search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சிவபெருமானை வழிபட ஏற்ற மூன்று தினங்கள்
    X

    சிவபெருமானை வழிபட ஏற்ற மூன்று தினங்கள்

    • புற்றிற்குள் சிவயோகி ஒருவர் இருப்பதை உணர்ந்த அவர், அங்கேயே தவத்தில் அமர்ந்து விட்டார்.
    • இந்த இடத்தில் எதிரில் யோக நந்தியுடன், "பாதாள லிங்கம்" இருக்கிறது.

    மகான் ரமணருக்கு மரணம் பற்றிய எண்ணம் உண்டான போது இக்கோவிலில் உள்ள பாதாளத்துக்குள் சென்றார்.

    அங்கு ஒரு புற்று இருந்தது.

    புற்றிற்குள் சிவயோகி ஒருவர் இருப்பதை உணர்ந்த அவர், அங்கேயே தவத்தில் அமர்ந்து விட்டார்.

    பிற்காலத்தில் சிவன் அருளால் முக்தி பெற்றார்.

    இந்த இடத்தில் எதிரில் யோக நந்தியுடன், "பாதாள லிங்கம்" இருக்கிறது.

    கிரிவலப் பாதையில் மலைக்கு பின்புறம் நேர் அண்ணாமலையார் தனிக்கோவிலில் அருளுகிறார்.

    இவ்விரு லிங்க தரிசனமும் விசேஷமானது.

    மரண பயம் நீங்க இவர்களிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

    சிவபெருமானை வழிபட மூன்று முக்கிய தினங்கள் ஏற்றவை.

    மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை, திருவாதிரை ஆகிய மூன்று நாட்களும் மிக சிறந்தவை.

    திருக்கார்த்திகையில் திரு அண்ணாமலையிலும், திருவாதிரையில் சிதம்பரத்திலும், சிவராத்திரியில் காசி மற்றும் ராமேஸ்வரத்திலும் வழிபடுதல் மிக சிறப்பு.

    Next Story
    ×