search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "annamalaiyar"

    • அண்ணாமலையாரை குல தெய்வமாக கும்பிட ஆரம்பிக்கலாம்.
    • திருச்செந்தூர் முருகனை வணங்கலாம்.

    ஒரு சில குடும்பங்கள் ஏதாவது ஒரு காரணத்திற்காக சொந்த ஊரை விட்டு வேறு இடத்திற்கு சென்று வாழ்க்கை நடத்துவர். இதன் காரணமாக 2 அல்லது 3 தலைமுறைகள் குலதெய்வக் கோவில் வழிபாடு பற்றி அறியாமலேயே வாழ்ந்திருப்பார்கள். அவர்கள் நல்ல நிலைக்கு வரும் போது குலதெய்வம் எது என்று அவர்களுக்கு தெரியாமல் போய்விடும்.

    சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவோ, அல்லது குல தெய்வத்தின் உதவி கூட ஒரு சிலருக்கு கிடைக்கவிடாத கர்ம வினை காரணமாக எது குலதெய்வம் என்றே தெரியாத சூழல் ஒரு சிலருக்கு ஏற்பட்டு விடுகிறது. உங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால், உங்கள் சகல முயற்சியும் பலனளிக்கவில்லை என்றால், உடனடியாக நீங்கள் நாட வேண்டியது உங்கள் குல தெய்வத்தையே.

    சரி குல தெய்வம் தெரியாதவர்கள் என்ன செய்யலாம்?

    உங்களுக்கு ஜாதகம் இருந்தால், லக்னத்தில்- ஜந்தாம் வீடு, ஐந்தில் உள்ள கிரகம், ஐந்தாம் வீட்டை பார்வையிடும் கிரகம் ஆகியவற்றைப் பாருங்கள். அவற்றின் அடிப்படையிலேயே உங்கள் குல தெய்வம் இருந்திருக்கும். உதாரணத்திற்கு ஐந்தாம் வீட்டிற்கு குருவும், சூரியனும் சம்பந்தபட்டு இருந்தால் சிவ அம்சம் பொருந்திய குரு ஸ்தானத்தில் உள்ளவர் உங்கள் குல தெய்வமாக இருக்கலாம். ஐந்தில்- ஒரு நீச கிரகமோ, அல்லது ஐந்தாம் வீட்டுக்கு உரியவர் நீசமாகவோ இருந்தால் உங்கள் குல தெய்வத்தை நீங்கள் கண்டு கொள்ளவேயில்லை என்று அர்த்தம்.

    உங்கள் தாத்தா காலத்திலேயே அதை ஒரு பொருட்டாக மதித்து வணங்கவில்லை என்று அர்த்தம். நீங்கள் உரிய, முறைப்படி வணங்கி அந்த குல தெய்வத்தின் ஆசி பெறவில்லை என்றால், உங்களுக்கு வாழ்நாள் முழுக்க, தடைகள், முட்டுக்கட்டைகள் என்று தொடர் போராட்டம் தான்.

    உங்கள் பரம்பரையின், ஒட்டு மொத்த பாவக் கணக்கில் ஒரு பெரும் பகுதியை நீங்கள் தீர்த்து, அதன்பிறகு உங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும். குல தெய்வம்- உங்கள் வம்சா வழியில் பிறந்து வளர்ந்து, உங்கள் வம்சம் தழைக்க தன் உடல், பொருள் ஆவியை அர்ப்பணித்தவராக கூட இருக்கலாம்.

    சரி, குல தெய்வம் தெரியாதவர்கள் எந்த தெய்வத்தை வணங்கலாம்?

    இயல்பிலேயே உங்களுக்கு எந்த தெய்வத்தின் மேல் ஈடுபாடு என்று பாருங்கள். பரம்பரையாக, ஜென்ம ஜென்மமாக உங்கள் உணர்வில் ஊன்றி இருக்கும் விஷயம் அது. அது சிவனோ, பெருமாளோ, அம்மனோ, முருகனோ, கருப்பசாமியோ, முனியோ எதுவாக வேண்டுமானாலும் பரவாயில்லை.

    அண்ணாமலையாரை குல தெய்வமாக கும்பிட ஆரம்பிக்கலாம். சதுரகிரி அருகில் இருப்பவர்கள்- மகாலிங்கத்தை குல தெய்வமாக வழிபடலாம். இல்லையா, திருச்செந்தூர் முருகனை வணங்கலாம். பொதுவாக குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று கூறுவர். ஆனால் திருச்செந்தூரில் நீர்நிலைக்கு (கடல்) அருகில் உள்ள திருத்தலத்தில் முருகப் பெருமான் வீற்றுள்ளதும், இந்த கோவிலுக்கு தனிச் சிறப்பை அளிக்கிறது.

    மேலும், திருச்செந்தூர் சம்ஹார ஸ்தலமாகவும் விளங்குகிறது. எனவே, தீய சக்தியை மட்டுமின்றி, மனிதர்கள் மனதில் இருக்கும் அளவுக்கு மீறிய ஆசை, கோபம், காமம், ஆகியவற்றையும் அழிக்கக் கூடிய சக்தி இந்த திருத்தலத்திற்கு உள்ளது.

    இது போன்ற சூழலில் இருப்பவர்கள் திருச்செந்தூருக்கு ஆண்டுக்கு ஒரு முறை சென்று வருவதுடன், திருச்செந்தூர் முருகனை குல தெய்வமாகவும் ஏற்றுக் கொள்ளலாம். திருச்செந்தூர்- குருவுக்கும், செவ்வாய்க்கும் உரிய ஸ்தலமாகவும் விளங்கும் இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அர்த்தநாரீஸ்வரராய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்.
    • ஆண்டுக்கு ஒருமுறை மகாதீபம் ஏற்றும் சமயத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    இறைவனால் படைக்கப்பட்ட ஆணும், பெண்ணும் சரிசமம் என்பதை உணர்த்தும் வகையில் பார்வதி தேவிக்கு தனது இடப்பாகத்தை கொடுத்து அர்த்தநாரீஸ்வரராய் காட்சியளிக்கும் அண்ணாமலையார் ஆண்டுக்கு ஒருமுறை மகாதீபம் ஏற்றும் சமயத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இங்கு மலையே இறைவனாக காட்சியளிப்பது சிறப்பம்சமா கும்.

    ஒருமுறை விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்ட போது, அவர்களின் அகங்காரத்தை அடக்கும் வகையில் தனது அடியையும், முடியையும் யார் முதலில் கண்டறிகிறார்களோ அவர்களே பெரியவர் என்றார். இதனால் விஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து சிவனின் அடியை காண முயன்று தோற்றுப்போனார்.

    அதன்பிறகு பிரம்மா அன்னப் பறவை வடிவெடுத்து சிவனின் முடியை காண முயன்றார். அப்போது சிவனின் சிரசில் இருந்து உதிர்ந்து வந்த தாழம்பூவை சாட்சியாக கொண்டு சிவன்முடியை கண்டதாக பிரம்மா பொய் கூறுகிறார். இதனால் கோபம் கொண்ட சிவன் அப்போது பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் ஜோதிப்பிழம்பாய் காட்சி தந்து அவர்களின் ஆணவத்தை அழித்தார்.

    இதன் காரணமாகவே பொய்யுரைத்த பிரம்மாவிற்கு பூலோகத்தில் தனிக்கோவில்கள் இல்லாமல் போனது. பொய் சாட்சி கூறிய தாழம்பூவும் சிவபெருமாள் பூஜையில் வைக்கும் தகுதியை இழந்தது என்பது ஐதீகம்.

    • கலியுகத்தில் கல்மலையாகவும் தோன்றி அருளாட்சி புரிந்து வருகிறார்.
    • நினைக்க முக்தி தரும் தெய்வீக திருத்தலம் திருவண்ணாமலை ஆகும்.

    நினைக்க முக்தி தரும் தெய்வீக திருத்தலம் திருவண்ணாமலை ஆகும். சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கயிலாயத்திற்கு நிகரான பேறு பெற்ற ஆலயம் திருவண்ணா மலை. முக்தி தலங்கள் ஐந்தினுள் அண்ணாமலை அப்பனே என அவரவர் இருந்த இடத்தில் இருந்தவாரே மனமுருகி நினைத்தவுடனே முக்தி அளிக்க வல்ல சிறப்புக்குரியது.

    மகா சிவராத்திரி தோன்றிட காரணமாக திகழ்ந்ததும், தமது உடலில் பாதியை அன்னை பார்வதி தேவிக்கு அருளி உமையொரு பாகனாக காட்சியளித்த பெருமைக்குரியதும் இத்திருத்தலமே. முக்திபுரி, சிவலோகம், தலேச்சுரம், சுத்த நகரம், கவுரி நகரம், சோணாச்சலம், சோணாத்திரி, அருணாத்திரி, அருணாசலம், அக்னிகிரி, திருவருணை, திருவண்ணாமலை இப்படி பல திருநாமங்களை தாங்கி நிற்கும் தவபூமி.

    இப்புண்ணிய சேத்திரத்தின் புராதன புனித பெயர் அண்ணா. இந்நகரை சுற்றியிருந்த பகுதிகளை சேர்த்து அக்காலத்தில் இதனை அண்ணாநாடு என மக்கள் அழைத்து வந்தனர். இதன் காரணமாகவே இங்குள்ள மலையும் அண்ணாமலை என்றும், இறையனார் வீற்றிருந்து அருள் பாலிக்கும் அருளாட்சி பூமி என்பதால் திருவண்ணாமலை எனவும் வழங்கப்படுகிறது.

    கிருதாயுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன்மலையாகவும், இக்கலியுகத்தில் கல்மலையாகவும் தோன்றி அருளாட்சி புரிந்து வருகிறார்.

    • அண்ணாமலையார் ஆண்டுக்கு இரண்டு முறை கிரிவலம் வருகிறார்.
    • 25 முதல் 30 இடங்களில் மண்டகப்படி நடைபெறும்.

    ஒவ்வொரு தினத்தன்றும் இரவில் பக்தர்கள் கிரிவலம் வருவது போல் லிங்க வடிவாக வீற்றிருக்கும் அண்ணாமலையாரும் திருவீதி உலாவாக ஆண்டுக்கு இரண்டு முறை கிரிவலம் வருகிறார்.

    அந்த நன்னாள் கார்த்திகை தீப திருநாளின் மறுநாள் மற்றும் தை மாதம் மாட்டு பொங்கல் ஆகிய இந்த 2 நாட்களிலும் அதிகாலையில் அண்ணாமலையார் கிரிவலம் செல்கிறார். திருமஞ்சன கோபுர வீதியின் கடைசியில் உள்ள குமரகோவிலில் இந்த இரண்டு நாட்களும் இரவு தங்குகிறார்.

    அதிகாலையில் அபிஷேகம் முடிந்ததும் அண்ணா மலையார் கிரிவலம் புறப்படுகிறார். 25 முதல் 30 இடங்களில் மண்டகப்படி நடைபெறும். அஷ்டலிங்கம் மற்றும் அடி அண்ணாமலை ஆகிய கோவில்களில் அண்ணாமலையார் கிரிவலம் செல்லும் போது தீபாராதனைகள் நடைபெறும்.

    கிரிவலம் செல்லும் பக்தர்களிடம் துஷ்ட தேவதைகள் அண்டாமல் இருப்பதற்காகவும், அவைகளை விரட்டு வதற்காகவும் அண்ணாமலை யார் இவ்வாறு ஆண்டிற்கு இரண்டு முறை கிரிவலம் வருகிறார் என்பது ஐதீகம்.

    ஒளி கண்டு ஓடும் இருள் போல் திருவண்ணாமலை தீபம் கண்டவுடன் மாந்தர்களின் பாவங்கள் தீரும் என்பது திண்ணம்.

    ஒளிக்குள் ஒளியாய் உயர்வாய் போற்றி!

    இருள் ஒழிந்து இன்பம் ஈவாய் போற்றி!

    நாமும் கிரிவலம் செல்வோம், மலையில் ஜோதியாய் தோன்றும் ஈசனை வழிபட்டு சகல நன்மைகளையும் பெறுவோம்.

    • அரசன் அண்ணாமலையார் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தார்.
    • அண்ணாமலையார் வல்லாள மகாராஜாவிற்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி.

    திருவண்ணாமலையை வல்லாள மகாராஜன் என்ற அரசன் ஆட்சி புரிந்து வந்தான். அவருக்கு குழந்தை இல்லை. அரசன் அண்ணாமலையார் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தார். தனக்கு குழந்தை இல்லை என்று வருந்தியபோது இறைவன் அவர் கனவில் தோன்றி நானே உனக்கு மகனாக இருப்பேன் என கூறியுள்ளார். இதனால் அரசன் குழந்தை பாக்கியம் இல்லை என்ற வேதனையில் இருந்து விடுபட்டார். சில காலம் கழித்து வல்லாள மகாராஜன் இறந்து விட்டார்.

    அரசன் இறந்ததை மாசி மாதம் பூச நட்சத்திரத்தன்று தீர்த்தவாரி செல்லும் அண்ணாமலையாரிடம் ஓலை மூலமாக தகவலை தெரிவிப்பார்கள். இதனையடுத்து அண்ணாமலையார் தீர்த்தவாரிக்கு செல்லாமல் மேளதாளம் இல்லாமல் கோவிலுக்கு திரும்பி வருவார். மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் திருவண்ணாமலை அடுத்த பள்ளிக் கொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள நதிக்கரையில் அண்ணாமலையார் வல்லாள மகாராஜாவிற்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    • அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
    • ஏராளமான பக்தர்கள் கரும்பு தொட்டில் அமைத்து மாட வீதியை வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 26-ந்தேதி காலை பரணி தீபம் மாலை 6 மணிக்கு மாலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

    தீபத் திருவிழாவையொட்டி தொடர்ந்து இரவு மாட வீதிகளில் அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் வீதி உலா நடந்து வருகிறது. நேற்று இரவு வெள்ளி தேரோட்டம் நடைபெற்றது. இதில் அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    தீபத் திருவிழாவில் 7-வது நாளான இன்று பஞ்ச மூர்த்திகள் மகா தேரோட்டம் நடந்தது. காலை 6.45 மணிக்கு விநாயகர் தேர் புறப்பாடு நடைபெற்றது. ஒருபுறம் ஆண்களும் மறுபுறம் பெண்களும் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

    இதைத் தொடர்ந்து விநாயகர் தேர் நிலைக்கு வந்த பிறகு முருகர் தேரோட்டம் நடைபெற்றது. மதியம் 1.30 மணிக்கு மேல் அருணாசலேஸ்வரர் மகாதேரோட்டம் நடைபெற உள்ளது.

    அதனைத் தொடர்ந்து பெண்களால் இழுக்கப்படும் அம்மன் தேரோட்டமும், சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடைபெறுகிறது.

    பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெற்றதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர்.

    ரத வீதிகளில் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷம் எழுப்பியபடி பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர்.

    ராஜகோபுரம் முன்பு ஏராளமான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். இதனால் அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதிகளில் பக்தர்கள் பரவசத்துடன் காணப்பட்டனர்.

    கார்த்திகை தீபத்திருவிழாவில் தேரோட்டம் நடைபெறும் நாளன்று நேர்த்தி கடனாக கரும்பில் சேலையால் தொட்டில் கட்டி தங்கள் குழந்தையை சுமந்தபடி மாட வீதியை வலம் வருவார்கள்.

    அதன்படி, இன்று ஏராளமான பக்தர்கள் கரும்பு தொட்டில் அமைத்து மாட வீதியை வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

    தேரோட்ட த்தையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டி ருந்தது. விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டன. 

    • புற்றிற்குள் சிவயோகி ஒருவர் இருப்பதை உணர்ந்த அவர், அங்கேயே தவத்தில் அமர்ந்து விட்டார்.
    • இந்த இடத்தில் எதிரில் யோக நந்தியுடன், "பாதாள லிங்கம்" இருக்கிறது.

    மகான் ரமணருக்கு மரணம் பற்றிய எண்ணம் உண்டான போது இக்கோவிலில் உள்ள பாதாளத்துக்குள் சென்றார்.

    அங்கு ஒரு புற்று இருந்தது.

    புற்றிற்குள் சிவயோகி ஒருவர் இருப்பதை உணர்ந்த அவர், அங்கேயே தவத்தில் அமர்ந்து விட்டார்.

    பிற்காலத்தில் சிவன் அருளால் முக்தி பெற்றார்.

    இந்த இடத்தில் எதிரில் யோக நந்தியுடன், "பாதாள லிங்கம்" இருக்கிறது.

    கிரிவலப் பாதையில் மலைக்கு பின்புறம் நேர் அண்ணாமலையார் தனிக்கோவிலில் அருளுகிறார்.

    இவ்விரு லிங்க தரிசனமும் விசேஷமானது.

    மரண பயம் நீங்க இவர்களிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

    சிவபெருமானை வழிபட மூன்று முக்கிய தினங்கள் ஏற்றவை.

    மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை, திருவாதிரை ஆகிய மூன்று நாட்களும் மிக சிறந்தவை.

    திருக்கார்த்திகையில் திரு அண்ணாமலையிலும், திருவாதிரையில் சிதம்பரத்திலும், சிவராத்திரியில் காசி மற்றும் ராமேஸ்வரத்திலும் வழிபடுதல் மிக சிறப்பு.

    • காவிரியின் கிளை நதிகளான வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றின் இடையில் உள்ள திட்டில் இவ்வாலயம் இருப்பதால் திட்டை என்றும், தென்குடித்திட்டை என்றும் வழங்கப்படுகிறது.
    • மூலவர் சந்நிதிக்கும், அம்பாள் சந்நிதிக்கும் இடையில் அம்பாள் சந்நிதிக்கு மேற்க்குப் பக்கத்தில் குருபகவானின் தனி சந்நிதி தனி விமானத்துடன் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

    சனிபகவான் திட்டை தலத்திற்கு எழுந்தருளி வேதாகம முறைப்படி வேதமுதல்வனைப் பூஜித்து ஆயிரம் ஆண்டுகாலம் கடும் தவம் புரிந்தார் என்பது சிறப்பு. இத்தலத்தில் உள்ள ஈசனைத் தவமிருந்து பாவ விமோசனம் பெற்றார் சந்திரன். பசு, குதிரை, மான் தாகம் தீருவான் வேண்டி பசு தீர்த்தத்தைச் சிருஷ்டித்துக் கொடுத்தார் ஈசன். விஷ்ணு அரசமரமாகவும, லக்ஷ்மி வில்வமரமாகவும் இருந்து இறைவனுக்கும், இறைவிக்கும் திருத்தொண்டு செய்தனர். திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலம்.. கௌதமர், ஆதிசேடன், காமதேனு பூசித்த திருவூர்.

    சுமாலி என்பவர் தேர் அழுந்திய இடமாதலின் 'ரதபுரி' என்றும் காமதேனு வழிபட்டதால் 'தேனுபுரி' என்றும் ரேணுகை வழிபட்டதால் 'ரேணுகாபுரி' என்றும் இத்தலம் வழங்கப்படுகிறது.

    காவிரியின் கிளை நதிகளான வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றின் இடையில் உள்ள திட்டில் இவ்வாலயம் இருப்பதால் திட்டை என்றும், தென்குடித்திட்டை என்றும் வழங்கப்படுகிறது. புராண காலத்தில் பிரளயம் ஏற்பட்ட போது, பூலேகமே நீரில் அமிழ்ந்திருந்தபோது திட்டை என்ற இவ்விடம் மட்டும் நீரில் மூழ்காமல் இருந்தது. இவ்விடத்தில் சிவபெருமான் சுயம்புவாக ஒரு லிங்க உருவில் எழுந்தருளினார். இக்கோவிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மூலவர் வசிஷ்டேஸ்வரர் ஐந்தாவது லிங்கமாக சுயம்பு லிங்கமாக அருள் புரிகிறார். இவ்வாறு ஐந்து லிங்கங்கள் இருப்பதால் இத்தலத்தை 'பஞ்சலிங்கஷேத்திரம்' என்று கூறுவர். இந்த ஒரு தலத்தை வழிபட்டால் சிதம்பரம், காளஹஸ்தி, திருவண்ணாமலை, திருஆனைக்கா மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பஞ்சபூத திருத்தலங்களுக்கு சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மூலவர் கருவறையின் மேல் விதானத்தில் ஒரு 'சந்திரகாந்தக்கல்' பொருத்தப்பட்டிருக்கிறது. காற்றில் உள்ள ஈரப்பசையை உறிஞ்சி சுமார் ஒரு நாழிகைக்கு ஒருமுறை மூலவர் சிவலிங்கத்திருமேனியில் ஒரு சொட்டு நீர் விழும்படி இக்கல் பொருத்தப்பட்டுள்ளது இத்தலத்தின் சிறப்பம்சமாகும். ஆலயத்தின் முன்புறம் பசு தீர்த்தம் அமைந்துள்ளது. ராஜகோபுரம் வழியாக சிலபடிகள் ஏறிச் சென்றால் முதல் பிரகாரத்தை அடையலாம். அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. மூலவர் சந்நிதிக்கும், அம்பாள் சந்நிதிக்கும் இடையில் அம்பாள் சந்நிதிக்கு மேற்க்குப் பக்கத்தில் குருபகவானின் தனி சந்நிதி தனி விமானத்துடன் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

    இத்திருக்கோவிலில் குருபகவான் தனி சந்நிதியில் காட்சி தருகிறார். இவர் சப்தரிஷிகளில் ஒருவரான ஆங்கிரஸ முனிவரின் புதல்வர் ஆவார். ஒரு காலத்தில் தென்குடித்திட்டை என்ற பெயரால் விளங்கிய இவ்வூர் தற்போது திட்டை என்று அழைக்கப்படுகிறது. இத்திருத்தலத்தில் கொடிமரம், கோபுரகலசம், சுவாமிபுஷ்கரணி, கருங்கற்களால் அமைந்தகோவில் இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். பிரகாரத்தில் விநாயகர், முருகன், அண்ணாமலையார், சண்டிகேசுவரர், பைரவர், குருபகவான் முதலிய சந்நிதிகள் உள்ளன.

    அருகிலுள்ள விமானதளம் : திருச்சி

    ரயில் நிலையம் : திட்டை

    பஸ் வசதி : உண்டு

    தங்கும் வசதி : இல்லை

    உணவு வசதி : இல்லை

    திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு இந்த மாதம் பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
    அதன்படி ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்கிறார்கள்.

    இந்த மாதம் பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    இன்று(சனிக்கிழமை) காலை 4.32 மணிக்கு பவுர்ணமி தொடங்கி நாளை (ஞாயிற்றுக்கிழமை)காலை 3.36 மணி வரை பவுர்ணமி உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்ததாகும்.
    திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு நாளை பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
    திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு கிரிவலம் சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்கிறார்கள்.

    இந்த மாதம் பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    நாளை(புதன்கிழமை) காலை 9.41 மணிக்கு பவுர்ணமி தொடங்கி நாளை மறுநாள் (வியாழக்கிழமை)காலை 7.28 மணி வரை பவுர்ணமி உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்ததாகும்.
    இன்று அதிகாலை அண்ணாமலையார் கிரிவலம் கொண்டு செல்லப்பட்டார். இன்று இரவு அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் இடையே மறுவூடல் வைபவம் நடக்கிறது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று திருவூடல் திருவிழா நடந்தது. இதனையொட்டி அதிகாலையில் நந்திக்கு தரிசனம் கொடுத்து விட்டு திட்டி வாயிலில் சூரிய பகவானுக்கும் காட்சி கொடுத்து மாடவீதியை 3 முறை சாமி, அம்மன், சண்டிகேஸ்வரர் சுற்றி வந்தனர்.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணி அளவில் திருவூடல் தெருவில் திருவூடல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    திருவூடல் திருவிழாவின்போது சாமிக்கும், அம்மனுக்கும் இடையே ஊடல் ஏற்பட்டதையடுத்து அம்மன் மீண்டும் கோவிலுக்கு சென்று விட்டார். அண்ணாமலையார் மட்டும் குமரக்கோவிலுக்கு சென்று விட்டார். இரவு முழுவதும் அங்கேயே தங்கினார்.

    இன்று அதிகாலை அண்ணாமலையார் கிரிவலம் கொண்டு செல்லப்பட்டார். சாமியுடன் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலபாதையில் பக்தர்கள் தேங்காய் உடைத்தும், மாலை அணிவித்தும் தரிசனம் செய்தனர்

    8 லிங்கங்கள் முன்பாக சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு அண்ணாமலையார் கொண்டு வரப்பட்டார்.

    இன்று இரவு அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் இடையே மறுவூடல் வைபவம் நடக்கிறது. இதில் சுந்தரமூர்த்தி நாயனார் சமரசம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதனை யடுத்து அண்ணாமலையார், உண்ணாமலையம்மன் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர்.
    சித்தர் மலை, சித்தர்களின் சரணாலயம் என்றெல்லாம் திருவண்ணாமலை புகழ்ந்து சொல்லப்படுகிறது. அந்த அளவுக்கு திருவண்ணாமலையில் சித்தர்கள் குவிந்துள்ளனர்.
    சித்தர் மலை, சித்தர்களின் சரணாலயம் என்றெல்லாம் திருவண்ணாமலை புகழ்ந்து சொல்லப்படுகிறது. அந்த அளவுக்கு திருவண்ணாமலையில் சித்தர்கள் குவிந்துள்ளனர். கால ஓட்டத்தில் பல்லாயிரக்கணக்கான சித்தர்களின் பெயர்களும், அற்புதங்களும் மறைந்து விட்டன.

    சில சித்தர்களுக்கு அண்ணாமலையார் புரிந்த அருள் மட்டுமே நம்மிடம் வரலாறாக உள்ளது. அவர்களில் குகை நமசிவாயர் பற்றி காணலாம்.....

    குகை நமசிவாயரின் சீடர் குரு நமசிவாயர். இவர் ஒரு சிறந்த தவயோகி. ஒருநாள் குகை நமசிவாயமும் குரு நமசிவாயமும் அருகருகே அமர்ந்து தவத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குரு நமசிவாயர் கலகலவென சிரித்தார்.

    ‘‘என்னடா? ஏன் சிரிக்கிறாய்?’’ என்று குகை நமசிவாயர் கேட்டார். ‘‘ஐயனே! திருவாரூர் தியாகேசன் தேரில் வருகிறார். தேவதாசி பரதமாடுகிறாள். கால் வழுக்கிவிடவே அதையும் அபிநயமாக அப்படியே மறைத்தாள்’’ அதுதான் சிரித்தேன் என்றார்.

    மற்றொரு நாள், தன் அறையில் இருந்த உடையை குரு நமசிவாயர் திடீரென்று தேய்த்தார். ‘‘என்னடா? என்ன விஷயம்?’’ என்றார் குகை நமசிவாயர்.
    ‘‘தில்லையில் விளக்கு போடுபவன் அஜாக்கிரதையால் திரைச்சீலையில் தீ பற்றிக் கொண்டது. யாரும் கவனிக்கவில்லை. அதைத்தான் அணைத்தேன்” என்றார் குரு நமசிவாயர்.

    குகை நமசிவாயர் உடனே இனி உனக்கு இங்கு வேலையில்லை. தில்லையிலே நீ செய்ய வேண்டிய பணி இருக்கிறது போ!’’ என்றார். குருநாதனை வணங்கி குரு நமசிவாயர் வலம் வந்தார். ‘‘குருநாதா! தங்கள் சித்தம்’’ என்றார். புறப்பட்டார். மரத்தடியில் வழியிலே களைப்புடன் தங்கினார். இரவு அர்த்தஜாம மணியோசை ‘ஓம் ஓம்’ என்று எங்கும் ரீங்காரம் செய்தது. பசியோடு அமர்ந்து,

    அண்ணாமலையார் அகத்திற்கு இனியாளே
    உண்ணாமுலையே உமையே தண்ணா
    நினைதோறும் போற்றிசெயும் நின்னடியார் உண்ண
    மனைதோறும் சோறுகொண்டுவா?

    - என்று அன்னையை நினைத்துப் பாடினார்.

    குரு நமசிவாயர் தவிப்பதைக் காணச் சகியாத தாய் உண்ணாமுலைநாயகி தங்கத் தாம்பாளத்தில் தனக்கு நிவேதனமாக வைத்த அர்த்த ஜாம சர்க்கரைப் பொங்கலை அப்படியே எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள். பசியாற அந்த உணவை சாப்பிட்டு விட்டு தங்க தாம்பளத் தட்டை குரு நமசிவாயர் தூக்கி வீசி எறிந்தார்.

    கோவிலில் ‘தங்கத் தாம்பாளம் களவுபோய் விட்டது. அர்ச்சகர் கத்தினார். ஆனால் அவரை நம்பாமல் முன் பின் யோசியாமல் திருட்டுப் பட்டம் கட்டி அவரைத் தண்டிக்க முடிவு செய்தனர். உடனே அன்னை ஆவேசமாகி ‘என் பக்தன் பசியோடு இருந்தான். அவனுக்கு அந்தத் தங்கத் தாம்பாளத்தில் உணவளித்தேன். மரத்தடிக்குப் போனால் உங்கள் தட்டு கிடைக்கும்’ என்று கூறினாள்.

    ‘அண்ணாமலைக்கு அரோகரா’ என்று முழங்கியபடி சென்று அடியாரின் அடிகளைப் போற்றி தாம்பாளத்துடன் திரும்பினார்கள். இது வரலாற்றுச் சிறப்பு. இதே போன்று இன்னும் பல சித்தர்கள் உள்ளனர். ராஜாவின் இறந்த குதிரையை உயிர்த்தெழச் செய்து, திருவண்ணாமலை ஆதீனத்தின் முதல் குருவாகி, குன்றக்குடி ஆதீனத்தை உருவாக்கிய ஸ்ரீலஸ்ரீ தெய்வசிகாமணி தேசிகர்.

    தீர்த்தக்குளத்து நீரையே திரட்டிக் குடமாக்கி (1290) அதில் தண்ணீரை எடுத்துச் சென்று, அண்ணாமலையாரை அபிஷேகம் செய்த சித்தமகா சிவயோகி, பாணிபத்திர சுவாமி. திருவண்ணாமலையில் ஏற்பட்ட பஞ்சத்தைப்போக்க, ஏரியை அமைத்து, உண்ணாமல், தவமிருந்து மழையைப் பொழிய வைத்து, ஊரையே செழிக்கவைத்த மங்கையர்க்கரசியார்.

    தொண்ணூறு வயது வரை தினமும், மலையைத் தவறாமல் வலம் வந்து அந்தப் புண்ணியத்தால் அண்ணாமலையானையே நேரில் கண்டு, பரவசப் பேறு பெற்ற சோணாசலத்தேவர். யாழ்ப்பாணத்திலே பிறந்து, திருவண்ணாமலையில் குளமும், மடமும் அமைத்து நல்லறங்களை நாளெல்லாம் கூறி மக்களைக் காத்த ஞானப்பிரகாசர்.



    மக்களை திருத்துவதற்காக... பழுக்கக் காய்ச்சிய இரும்புச் செருப்பை அணிந்து நடந்தவர், படுபாவிகளின் கொடுவாளால் இருதுண்டுகளான பசுவை, உயிர்ப்பித்த பெருஞ்சித்தர் வீர வைராக்கியமூர்த்தி சுவாமிகள். ஐநூறு சீடர்ளைப் பாடுபட்டு உருவாக்கி, அண்ணாமலையின் புகழைப் பரப்பியவர். ஆதார நூல்கள் பலவற்றை எழுதி, சைவசமயப் பெருமைகளை உலகறியச் செய்தவர், வேதாகம, சமயசாத்திர வித்தகரான அப்பைய தீட்சிதர்.

    காவிரியாற்றின் நீரையே எண்ணையாக்கித் தீபம் ஏற்றியவர். கல்லாலான நந்திக்குக் கடலையைக் கொடுத்து உண்ணச் செய்தவர். பூமியிலிருந்து தீ ஜூவாலையை வரவழைத்து தனது திருமேனியையே... அக்னி தேவனுக்கு ஆஹ¨தியாக்கிய ஆதி சிவப்பிரகாசர். ஊமையாய்ப் பிறந்து, அண்ணாமலையாரின் பேரருளால், பாடும் திறனைப் பெற்றவர். விராலிமலை முருகப் பெருமான் கையால் பகலுணவு கொண்டவர். சிதம்பரத்தில் வாழ்ந்து திருவாரூரில் தியாகேசர் சன்னிதி முன்னால் சிவனடிச் ஜோதி கண்டு அதிலே கலந்து ஒளியான, தட்சிணாமூர்த்தி சுவாமிகள்.

    காணாமல்போன பூஜைப் பேழையை, அண்ணாமலையாரின் திருக்கரங்களால் பெறும் பேறு பெற்றவர். 16-ம் நூற்றாண்டில் குருதேவர் மடத்தில் தீட்சைபெற்று, ‘சிவப்பிரகாசர்’ எனும் ஞானியைக் கண்ட ஞானஞானி, குமாரசாமிப் பண்டாரம். கரிகால்சோழனின் காலத்திய பாதாள லிங்கமூர்த்தியை 16-ம் நூற்றாண்டு இறுதியிலே பூஜித்தவர். அதே இடத்தில் விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர், ஆயிரம்கால் மண்டபம் கட்டியபோது, பாதாள லிங்கத்தை மாற்றி விடாமல் பாதுகாத்த ஞானயோகி, அழியா விரதம் கொண்ட தம்பிரான்.

    தனது மரணத்தைத் தானே உணர்ந்து “ஜீவசமாதி” கண்டவர். ஜில்லா கலெக்டர் ஐடன்துரையின் தீராத வியாதியைத் தீர்த்து வைத்தவர்.இருபுறமும் வரிப்புலிகள் காவலிருக்க ஞானத்தவம் செய்தவர். (ஈசான்ய மடாலயத்தின் ஆதிகுரு. ஸ்ரீலஸ்ரீ ஈசான்ய ஞானதேசிகர். கேரள மாநிலத்தில் பிறந்து, இந்தியா முழுவதும் பாதயாத்திரை சென்று தியானத்திற்கு தகுந்த மலை, திருவண்ணாமலைதான் எனத் தீர்வு கண்டவர். மக்களிடம் தொடர்ந்து ஈடுபாடு கொண்டு, பக்தியை வளர்க்கப்பாடுபட்ட சற்குரு சுவாமிகள்.

    பழனியிலிருந்து திருவண்ணாமலை வந்து ஆலயத்துள் உழவாரப் பணி (தேவையற்ற செடி, கொடி, முட்களை நீக்குதல்) புரிந்தவர். அன்னக்காவடி சுமந்து, அடியார்களுக்கு உணவளித்தவர். பாதாள லிங்கக் குகையிலே பாலரமணரைப் பலகாலம் பாதுகாத்த பழனிச்சுவாமிகள். நெல்லையிலே அவதரித்துத் திருவண்ணாமலையில் முருக தரிசனம் கண்டவர். எல்லையில்லா தமிழ் வண்ணப் பாக்களோடு, கம்பத்து இளையனாருக்கு (திருவண்ணாமலை முருகனுக்கு) வேல்கொடுத்து வாழ்த்திய இசைஞானி, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்.

    கார்த்திகை தீபப் பரவச நிலையிலே காவல் தலைவரால் கன்னத்தில் அறையப்பட்டவர். ஊரார் கிளர்ந்தெழ, “அனைத்தும் என் முன்வினை” என்றவர். சித்தாந்த, வேதாந்தத் தத்துவங்களை அனைவருக்கும் புரியும் வகையில் விளக்குவதிலே சிம்மமாய்த் திகழ்ந்த காரியானூர் நடேச சுவாமிகள். திருவண்ணாமலை கிரிவலப் பாதையிலே, அங்கம்புரள உருண்டு அன்றாடம் வலம் வருவதையே லட்சியமாகக் கொண்டவர். நாயன்மார்களின் வாழ்வையே வேதமெனக் கண்டவர்.

    திருவண்ணாமலையிலுள்ள அறுபத்துமூவர் மடாலயத்தின் ஆரம்பகால ஞானகுரு “அங்கப்பிரதட்சண” அண்ணாமலை சுவாமிகள். எல்லாம் “சிவா”, எப்போதும் “சிவா” எனச் சொல்லிச் சொல்லியே... அண்ணாமலையானின் திருவருள் பெற்று சிவஞான எல்லையிலே ஒளிகண்ட சிவா சுவாமிகள். திருவண்ணாமலைத் தேரடி வீதியிலே - புரண்டபடி கிடந்து, அருவுருவான அண்ணாமலையே, உமா மகேஸ்வரனாகக் கண்டு, தியானித்தபடி வருவோர்க்கெல்லாம் பேரருள் புரிந்து பார்புகழ் பெற்ற பத்ராசல சுவாமிகள்.

    காஞ்சியில் பிறந்து, திருவண்ணாமலைத் தெருக்களிலே... புரண்டு, உருண்டு, சாக்கடைச்சகதி நீரிலே அளைந்து, நனைந்து... பார்வைக்கு எளியனாய், பல தெய்வ ஒளியனாய்..... அகில உலகையும் திருவண்ணாமலைத் தெருவில் நின்றபடியே மனக்கண்ணால் காணும் பேராற்றல் பெற்ற...ஞானச்சித்தர் சேஷாத்திரி சுவாமிகள்.
    திருச்சுழி கிராமத்திலே பிறந்து, மதுரையிலே கல்வி பயின்று, திருவண்ணாமலையின் நினைவால் மகரிஷியாகி உலகப் புகழ் பெற்ற பிறவித் துறவி, ரமண மகரிஷி.

    “அண்ணாமலையார்க்கே என்னை ஆளாக்குவேன்” என்று கன்னிப்பருவம் வரை காத்திருந்தவர். அண்ணாமலையார் அவர் கனவிலே வந்தார். கண் விழித்ததும், தலைமுடி சடையாகி விட்டிருந்தது. திருவண்ணாமலைக்குச் சென்று இறுதிவரை ஆலயத் திருப்பணி செய்த சடைச்சியம்மாள்.

    திருவண்ணாமலையில் ஓரடிக்கு 1008, லிங்கங்கள் உண்டு என்பதை உலகுக்கு உணர்த்தியவர். பஞ்சாட்சர ‘நமசிவாய’ 1008 ஜபத்துடன் “திருவண்ணாமலை”யை ஒவ்வொரு அடியாக நடந்து, கடந்து வலம்வந்து, பேரின்ப ஞான நலம் கண்டு பிறவிப் பிணி தீரப் பெற்ற இறை சுவாமிகள்.

    1917-ல் பிறந்து, ஆயிரத்து எட்டு முறை அண்ணாமலையையை அங்கப் பிரதட்சணம் கண்டவர். திருவண்ணாமலையில் உள்ள 360 தீர்த்தங்களையும் கண்ட கருணைவள்ளல். தேவரும், சித்தர்களும் கிரிவலம் செல்வதை ஞானக் கண்களால் அறிந்து கூறிய இசக்கி சுவாமிகள்.

    விரட்டுவதற்காக வீசிய கல், பறவையின் உயிரையே வாங்கி விட்டதால், கங்கைக் கரையிலே பிறந்த அவர், அமைதியைத் தேடி, காவிரிக்கரை வரை அலைந்தார். இறுதியில் திருவண்ணாமலையில் அமைதி பெற்ற விசிறி சாமியார் எனப்படும் சிவயோகி ராம் சுரத்குமார்.

    சாக்கடையில் புரண்டு திரிந்தவர் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள், ஆனால் அவரது திருமேனியில் சந்தனம் மணக்குமாம். இப்படி திருவண்ணாமலை தலத்தில் இருந்த இருக்கும் சித்தர்களின் எண்ணிக்கை அளவிட முடியாததாகும்.
    ×