search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "burnt to death"

    • தனம்மாள் வயது முதிர்வு காரணமாக நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக உள்ளார்.
    • மூதாட்டி தனம்மாள் சம்பவஇடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

    கோவை,

    கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள மீனாட்சி நகரை சேர்ந்தவர் ஜார்ஜ். இவரது மனைவி தனம்மாள் (வயது 75).

    இவர் வயது முதிர்வு காரணமாக நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக உள்ளார். தனம்மாளை அவரது மகள் ஜெயசித்ரா என்பவர் கவனித்து வந்தார்.மூதாட்டிக்கு கொசு கடிக்காமல் இருக்க அவரது படுக்கைக்கு அருகில் கொசு வர்த்தியை பற்றி வைப்பது வழக்கம். சம்பவத்தன்று இரவு ெஜயசித்ரா தனது தாயின் படுக்கைக்கு அருகே கொசு வர்த்தியை பற்ற வைத்து விட்டு சென்றார். நள்ளிரவு தனம்மாள் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தார். அப்போது கொசு வர்த்தி சுருள் படுக்கையின் மீது விழுந்தது.

    கண்இமைக்கும் நேரத்தில் படுக்கையில் தீ பிடித்து படுத்த படுக்கையாக இருந்த மூதாட்டி மீதும் தீ பரவியது. இதில் உடல் கருகிய மூதாட்டி தனம்மாள் சம்பவஇடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

    இதனை பார்த்து அவரது மகள் அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் உடல் கருகி இறந்த மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • திருநாவலூர் அருகே சமையல் செய்த பெண் தீயில் கருகி பலியானார்.
    • என்னை காப்பாற்றுங்கள் என்னை காப்பாற்றுங்கள் என வீட்டின் வெளியே வந்து அலறினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் அருகே இரும்பை பகுதியை சேர்ந்த பெரியநாயகம்.அவரது மகள் யட்சிதா (வயது 28). இவர் கடந்த 5-ந்தேதி வீட்டில் சமையல் செய்து கொண்டுஇருந்தார். அப்போதுஅவரது துப்பட்டாவில் எதிர்பாராத விதமாக தீ பற்றியது. இந்த தீ சற்று நேரத்தில் மலமல என பற்றி எரியத் தொடங்கியது. துப்பட்டாவில் தீ பற்றி எரிவதை அறிந்த யட்சிதா அதிர்ந்து போய் செய்வ தறியாது திகைத்தார். என்னை காப்பாற்றுங்கள் என்னை காப்பாற்றுங்கள் என வீட்டின் வெளியே வந்து அலறினார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து இவர் மீது பற்றி தீயை போராடி அணைத்தனர். 

    இந்த தீ விபத்தில் யட்சிதாவிற்க்கு 80 சதவீதம் உடலில் தீக்காயம் ஏற்பட்டது. மேலும் அருகில் இருந்தவர்கள் யட்சிதாவை விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரியில்சிகிச்சைக்கு சேர்த்தனர். பின் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி யட்சிதா பரிதாபமாக இறந்தார். இது குறித்து யட்சிதாவின் தந்தை பெரியநாயகம் திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இட த்திற்கு விரைந்து சென்று யட்சிதாவின் உடலை ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×