என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "college student"
- பெற்றோர் எதிர்ப்பால் காதல் ஜோடி வீட்டைவிட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
- பின்னர் பாதுகாப்பு கேட்டு வடமதுரை மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே தோப்புப்பட்டி பகுதியைச் சேர்ந்த அருணா (வயது 23). இவர் அதே பகுதியில் உள்ள கல்லூரியில் பி.காம். படித்து வருகிறார். பாளையம் செட்டியூர் பகுதியைச் சேர்ந்த எலெக்ட்ரிசியன் சக்திவேல் (27). உறவினரான 2 பேரும் 2 ஆண்டு காலமாக காதலித்து வந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சக்திவேல் குடும்பத்தினர் பெண் கேட்டு வந்தனர். ஆனால் பெண் வீட்டார் மறுத்ததால் அருணாவின் சம்மதத்துடன் வீட்டை விட்டு வெளியேறிய சக்திவேல் கூடலூரில் ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் பாதுகாப்பு கேட்டு வடமதுரை மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இரு தரப்பு பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் மேஜர் என்பதால் விருப்பப்படி வாழ அறிவுரை கூறிய போலீசார் அனுப்பி வைத்தனர்.
- சிவகாசி அருகே நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் ஆலமரத்துப்பட்டி ரோடு லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவர் மர அரவை மில்லில் வேலை பார்த்து வருகி றார்.
இவரது மனைவி அச்சகத்தில் வேலை பார்க்கிறார். இவர்களது மகன் ஜெயராஜன் (வயது 19). விருதுநகரில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் தனது நண்பர்கள் மோகன்ராஜ், மாரீஸ் கார்த்திக் ஆகியோ ருடன் அழகாபுரியில் உள்ள ஒடையில் குளிக்க சென்றனர். பின்னர் மாலை யில் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர்.
மோட்டார் சைக்கிளை ஜெயராஜன் ஓட்டி வந்தார். அவரது நண்பர்கள் பின்னால் அமர்ந்திருந்தனர்.
சுக்கிரவார்பட்டி பேப்பர் மில் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி 3 பேரும் கீழே விழுந்தனர். இதில் ஜெயராஜன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி கிடந்தார்.
மோகன்ராஜ், மாரீஸ் கார்த்திக் லேசான காயங்களுடன் தப்பினர். அங்கிருந்தவர்கள் அவர் களை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது ஜெயராஜன் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து ஜெய்சங்கர் திருத்தங்கல் போலீஸ் நிலை யத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
- திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பயோ-கெமிஸ்ட்ரி முதலாம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மெட்டாலா ஆனந்தாயி அம்மன் கோவில் காடு பகுதியைச் சேர்ந்தவர் செங்கோட்டு வேல் (44) விவசாயி. இவரது தோட்டத்தில் உள்ள விவசாய கிணற்றில் இளம் பெண் உடல் ஒன்று தண்ணீரில் மிதந்தது.
இது பற்றி தகவல் கிடைத்ததும் ராசிபுரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் இறங்கி இளம் பெண்ணின் உடலை மீட்டனர். பிணமாக மீட்கப்பட்ட 20 வயது மதிக்கத்தக்க இந்த இளம் பெண் யார்? எந்த ஊர்? எப்படி இறந்தார்? போன்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.
இது பற்றி ஆயில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது பிணமாக கிடந்த பெண் சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவரது மகள் ஆசிகா (18) என்பது தெரியவந்தது. மேலும் இவர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பயோ-கெமிஸ்ட்ரி முதலாம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது.
ஆனந்தாயி அம்மன் மாணவியின் குல தெய்வம் ஆகும். சம்பவத்தன்று தனியாக மாணவி கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டுள்ளார். இந்த காட்சி கோவில் வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது.
இந்த நிலையில் தான் மாணவி கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். எனவே மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது எப்படி இறந்தார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மின்சாரம் தாக்கி விவசாயி இறந்தார்.
- சாலையோர மரத்தில் மோதி மாணவர் பலியானார்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மேலவாசல் அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் குமார் (50) விவசாயி.
இவர் நேற்று தனது உறவினருடைய வயலில் வேலை பார்த்து ள்ளார்.
பின்னர் அருகில் உள்ள விஜயராஜன் என்பவருக்கு சொந்தமான வயலில் இருந்த பம்புசெட்டில் குளித்து விட்டு அங்கிருந்த கம்பி கொடிக் கம்பத்தில் துண்டை காய வைத்து விட்டு வீடு திரும்பினார்.
இந்நிலையில் காலையில் குளிக்க அங்கு சென்றுள்ளார்.
பின்னர் பம்புசெட்டு அருகே உள்ள கொடிகம்பத்தில் கிடந்த துண்டை எடுத்தார். அப்போது திடீரென மின்சாரம் அவரை தாக்கியது.
இதில் அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்நிலையில் வயலுக்கு சென்ற குமார் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாதால் அவரது உறவினர்கள் தேடி வந்தனர்.
அப்போது தான் அவர் மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பது தெரிய வந்தது.
பின்னர் இது குறித்து மன்னார்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் இன்ஸ் பெக்டர் ராஜேஷ் கன்னா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டைகீழத் தெருகிராமத்தைச் சேர்ந்தவர் பாலு.
இவரது மகன் ரிஷால் ( வயது 20).
இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வருவது வழக்கம்.
அதே போல் இன்றும் கல்லூரிக்கு ரிஷால் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது மன்னார்குடி குருவை மொழி கிராமத்தின் அருகே சென்ற போது எதிர்பாரத விதமாக சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த ரிஷால் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் மன்னார்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரிஷால் உடலை கைப்பற்றி பிரேதபரி சோதனைக்காக அரசு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- தகவல் கிடைத்ததும் செட்டிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
- 5 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைகுளத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 22). இவர் சூலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 4-வது ஆண்டு படித்து வருகிறார். மேலும் அவர் பகுதி நேரமாக அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்தும் வருகிறார். பாரதிபுரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து அறை எடுத்து தங்கி இருந்து வருகிறார்.
நேற்று மாலை மகேந்திரன் மற்றும் அவரது நண்பர் கிஷோர் ஆகியோர் வெளியே சென்றனர். பின்னர் மோட்டார் சைக்கிளில் அறைக்கு சென்று கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிளில் ஒக்கிலிபாளையம் அருகே சென்ற போது 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் மகேந்திரன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதுவது போல சென்றனர். இதனை 2 பேரும் தட்டிக் கேட்டனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 3 பேரும் சேர்ந்து மகேந்திரன் மற்றும் கிஷோரை மிரட்டி விட்டு அங்கு இருந்து சென்றனர்.
பின்னர் 2 பேரும் பாம்பம்பட்டியில் உள்ள அறைக்கு சென்று கொண்டு இருந்தனர். ஒத்தகால்மண்டபம் பாலம் அருகே சென்ற போது மழை வந்தது. இதனையடுத்து 2 பேரும் பாலத்துக்கு அடியில் மழைக்காக ஒதுங்கி இருந்தனர். அப்போது 10 மோட்டார் சைக்கிள்களில் பட்டா கத்தி மற்றும் பீர் பாட்டிலுடன் 15 பேர் கொண்ட கும்பல் வந்தனர். அவர்கள் மகேந்திரனை பார்த்ததும் இவன் தான் மாலையில் நம்மிடம் தகராறு செய்தவன் என்று கூறி அருகே சென்றனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 15 பேரும் சேர்ந்து மகேந்திரனை பீர் பாட்டிலால் தலையில் தாக்கி பட்டா கத்தியால் வெட்டினர். அதில் மகேந்திரனின் வலது கையில் 2 விரல்களும், இடது கையில் ஒரு விரலும் துண்டானது. பின்னர் கும்பல் அங்கு இருந்து தப்பிச் சென்றனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மகேந்திரனை அந்த வழியாக சென்றவர்கள் மீது அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த தகவல் கிடைத்ததும் செட்டிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்டது மலுமச்சம்பட்டியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் என்பது தெரிய வந்தது.
போலீசார் தூத்துக்குடியை சேர்ந்த பி.டெக், ஐ.டி. 3-வது ஆண்டு படிக்கும் மாணவர் தினேஷ் உள்பட 15 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கல்லூரி மாணவருக்கு கால் மற்றும் இடுப்பு ஆகியவற்றில் பலத்த காயம் ஏற்பட்டது.
- கல்லூரி மாணவர் மீது சரக்கு வேன் மோதும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பல்லடம்:
திருப்பூர் எம்.ஜி.புதூரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் மகன் யுவன்ஸ்ரீ (வயது 20), இவர் கோவை தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று கல்லூரி முடிந்து நண்பருடன் பல்லடம் வந்த அவர் பஸ் நிலையம் அருகே சாலையை கடக்க முயன்ற போது, கோவையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற சரக்கு வேன் அதிவேகமாக வந்து யுவன் ஸ்ரீ மீது மோதியது. அதன்பின்னரும் நிற்காமல் ரோட்டோரமாக நின்று கொண்டிருந்த கார் மீது மோதியது. இதில் கல்லூரி மாணவருக்கு கால் மற்றும் இடுப்பு ஆகியவற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்- பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சரக்கு வேன் ஓட்டுநர் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே கல்லூரி மாணவர் மீது சரக்கு வேன் மோதும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- கல்லூரி மாணவி மாயமானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் பட்டுத்தெருவை சேர்ந்தவர் நாகஜோதி. இவரது 17 வயது மகள் அங்குள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் உறவினரான கார்த்திக் என்பவரை காதலித்து வந்துள்ளார். அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக பெற்றோரிடம் கூறி உள்ளார். படிப்பு முடிந்தவுடன் திருமணம் செய்து வைப்பதாக பெற்றோர் கூறி உள்ளனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாணவி கல்லூரிக்கு சென்றார். ஆனால் வரவில்லை என கல்லூரியில் இருந்து பெற்றோருக்கு தகவல் வந்தது. இதையடுத்து பெற்றோரும், காதலர் கார்த்திக்கும் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதை தொடர்ந்து பஜார் போலீஸ் நிலையத்தில் நாகஜோதி புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
- ஜனனி (வயது 21). இவர் சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி பி.எஸ்.சி மைக்ரோபயாலஜி படித்து வந்தார்.
- கடந்த 16-ந் தேதி விடுமுறைக்கு ஊருக்கு சென்று விட்டு நேற்று மாலையில் மாணவி கல்லூரி விடுதிக்கு வந்தார்.
சேலம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கெலமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஜனனி (வயது 21). இவர் சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி பி.எஸ்.சி மைக்ரோபயாலஜி படித்து வந்தார். கடந்த 16-ந் தேதி விடுமுறைக்கு ஊருக்கு சென்று விட்டு நேற்று மாலையில் மாணவி கல்லூரி விடுதிக்கு வந்தார். இன்று காலை வெகுநேரம் ஆகியும் அறை கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த சக மாணவிகள் வார்டனிடம் கூறினர். அவர்கள் அறை கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது சேலையால் மின்விசிறியில் தூக்குப் போட்டு ஜனனி தற்கொலை செய்து செய்தது தெரியவந்தது. இது பற்றி தகவல் அறிந்த அம்மாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காரின் அடியில் இருந்து தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
- உடனடியாக கவின் காரை ரோட்டோரமாக நிறுத்தி விட்டு கீழே இறங்கி விட்டார்.
சென்னிமலை:
சென்னிமலை டவுன் மணிமலை, காளிக்கோ ப்டெக்ஸ் நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் கவின் (23). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் தனது நண்பரின் காருக்கு கியாஸ் பிடிப்பதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்னி மலையில் உள்ள கியாஸ் பங்குக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அரச்சலூர் ரோடு அம்மாபாளையத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபம் அருகில் சென்று கொண்டிருந்த போது காரின் அடியில் இருந்து தீ பிடித்து எரிந்து கொண்டி ருந்தது.
இதனை அந்த வழியே ரோட்டில் சென்று கொண்டி ருந்தவர்கள் பார்த்து காரில் தீ எரிவதை கவினிடம் சத்தம் போட்டு தெரிவித்தனர்.
பின்னர் உடனடியாக கவின் காரை ரோட்டோ ரமாக நிறுத்தி விட்டு கீழே இறங்கி விட்டார்.
அப்போது தீ மள, மள பரவியது. இதனால் உடனடியாக சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி தீயை அணைத்தனர். ஆனாலும் இந்த தீ விபத்தில் கார் முற்றிலும் எரிந்து சாம்பல் ஆனது.
காரில் தீ எரிவதை ரோட்டில் சென்றவர்கள் பார்த்து சொன்னதால் கல்லூரி மாணவர் கவின் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து சென்னிமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- குடும்ப தகராறில் வேதனையடைந்த மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
தேனி விஸ்வதாஸ்காலனியை சேர்ந்த ஜெயக்குமார் மகள் காஞ்சனா(17). இவர் பெரியகுளத்தில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம்ஆண்டு படித்து வந்தார். இவரை அதேபகுதியை சேர்ந்த முத்துமாணிக்கம் என்பவர் காதலித்து வந்ததாக தெரிகிறது.
இதனால் இருகுடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனையில் இருந்த மாணவி காஞ்சனா சம்பவத்தன்று தனது வீட்டிலேயே தூக்குபோட்டு தற்ெகாலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை ஜெயக்குமார் கொடுத்த புகாரின்பேரில் தேனி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.