என் மலர்
நீங்கள் தேடியது "தேவாரம்"
- பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம்.
- தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.
சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம்.
இதில் முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தரும், நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரையான பாடல்களை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியிருக்கிறார்கள்.
தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது 'தேவாரம்' என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். இந்த தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.
பாடல்:-
அன்புடை யானை அரனைக்கூடல்
ஆலவாய் மேவியது என்கொல்என்று
நன்பொனை நாதனை நள்ளாற்றானை
நயம்பெறப் போற்றி நலம் குலாவும்
பொன்புடை சூழ்தரு மாடக்காழிப்
பூசுரன் ஞானசம் பந்தன்சொன்ன
இன்புடைப் பாடல்கள் பத்தும்வல்லார்
இமையவர் ஏத்த இருப்பவர்தாமே.
- திருஞானசம்பந்தர்
விளக்கம்:- அனைத்து உயிர்களிடத்திலும் அன்புடையவனான சிவனை, கூடல் ஆலவாயில் எழுந்தருள என்ன காரணம் எனக் கேட்டு, பொன் போன்றவனாகவும், தலைவனாகவும் விளங்கும் திருநள்ளாற்று இறைவனை நயமாக போற்றி, செம்பொன் நிறைந்த மாட வீடுகளால் சூழப்பட்ட சீர்காழியில் தோன்றிய திருஞானசம்பந்தர் பாடிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் பாடுபவர்கள், தேவர்களெல்லாம் போற்றுமாறு திகழ்வர்.
- சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை தேவாரம்' என்று அழைக்கிறோம்.
- ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியிருக்கிறார்கள்.
சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை தேவாரம்' என்று அழைக்கிறோம். இதில் முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தரும், நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரையான பாடல்களை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியிருக்கிறார்கள். தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது 'தேவாரம்' என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். இந்த தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.
பாடல்:-
கோவண ஆடையும் நீறுப்பூச்சும்
கொடுமழு ஏந்தலும் செஞ்சடையும்
நாவணப் பாட்டுநள் ளாறுடைய
நம்பெரு மான்இது என்கொல்சொல்லாய்
பூவண மேனி இளையமாதர்
பொன்னும் மணியும் கொழித்தெடுத்து
ஆவண வீதியில் ஆடும்கூடுல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
- திருஞானசம்பந்தர்
விளக்கம்:-
கோவணத்தை ஆடையாகக் கொண்டும், திருநீற்றை உடலில் பூசியும், வளைந்த மழு ஆயுதத்தை ஏந்தியும், சிவந்த சடைமுடியும், நாவில் பல்வேறு சந்தங்களில் பாடும் வேதப் பாட்டும் உடையவனாக நள்ளாற்றில் வீற்றிருக்கும் பெருமானே! பூப்போன்ற மென்மையான மேனியை உடைய இளம் மகளிர், பொன்னும், மணியும் திரளாகச் சேர்த்து கடை வீதியில் உலவும் கூடலின்கண் விரும்புவதற்கு என்ன காரணமோ? சொல்வாயாக!
- பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம்.
- ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியிருக்கிறார்கள்.
சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம். இதில் முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தரும், நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரையான பாடல்களை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியிருக்கிறார்கள்.
தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது 'தேவாரம்' என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர்.
இந்த தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.
பாடல்:-
பாகமும் தேவியை வைத்துக்கொண்டு பைவிரி துத்திப் பரியபேழ்வாய்
நாகமும் பூண்டநள் ளாறுடைய
நம்பெரு மான்இது என்கொல் சொல்லாய்
போகமும் நின்னை மனத்துவைத்துப்
புண்ணியர் நண்ணும் புணர்வுபூண்ட
ஆகம்உ டையவர் சேரும்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
- திருஞானசம்பந்தர்
விளக்கம்:-
ஒரு பாகத்தில் உமாதேவியை வைத்துக் கொண்டு, நஞ்சினையும், அகன்ற படத்தையும், பிளந்த வாயையும் உடைய நாகத்தை அணிகலனாய் பூண்டு, நள்ளாற்றில் வீற்றிருக்கும் பெருமானே! உன்னை மனதில் நினைத்து, இன்பம் அடையும் புண்ணியர்களான அடியவர்கள் விளங்கும் கூடல் ஆலவாயின்கண் விரும்பி தங்குவதற்கு என்ன காரணமோ? சொல்வாயாக!
- சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம்.
- ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியிருக்கிறார்கள்.
சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம். இதில் முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தரும், நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரையான பாடல்களை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியிருக்கிறார்கள்.
தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது 'தேவாரம்' என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர்.
இந்த தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.
பாடல்:-
தண்ணறு மத்தமும் கூவிளமும்
வெண்தலை மாலையும் தாங்கியார்க்கும்
நண்ணல்அ ரியநள் ளாறுடைய
நம்பெரு மான்இது என்கொல்சொல்லாய்
புண்ணிய வாணரும் மாதவரும்
புகுந்துடன் ஏத்தப் புனைஇழையார்
அண்ணலின் பாடல் எடுக்கும்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
-திருஞானசம்பந்தர்
விளக்கம்:-
குளிர்ந்த மணம் வீசும் ஊமத்தம் பூவும், வில்வ இதழும், வெண்மையான கபாலத்தை மாலையாகவும் அணிந்து, யாவருக்கும் வழிபடுவதற்கு அரியவனாய் திருநள்ளாற்றில் வீற்றிருக்கும் பெருமானே! புண்ணியம் செய்தவர்களும், பெருந்தவம் செய்தவர்களும் போற்ற, சிறப்பாக விளங்கும் பெருமானின் பாடலைப் பாடும் ஆலவாயின்கண் விரும்பி தங்குவதற்கு என்ன காரணமோ? சொல்வாயாக!
- பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம்.
- தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.
சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம். இதில் முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தரும், நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரையான பாடல்களை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியிருக்கிறார்கள். தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது 'தேவாரம்' என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். இந்த தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.
பாடல்:-
பூண்தங்கு மார்பின் இலங்கைவேந்தன்
பொன்நெடும் தோள்வரை யால்அடர்ந்து
மாண்தங்கு நூல்மறை யோர்பரவ
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
சேண்தங்கு மாமலர்ச் சோலைசூழ்ந்த
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
காண்தங்கு தோள்பெயர்த்து எல்லிஆடும்
கணபதி ஈச்சரம் காமுறவே.
- திருஞானசம்பந்தர்
விளக்கம்:-
அணிகலன்கள் பொருந்திய மார்பினை உடைய இலங்கை மன்னன் ராவணன், கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்டபோது, அந்த மலையினாலேயே தண்டனை அளித்த, பெருமை உடைய நான்மறையோர் வணங்க திருமருகல் திருத்தலத்தில் எழுந்தருளும் இறைவனே! உயர்ந்து நிற்கும் பெருமைமிக்க மலர்ச் சோலை சூழ்ந்த திருச்செங்காட்டங்குடியில் இரவில் அழகிய தோள்களை அசைத்து நடனம் ஆடுவதற்கு கணபதி ஈச்சரத்தை விரும்ப என்ன காரணமோ? சொல்வாயாக!
- பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம்.
- தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது 'தேவாரம்' என்று பெயர் பெற்றதாக கூறுவர்.
சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம்.
இதில் முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தரும், நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரையான பாடல்களை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியிருக்கிறார்கள். தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது 'தேவாரம்' என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். இந்த தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.
பாடல்:-
புனை அழல் ஓம்புகை அந்தணாளர்
பொன்னடி நாள்தோறும் போற்றிஇசைப்ப
மனைகெழு மாடம் மலிந்தவீதி
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
சினைகெழு தண்வயல் சோலைசூழ்ந்த
சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்
கனைவளர் கூர்எரி ஏந்தி ஆடும்
கணபதி ஈச்சரம் காமுறவே.
- திருஞானசம்பந்தர்
விளக்கம்:-
சிறப்பிக்கப்படும் வேள்வித் தீயை தமது கையால் உபசரிக்கும் அந்தணர்களின் திருவடியை நாள்தோறும் போற்றி, வேத கீதத்தால் வணங்கி, அத்தகையோரின் மாட மாளிகைகள் நிறைந்தது திருமருகல் திருத்தலம். இங்கு எழுந்தருளி உள்ள இறைவனே! அரும்புகள் நிறைந்த சோலைகளும், குளிர்ந்த வயல்களும் சூழ்ந்த திருச்செங்காட்டங்குடியில் எரியும் நெருப்பை திருக்கரத்தில் ஏந்தி கணபதி ஈச்சரத்தில் விரும்பி நடனம் ஆடுவதற்கு என்ன காரணமோ? சொல்வாயாக!
- ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியிருக்கிறார்கள்.
- தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது 'தேவாரம்' என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர்.
சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம். இதில் முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தரும், நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரையான பாடல்களை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியிருக்கிறார்கள். தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது 'தேவாரம்' என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். இந்த தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.
பாடல்:-
பாடல் முழவும் விழவும் ஓவாப்
பன்மறை யோரவர் தாம்பரவ
மாட நெருங்கொடி விண்தடவு
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
சேடக மாமலர்ச் சோலைசூழ்ந்த
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
காடக மேஇடமாக ஆடும்
கணபதி ஈச்சரம் காமுறவே.
- திருஞானசம்பந்தர்
விளக்கம்:-
எல்லாக் காலங்களிலும் முழவின் ஒலியுடன் கூடிய இசைப்பாடலும், திருவிழாக்களும் நடைபெற, வேதங்கள் கற்ற அந்தணர்கள் போற்ற, வானத்தை எட்டும் அளவு உயர்ந்த மாடங்களை கொண்டது திருமருகல் திருத்தலம். இங்கு எழுந்தருளி உள்ள இறைவனே!
வளைந்த நெருக்கமான இலைகளை உடைய பெருமைமிக்க மலர்ச் சோலை சூழ்ந்த செங்காட்டங்குடியில் இடுகாட்டினை இடமாக கொண்டு நடனம் ஆடுவதற்கு கணபதி ஈச்சரத்தினை விரும்பியதற்கு என்ன காரணமோ? சொல்வாயாக!
- சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம்.
- நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரையான பாடல்களை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியிருக்கிறார்கள்.
சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம். இதில் முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தரும், நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரையான பாடல்களை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியிருக்கிறார்கள். தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது 'தேவாரம்' என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். இந்த தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.
பாடல்:-
நாமரு கேள்வியர் வேள்விஒவா
நான்மறை யோர்வழி பாடுசெய்ய
மாமரு வும்மணிக் கோயில்மேய
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
தேமரு பூம்பொழில் சேலைசூழ்ந்த சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
காமரு சீர்மகிழ்ந்து எல்லிஆடும்
கணபதி ஈச்சரம் காமுறவே.
- திருஞானசம்பந்தர்
விளக்கம்:-
நடுநிலை தவறாது கேள்வி ஞானத்தை உடையவர்களும், வேதங்களை கற்ற அந்தணர்களும் வழிபாடு செய்யும் பெருமை உடைய மணிக்கோவிலை கொண்டது திருமருகல். இங்கு எழுந்தருளி உள்ள இறைவனே! நல்ல மணம் தரும் மலர் சோலைகள் சூழ்ந்த சிறப்புமிக்க செங்காட்டங்குடியில் நடனம் புரியும் காட்சியை கணபதி ஈச்சரத்தில் விருப்பத்துடன் செய்வதற்கு என்ன காரணமோ? சொல்வாயாக!
- சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம்.
- ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியிருக்கிறார்கள்.
சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம். இதில் முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தரும், நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரையான பாடல்களை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியிருக்கிறார்கள்.
தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது 'தேவாரம்' என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். இந்த தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.
பாடல்:-
தோலொடு நூலிழை சேர்ந்த மார்பர் தொகுமறை யோர்கள் வளர்த்த செந்தீ மால்புகை போய்விம்மு மாடவீதி
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
சேல்புல்கு தண்வயல் சோலைசூழ்ந்த
சீர்கெள்செங் காட்டங் குடியதனுள்
கால்புல்கு பைங்கழல் ஆர்க்க ஆடும்
கணபதி ஈச்சரம் காமுறவே.
-திருஞானசம்பந்தர்
விளக்கம்:-
வேதங்கள் உணர்ந்த அந்தணர்கள் எழுப்பும் வேள்வி தீயின் புகை வெளிப்படும் மாடங்களுடன் கூடிய வீதிகளை உடையது திருமருகல் திருத்தலம். இங்கு மான் தோலும், பூணூலும் மார்பில் அணிந்து வீற்றிருக்கும் இறைவனே, மீன்கள் நிறைந்த நீர்வளம் மிக்க வயல்களும், சோலைகளும் சூழ்ந்த செங்காட்டங்குடியில் திருவடி கழல்கள் ஒலிக்க ஆடும் திருநடனத்தை, கணபதி ஈச்சரத்தில் செய்ததற்கு என்ன காரணமோ? சொல்வாயாக!
- ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியிருக்கிறார்கள்.
- மேகம் தவழும் உயர்ந்த மாடங்களை கொண்டது திருமருகல் திருத்தலம்.
சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம். இதில் முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தரும், நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரையான பாடல்களை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியிருக்கிறார்கள். தெய்வத்தின் மீது பாடப் பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது 'தேவாரம்' என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். இந்த தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.
பாடல்:-
நெய்தவழ் மூவெரி காவல்ஓம்பு
நேர்புரி நூல்மறை யாளர்ஏத்த
மைதவழ் மாடம் மலிந்தவீதி
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
செய்தவ நான்மறை யோர்கள்ஏத்தும்
சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்
கைதவழ் கூர்எரி ஏந்திஆடும்
கணபதி ஈச்சரம் காமுறவே.
-திருஞானசம்பந்தர்
விளக்கம்:-
நெய் சொரிந்து மூன்று வகையான வேள்வித் தீயை பேணி வளர்க்கும் அந்தணர்கள் போற்ற, மேகம் தவழும் உயர்ந்த மாடங்களை கொண்டது திருமருகல் திருத்தலம். இங்கு வீற்றிருக்கும் இறைவனே! வேள்வி செய்வதை தவமாக போற்றும் நான்மறையாளர்கள் பாராட்டி புகழும் செங்காட்டங்குடியில் திருக்கரத்தில் பெரிய தீயை ஏந்தி நடனம் புரிவதற்கு ஏற்ற இடமாக கணபதி ஈச்சரத்தை விருப்பம் கொள்ள என்ன காரணம்? சொல்வாயாக!
- திருக்குறள், பன்னிரு திருமுறை வகுப்புகளுக்கான தொடக்க விழா நடைபெற்றது.
- மாணவர்களுக்கு தேவாரம், திருவாசகம் ஓதி தொடங்கி வைத்தனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டியில் குழந்தைகளை நல்வழிப்படுத்தும் திருக்குறள், பன்னிரு திருமுறை வகுப்புகளுக்கான ஆனந்த குருகுலம் தொடக்க விழா மாடர்ன் நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் அமைப்பு செயலாளர் ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் தீபா ராணி அனைவரையும் வரவேற்றார். ஆன்மீக ஆனந்தம் அமைப்பின் செயலாளர் எடையூர் மணிமாறன் மாணவர்களுக்கு தேவார புத்தகம் வழங்கி தொடங்கி வைத்தார்.
இதில் சிறப்பு விருந்தினராக துரை ராயப்பன் கலந்து கொண்டு சிறப்பித்தார். இதில் பெற்றோர் ஆசிரியர் சங்க துணை தலைவர் விஜயராஜ் வாழ்த்துரை வழங்கினார். ஓதுவார் வடுகநாதன், துணை ஓதுவார் கருணாநிதி மாணவர்களுக்கு தேவாரம், திருவாசகம் ஓதி தொடங்கி வைத்தனர்.
இதில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாடர்ன் நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளி தாளாளர் முருகானந்தம் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை சர்வாலய உழவாரப்பணி குழு அமைப்புடன் இணைந்து ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பினர் செய்திருந்தனர்.
- 18,326 பன்னிரு திருமுறை பாடல்களை பண்ணோடு தொடர்ந்து பாடி திருநெறிய தமிழரசி என்ற விருது பெற்றவர்.
- தமிழ்நாடு அரசு கலை மற்றும் பண்பாடு துறை சார்பில் கலை இளம்மணி விருது பெற்றுள்ளார்.
உடுமலை :
புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா புதுடெல்லியில் நடந்தது. இதில் உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்து வரும் உமா நந்தினி என்ற மாணவி பங்கேற்றார். தேவார பண்ணிசை பாடுவதற்கு 6 ஓதுவார்களில் ஒருவராக திருவாடுதுறை ஆதீன குரு மகா சன்னிதானங்களில் வேண்டுகோளின்படி கலந்து கொண்டுள்ளார். இவர் தொடர்ந்து 665 நாட்களாக கொரோனா காலத்தில் 18,326 பன்னிரு திருமுறை பாடல்களை பண்ணோடு தொடர்ந்து பாடி நிறைவு செய்து திருநெறிய தமிழரசி என்ற விருது பெற்றவர்.
முதல் ஏழு திருமுறைகளைகளான திருவாசகம், திருக்கோவையார் ஒன்பதாம் திருமுறை, பத்தாம் திருமுறை திருமூலரின் திருமந்திரம், 11-ம் திருமுறை போன்றவற்றின் எல்லா பாடல்களையும் பாடி நிறைவு செய்து 12-ம் திருமுறை சேக்கிழார் பெருமானின் பெரிய புராணம் என மொத்தம் 18,326 பாடல்களையும் பாடி நிறைவு செய்துள்ளார்.
தொடர்ந்து அருணகிரிநாதரின் திருப்புகழ், திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய திரு அருட்பா பாடல்களையும் யூடியூப் இணையதளத்தில் பாடி வருகிறார். இந்திய சாதனை புத்தகம், இளம் வயதில் அதிகமான ஆன்மிக பாடல்களை பாடியவர் என்று இவரது சாதனையை பதிவு செய்தது. தமிழ்நாடு அரசு கலை மற்றும் பண்பாடு துறை சார்பில் கலை இளம்மணி விருது பெற்றுள்ளார். திருவாடுதுறை ஆதீன பண்ணிசை வகுப்பு மாணவியான இவர் திருவாடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ 24 வது குரு மகா சன்னிதானங்களின் திருக்கரங்களால் சிறப்பு விருதும் ரூபாய் ஐந்தாயிரத்திற்கான பொற் காசுகளையும் பெற்றுள்ளார்.
தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜனிடம் திருநெறிய அருள் செல்வி விருது அளித்து மாணவி உமா நந்தினியை கவுரவித்துள்ளார். உடுமலை நாராயணகவி இலக்கிய பேரவை சார்பில் தூண்டில் சிறந்த தூயோர் விருதும், அரிமா சங்கம் சார்பில் பாராட்டு சான்றிதழும் பெற்றுள்ளார்.
இதுகுறித்து கல்லூரி மாணவி உமா நந்தினி கூறியதாவது:-
உடுமலையிலுள்ள ஜி.வி.ஜி., விசாலாட்சி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். எனது மழலைப் பருவம் முதலே கா்நாடக இசையை முறைப்படி கற்றறிந்துள்ளேன். நான் 6ம் வகுப்பு பயிலும்போது பன்னிசைப் பயிற்சியை உடுமலையிலுள்ள திருவாவடுதுறை ஆதீனம் பண்ணிசை பயிற்சி மையத்தில் அமைப்பாளா் ராணி கோபால்சாமியின் வழிகாட்டுதலின்படி, ஓதுவாா் சற்குருநாதனிடம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். இதைத்தொடா்ந்து, கரூா், ஈரோடு மற்றும் உடுமலை பகுதிகளுக்கு பொறுப்பாளரான, திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்த பேராசிரியரான ஜெய்சிங் லிங்க வாசகத்திடம் பண்ணிசை பாடல்களையும், திருநெறி முறைகளையும் கற்றுக்கொண்டேன். புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவில் தேவாரப்பண்ணிசை பாடுவதற்கு 6 ஓதுவாா்களில் ஒருவராக திருவாவடுதுறை ஆதீன குருமகா சந்நிதானங்களின் அருளாணையின்படி கலந்து கொண்டேன். இந்த சரித்திர நிகழ்வு எனக்கு பெரும் பேறாகவும், பெருமையாகவும் உள்ளது என்றாா்.






