என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "College student"

    • சம்பவத்தன்று மோகன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வெங்கடேசனும் கலந்துகொண்டுள்ளார்.
    • சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    சென்னை அயனாவரம் முத்தம்மன் தெருவை சேர்ந்தவர் நிதின்சாய் (வயது 21). சென்னையில் உள்ள கலைக்கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு ஆங்கில இலக்கியம் படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு திருமங்கலத்தில் தனது நண்பர் மோகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.

    பின்னர் அவர் தனது கல்லூரி நண்பர் அபிஷேக் என்பவருடன் ஸ்கூட்டரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். திருமங்கலம் பள்ளி சாலை அருகே வந்தபோது ஸ்கூட்டர் மீது அசுர வேகத்தில் வந்த சொகுசு கார் பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு நிதின்சாய் சம்பவ இடத்திலேயே பலியானார். அபிஷேக் படுகாயம் அடைந்தார்.

    கார் மோதியதில் ஸ்கூட்டர் உருக்குலைந்தது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்தனர். பலியான நிதின்சாய் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த அபிஷேக் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

    பின்னர் இந்த விபத்து தொடர்பாக திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய நிலையில், இது விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.

    நிதின்சாய் மற்றும் அபிஷேக்கின் நண்பர்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோவால் இந்த அதிர்ச்சி தகவல் வெளிச்சத்துக்கு வந்தது.

    இந்த கொலைக்கான பயங்கர பின்னணி வருமாறு:-

    கொலையான நிதின் சாயின் நெருங்கிய நண்பரான வெங்கடேஷ் என்பவர் பிளஸ்-2 மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த மாணவி அவரது காதலை ஏற்காமல் கண்டித்து வந்துள்ளார். எனினும் வெங்கடேஷ் விடாமல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி அந்த மாணவி தனது நண்பரான பிரணவ் என்பவரிடம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர், வெங்கடேசனை நேரில் சென்று மிரட்டி உள்ளார். எனினும் அவரது மிரட்டலை வெங்கடேசன் பொருட்படுத்தவில்லை என்று தெரிகிறது.

    இந்தநிலையில் சம்பவத்தன்று மோகன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வெங்கடேசனும் கலந்துகொண்டுள்ளார். தகவல் அறிந்து பிரணவ் தனது நண்பர்களுடன் சொகுசு காரில் வந்துள்ளார். ஓட்டலை விட்டு வெளியே வந்தவுடன் வெங்கடேசனை பிரணவ் தரப்பினர் தாக்க முயன்றனர். அப்போது நிதின்சாயும், அபிஷேக்கும் அவர்களை தடுத்து நிறுத்தி வெங்கடேசனுக்கு ஆதரவாக நின்றுள்ளனர்.

    இந்த சந்தர்ப்பத்தில் வெங்கடேசனின் கால் மீது பிரணவ் தரப்பினர் காரை ஏற்றி உள்ளனர். இதனால் ஆவேசம் அடைந்த நிதின் சாய், அபிஷேக் ஆகியோர் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து சொகுசு காரை சேதப்படுத்தி, நம்பர் பிளேட்டையும் உடைத்து எறிந்துள்ளனர். இதைத்தொடர்ந்து பிரணவ் தரப்பினர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றுள்ளனர்.

    அதன்பின்னர், நிதின்சாயும், அபிஷேக்கும் ஸ்கூட்டரில் ஒன்றாக சென்ற போதுதான் பிரணவ் தரப்பினர் காரில் பின்தொடர்ந்து வந்து வேகமாக மோதி கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து இந்த வழக்கு திருமங்கலம் போக்குவரத்து போலீசாரிடம் இருந்து சட்டம்-ஒழுங்கு போலீசார் வசம் வந்தது. கொலை வழக்குப்பதிவு செய்து திருமங்கலம் போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கினார்கள்.

    சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் காரில் வந்தவர்கள், விபத்தில் நிதின்சாய் இறந்தது தெரியாமல் சிரித்தபடி எச்சரிக்கை விடுத்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

    அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் சொகுசு காரை ஓட்டி வந்து நிதின்சாய் மீது மோதி கொலை செய்தது கே.கே.நகர் பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகரின் பேரன் சந்துரு என்பது தெரிய வந்தது. இந்த நிலையில் கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என்று நிதின்சாயின் உறவினர்கள், நண்பர்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று திருமங்கலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    தகவல் அறிந்து திருமங்கலம் உதவி கமிஷனர் பிரம்மானந்தன், இன்ஸ்பெக்டர் தீபக் ஆகியோர் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்தனர். அதன்படி பிரணவ் உள்ளிட்ட சிலரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சந்துரு தலைமறைவாகி விட்டதால் அவரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான தி.மு.க. பிரமுகரின் பேரன் சந்துருவை கைது செய்த திருமங்கலம் போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • த.வெ.க. கட்சி கொடியை ஆழ்கடலில் ஏந்தி தனது ஆதரவை வெளிப்படுத்தினார், He expressed his support by carrying TVK party flag into sea.
    • அரியாங்குப்பம் கடற்கரையில் இருந்து 8 கிலோமீட்டர் தூரம் வரை ஆழ்கடல் நீச்சல் வீரர்களின் உதவியுடன் சென்றார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரியாங் குப்பத்தை சேர்ந்தவர் சரண் கல்லூரி மாணவர். நடிகர் விஜயின் தீவிர ரசிகரான இவர் த.வெ.க. கட்சியின் தொண்டராக இருந்து வருகிறார்.

    இவர் த.வெ.க. கட்சி கொடியை ஆழ்கடலில் ஏந்தி தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.

    அரியாங்குப்பம் கடற்கரையில் இருந்து 8 கிலோமீட்டர் தூரம் வரை ஆழ்கடல் நீச்சல் வீரர்களின் உதவியுடன் சென்றார். பின்னர் ஆழ்கடலுக்குள் த.வெ.க. கொடியை அசைத்து தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.

    • இந்த ஓவியம் வரைவது மிகவும் கடினமான ஒன்று.
    • இதுவரை நான் வரைந்த ஓவியங்களிலேயே ராஜராஜ சோழன் ஓவியம் எனக்கு மிகவும் சவாலாக இருந்தது.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் கரந்தையை சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மகன் தருண்குமார் (வயது 21). இவர் தஞ்சையில் உள்ள கல்லூரியில் கட்டிடக்கலையியலில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். சிறுவயதில் இருந்தே பெயிண்ட் ஓவியம், மினியேச்சர் ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்ட மாணவர் தருண்குமார் தற்போது டிரெண்டிங்கில் இருக்கும் சூரிய ஒளி ஓவியத்தை வரைந்து அசத்தி வருகிறார்.

    அரசியல் தலைவர்களின் ஓவியங்கள், ராஜராஜ சோழன் போன்ற வரலாற்று மன்னர்கள் ஓவியம், பிரபலங்களின் ஓவியங்கள் என பல்வேறு விதமான ஓவியங்களை சூரிய ஒளியில் லென்ஸ் பயன்படுத்தி வரைந்து வருகிறார். இந்த ஓவியங்களை வெயில், மழையில் படாமல் பாதுகாத்து வந்தால் சுமார் 400 ஆண்டுகள் வரை அப்படியே இருக்கும் என்றும் தஞ்சையில் பலருக்கும் இந்த ஓவிய கலையை பயிற்சி அளித்தும் வருவதாகவும் கூறினார்.

    இதுகுறித்து மாணவர் தருண்குமார் மேலும் கூறும்போது:-

    சூரிய ஒளியில் இருந்து கிடைக்கக்கூடிய ஆற்றலை பயன்படுத்தி லென்ஸ் மூலம் ஒரு மிட் பாயிண்டை குறித்து இந்த ஓவியம் வரைந்து வருகின்றேன். இந்த ஓவியம் வரைவது மிகவும் கடினமான ஒன்று. வரலாற்று சம்பந்தமான ஓவியங்கள், பாரம்பரிய சின்னங்கள் போன்ற ஓவியங்களை அடுத்தடுத்து வரைய உள்ளேன். ஒரு ஓவியம் வரைவதற்கு ஓவியத்தை பொறுத்து 2-ல் இருந்து 3 நாட்கள் வரை ஆகும். இதுவரை நான் வரைந்த ஓவியங்களிலேயே ராஜராஜ சோழன் ஓவியம் எனக்கு மிகவும் சவாலாக இருந்தது.

    என்னுடைய தொழில் ஆர்க்கிடெக்சர் ஆக இருந்தாலும் ஓவியத்தின் மேல் உள்ள எனது ஆர்வத்தினால் இதனை தற்போது தஞ்சையில் நான் மட்டுமே செய்து வருகிறேன். அதே நேரத்தில் விருப்பம் உள்ளவர்களுக்கு பயிற்சியும் அளித்து வருகிறேன். ஒரு சிலர் என்னை தொடர்பு கொண்டு அவர்களுக்கு ஏற்ற ஓவியங்களை ஆர்டர் கொடுக்கின்றனர். இந்த ஓவியம் வரைவதற்கு மிகவும் கவனம் தேவை. ஒரு நாள் முழுவதும் ஓவியம் வரைந்தால் இரவு தூக்கம் வராது. கண் எரிச்சல் ஏற்படும். பாதுகாப்பான கண்ணாடியை போட்டு வரைந்தாலும் அந்த பிரச்சனை சில சமயங்களில் ஏற்படும். இருந்தாலும் சவால் மிக்க இந்த ஓவியங்கள் வரைவதில் எனக்கு ஆர்வம் அதிகம் உள்ளது என்றார்.

    • பேராசிரியர் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லையளித்ததாக மாணவி புகார் தெரிவித்திருந்தார்.
    • இந்த புகார் குறித்து நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    ஒடிசா மாநிலத்தின் பாலசோர் நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவிக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். பேராசிரியரின் தகாத நடவடிக்கை குறித்து கல்லூரி புகார் குழுவிடம் ஜூலை 1 ஆம் தேதி மாணவி புகார் அளித்தார். அந்த புகாரில் பேராசிரியர் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லையளித்ததாகவும், மிரட்டியதாகவும் மாணவி தெரிவித்திருந்தார். இருப்பினும், தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை ஆசிரியர் சமீர்குமார் சாஹு மறுத்தார்.

    அதனை தொடர்ந்து ஒரு வாரத்துக்குள் இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் உறுதியளித்தாலும், நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து கடந்த 12-ந்தேதி கல்லூரிக்குள் மாணவியுடன் சேர்ந்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

    இதனைத் தொடர்ந்து, திடீரென முதல்வர் அலுவலகத்தின் அருகே தன் மீது பெட்ரோல் ஊற்றி, மாணவி தீக்குளித்தார். மருத்துவமனையில் 3 நாட்களாக உயிருக்கு போராடிய நிலையில், நேற்று இரவு கல்லூரி மாணவி உயிரிழந்தார்.

    இதற்கிடையே, புகாரை வாபஸ் பெறும் படி, கல்லூரியின் முதல்வரும், புகார்கள் குழு உறுப்பினர்களும் அழுத்தம் கொடுத்ததாக மாணவியின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். மேலும் புகாரை வாபஸ் பெறவில்லை என்றால் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் என்றும் கைது செய்யப்படுவீர்கள் என்றும் மிரட்டல் விடுத்ததாகவும் கூறினார்.

    இந்நிலையில், பாலியல் துன்புறுத்தலால் மாணவி தீக்குளித்து உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் தலைமையில் அம்மாநிலம் முழுவதும் இன்று கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

    அனைத்து மாவட்டங்களிலும் 8 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒடிசாவில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

    • பேராசிரியர் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லையளித்ததாக மாணவி புகார் தெரிவித்திருந்தார்.
    • இந்த புகார் குறித்து நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    ஒடிசா மாநிலத்தின் பாலசோர் நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவிக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். பேராசிரியரின் தகாத நடவடிக்கை குறித்து கல்லூரி புகார் குழுவிடம் ஜூலை 1 ஆம் தேதி மாணவி புகார் அளித்தார். அந்த புகாரில் பேராசிரியர் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லையளித்ததாகவும், மிரட்டியதாகவும் மாணவி தெரிவித்திருந்தார். இருப்பினும், தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை ஆசிரியர் சமீர்குமார் சாஹு மறுத்தார்.

    அதனை தொடர்ந்து ஒரு வாரத்துக்குள் இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் உறுதியளித்தாலும், நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து கடந்த 12-ந்தேதி கல்லூரிக்குள் மாணவியுடன் சேர்ந்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

    இதனைத் தொடர்ந்து, திடீரென முதல்வர் அலுவலகத்தின் அருகே தன் மீது பெட்ரோல் ஊற்றி, மாணவி தீக்குளித்தார். மருத்துவமனையில் 3 நாட்களாக உயிருக்கு போராடிய நிலையில், நேற்று இரவு கல்லூரி மாணவி உயிரிழந்தார்.

    இதற்கிடையே, புகாரை வாபஸ் பெறும் படி, கல்லூரியின் முதல்வரும், புகார்கள் குழு உறுப்பினர்களும் அழுத்தம் கொடுத்ததாக மாணவியின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். மேலும் புகாரை வாபஸ் பெறவில்லை என்றால் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் என்றும் கைது செய்யப்படுவீர்கள் என்றும் மிரட்டல் விடுத்ததாகவும் கூறினார்.

    இதனை தொடர்ந்து, கல்லூரியின் துறைத் தலைவர் மற்றும் முதல்வர் திலீப் கோஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

    இந்நிலையில், தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவி அளித்த பாலியல் புகார் மீது உரிய விசாரணை நடத்தப்படவில்லை என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில், "ஒடிசாவில் நீதிக்காக போராடிய மகளின் மரணம், பாஜக அமைப்பால் செய்யப்பட்ட கொலையே தவிர வேறொன்றும் இல்லை. தனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தலை துணிச்சலாக பேசினார் அந்த மாணவி. ஆனால் நீதி வழங்கப்படவில்லை. மாறாக அச்சுறுத்தப்பட்டார். துன்புறுத்தப்பட்டார். மீண்டும் மீண்டும் அவமானப்படுத்தப்பட்டார். அவளை பாதுகாக்க வேண்டியவர்களே அவளை சுக்குநூறாக உடைத்தார்கள்

    இது தற்கொலை அல்ல. இது அமைப்பின் திட்டமிட்ட படுகொலை. மோடி ஜி, ஒடிசாவாக இருந்தாலும் சரி, மணிப்பூராக இருந்தாலும் சரி... நாட்டின் மகள்கள் எரிந்து, உடைந்து, இறந்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அமைதியாகவே இருக்கிறீர்கள். நாட்டிற்கு உங்கள் மௌனம் தேவையில்லை. பதில்தான் தேவை. இந்தியாவின் மகள்களுக்கு பாதுகாப்பும் நீதியும் தேவை" என்று தெரிவித்துள்ளார். 

    • கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து கடந்த 12-ந்தேதி கல்லூரிக்குள் மாணவியுடன் சேர்ந்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
    • திடீரென முதல்வர் அலுவலகத்தின் அருகே தன் மீது பெட்ரோல் ஊற்றி, மாணவி தீக்குளித்தார்.

    ஒடிசா மாநிலத்தின் பாலசோர் நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவிக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். பேராசிரியரின் தகாத நடவடிக்கை குறித்து கல்லூரி புகார் குழுவிடம் ஜூலை 1 ஆம் தேதி மாணவி புகார் அளித்தார். அந்த புகாரில் பேராசிரியர் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லையளித்ததாகவும், மிரட்டியதாகவும் மாணவி தெரிவித்திருந்தார். இருப்பினும், தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை ஆசிரியர் சமீர்குமார் சாஹு மறுத்தார்.

    அதனை தொடர்ந்து ஒரு வாரத்துக்குள் இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் உறுதியளித்தாலும், நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து கடந்த 12-ந்தேதி கல்லூரிக்குள் மாணவியுடன் சேர்ந்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

    இதனைத் தொடர்ந்து, திடீரென முதல்வர் அலுவலகத்தின் அருகே தன் மீது பெட்ரோல் ஊற்றி, மாணவி தீக்குளித்தார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த மாணவியை மீட்டு புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாணவி 95 சதவீத தீக்காயங்களுடன் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்தனர்.

    இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக ஒடிசா காவல்துறை தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

    இந்த நிலையில், தீக்குளித்த 22 வயது கல்லூரி மாணவி, 3 நாட்களாக உயிருக்கு போராடிய நிலையில், நேற்று இரவு உயிரிழந்தார்.

    இதற்கிடையே, புகாரை வாபஸ் பெறும் படி, கல்லூரியின் முதல்வரும், புகார்கள் குழு உறுப்பினர்களும் அழுத்தம் கொடுத்ததாக மாணவியின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். மேலும் புகாரை வாபஸ் பெறவில்லை என்றால் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் என்றும் கைது செய்யப்படுவீர்கள் என்றும் மிரட்டல் விடுத்ததாகவும் கூறினார்.

    இதனை தொடர்ந்து, கல்லூரியின் துறைத் தலைவர் மற்றும் முதல்வர் திலீப் கோஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

    இதற்கிடையே, மாணவியின் மறைவுக்கு முதலமைச்சர் மோகன் சரண் மாஜி இரங்கல் தெரிவித்ததோடு, குற்றவாளிகள் அனைவரும் கடுமையான தண்டனையை எதிர்கொள்வார்கள் என்று அவரது குடும்பத்தினருக்கு உறுதியளித்துள்ளார்.

    • சினேகா உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    • அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திரிபுராவை சேர்ந்தவர் சினேகா தேப்நாத் (வயது 19). இவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் பயின்று வந்தார்.

    இதற்காக தெற்கு டெல்லியில் உள்ள பர்யவரன் வளாகத்தில் வசித்து வந்த இவர் கடந்த 7-ந்தேதி திடீரென மாயமானார். அவர் அன்றைய தினம் காலையில் தனது குடும்பத்தினருடன் செல்போனில் பேசி உள்ளார். அப்போது அருகே உள்ள ரெயில் நிலையத்துக்கு செல்வதாக கூறி உள்ளார்.

    அதன்பிறகு வெகுநேர மாகியும் அவர் அறைக்கு திரும்பாமல் மாயமானதால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது.

    இதுதொடர்பாக அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் சினேகாவை கடைசியாக சிக்னேச்சர் பாலம் அருகே இறக்கி விட்டதாக ஒரு கார் டிரைவர் கூறினார். அதேபோல் அந்த பாலத்தின் அருகே ஒரு பெண் நின்று கொண்டிருந்ததாகவும், பின்னர் அந்த இடத்தில் இருந்து காணாமல் போனதாகவும் சிலர் கூறி இருந்தனர்.

    இதையடுத்து நிகம்போத் காட் பகுதி முதல் நொய்டா வரையிலும் தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் உள்ளூர் போலீசார் உதவியுடன் தேடுதல் வேட்டை நடந்தது.

    இந்த நிலையில் கீதா காலனி மேம்பாலம் அருகே யமுனை ஆற்றில் ஒரு பெண் சடலமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அது 6 நாட்களுக்கு முன்பு மாயமான சினேகாவாக இருக்கலாம் என கருதிய போலீசார் அவரது குடும்பத்தினரை சம்பவ இடத்துக்கு வரவழைத்தனர். அவர்கள் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டது சினேகா என்பதை உறுதிபடுத்தினர். இதைத்தொடர்ந்து சினேகா உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில், சினேகா தேப்நாத் தற்கொலை செய்து கொள்ள போவதாக ஏற்கனவே கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில், நான் ஒரு தோல்வி அடைந்தவளாகவும், சுமையாகவும் உணர்கிறேன் என கூறி இருந்தார்.

    அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிளாஸ்டிக் இல்லாத, சுற்றுச்சூழலுக்கு ஆபத்து இல்லாத புதிய வகை பேனாவை கண்டுபிடிக்க அமலா தீர்மானித்தார்.
    • புதிய கண்டுபிடிப்புக்கு அரசு ரூ.2 லட்சம் பரிசு வழங்கியது.

    கேரள மாநிலம், தொடுபுழா அருகே உள்ள மூலமட்டம் பகுதியை சேர்ந்தவர் அமலா (வயது 25). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. இறுதி ஆண்டு படித்து வருகிறார்.

    தற்போது பயன்பாட்டில் உள்ள பேனாக்கள் அனைத்தும் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டுள்ள நிலையில், பிளாஸ்டிக் இல்லாத, சுற்றுச்சூழலுக்கு ஆபத்து இல்லாத புதிய வகை பேனாவை கண்டுபிடிக்க அமலா தீர்மானித்தார். தொடர்ந்து இது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    அதன் பயனாக பிளாஸ்டிக் இல்லாத புதிய பேனாவை அவர் கண்டுபிடித்தார். இந்த பேனாவுக்கு அரசின் தகுதி சான்றிதழ் நேற்று கிடைத்தது. மேலும் இந்த புதிய கண்டுபிடிப்புக்கு அரசு ரூ.2 லட்சம் பரிசு வழங்கியது. ரூ.15, ரூ.20 ஆகிய விலைகளில் 2 வகையான பேனாக்களை அமலா உருவாக்கியுள்ளார். விரைவில் இந்த பேனாக்கள் விற்பனைக்கு வர உள்ளது.

    • போலீஸ் விசாரணையில் ஒரே வீட்டில் உயிரிழந்த இருவரும் கல்லூரி மாணவன்-மாணவி என்பது தெரிய வந்தது.
    • காதலி அபிநயாவை ஆகாஷ் சரமாரியாக முகத்தில் தாக்கியதாக கூறப்படுகிறது.

    அம்பத்தூர்:

    சென்னை ஐ.சி.எப். ராஜீவ்காந்தி நகரில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு 19 வயதே ஆன இளம் ஜோடி வாடகைக்கு குடி வந்துள்ளனர்.

    இருவரும் தங்களுக்கு திருமணமாகி விட்டதாக கூறி ரூ.4 ஆயிரம் வாடகை கொடுத்து சிறிய வாடகை வீட்டில் தங்கியுள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு 10.30 மணி அளவில் வாலிபர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஜன்னல் வழியாக பார்த்து உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக ஐ.சி.எப். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    வாலிபர் தூக்கில் தொங்கியபடி காணப்பட்ட நிலையில் அவருடன் தங்கியிருந்த இளம்பெண் பலத்த காயத்துடன் பிணமாக கிடந்தார். இருவரின் உடலையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த போலீசார் அடுத்த கட்ட விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    போலீஸ் விசாரணையில் ஒரே வீட்டில் உயிரிழந்த இருவரும் கல்லூரி மாணவன்-மாணவி என்பது தெரிய வந்தது. அவர்களது பெயர் ஆகாஷ்-அபிநயா என்பதும் இருவரும் விழுப்புரத்தில் உள்ள அறிஞர் அண்ணா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளனர் என்பதும் தெரிந்தது.

    அபிநயா, பி.ஏ. ஆங்கில பொருளாதாரமும், ஆகாஷ் பி.எஸ்.சி.யும் படித்து வந்த நிலையில் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர்.

    இந்த நிலையில்தான் இருவரும் புராஜக்ட் வேலைக்காக சென்னை செல்வதாக கூறி விட்டு வந்ததும், இங்கு அவர்கள் கணவன்-மனைவி போல உல்லாசமாக குடும்பம் நடத்தி வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.

    ஐ.சி.எப். வீட்டில் கடந்த 10 நாட்களாகவே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று இரவும் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

    அப்போது காதலி அபிநயாவை ஆகாஷ் சரமாரியாக முகத்தில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் நிலைகுலைந்த அபிநயா சுருண்டு விழுந்து பலியாகி உள்ளார். இதனால் பயந்து போன ஆகாஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்த நிலையில் எதற்காக இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது என்று தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் இருவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இருவரின் மரணம் பற்றியும் பெற்றோர் மற்றும் உறவினர்களுகூகு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை கேட்டு அவர்கள் அதிர்ச்சியில் மூழ்கினார்கள். ஆசை ஆசையாய் வளர்த்த தங்களது பிள்ளைகள் இப்படி செய்து விட்டார்களே? என 2 குடும்பத்தை சேர்ந்தவர்களும் வேதனையில் கண்ணீர் வடித்தபடி உள்ளனர்.

    அறியாத பருவத்தில் ஏற்படும் காதலுக்கு ஆயுசு குறைவு என்பார்கள். அந்த வரிசையில் ஆகாஷ்-அபிநயாவின் காதலும் சேர்ந்துள்ளது.

    இளம் காதல் ஜோடி உயிரிழந்த சம்பவம் ஐ.சி.எம். பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சர்ச்சைக்குரிய பதிவிற்காக இன்ஜினியரிங் கல்லூரி அந்த மாணவியை கல்லூரியில் இருந்து நீக்கியது.
    • ஒருவர் தன் கருத்தை வெளிப்படுத்தியதால் அவருடைய வாழ்க்கையை நீங்கள் இப்படிதான் அழிப்பீர்களா?

    ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் இந்தியா - பாகிஸ்தான் போர் குறித்தும் சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டதற்காக 19 வயது பொறியியல் மாணவியை மகாராஷ்டிரா போலீசார் கைது செய்தனர்.

    இதனிடையே சர்ச்சைக்குரிய பதிவிற்காக சிங்காட் அகாடமி ஆஃப் இன்ஜினியரிங் கல்லூரி அந்த மாணவியை கல்லூரியில் இருந்து நீக்கியது.

    இதனையடுத்து, கைது செய்யப்பட்டதற்கும் கல்லூரியில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்தும் அந்த மாணவி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கௌரி கோட்சே தலைமையிலான அமர்வு, உடனடியாக மாணவியை விடுதலை செய்ய உத்தரவிட்டது.

    மேலும், "ஒருவர் தன் கருத்தை வெளிப்படுத்தியதால் அவருடைய வாழ்க்கையை நீங்கள் இப்படிதான் அழிப்பீர்களா? உங்களால் ஒரு மாணவியின் வாழ்க்கை பாழாகிவிட்டது. மாணவியின் வாழ்க்கையில் விளையாட அரசும், கல்லூரி நிர்வாகமும் யார்? என அடுக்கடுக்காக கேள்விகள் கேட்ட நீதிபதிகள் மகாராஷ்டிர அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    • என்னிடம் வாக்குமூலம் வாங்கிய போலீசார் புகார் மனுவிற்கு சம்பந்தமில்லாத கேள்விகளை முன்வைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கினர்.
    • இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது கல்லூரி மாணவி. இவர் அரக்கோணம் அனைத்து மகளிர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.

    அதில் அரக்கோணம் அடுத்த காவனூர் பகுதியைச் சேர்ந்த தி.மு.க. ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தெய்வசெயல் என்பவர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார். பின்னர் தன்னை முக்கிய பிரமுகர்களுக்கு இறையாக்க முயற்சி மேற்கொண்டார். அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததால் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டேன் என புகார் மனுவில் கூறி இருந்தார்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் கல்லூரி மாணவி திடீரென உருக்கமாக பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில் என்னிடம் வாக்குமூலம் வாங்கிய போலீசார் புகார் மனுவிற்கு சம்பந்தமில்லாத கேள்விகளை முன்வைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கினர். இதனால் எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை போய் விட்டது.

    மேலும் சமூக வலைத்தளங்களில் என்னுடைய முகத்தை பதிவிட்டுள்ளதை காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் தெரிவித்தும் பயன் இல்லாமல் போனது.

    பாதிக்கப்பட்ட நான் இதுபோன்ற நபர்களை அடையாளம் காட்டி சமூகத்தில் பெண்களுக்கு தைரியத்தை வரவழைக்கவே புகார் கொடுத்தேன். ஆனால் தற்போது என்னை போலீசார் கோழை ஆக்கிவிட்டனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த நிலையில் கல்லூரி மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திமுக `சார்’களுக்கு இரையாக்க முயற்சித்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
    • திருமணம் செய்துகொண்டு, பல முக்கிய திமுக நிர்வாகிகளிடம் கல்லூரி மாணவியை தனது மனைவி என்று அறிமுகம்.

    அரக்கோணம் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அதிமுக போராட்டம் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அரக்கோணம் பகுதியில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த அரக்கோணம் திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்காத ஸ்டாலின் மாடல் அரசின் காவல் துறையைக் கண்டித்தும், தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை

    வேடிக்கை பார்த்து வரும் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும், ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

    21.5.2025 – புதன்கிழமை காலை 9.30 மணி ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் திமுக இளைஞர் அணி நிர்வாகி தெய்வச்செயல் என்பவர் கல்லூரி மாணவியை ஏமாற்றி பிற திமுக `சார்'களுக்கு இரையாக்க முயற்சித்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

    அரக்கோணத்தில் உள்ள அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவியை, ஏற்கெனவே வேறு பெண்ணுடன் திருமணமாகி வாழ்ந்து வரும் அரக்கோணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர் சு. தெய்வச்செயல், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அம்மாணவியை பின்தொடர்ந்தும், கைபேசி வாயிலாகவும் காதலிப்பதாகத் தொடர்ந்து வற்புறுத்தியும், திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக தொடர்ந்து டார்ச்சர் செய்தும் மிரட்டிய நிலையில் அம்மாணவி, `எனக்கு ஏற்கெனவே திருமணமாகி கருத்து வேறுபாட்டால் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது' என்று தெரிவித்த நிலையிலும், தொடர்ந்து திமுக நிர்வாகி தெய்வச்செயல் வலுக்கட்டாயமாக அம்மாணவியை கடத்திச் சென்று தனது உறவினர்களுடன் சோளிங்கர் அருகில் உள்ள கோயிலில் திருமணம் செய்துகொண்டு,

    பல முக்கிய திமுக நிர்வாகிகளிடம் கல்லூரி மாணவியை தனது மனைவி என்று அறிமுகம் செய்துவைத்துள்ளார்.

    இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் மேலும் ஒரு பெண், கல்லூரி மாணவியிடம் ஏற்கெனவே ஐந்து வருடத்திற்கு முன்பு திமுக நிர்வாகி தெய்வச்செயல் தன்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டு தவறாகப் பயன்படுத்துவதாகவும், மேலும், இந்த திமுக நிர்வாகி இதுபோல் பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்துள்ள விபரத்தையும் தெரிவித்துள்ளார்.

    எனவே, கல்லூரி மாணவி, திமுக நிர்வாகி தெய்வச்செயல், ஏற்கெனவே பலருடன் திருமணம் செய்துகொண்ட நிலையில், தன்னையும் மிரட்டி திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், தவறான வழியில் ஈடுபடுத்த துன்புறுத்துவதாகவும், உரிய ஆதாரங்களுடன் காவல் துறையில் புகார் அளித்தும், காவல்துறை குஐசு பதிவு செய்ய மறுத்ததாகவும், கடும் போராட்டத்திற்குப் பிறகு காவல்துறை, தான் கூறிய முழு விபரங்களையும் குஐசு-ல் குறிப்பிடாமல் பதிவு செய்ததால், அறிக்கையை வாங்க மறுத்துப் போராட்டம் நடத்தி உள்ளார். இதைத் தொடர்ந்து, கல்லூரி மாணவியின் பேட்டியை அனைத்து ஊடகங்களும், நாளிதழ்களும் விரிவாக வெளியிட்டுள்ளன.

    திமுக இளைஞர் அணி நிர்வாகி தெய்வச்செயல் கல்லூரி மாணவியை ஏமாற்றி பிற `சார்'களுக்கு இரையாக்க முயற்சித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    இதற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    கல்லூரி மாணவியின் புகாருக்கு உரிய நேரத்தில் முழு விபரங்களையும் குஐசு-ல் பதிவு செய்யாமல் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையைக் கண்டித்தும்;, தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களைத் தடுக்காத விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டத்தின் சார்பில், 21.5.2025 – புதன் கிழமை காலை 9.30 மணியளவில், அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக மகளிர் அணிச் செயலாளரும்,

    கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான திருமதி பா. வளர்மதி அவர்கள் தலைமையிலும்; கழக அமைப்புச் செயலாளர் திரு. திருத்தணி கோ. அரி, நுஒ. ஆ.ஞ., ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி

    துணை கொறடாவுமான திரு. சு. ரவி, ஆ.டு.ஹ., ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகளும், நகர, பேரூராட்சி மன்றங்களின் இந்நாள், முன்னாள் வார்டு உறுப்பினர்களும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    நிர்வாகத் திறனற்ற விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×