search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvannamalai"

    • வடதிசையை நோக்கியுள்ள இந்த லிங்கம் குருவை ஆட்சி கிரகணமாக கொண்டுள்ளது.
    • செல்வத்தை வழங்கும் குபேர தெய்வத்தினால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது.

    ஏழாவது லிங்கம் குபேர லிங்கம்.

    வடதிசையை நோக்கியுள்ள இந்த லிங்கம் குருவை ஆட்சி கிரகணமாக கொண்டுள்ளது.

    செல்வத்தை வழங்கும் குபேர தெய்வத்தினால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது.

    பக்தர்கள் செல்வ செழிப்புடன் திகழ இந்த லிங்கத்தை பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    கிரிவலத்தில் உள்ள கடைசி லிங்கம் ஈசானிய லிங்கம்.

    வடகிழக்கை நோக்கி உள்ள இந்த லிங்கம் ஈசானிய தேவரால் நிறுவப்பட்டது. புதன் கிரகம் இந்த லிங்கத்தை ஆட்சி செய்கிறது.

    இந்த லிங்கத்தை சேவித்து வரும் பக்தர்கள் மன அமைதி யுடனும், அனைத்து காரியங்களிலும் வெற்றி கொண்டு திகழ்வார்கள்.

    • மலைதரும் வருணதேவனால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது.
    • இந்த லிங்கத்தை ஆட்சி செய்யும் கிரகம் சனி பகவான். இங்கு வருண தீர்த்தம் என்னும் தெப்பக்குளம் உள்ளது.

    ஐந்தாவதாக உள்ள லிங்கம் வருண லிங்கம்.

    இதற்குரிய திசை மேற்கு.

    மலைதரும் வருணதேவனால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது.

    இந்த லிங்கத்தை ஆட்சி செய்யும் கிரகம் சனி பகவான். இங்கு வருண தீர்த்தம் என்னும் தெப்பக்குளம் உள்ளது.

    சமூகத்தில் முன்னேற்றமடையவும் கொடிய நோய்களில் இருந்து தப்பிக்கவும் இந்த லிங்கத்தை பக்தர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    ஆறாவதாக உள்ள லிங்கம் வாயு லிங்கம். இந்த லிங்கம் வடமேற்கு திசையை நோக்கி உள்ளது.

    வாயு பகவானால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. இதை ஆட்சி செய்யும் கிரகம் கேதுவாகும்.

    இந்த லிங்கத்தை சேவித்து வந்தால் இருதயம், வயிறு, நுரையீரல், மற்றும் பொதுவாக வரும் நோய்களில் இருந்து காத்து கொள்ளலாம்.

    • சனி தீர்த்தம் என அழைக்கப்படும் தெப்பகுளம் இதனருகில் உள்ளது.
    • இதை வேண்டும் பக்தர்கள் நிம்மதியாக பிரச்சினைகளின்றி வாழலாம்.

    மூன்றாவது லிங்கமாக அமைந்துள்ள லிங்கம் எமலிங்கம்.

    இந்த லிங்கம் தெற்கு திசையை நோக்கி உள்ளது. எம தர்மனால் நிறுவப்பட்ட லிங்கம் என கூறப்படுகிறது.

    இது செவ்வாய் கிரகத்திற்கு உட்பட்ட லிங்கம்.

    இதனருகில் சிம்ம தீர்த்தம் எனப்படும் தெப்பகுளம் அமைந்துள்ளது.

    இதை வேண்டுபவர்கள் பண நெருக்கடி இல்லாமல் சந்தோஷமாக வாழலாம் என நம்பப்படுகிறது.

    நான்காவதாக உள்ள லிங்கம் நிருதி லிங்கம். இதன் திசை தென்கிழக்காகும்.

    இதனுடைய கிரகம் ராகுவாகும். பூதங்களின் ராஜாவால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது.

    சனி தீர்த்தம் என அழைக்கப்படும் தெப்பகுளம் இதனருகில் உள்ளது.

    இதை வேண்டும் பக்தர்கள் நிம்மதியாக பிரச்சினைகளின்றி வாழலாம்.

    • சூரியன் மற்றும் சுக்கிரனின் ஆட்சியில் உள்ள லிங்கம்
    • வணங்கும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுளும் பெருத்த செல்வமும் வழங்கும்.

    கிரிவலம் வரும் வழியில் முதலில் தோன்றுவது இந்திரலிங்கம்.

    இந்தலிங்கம் கிழக்கே பார்த்து அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த லிங்கம் பூலோக தேவனான இந்திரதேவனால் நிறுவப்பட்டது.

    சூரியன் மற்றும் சுக்கிரனின் ஆட்சியில் உள்ள லிங்கம்

    வணங்கும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுளும் பெருத்த செல்வமும் வழங்கும்.

    கிரிவலம் வரும் வழியில் இரண்டாவது லிங்கம் அக்னிலிங்கம்.

    இந்த லிங்கம் தென்கிழக்கு திசையை நோக்கி உள்ளது.

    இந்த லிங்கத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இது கிரிவலம் செல்லும் வழியில் இடது புறம் இருக்கும் ஒரே லிங்கம் ஆகும்.

    அக்னிலிங்கத்தை பிரார்த்தனை செய்யும் பக்தர்கள் நோயின்றி முழு ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள் என நம்பப்படுகிறது.

    இந்த லிங்கத்தின் கிரகம் சந்திரன்.

    மேலும் சந்திரகிரகம் என்பதால் வாழ்க்கையில் வரும் இடைஞ்சல்களை அகற்றும் சக்தியுள்ளது என நம்புகிறார்கள்.

    இந்த லிங்கம் தாமரை தெப்பகுளத்திற்கு அருகே உள்ளது.

    • சிவன் இங்கு மலை வடிவத்தில் தோன்றுவதால் அண்ணாமலை என்றும் அழைக்கப்படுகிறார்.
    • ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கமாகவும் புண்ணியமாகவும் கருதப்படுகிறது.

    திருவண்ணாமலையில் இருக்கும் அருணாச்சலேஸ்வரர் கோவில் தமிழ்நாட்டில் இருக்கும் மிக பழமை வாய்ந்த கோவிலாகும்.

    பஞ்சபூதங்களில் ஒன்றான அக்னி வடிவத்தில் ஈசன் இங்கு உருவெடுத்துள்ளதால் பக்தர்களிடையே இதற்கு மேலும் சிறப்புண்டு.

    சென்னையிலிருந்து 180 கி.மீ தொலைவில் உள்ளது.

    சிவன் இங்கு மலை வடிவத்தில் தோன்றுவதால் அண்ணாமலை என்றும் அழைக்கப்படுகிறார்.

    ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கமாகவும் புண்ணியமாகவும் கருதப்படுகிறது.

    லட்ச கணக்கான சிவ பக்தர்கள் இங்கு பவுர்ணமி அன்று கிரிவலம் வருகின்றனர்.

    ஒரு முறை இந்த மலையை சுற்றி வருவதற்கு 14 கி.மீ நடக்கவேண்டும்.

    இதை மேற்கொள்ளும் அனைத்து பெரியவர்கள், சிறியவர்கள் அனைவரும் மன அமைதிபெறுவார்கள்.

    உடல் முழு உற்சாகம் அடையும் என்பது பக்தர்களிடையே உள்ள நம்பிக்கையாகும்.

    • மகா சிவராத்திரி தோன்றியது திருவண்ணாமலை தலத்தில் தான்.
    • சூரிய பிரகாசத்துடன் சிவபெருமான் லிங்க வடிவில் திருவண்ணாமலையில் தோன்றினார்.

    மகிமை மிக்க மகா சிவராத்திரி தோன்றியது திருவண்ணாமலை தலத்தில் தான் என்பது பலருக்கும் தெரியாத ரகசியமாக உள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

     மகிமை மிக்க இந்த மகா சிவராத்திரி தோன்றியது திருவண்ணாமலை தலத்தில் தான் என்பது பலருக்கும் தெரியாத ரகசியமாக உள்ளது. இந்த நாளில்தான் கோடி சூரிய பிரகாசத்துடன் சிவபெருமான் லிங்க வடிவில் திருவண்ணாமலையில் தோன்றினார் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் ஒரு புராண நிகழ்வு சொல்லப்படுகிறது.

    விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் ஒரு தடவை தம்மில் யார் பெரியவர் என்ற சண்டை ஏற்பட்டது. அவர்களது சண்டையைத் தீர்த்து வைக்குமாறு தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் முறையிட்டனர். அதை ஏற்று சிவபெருமான் மிகப்பெரிய நெருப்புப் பிழம்பாக விஷ்ணு, பிரம்மா இருவர் முன்பும் தோன்றினார். அந்த நெருப்புப் பிழம்பு மண்ணுக்கும், விண்ணுக்கும் பரவி மிகப் பிரமாண்டமாக காட்சி அளித்தது.

    அந்த நெருப்புப் பிழம்பு விஷ்ணு, பிரம்மா இருவரிடமும் `எனது அடிமுடியை யார் முதலில் தொட்டு வருகிறீர்களோ, அவரே இந்த உலகின் பெரியவர் ஆவார்' என்றது. உடனே விஷ்ணு வராக (பன்றி) உருவம் எடுத்து அந்த நெருப்புப் பிழம்பின் அடியை காண்பதற்காக பூமியை துளைத்துச் சென்றார்.

    பிரம்மனோ அன்னப் பறவையாக மாறி, நெருப்புப் பிழம்பின் முடியை கண்டு வருகிறேன் என்று உயரே பறந்து சென்றார். பல ஆண்டுகள், யுகங்களாக முயன்றும் விஷ்ணு, பிரம்மா இருவராலும் அந்த நெருப்புப் பிழம்பின் அடி, முடியை காண இயலவில்லை. இது ஈசனின் செயலாகத்தான் இருக்கும் என்பதை உணர்ந்த விஷ்ணு, தனது முயற்சியை கைவிட்டு திரும்பி வந்தார். அவரிடம் இருந்த ஆணவம் காணாமல் போய் விட்டது.

    ஆனால் பிரம்மாவிடம் இருந்த அகந்தை மட்டும் நீங்கவில்லை. உயர பறக்க முடியாமல் சோர்வடைந்து திரும்பிக் கொண்டிருந்த பிரம்மா, ஒரு தாழம்பூவை பார்த்தார். அந்த தாழம்பூ ஈசனின் முடியில் இருந்து விழுந்து பல நூறு யுகங்களாக கீழே வந்து கொண்டிருப்பதை அறிந்தார்.

    நெருப்புப் பிழம்பின் முடியை தான் கண்டதாக பொய் சொல்ல வேண்டும் என்று அந்த தாழம்பூவிடம் பிரம்மா கேட்டுக் கொண்டார். தாழம்பூவும் அதற்கு சம்மதித்தது. தரை இறங்கியதும் அந்த தாழம்பூ பொய் சாட்சி சொன்னது. அவ்வளவுதான்.... நெருப்புப் பிழம்பாக இருந்த சிவபெருமானுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அந்த நெருப்புப் பிழம்பில் இருந்து சிவபெருமான் வெடித்துக் கொண்டு லிங்க வடிவில் வெளியில் வந்தார்.

    விஷ்ணுவுக்கும், தேவர்களுக்கும் கேட்ட வரங்களை எல்லாம் கொடுத்த சிவபெருமான், பொய் சொன்னதற்காக பிரம்மாவுக்கு, பூமியில் கோவில் இல்லை என்றும், தாழம்பூவை பூஜைக்கு தகுதியற்ற மலராவாய் என்றும் சாபமிட்டார்.

    இந்த நிகழ்ச்சி நடந்தது திருவண்ணாமலையில் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் உலகில் திருவண்ணாமலையில் தான் முதன் முதலில் அக்னி தோன்றியது என்கிறார்கள். இந்த அக்னியில் இருந்துதான் சூரியன், சந்திரன் பிரகாசங்கள் மற்றும் தீப ஒளிகள் தோன்றின என்று புராணங்களில் எழுதப்பட்டுள்ளது.

     இந்த அக்னியில் இருந்து வெளியில் வந்த சிவபெருமான் `லிங்கோத்பவர்' வடிவில் காட்சிக் கொடுத்தார். இதனால் திருவண்ணாமலையில் தான் முதன் முதலில் லிங்க வழிபாடு தோன்றியது என்பது உறுதியாகிறது. மாசி மாத சிவராத்திரி அன்று இந்த நிகழ்வு நடந்ததால், அது மகா சிவராத்திரி என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது. ஆக, மகா சிவராத்திரி விழா தோன்றிய தலமும் திருவண்ணாமலையே.

    திருவண்ணாமலையில் இருந்துதான் லிங்கோத்பவர் வழிபாடும், மகா சிவராத்திரி கொண்டாட்டமும் மற்ற தலங்களுக்குப் பரவியது. சிவபெருமானுக்குரிய முக்கிய 25 வடிவங்களில் முதலாவது அமைவது லிங்கோத்பவர் வடிவம்தான். லிங்கம் என்பது சிவ வடிவம். அந்த லிங்கத்தில் இருந்து தோன்றிய உருவம்தான் லிங்கோத்பவர். அதாவது லிங்கத்துக்கு தலை, கை, கால் முளைத்தால் கிடைக்கும் உருவம்தான் லிங்கோத்பவர்.

    சிவபெருமான் முதலில் உருவம் இல்லாமல் அருவமாகத்தான் இருந்தார். ஆனால் உலக உயிர்கள் முன்பு தோன்ற நினைத்தபோது அருவுருவாகவும், பிறகு உருவமாகவும் தோன்றினார். அருவத்துக்கும், உருவத்துக்கும் இடையில் நின்றதே அருவுருவமாகும். இதுதான் திருவண்ணாமலையில் நெருப்புப் பிழம்பாக நின்ற லிங்கோத்பவர் உருவமாகும். எனவேதான் திருவண்ணாமலையில் லிங்கோத்பவர் வழிபாடு, மிக, மிக சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

    திருவண்ணாமலை ஆலயத்தில் கருவறை கோஷ்டத்தில் மூலவருக்கு நேர் பின்புறத்தில் மேற்கு திசை நோக்கி லிங்கோத்பவர் இருப்பதை காணலாம். இந்த லிங்கோத்பவர், மும்மூர்த்திகளின் அருளையும் ஒரே திருவுருவில் வழங்கிக் கொண்டிருப்பதாக ஐதீகம்.

    பொதுவாக லிங்கோத்பவரை பார்க்கும் போதெல்லாம் அவருக்கு விளக்கு ஏற்றி வைத்து வழிபட வேண்டும். மலையில் இருட்டத்தொடங்கும் நேரத்தில் இவர் சன்னதியில் விளக்கேற்றி வழிபட்டால் நமது ஆணவம், அகந்தை எல்லாம் ஓடோடி விடும்.

    மகாசிவராத்திரி நாளில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சிவாலயங்களில் மூன்றாம் ஜாம பூஜையை லிங்கோத்பவருக்குரிய பூஜையாக நடத்துகிறார்கள். லிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு அருவுருவமாக லிங்கோத்பவர் அருள்பாவித்த காலமாக இதை சொல்கிறார்கள்.

    ஆனால் திருவண்ணாமலை தலத்தில் மட்டும் மகா சிவராத்திரியின் இரண்டாம் ஜாம பூஜையை லிங்கோத்பவருக்குரிய பூஜையாக நடத்துகிறார்கள். லிங்கோத்பவர் முதன் முதலில் திருவண்ணாமலையில் தோன்றியவர் என்ற ஐதீகத்தின் அடிப்படையில் மற்ற தலங்களுக்கு முன்பாக இரண்டாம் ஜாமத்திலேயே திருவண்ணாமலையில் பூஜைகள் நடத்தப்படுவதாக ரமேஷ் குருக்கள் தெரிவித்தார்.

    உலக உயிர்கள் `நான்', `எனது' என்பன போன்ற ஆணவம், அகந்தை கொள்ளாமல், தானும் இந்த பிரபஞ்சத்தில் ஒரு சிறு அணுவே என்பதை உணர்ந்து புரிந்து கொள்வதே லிங்கோத்பவர் வடிவத்தின் தத்துவமாக உள்ளது. இந்த வடிவை வழிபட்டால் உடல் நலமும், மோட்ச பிராப்தமும் கிடைக்கும். எனவேதான் இந்த வழிபாட்டை, `மோட்ச பிரதாயினி' என்று சொல்கிறார்கள்.

    லிங்கோத்பவர் பூஜையின்போது மட்டும் சுவாமிக்கு நெய்பூசி, வெண்ணீர் அபிஷேகம் செய்து, பிறகு கம்பளி போர்த்தி தாழம்பூ சூட்டுவார்கள். இந்த ஒரு காலத்தில் மட்டுமே சிவனுக்கு தாழம்பூ அணிவிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    திருவண்ணாமலையில் மகா சிவராத்திரியன்று இந்த பூஜையை நேரில் பார்த்து தரிசித்தால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும். அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கெல்லாம் அண்ணாமலையாருக்கு அபிஷேகம் செய்யப்படும். பிறகு தங்கக்கவசம் அலங்காரம் செய்து வழிபாடுகள் நடைபெறும். மதியம் வரை லட்சார்ச்சனை நடைபெறும்.

    அன்றிரவு 4 ஜாம பூஜைகள் நடத்துவார்கள். இரவு 7 மணிக்கு முதல் ஜாம பூஜை, 11 மணிக்கு இரண்டாம் ஜாம பூஜை நள்ளிரவு  1 மணிக்கு மூன்றாம் ஜாம பூஜை, அதிகாலை 4 மணிக்கு நான்காம் ஜாம பூஜை நடத்துவார்கள்.

    இதில் இரவு 11 மணி முதல் 1 மணி வரையிலான இரண்டாம் ஜாம பூஜை லிங்கோத்பவருக்கான பூஜையாக நடைபெறும். அடி, முடி காண முடியாதபடி சிவபெருமான் நெருப்புப் பிழம்பாக நின்ற நேரம் அது. எனவே இந்த நேரத்தில் லிங்கோத்பவரை வழிபாடு செய்வதும், கிரிவலம் வருவதும் மிகுந்த புண்ணியத்தைத் தரும்.

    மகாசிவராத்திரி தினத்தன்று திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களுக்காக இரவு முழுவதும் பன்னிரு திருமுறை இசைக் கச்சேரி நடைபெறும். ராஜகோபுரம் அருகே 108 தவில், நாதஸ்வர வித்வான்களின் கச்சேரி நடக்கும்.

    கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் லட்ச தீபம் ஏற்றி வைப்பார்கள். கடந்த சுமார் 25 ஆண்டுகளாக திருவண்ணாமலையில் லட்சதீபம் ஏற்றப்பட்டு வருகிறது. மகாசிவராத்திரி தினத்தன்று லட்ச தீபத்தை பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அது மட்டுமல்ல, கிரிவலம் வரும் பக்தர்கள், மகாசிவராத்திரி தினத்தில் மட்டும் வில்வ கூடையை ஏந்தியபடி கிரிவலம் செல்வது வித்தியாசமாக இருக்கும்.

    நெருப்பு மலையாக இருக்கும் சிவபெருமானை குளிர்ச்சிப்படுத்த பக்தர்கள் கூடை, கூடையாக வில்வம் எடுத்துச் செல்கிறார்கள் என்பது ஐதீகமாகும். சிவராத்திரி கிரிவலம் காரியசித்தி தரும் என்பார்கள். சிவபெருமான் நெருப்பு மலையாக உருவெடுத்தது பற்றி பக்தர்களுக்கு ஒரு சந்தேகம் எழக்கூடும். கார்த்திகை தீபத்தன்றுதானே ஈசன் நெருப்பு உருவில் தோன்றினார் என்று நினைக்கலாம்.

    உண்மையில் சிவபெருமான் திருவண்ணாமலையில் இரண்டு தடவை ஜோதி ரூபமாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். மாசி மாதம் விஷ்ணு, பிரம்மாவின் ஆணவத்தையும், அகந்தையையும் விரட்ட நெருப்புப் பிழம்பாக வந்தார்.

    கார்த்திகை மாதம் அம்பாளுக்கு தன் இடப்பாகத்தில் இடம் கொடுத்தப்போது ஜோதிச்சுடராக வந்தார். முதல் ஜோதி தரிசனத்துக்கும் இரண்டாம் ஜோதி தரிசனத்துக்கும் வித்தியாசம் உள்ளதை பக்தர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மாசியில் நெருப்புப் பிழம்பு, கார்த்திகையில் ஜோதி சுடர். சிவபெருமான் ஜோதி ரூபமாக வெளிப்பட்டதால்தான் திருவண்ணாமலை தலம், "அக்னி தலம்" என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.

     அண்ணாமலையார் சன்னதியின் அர்த்த மண்டபத்தில் சிறிது நேரம் நின்று பாருங்கள்... அனல் வீசுவதுபோல இருக்கும். வியர்த்துக்கொட்டும். திருவண்ணாமலை நெருப்புத்தலம் என்பதை உறுதிப்படுத்த இந்த உதாரணம் ஒன்றே போதும் என்கிறார் ரமேஷ்குருக்கள்.

    சமீபத்தில் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் அணுவில் உள்ள எலக்ட்ரானுக்குள்ளும் லிங்கம் இருப்பதை கண்டுபிடித்தனர். எலக்ட்ரானுக்குள்ளும் பச்சை நிற வட்டமும, நடுவில் செந்நிறமான ஜோதி வடிவமும் இருப்பதைக் கண்டார்கள். இது திருவண்ணாமலையில் பச்சை பசேல் இயற்கை வளத்துக்கிடையே ஈசன் நெருப்புப் பிழம்பாக தோன்றியதை பிரதிபலிப்பதாக ஆன்மிகப் பெரியவர்கள் சொல்கிறார்கள்.

    அந்த நெருப்பு மலைதான் பக்தர்கள் வழிபடுவதற்கு வசதியாக விஷ்ணு, பிரம்மா வேண்டுதலின்பேரில் சிறு லிங்கமாக மாறியது. அந்த லிங்கத்தை சுற்றியே தற்போதைய ஆலயம் உருவானது.

    • சிவமும் சக்தியும் சேர்ந்ததுதான் உலகம் என்பார்கள்.
    • திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டதும் பெண்கள் நோன்பு கடைபிடிப்பார்கள்.

    சிவமும் சக்தியும் சேர்ந்ததுதான் உலகம் என்பார்கள்.

    சக்தி தவமிருந்து சிவத்துடன் ஒடுங்கிய நாள் ஆருத்ரா தரிசன நாளாக போற்றப்படுகிறது.

    திருவண்ணாமலையில் மகாதீபமாக சிவன் தோன்றிய நாளில் இருந்து சக்தி, ஜோதியை நோக்கி தவமிருந்து சிவனிடம் இடப்பாகம் பெற்று அவருடன் ஒடுங்கும் நாள்ஆருத்ரா தரிசன நாளாகும்.

    அன்றுதான் உலகில் உயிர்கள் தோன்றி பிரபஞ்சமானது. ஆண், பெண் என உயிரினங்கள் தோன்றி உலகம் செயல்பட தொடங்கியது என்பது ஐதீகம்.

    திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டதும் பெண்கள் நோன்பு கடைபிடிப்பார்கள்.

    ஆருத்ரா தரிசனம் வரை இந்த நோன்பை கடைபிடிப்பார்கள்.

    பெண்கள் நோன்பு இருப்பதை தெரிவிக்கும் வகையில் தான் திருவெம்பாவை பாடல்களை மாணிக்கவாசகர்.

    திருப்பள்ளி யெழுச்சி என்றழைக்கப்படும் அந்த பாடல்கள் அடி அண்ணாமலை பகுதியிலிருந்து மாணிக்கவாசகர் இயற்றியவையாகும்.

    அவர் தங்கியிருந்த இடத்தில் தற்போது மாணிக்கவாசகர் கோவில் அமைந்துள்ளது.

    சிவ புராணம் உள்ளிட்ட மனதை உருக்கும் பாடல்களைப் பாடியவர் மாணிக்கவாசகர். அவரை திருவாதவூரார் என்று அழைப்பார்கள்.

    மந்திரியாக இருந்த அவர் சிவனால் ஆட்கொள்ளப்பட்டு குதிரை வாங்க கொடுக்கப்பட்ட பொற்காசுகளை அறந்தாங்கி அருகில் உள்ள திருப்பெருந்துறை கோவில் திருப்பணிக்கு செலவு செய்து விடுகிறார்.

    இதனால் அரச தண்டனைக்கு உள்ளாகும் சூழ்நிலை ஏற்பட்டபோது சிவன் நரிகளை பரிகளாக்கி திருவிளையாடல் செய்தார்.

    இந்த உண்மைகள் பின்னர் தெரியவந்ததும் அரசன், மாணிக்க வாசகரை மன்னித்து விடுகிறார்.

    அதன் பின்னர் மாணிக்கவாசகர் சிவ பெருமானின் கோவில்களுக்குச் சென்று அவரை பாடி மகிழ்கிறார்.

    அவைகள் திருவாசமாக தொகுக்கப்பட்டு பக்தர்களால் பாடப்பட்டு வருகின்றன.

    மாணிக்கவாசகர் பாடல்களைச் சொல்ல, அவைகளை சிவன் எழுதியதாக வரலாறு உள்ளது.

    திருவாசகம் படிப்பவர் மனதை உருக்கும் ஆற்றல் பெற்றது.

    எனவே திருவாசகத் திற்கு உருகாதார் ஓரு வாசகத்திற்கும் உருகார் என்ற முதுமொழி ஏற்பட்டது.

    திருவண்ணாமலையில் ஆருத்ரா தரிசனத்திற்கு முந்திய நாள் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். முன்னதாக மாணிக்க வாசகர் உற்சவம் 10 நாட்கள் நடைபெறும்.

    அப்போது மாணிக்க வாசகர் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் தருவார்.

    ஆருத்ரா தரிசன தினத்தன்று நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் முடிவடைந்ததும் மாணிக்கவாசகர் பாடல்கள் ஓதுவார்கள் மூலம் பாடப்படும்.

    நடராஜரின் நடன கோலத்தை மாணிக்கவாசகர் கண்டு மகிழ்ந்த படி வருவார்.

    திருவண்ணா மலையில் ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெறும் இந்த காட்சிகள் கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

    அதன் பின்னர் நடராஜர் திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே வந்து மாடவீதிகளில் உலா வருவார்.

    அவரை ஆயிரக் கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து மகிழ்வார்கள்.

    அப்போது பக்தர்கள் புத்தாடைகள் வழங்கியும், அர்ச்சனை செய்தும் வழிபடுவார்கள்.

    திருமஞ்சன கோபுரம் தெற்கு வாசல் வழியாக நடராஜர் ஆனி திருமஞ்சனம் மற்றும் திருவாதிரை நாளில் மட்டுமே அந்த வழியாக வருவார்.

    மற்ற திருவிழா நாட்களில் திட்டி வாசல் வழியாகத்தான் வெளியில் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அண்ணாமலையார் ஆலயத்தில் 5 அடி உயரமுள்ள நடராஜர் சிலை தனித்துவம் கொண்டது.
    • அந்த சிலையில் பூனூல் அணிவிக்கப்பட்டு சின் முத்திரை காட்டும் நிலை உள்ளது.

    அண்ணாமலையார் ஆலயத்தில் 5 அடி உயரமுள்ள நடராஜர் சிலை தனித்துவம் கொண்டது.

    இந்த செப்பு சிலை முயலகன் மீது வலது காலை ஊன்றி இடது காலை தூக்கி சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடுவது போன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

    இந்த சிலையின் முகத்தில் லேசான புன்முறுவல் காணப்படும்.

    இந்த செப்பு சிலைக்கு வருடத்தில் 6 தடவை சிறப்பு அபிஷேகம் செய்கிறார்கள்.

    அதில் ஆணித்திருமஞ்சனமும் ஆரூத்ரா தரிசனமும் மிகவும் விசேஷமானது.

    ஆயிரம்கால் மண்டபத்தில் வைத்து இந்த செப்பு சிலைக்கு அபிஷேகம் செய்வார்கள்.

    4 அடி உயரமுள்ள சிவகாமி அம்மன் சிலையின் கழுத்தில் தாலி இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

    அஸ்திர தேவர் செப்பு சிலையானது முன்பக்கம் விநாயகரையும், பின்பக்கம் ரிஷப வாகனரையும் கொண்டுள்ளது.

    விழாக் காலங்களில் இந்த செப்பு சிலை பலி எழுந்தருள்பவராக பயன்படுத்தப்படுகிறார்.

    திருநாவுக்கரசரின் செப்பு சிலை முழங்கால் வரை ஆடை அணிந்தபடி உழவாரப்படையுடன் நின்ற கோலத்தில் காணப்படுகிறது.

    அவர் கழுத்தில் ருத்ராட்ச மாலைகள் தொங்குகின்றன.

    திருஞான சம்பந்தர், சுந்தரரின் செப்பு சிலையும் இதேமாதிரி அழகுடன் உள்ளன.

    மாணிக்கவாசகரின் செப்பு சிலை உச்சிக்குடுமி வைத்திருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    அந்த சிலையில் பூனூல் அணிவிக்கப்பட்டு சின் முத்திரை காட்டும் நிலை உள்ளது.

    அவரது இடது கையில் ஓலைச்சுவடி உள்ளது.

    அதில் "நமச்சிவாய" என்று எழுதப்பட்டுள்ளது. நால்வரின் இந்த சிலைகள் அனைத்தும் சுமார் 2 அடி உயரத்தில் உள்ளன.

    திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாக கருதப்படுவதால் பள்ளியறை சுவாமியும் மலை வடிவான மூன்று சிகர அடுக்கின் மீது சிவலிங்கம் வீற்றிருப்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் வேறு எந்த சிவாலயத்திலும் இதுபோன்று பள்ளியறை சுவாமியை காண இயலாது.

    இப்படி சின்னச்சின்ன சிலைகள் விஷயத்தில் கூட திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயம் தனித்துவம் கொண்டு ஆச்சரியங்களின் உச்சமாக உள்ளது.

    இந்த ஐம்பொன், செப்பு சிலைகளை உற்சவ காலங்களில் நீங்கள் உன்னிப்பாக பார்த்தால் மட்டுமே ஒன்றாக ரசித்து தரிசிக்க முடியும்.

    தீபாவளி அன்று நடத்தப்படும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் விசேஷமானவை. அதுபற்றி அடுத்த வாரம் காணலாம்.

    • இந்த செப்பு சிலையின் கால்களில் மோதிரங்கள் காணப்படுகின்றன.
    • தலையில் வகிடு எடுத்திருப்பது போல் இந்த சிலையை வார்த்துள்ளனர்.

    திருவண்ணாமலை தலத்தில் 2 அடி உயரம் உள்ள சோமாஸ்கந்தர் சிலை அழகான தோற்றத்தில் உள்ளது.

    இந்த செப்பு சிலையின் கால்களில் மோதிரங்கள் காணப்படுகின்றன.

    தலையில் வகிடு எடுத்திருப்பது போல் இந்த சிலையை வார்த்துள்ளனர்.

    இரண்டு கைகளிலும் மலர்களை ஏந்தி இருப்பது போன்று இந்த சிலை வித்தியாசமாக உள்ளது.

    3 அடி உயரமுள்ள அம்மன் சிலை, 4 அடி உயரமுள்ள மற்றொரு அம்மன் சிலைகளும் மற்ற ஆலயங்களில் இல்லாதபடி மாறுபட்ட அழகுடன் திகழுகின்றன.

    இந்த 2 அம்மன் சிலைகளும் சிரித்த முகத்துடன் இருப்பது பக்தர்களுக்கு பரவசமூட்டும்.

    இந்த சிலைகள் 12ம் நூற்றாண்டில் செய்யப்பட்டதாக கருதப்படுகிறது.

    கார்த்திகை மாத பிரம்மோற்சவம், தை மாத திருவூடல் விழா, பங்குனி உத்திர கல்யாண விழா,

    சித்திரை மாத வசந்த உற்சவ விழா, ஊஞ்சல் உற்சவங்கள் மற்றும் மன்மதனை தகனம் செய்யும் விழா

    உள்பட பல்வேறு விழாக்களுக்கு இந்த அம்மன் செப்பு சிலைகள் பயன்படுத்தப்படுகின்றன.

    கந்தசஷ்டி விழாவின் போது மயில் மீது அமர்ந்த ஒரு முருகர் சிலை பயன்படுத்தப்படும்.

    இந்த சிலை ஆறு முகங்கள், 12 கரங்கள் கொண்டதாக உள்ளது.

    சுமார் 3 அடி உயரமுள்ள சண்முகர் சிலை ஆண்டுக்கு ஒருதடவை தான் வெளியில் வரும்.

    இந்த சிலையின் 12 கைகளிலும் வச்சிரம், சக்தி, அம்பு, வில், கத்தி, கேடயம், சக்கரம், சேவல் கொடி, மழு, பாசம்,

    அபயம், வரதம் ஆகியவை முறைப்படி காணப்படுகின்றன.

    சண்முகப் பெருமானின் இருபக்கமும் வள்ளி&தெய்வாணை நின்ற நிலையில் உள்ளனர்.

    வள்ளி காதுகளில் தோடு அணிவிக்கப்பட்டு உள்ளது.

    தெய்வாணை அல்லி மலர்களை ஏந்தியபடி நிற்கிறார்.

    இந்த செப்பு சிலைகளை பார்க்கும் போது ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியமாக இருக்கும்.

    அந்த அளவுக்கு இந்த செப்பு சிலைகள் அழகாக உள்ளன.

    அண்ணாமலையார் ஆலயத்தில் உள்ள செப்பு சிலைகளில் மிகமிக பழமையானதாக பக்தானுக்கிரக சோமாஸ்கந்தர் சிலை கருதப்படுகிறது.

    11ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சிலையை பொக்கிஷமாக போற்றி பாதுகாக்கிறார்கள்.

    இந்த சிலையை ஒருபோதும் எந்த உற்சவ விழாவுக்கும் வெளியில் எடுத்து வருவது இல்லை.

    அதுபோன்று பிட்சாடனர் சிலையும் மிகுந்த வேலைபாடுகளுடன் உள்ளது.

    இந்த செப்பு சிலை கார்த்திகை விழாவின் போது தங்க வாகனத்தில் எடுத்து வரப்படும்.

    சேக்கிழார், தண்டபாணி, பிடாரி, பராசக்தி, பள்ளியறை அம்மன் ஆகியோருக்கும் உற்சவர் செப்பு சிலைகள் உள்ளன.

    • இந்த சிலை 11ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டதாகும்.
    • ஒருபுறம் புலி ஆடையும் மறுபுறம் மகளிர் அணியும் ஆடையும் இடம் பெற்றுள்ளன.

    அண்ணாமலையார் ஆலயத்தில் உள்ள செப்பு சிலைகளில் சில சிலைகள் ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

    விநாயகர் செப்பு சிலை ஒன்று 12ம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்டு இன்றும் விழாக்களில் பயன்படுத்தப்படுகிறது.

    சுமார் 2 அடி உயரம் கொண்ட இந்த விநாயகர் நின்ற கோலத்தில் இருக்கிறார்.

    செப்பு சிலைகளில் மூலநாயகர் என்றும் பிரதோஷ நாயகர் என்றும் அழைக்கப்படும் செப்பு சிலை முக்கியமானது.

    சிவபெருமான், மழு, மான், அபயம் கொண்டு இடது கையால் அம்மனை அனைத்தபடி உள்ளார்.

    இந்த செப்பு சிலை 15ம் நூற்றாண்டை சேர்ந்தது என்கிறார்கள்.

    பிரதோஷ நாட்களில் இந்த சிலை ஆலயத்துக்குள் மட்டுமே உலா வரும்.

    வெளியில் வீதிஉலா வருவதில்லை.

    அதுபோல முருகர் செப்பு சிலை 6 கைகளுடன் பத்ம பீடத்தில் நின்ற கோலத்தில் இருக்கிறது.

    இந்த சிலை 11ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டதாகும்.

    வள்ளி&தெய்வாணை செப்பு சிலைகளும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

    காதுகளில் குண்டலங்களும், கச்சை அணிந்த நிலையில் வளையல், சிலம்பு, மோதிரம் அணிந்திருப்பது போன்று வடிவமைத்துள்ளனர்.

    சந்திரசேகர் செப்பு சிலை, மழு, மான், அபயவரதங்களை கொண்டு நின்ற நிலையில் உள்ளது.

    மூன்று அடி உயரமுள்ள இந்த சிலையும் கம்பீரமானது.

    மற்றொரு சிறிய சந்திரசேகர் சிலையும் உள்ளது.

    இந்த சிலையில் கையில் உள்ள ரேகைகள் கூட தெரியும் அளவில் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதுபோன்று அர்த்தநாரீஸ்வரர் செப்பு சிலையும் வித்தியாசமானது.

    12ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இந்த சிலை திருவாசியுடன் இணைந்து பத்ரபத்ம பீடத்தில் நின்ற நிலையில் உள்ளது.

    தலை முழுவதும் ஜடா மகுடமாக அமைந்துள்ளது.

    இடது கையை இடையில் வைத்துக் கொண்டு இருப்பது போல் செய்துள்ளனர்.

    இரு காதுகளிலும் மகர குண்டலங்கள் தொங்குகின்றன.

    ஒருபுறம் புலி ஆடையும் மறுபுறம் மகளிர் அணியும் ஆடையும் இடம் பெற்றுள்ளன.

    மிகவும் கலைநுட்ப வேலைபாடுகளுடன் திகழும் இந்த அர்த்தநாரீஸ்வரர் சிலையை வீதிஉலாவுக்கு பயன்படுத்துவது இல்லை.

    கார்த்திகை மாதம் நடைபெறும் தீபத் திருவிழாவின் போது இந்த செப்பு சிலை ஆலயத்துக்குள் இருந்து வெளியில் வரும்.

    தீப மண்டபத்தில் அணிவகுத்து நிற்கும் பஞ்ச மூர்த்திகளுக்கு ஓரிரு நிமிடங்கள் மட்டும் காட்சி கொடுத்து விட்டு இந்த செப்பு சிலை உடனே உள்ளே சென்றுவிடும்.

    பார்வதிக்கு சிவபெருமான் இடது பாகம் தந்ததை உணர்த்தும் வகையில் இந்த அர்த்தநாரீஸ்வரர் செப்பு சிலை ஆண்டுக்கு ஒரு தடவை மட்டுமே வெளியில் வருவது குறிப்பிடத்தக்கது.

    • இரண்டாம் கால பூஜையின் போது ஸ்ரீ பராசக்தி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படும்.
    • அன்னையை ஊஞ்சலில் அமர்த்தி தாலாட்டுவார்கள்.

    சோமாவார பூஜை திங்கட்கிழமை நடத்தப்படுவது போல சுக்ரவார பூஜை வெள்ளிக்கிழமை தோறும் நடத்தப்படுகிறது.

    அன்றையதினம் மாலை இரண்டாம் கால பூஜையின் போது ஸ்ரீ பராசக்தி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படும்.

    பிறகு அம்மனுக்கு அலங்காரம் செய்து எழுந்தருள செய்வார்கள்.

    அதைத்தொடர்ந்து உண்ணாமலை அம்மன் சன்னதி எதிரே உள்ள கொடி மரம் அருகே ஊஞ்சல் உற்சவம் நடத்தப்படும்.

    அன்னையை ஊஞ்சலில் அமர்த்தி தாலாட்டுவார்கள்.

    ஸ்ரீ பராசக்தி அம்மனின் ஆனந்த ஊஞ்சல் உற்சவத்துக்கு ஏற்ப நாதஸ்வர கலைஞர்கள் இசை அமைப்பார்கள்.

    கண்களுக்கும், காதுகளுக்கும் இந்த ஊஞ்சல் உற்சவம் விருந்து படைப்பதாக இருக்கும்.

    ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் இரவு 7 மணிக்கு இந்த ஊஞ்சல் உற்சவம் நடத்தப்படுகிறது.

    திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் திட்டமிட்டு தங்கள் பயணத்தை அமைத்துக் கொண்டால் இந்த ஊஞ்சல் உற்சவத்தை பார்த்துவிட்டு வரலாம்.

    சஷ்டி, சதுர்த்தி நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

    இந்த பஞ்ச பருவ பூஜைகளின் போது உற்சவ மூர்த்திகள் எந்தெந்த வாகனங்களில் எடுத்து செல்லப்படும் என்பதை முன்னோர்கள் முறைப்படி அமைத்துள்ளனர்.

    இந்த உற்சவங்களின் போது சுவாமிக்கு எத்தகைய அலங்காரம் செய்யப்பட வேண்டும் என்பதும் திருவண்ணாமலை தலத்தில் தனித்துவமாக உள்ளது.

    அந்தமாதிரி அலங்கார ஆராதனைகளை வேறு எந்த தலத்திலும் பார்க்க இயலாது.

    சில பூஜை முறைகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அரசர்களால் உருவாக்கப்பட்டதாகும்.

    அந்த பூஜைகள் அனைத்தும் இப்போதும் மரபு மாறாமல் நடந்து வருகிறது.

    அவற்றை பார்த்தாலே பரவசம் மட்டுமல்ல, பலன்களும் தேடிவரும்.

    எனவே அடுத்த முறை திருவண்ணாமலை தலத்துக்கு செல்லும் முன்பு பஞ்ச பருவ பூஜைகள் ஏதேனும் உள்ளதா?

    என்பதை அறிந்து சென்றால் அதிக பலனை பெற முடியும்.

    • திருவண்ணாமலை ஆலய பஞ்ச பருவ பூஜைகளில் சோமவார பூஜை வித்தியாசமானது.
    • ஆசையை கைவிட்டால் தான் முக்தி பாதைக்கு செல்ல முடியும்.

    திருவண்ணாமலை ஆலய பஞ்ச பருவ பூஜைகளில் சோமவார பூஜை வித்தியாசமானது.

    இதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது.

    பொதுவாக அனைவருக்குமே ஏதாவது ஆசைகள் இருந்து கொண்டே இருக்கும்.

    ஆசையை கைவிட்டால் தான் முக்தி பாதைக்கு செல்ல முடியும்.

    அதற்கு விரதங்கள் உதவியாக உள்ளன. விரதங்களில் சோமவாரம் விரதம் அதிக பலன்களை தரக்கூடியது.

    திருமணம், குழந்தை பாக்கியம், நோய் தீர, எதிரிகளை வெல்ல, நினைத்தது நடக்க சோமவார விரதமும், பூஜையும் கைகொடுக்கும்.

    திருவண்ணாமலையில் சோமவார பூஜையை கடந்த சுமார் 43 ஆண்டுகளாக ஒரு அமைப்பு நடத்தி வருகிறது.

    இந்த அமைப்பினர் திங்கட்கிழமை தோறும் திருவண்ணாமலையில் சோமவார பூஜையை பொறுப்பேற்று நடத்துகிறார்கள்.

    அன்று மாலை இரண்டாம் கால பூஜையின் போது உற்சவ மூர்த்தியான சந்திரசேகரருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்கிறார்கள்.

    இந்த அபிஷேக ஆராதனை மிகவும் சிறப்பாக நடத்தப்படும்.

    அதை கண்டு வழிபடுவதே தனி ஆனந்தத்தை தரும்.

    அதன்பிறகு உற்சவ மூர்த்தியை அலங்காரம் செய்து மூன்றாம் பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் எழுந்தருள செய்வார்கள்.

    அங்கு அவருக்கு தீபாராதனைகள் நடத்தப்படும்.

    ×