோட்டை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த வர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர்.

    தவறான பாதையில் மினி பஸ்சை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய டிரை வரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெங்களூரு வந்து சாலையை கடக்க முயன்றபோது இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது.
    • கணவர் கண் முன்பே மனைவியும், குழந்தையும் மின்சாரம் தாக்கி பலி.

    கர்நாடக தலைநகர் பெங்களூருவில் அறுந்து கிடந்த உயர் அழுத்த மின்கம்பியை மிதித்த தாய் மற்றும் 9 மாத குழந்தை தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.

    உயிரிழந்த பெண், சென்னையைச் சேர்ந்த சவுந்தர்யா (23) என தெரியவந்துள்ளது. மின்வாரிய அதிகாரிகள் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னையில் இருந்து இன்று அதிகாலை பேருந்து மூலம் பெங்களூரு வந்து சாலையை கடக்க முயன்றபோது இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது.

    கணவர் கண் முன்பே மனைவியும், குழந்தையும் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மேச்சேரி-ேமட்டூர் சாலையில் குள்ளமுடையானூர் பெட்ரோல் பங்க் அருகில் 50 வயது மதிக்க தக்க பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக பொட்டனேரி கிராம நிர்வாக அதிகாரி அமுதாவிற்கு தகவல் கிடைத்தது.
    • அவர் யார், எந்த ஊைர சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இது தொடர்பாக மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேச்சேரி-ேமட்டூர் சாலையில் குள்ளமுடையானூர் பெட்ரோல் பங்க் அருகில் 50 வயது மதிக்க தக்க பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக பொட்டனேரி கிராம நிர்வாக அதிகாரி அமுதாவிற்கு தகவல் கிடைத்தது.

    உடனே அங்கு விரைந்து சென்ற அவர் மேச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்திய போது அந்த பெண்ணின் உடலில் காயம் இருந்ததால் அவர் வாகனம் மோதி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதையடுத்து அவரது உடலை மீட்டு மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார், எந்த ஊைர சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இது தொடர்பாக மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வசந்த் ஓட்டிவந்த மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அந்த வழியாக ஜெயங்கொண்டத்திலிருந்து சென்று கொண்டிருந்த கார் மீது மோதியது.
    • விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தேசிய நெடுஞ்சாலை பகுதியை ஒட்டிய ஆமணக்கதோண்டி என்ற இடத்தை சேர்ந்தவர் வீரப்பெருமாள்(வயது 75). இவர் தனது வீட்டில் இருந்து அருகிலுள்ள கடைக்கு சைக்கிளில் சென்றார்.

    சாலையை கடக்க முயன்ற போது எதிரே ஜெயங்கொண்டம் அடுத்த கல்லேரி கிராமம் கோவில் தெருவை சேர்ந்த வசந்த் (35) என்பவர் இவர் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு வீட்டுக்கு செல்வதற்காக மோட்டாசைக்கிளில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தார்.

    எதிர்பாராதவிதமாக சாலையை கடக்க நின்று கொண்டிருந்த வீரபெருமாள் மீது மோட்டார்சைக்கிள் நேருக்கு நேர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வீரபெருமாள் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    வசந்த் ஓட்டிவந்த மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அந்த வழியாக ஜெயங்கொண்டத்திலிருந்து சென்று கொண்டிருந்த கார் மீது மோதியது. இதில் வசந்த் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார், அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி வசந்த் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் வீரபெருமாள், வசந்த் ஆகியோரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரோட்டோரம் இருந்த ஒரு நிழற்குடையில் ஜீப் நிலைதடுமாறி மோதி விபத்தானது.
    • ஜீப்பில் இருந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வனவராக பணியாற்றி வந்தவர் ரகுநாதன் (40). கேரளாவைச் சேர்ந்த மர வியாபாரி மார்த்தாண்டம் ராஜன் (43), கொல்லிமலை அரியலூர் நாடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (43). இவர்கள் 3 பேரும் நேற்றிரவு சேலம் நோக்கி ஜீப்பில் வந்து கொண்டிருந்தனர்.

    அவர்கள் இரவு 11.30 மணியளவில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த பேளுக்குறிச்சி மோளப்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது ரோட்டோரம் இருந்த ஒரு நிழற்குடையில் அவர்கள் வந்த ஜீப் நிலைதடுமாறி மோதி விபத்தானது. இதில் ஜீப்பில் இருந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    இதுகுறித்து தகவல் தெரிந்ததும் பேளுக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான 3 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவர்கள் எதற்காக சேலம் சென்றார்கள்? விபத்தான ஜீப்பை ஓட்டி வந்தது மர வியாபாரியான மார்த்தாண்டம் ராஜனா? அல்லது வேறு யாராவது ஓட்டி வந்தார்களா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமிராக்கள் இருக்கிறதா? என்றும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சம்பவத்தன்று வைரமணி பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டார் சுவிட்சை போட்டார்.
    • பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே வைரமணி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள சர்க்கார்பதியை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி வைரமணி (வயது 36). இவர்கள் மோகன் என்பவரது தோட்டத்தில் 15 ஆண்டுகளாக தங்கி இருந்து விவசாய தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.

    சம்பவத்தன்று வைரமணி பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டார் சுவிட்சை போட்டார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது. பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்த அவரை அவரது கணவர் மீட்டு வேட்டைக்காரன்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே வைரமணி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (24). இவர் பீளமேடு அருகே உள்ள வீரியம்பாளையத்தில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தார்.

    சம்பவத்தன்று மழை பெய்து கொண்டு இருந்தது. ஸ்ரீகாந்த் அந்த பகுதியில் உள்ள மின்கம்பம் அருகே சிறுநீர் கழிக்க சென்றார். அப்போது அவர் மின் கம்பத்தை தொட்டார். கண்இமைக்கும் நேரத்தில் அவரை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது. இதில் சம்பவஇடத்திலேயே ஸ்ரீகாந்த் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு விடுதியின் முன்பு சம்பவத்தன்று சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கி கிடந்தார்.
    • அங்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    சேலம்:

    சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு விடுதியின் முன்பு சம்பவத்தன்று சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கி கிடந்தார். இது குறித்த தகவலின் பேரில் சேலம் டவுன் போலீசார் அந்த முதியவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த சேலம் டவுன் போலீசார் இறந்து போன முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo