search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sivaperuman"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நவகயிலாயங்களில் முதல் கயிலாயமாக திகழ்வது பாபநாசம்.
    • நவ கயிலாயத்தின் இரண்டாவது கயிலாயமாகத் திகழ்வது சேரன்மாதேவி.

    நவகயிலாயங்கள் அமைந்துள்ள கோவில்களைப் பற்றி இப்போது சுருக்கமாகப் பார்க்கலாம்.

    நவகயிலாயங்களில் முதல் கயிலாயமாக திகழ்வது பாபநாசம்.

    இங்குள்ள பாவநாதர் கோவில் மூலவர் ருத்ராட்சத்தினால் ஆனவர்.

    அம்பாள் உலகாம்பிகை.

    நெல்லையில் இருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் உள்ளது. இது சூரிய தலமாக விளங்குகிறது.

    நவ கயிலாயத்தின் இரண்டாவது கயிலாயமாகத் திகழ்வது சேரன்மாதேவி.

    இங்குள்ள சிவன் கோவிலின் மூலவர் அம்மநாதர். அம்பாள் ஆவுடைநாயகி.

    இத்தலம் நெல்லையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. இது சந்திர தலமாகும்.

    கோடகநல்லூர் மூன்றாவது நவ கயிலாயமாக விளங்குகிறது. இங்குள்ள இறைவன் கைலாசநாதர்.

    இறைவி சிவகாமி அம்பாள், நெல்லையில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது கோடகநல்லூர்.

    இது செவ்வாய் தலமாக விளங்குகிறது.

    நவ கைலாயங்களில் நான்காவது தலமாக விளங்குகிறது குன்னத்தூர்.

    இங்குள்ள சிவன் கோவில் மூலவர் கோதபரமேஸ்வரர். அம்பாள் சிவகாமி அம்மாள்.

    நெல்லை பேட்டையில் இருந்து திருவேங்கடநாதபுரம் செல்லும் வழியில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.

    இது ராகு தலமாகப் போற்றப்படுகிறது.

    நவ கயிலாயத்தின் ஐந்தாவது தலம் முறப்பநாடு.

    இங்குள்ள கைலாசநாதர் கோவிலின் மூலவர் கைலாசநாதர். இறைவி சிவகாமி அம்பாள்.

    நெல்லையில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் 17 கி.மீ. தொலைவில் உள்ளது.

    இது குரு தலமாக விளங்குகிறது.

    நவ கயிலாயங்களில் ஆறாவது தலம் ஸ்ரீவைகுண்டம்.

    இது பூலோக கயிலாயம் என்று அழைக்கப்படுகிறது.

    மூலவர் கைலாசநாதர். இறைவி சிவகாமி அம்பாள்.

    குமரகுருபரர் அவதரித்த தலம் என்பது குறிப்பிடத்தக்கது.

    நெல்லையில் இருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ளது. இது சனி தலமாகும்.

    தென்திருப்பேரை நவகயிலாயங்களில் ஏழாவது தலமாகும்.

    இங்குள்ள கோவில் மூலவர் கைலாசநாதர்.

    இறைவி சிவகாமி அம்பாள்.

    அழகிய பொன்னம்மாள் என்ற திருப்பெயரும் உண்டு.

    நெல்லையில் இருந்து 38 கி.மீ. தொலைவில் உள்ளது.

    இது புதன் தலமாக விளங்குகிறது.

    நவ கயிலாயங்களில் எட்டாவது கைலாயம் ராஜபதி.

    இங்கிருந்த கோவில் இயற்கை சீற்றத்தால் அழிந்து விட்டது.

    முன்பு கோவில் இருந்த இடத்தில் அடையாளமாக ஒரு கல் மட்டுமே உள்ளது.

    அதுதான் இக்கோவிலில் இருந்தததாக கூறப்படும் நந்தி, தற்போது ஓட்டப்பிடாரம் உலகம்மன் கோவிலில் உள்ளது.

    இது கேது தலமாகும்.

    நவ கயிலாயங்களில் ஒன்பதாவது தலம் சேர்ந்தமங்கலம்.

    இங்குள்ள கோவில் மூலவர் கைலாசநாதர்.

    அம்பாள் சிவகாமி அம்மை.

    இத்தலத்தில்தான் தாமிரபரணி ஆறு கடலில் சங்கமமாகிறது.

    நெல்லையில் இருந்து புன்னக்காயல் செல்லும் வழியில் இவ்வூர் உள்ளது.

    இது சுக்கிரன் தலமாக விளங்குகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அகத்தியர் கூறியவாறு மலர்கள் நிற்கும் இடங்களில் உரோம முனிவர் சிவனை வழிபட்டு முத்தியடைந்தார்.
    • மண்டபத்தின் மேலே ஒன்பது இடங்களைப் பற்றி செய்திகளும், பெயர்களும் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன.

    பாபநாசம், சேரன்மாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை,

    ராஜாபதி மற்றும் சேர்ந்தமங்கலம் ஆகிய ஒன்பது தலங்களும் நவகயிலாயங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

    இவற்றில் முதல் மூன்றும் மேலக் கயிலாயங்கள் என்றும், அடுத்த மூன்றும் நடுக்கயிலாயங்கள் என்றும்,

    கடைசி மூன்றும் கீழக் கயிலாயங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

    முதல் நான்கு கயிலாயங்கள் நெல்லை மாவட்டத்திலும், மீதமுள்ள ஐந்தும் தூத்துக்குடி மாவட்டத்திலும் அமைந்துள்ளன.

    பொதிகை மலையில் தவமிருந்த அகத்திய முனிவருக்கு முதல் சீடராக இருந்து பணிவிடைகள் செய்தவர் உரோமவ முனிவர்.

    சிவபெருமானை நினைத்து வழிபட்டுவந்த தவ வலிமை மிக்க உரோம முனிவருக்கு சிவபெருமானின்

    அருளைப்பெற்று முக்தியடைய வேண்டும் என்பது பெரும் விருப்பம்.

    இதையறிந்த அகத்தியர், தாமிரபரணி சங்கமிக்கும் இடத்தில் நீராடினால் விருப்பம் நிறைவேறும், என்றார்.

    தாமிரபரணி ஆற்றங்கரையோரமாகவே செல்ல வேண்டும் உன்னுடன் ஒன்பது மலர்களைத் தண்ணீரில் அனுப்புகிறேன்.

    இந்த மலர்கள் ஒவ்வொன்றும் எங்கு நிற்கிறதோ அங்கு சிவனை வழிபட வேண்டும்.

    பின்னர் சங்கு முகத்தில் நீராடினால் உமது விருப்பம் ஈடேறும் என்றார்.

    அகத்தியர் கூறியவாறு மலர்கள் நிற்கும் இடங்களில் உரோம முனிவர் சிவனை வழிபட்டு முத்தியடைந்தார்.

    பிருங்க முனிவரும் நவகயிலாயங்களுக்கு வந்து இறைவனைத் தரிசித்து தனது சாபம் நீங்கப் பெற்று இறைவனை அடைந்தார் என்கிறது புராண காலத்து வரலாறு.

    நவகயிலாயம் பற்றிய சான்றாக ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோலிலில் கல்யாண குறடு என்று அழைக்கப்படும்

    மண்டபத்தின் மேலே ஒன்பது இடங்களைப் பற்றி செய்திகளும், பெயர்களும் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன.

    உரோம முனிவரின் சிலை ஸ்ரீவைகுண்டம் கோவிலில் ஒரு தூணிலும், சேரன்மாதேவி கோவிலிலும் காணப்படுகின்றன.

    கல்வெட்டுச் சான்றும் உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நந்திதேவருக்கு கோபம். ஒருவனை வேடனாகவும், இன்னொருவனை பூனையாகவும் மாற்ற சாபம் கொடுத்தார்.
    • இருவரும் அப்படியே மாறி வில்லிவாக்கம் என்ற கிராமத்தை அடைந்தனர்.

    நந்திகேஸ்வரரின் வேலையாட்கள் மகா காந்தன், காந்தன், சிவபூஜைக்காக பூலோகம் சென்று கொன்றை மலர்களை பறித்துவர சொன்னார் நந்தி.

    பூலோகம் வந்த இருவரும் வேலையை மறந்து நந்தவன நிழலில் படுத்து தூங்கி விட்டனர்.

    நந்திதேவருக்கு கோபம். ஒருவனை வேடனாகவும், இன்னொருவனை பூனையாகவும் மாற்ற சாபம் கொடுத்தார்.

    இருவரும் அப்படியே மாறி வில்லிவாக்கம் என்ற கிராமத்தை அடைந்தனர்.

    பூனையை ஒரு வேடன் துரத்தினான்.

    பயந்து ஓடிய பூனை அருகிலிருந்த சிவன் கோவிலுக்குள் புகுந்து லிங்கத்தை கட்டிக் கொண்டது.

    வேடனின் அம்பு சிவலிங்கம் மீது பட்டு ரத்தம் கொட்டியது. பூனை பயந்து தீர்த்த குளத்துக்கு ஓடியது.

    சிவனை காயப்படுத்தி விட்டோமே என்று கவலை அடைந்த வேடனும் தீர்த்தத்தில் நீராடி சிவனிடம் மன்னிப்பு கேட்க வந்தான்.

    ஒரே சமயத்தில் வேடன் ஒரு பக்கம், பூனை ஒரு பக்கம் குளத்தில் மூழ்கி எழுந்திருக்க.,

    இருவரும் மீண்டும் மகாகாந்தன், காந்தன் ஆக மாறினார்.

    சிவராத்திரி தினமான அந்நாளில் இறைவனுக்கு பூ, பழங்களை படைத்து வணங்கினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது.
    • அந்த புனிதமான நாளில் விரதம் இருந்தால் புண்ணியமும் கூடும்.

    மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது.

    அன்றைய தினம் சிவபெருமானை வழிபட்டால் கவலைகள் அனைத்தும் நீங்கும்.

    காரிய வெற்றியும் ஏற்படும். 'சிவாய நம' என்று சிந்தித்திருந்தால் 'அபாயம்' நமக்கு ஏற்படாது, 'உபாயம்' நமக்கு ஏற்படும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.

    அந்த புனிதமான நாளில் விரதம் இருந்தால் புண்ணியமும் கூடும்.

    பொருளாதார நிலையும் உயரும்.

    ஒரு நாள் முழுவதும்,ஆறு கால பூஜையிலும் சிவனை நினைத்து வழிப்பட்டு சிவாலயங்களில் சிவன் சன்னதியில்

    அமர்ந்து சிவன் பெயரை உச்சரித்து வந்தால் ஒரே நாளில் ஓர் ஆண்டிற்கான பலனும் நமக்கு கிடைக்கும்.

    அதனால் தான் "சிவராத்திரி" விரதம் சிறந்த பலனைக் கொடுக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கார்த்திகைத் திருநாள் கார்த்திகேயனுக்கும் உகந்த நாள்.
    • விரதம் இருந்து பெருமானின் பேரருளால் தோஷ நிவர்த்தி கிடைத்ததாக தேவி புராணம் கூறுகிறது.

    கார்த்திகைத் திருநாள் கார்த்திகேயனுக்கும் உகந்த நாள்.

    சிவபெருமானின் நெற்றிக் கண்ணினின்றும் தோன்றிய ஆறு அருட்சுடர் சரவணப் பொய்கையில் வந்து தங்கி

    ஆறு குழந்தைகளாக உருமாறி நிற்க அக்குழந்தைகளைக் கார்த்திகைப் பெண்கள் பாலூட்டிச் சீராட்டித் தாலாட்டினர்.

    சிவபெருமான் பிராட்டியாருடன் சரவணப் பொய்கைக்கு எழுந்தருளி உமாதேவியார்

    அக்குழந்தைகளை வாரி அணைக்க, ஆறு உருவங்களும் ஓருருவாய் ஆறுமுகக் குழந்தையாய்

    தேவியின் திருக்கரங்களில் பேரொளிப் பிரகாசமாய் எழுந்தருளியது.

    அவ்வமயம் கார்த்திகைப் பெண்டிர் சிவபெருமானைப் பணிந்து போற்றி நின்றனர்.

    சிவபெருமான் அவர்களை அருள் நோக்கி உங்களுக்கு மங்களம் உண்டாகுக உங்களால் வளர்க்கப்பட்ட

    இப்பாலகனுக்கு கார்த்திகேயன் என்ற திருநாமத்தைச் சூட்டுகிறோம்.

    உங்களுக்கு உகந்த இக்கார்த்திகை நன்னாளில் கந்தனைப் போற்றி வழிபடுவோருக்கு

    அனைத்து நலங்களும் கிட்டுவதாகுக என்று திருவாய் மலர்ந்தருளினார்.

    இறைவனை விளக்கேற்றி வழிபடுவது தொன்றுதொட்டு வந்த பழக்கமாயினும்,                                                               அது என்றென்றும் நலம் தரும் வழிபாடாகவும் கருதப்படுகிறது.

    வைஷ்ணவ ஆலயங்களிலும் விளக்கொளிப் பெருமாள் என்று ஒரு பெருமானைக் கொண்டாடுகின்றனர்.

    அகல், எண்ணெய், திரி, சுடரொளி ஆகிய நான்கும் அறம், பொருள், இன்பம், வீடு என்ற தத்துவங்களை உணர்த்துவது போலாகும்.

    பலிமகராஜன் தனது உடம்பிலே தோன்றிய வெப்பத்தைக் கார்த்திகை விரதமிருந்து தீர்த்துக்கொண்டார் என்று புராணம் கூறுகிறது.

    எம்பெருமான் தன்மீது திருவடி சாதித்து ஆட்கொண்ட போது தனது மறைவு நாளை தீபங்களை ஏற்றி உலகோர் அனைவரும் கொண்டாட வேண்டும் என்று அனந்தனைப் பணிந்து கேட்டான்.

    திருஞானசம்பந்தர், மயிலையில் அங்கம் பூம்பாவைக்கு புத்துயிர் அளிப்பதற்காய்ப் பாடிய திருப்பதிகத்தில் 'கார்த்திகை விளக்கீடு காணாத போதியோ' என்று பாடியுள்ளார்.

    ஒருமுறை அம்பிகை மகிஷாசுரனுடனும் போர்புரியும் போது தவறுதலாக சிவலிங்கம் ஒன்றை உடைத்துவிட்டார்

    என்றும், அதனால் ஏற்பட்ட தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்வதற்குக் கார்த்திகை தினத்தன்று தீபம் ஏற்றி

    விரதம் இருந்து பெருமானின் பேரருளால் தோஷ நிவர்த்தி கிடைத்ததாக தேவி புராணம் கூறுகிறது.

    இவ்வாறு பெருமையும் மேன்மையும் கொண்ட கார்த்திகைத் திருநாளை திருச்செங்கோடு, வேதாரண்யம்,

    பழனி, திருச்செந்தூர் முதலிய கோவில்களில் திருவண்ணாமலைக் கோவிலைப் போன்றே கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.

    சில ஊர்களில் மந்தாரை இலையில், தீபம் ஏற்றுகிறார்கள். வடநாட்டில் தீபத்தை தீப ஓடங்களில் ஏற்றி நீரில் விடுவது உடன்பிறப்பிற்கு நன்மை பயக்கும் என்று கருதுகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அந்நிலையில், சிவபெருமான் சோதிப் பிழம்பாகத் தோன்றினார்.
    • இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர்.

    படைத்தல் தொழிலை செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலை செய்யும் விஷ்ணுவும்

    நானே பெரியவன் என்று வாதாடிப் போரிட்டனர்.

    அந்நிலையில், சிவபெருமான் சோதிப் பிழம்பாகத் தோன்றினார்.

    அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது.

    இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர்.

    அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று

    விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார்.

    இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின.
    • எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள்.

    இவ்விரத்தைப் பற்றிய ஐதீகங்கள் பல உள்ளன.

    ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின.

    உலகங்களே தோன்றவில்லை.

    இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள்.

    அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார்.

    அப்பொழுது உமையவள் சுவாமி நான் தங்கள் மனதில் தியானித்துப் போற்றிய காலம் "சிவராத்திரி" என்று

    பெயர் பெற வேண்டும் என்றும் அதனை சிவராத்திரி விரதம் என்று யாவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும்

    அதை கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடைய வேண்டும் என்று பிராத்தித்தார்.

    இறைவனும் அவ்வாறே என்று அருள் புரிந்தார்.

    அம்பிகையைத் தொடர்ந்து நந்தியம் பெருமான், சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப் பெற்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதல் யாமம் வழிபட வேண்டிய மூர்த்தம் - சோமாஸ்கந்தர்.
    • இரண்டாம் யாமம் வழிபட வேண்டிய மூர்த்தம் - தென்முகக் கடவுள்.

    முதல் யாமம்

    வழிபட வேண்டிய

    மூர்த்தம்- சோமாஸ்கந்தர்

    அபிஷேகம்- பஞ்சகவ்யம்

    அலங்காரம்- வில்வம்

    அர்ச்சனை- தாமரை, அலரி

    நிவேதனம்- பால் அன்னம்,சக்கரைபொங்கல்

    பழம்- வில்வம்

    பட்டு- செம்பட்டு

    தோத்திரம்- இருக்கு வேதம் , சிவபுராணம்

    மணம்- பச்சைக் கற்பூரம், தேர்ந்த சந்தணம்

    புகை- சாம்பிராணி, சந்தணக்கட்டை

    ஒளி- புட்பதீபம்

    இரண்டாம் யாமம்

    வழிபட வேண்டிய

    மூர்த்தம்- தென்முகக் கடவுள்

    அபிஷேகம்- பஞ்சாமிர்தம்

    அலங்காரம்- குருந்தை

    அர்ச்சனை- துளசி

    நிவேதனம்- பாயசம், சர்க்கரைப் பொங்கல்

    பழம்- பலா

    பட்டு- மஞ்சள் பட்டு

    தோத்திரம்- யசுர் வேதம் , கீர்த்தித் திருவகவல்

    மணம்- அகில், சந்தனம்

    புகை- சாம்பிராணி, குங்குமம்

    ஒளி- நட்சத்திரதீபம்

    மூன்றாம் யாமம்

    வழிபட வேண்டிய

    மூர்த்தம்- லிங்கோற்பவர்

    அபிஷேகம்- தேன், பாலோதகம்

    அலங்காரம்- கிளுவை, விளா

    அர்ச்சனை- மூன்று இதழ் வில்வம், சாதி மலர்

    நிவேதனம்- எள்அன்னம்

    பழம்- மாதுளம்

    பட்டு- வெண் பட்டு

    தோத்திரம்- சாம வேதம், திருவண்டப்பகுதி

    மணம்- கஸ்தூரி சேர்ந்த சந்தணம்

    புகை- மேகம், கருங் குங்கிலியம்

    ஒளி- ஐதுமுக தீபம்

    நான்காம் யாமம்

    வழிபட வேண்டிய

    மூர்த்தம்- சந்திரசேகரர்(இடபரூபர்)

    அபிஷேகம்- கருப்பஞ்சாறு, வாசனை நீர்

    அலங்காரம்- கரு நொச்சி

    அர்ச்சனை- நந்தியாவட்டை

    நிவேதனம்- வெண்சாதம்

    பழம்- நானாவித பழங்கள்

    பட்டு- நீலப் பட்டு

    தோத்திரம்- அதர்வண வேதம் , போற்றித்திருவகவல்

    மணம்- புணுகு சேர்ந்த சந்தணம்

    புகை- கர்ப்பூரம், இலவங்கம்

    ஒளி- மூன்று முக தீபம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும்.
    • சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்.

    மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும்.

    இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும்.

    இதன் நோன்பு முறைகளைக் கூறும் நூல் மகா சிவராத்திரி கற்பம் என்னும் சிறிய நூல்.

    சிவராத்திரி விரத வகைகள்

    சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்.

    நித்திய சிவராத்திரி

    மாத சிவராத்திரி

    பட்ச சிவராத்திரி

    யோக சிவராத்திரி

    மகா சிவராத்திரி

    ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும்.

    சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.

    விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய்

    காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்ய வேண்டும்.

    அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி

    (பாரணை செய்து) விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.

    சிவாலயங்களில் நடைபெறும் நான்கு யாம அபிசேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்பப் பொருள்களைக் கொடுத்து உதவலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிவராத்திரிக்கு ஞாயிறு தலத்தில் இரவில் 4 ஜாம பூஜை நடைபெற உள்ளது.
    • 4-வது ஜாம பூஜை அதிகாலை 3 மணிக்கு நடைபெறும்.

    சிவராத்திரிக்கு ஞாயிறு தலத்தில் இரவில் 4 ஜாம பூஜை நடைபெற உள்ளது.

    முதல் ஜாம பூஜை இரவு 7 மணிக்கு நடைபெறும். 2-வது ஜாம பூஜை இரவு 9 மணிக்கும்,

    3-ம் ஜாம பூஜை நள்ளிரவு 11.30 மணிக்கும் நடைபெறும்.

    4-வது ஜாம பூஜை அதிகாலை 3 மணிக்கு நடைபெறும். அன்று இரவு முழுக்க கோவில் நடை திறந்திருக்கும்.

    ஒவ்வொரு ஜாம பூஜைக்கும் அபிஷேகங்கள், ஆராதனைகள் அனைத்தும் மாறுபடும்.

    பக்தர்கள் சிவராத்திரி அபிஷேக பூஜைகளுக்கு தேன், பால், விபூதி, பன்னீர், சந்தனம் உள்ளிட்ட வகைகளை

    வாங்கி கொடுத்து சிவபெருமான் அருளை பெறலாம் என்று ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print