என் மலர்
நீங்கள் தேடியது "சூரிய ஒளிக்கதிர்"
- இந்த ஓவியம் வரைவது மிகவும் கடினமான ஒன்று.
- இதுவரை நான் வரைந்த ஓவியங்களிலேயே ராஜராஜ சோழன் ஓவியம் எனக்கு மிகவும் சவாலாக இருந்தது.
தஞ்சாவூா்:
தஞ்சாவூர் கரந்தையை சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மகன் தருண்குமார் (வயது 21). இவர் தஞ்சையில் உள்ள கல்லூரியில் கட்டிடக்கலையியலில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். சிறுவயதில் இருந்தே பெயிண்ட் ஓவியம், மினியேச்சர் ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்ட மாணவர் தருண்குமார் தற்போது டிரெண்டிங்கில் இருக்கும் சூரிய ஒளி ஓவியத்தை வரைந்து அசத்தி வருகிறார்.
அரசியல் தலைவர்களின் ஓவியங்கள், ராஜராஜ சோழன் போன்ற வரலாற்று மன்னர்கள் ஓவியம், பிரபலங்களின் ஓவியங்கள் என பல்வேறு விதமான ஓவியங்களை சூரிய ஒளியில் லென்ஸ் பயன்படுத்தி வரைந்து வருகிறார். இந்த ஓவியங்களை வெயில், மழையில் படாமல் பாதுகாத்து வந்தால் சுமார் 400 ஆண்டுகள் வரை அப்படியே இருக்கும் என்றும் தஞ்சையில் பலருக்கும் இந்த ஓவிய கலையை பயிற்சி அளித்தும் வருவதாகவும் கூறினார்.
இதுகுறித்து மாணவர் தருண்குமார் மேலும் கூறும்போது:-
சூரிய ஒளியில் இருந்து கிடைக்கக்கூடிய ஆற்றலை பயன்படுத்தி லென்ஸ் மூலம் ஒரு மிட் பாயிண்டை குறித்து இந்த ஓவியம் வரைந்து வருகின்றேன். இந்த ஓவியம் வரைவது மிகவும் கடினமான ஒன்று. வரலாற்று சம்பந்தமான ஓவியங்கள், பாரம்பரிய சின்னங்கள் போன்ற ஓவியங்களை அடுத்தடுத்து வரைய உள்ளேன். ஒரு ஓவியம் வரைவதற்கு ஓவியத்தை பொறுத்து 2-ல் இருந்து 3 நாட்கள் வரை ஆகும். இதுவரை நான் வரைந்த ஓவியங்களிலேயே ராஜராஜ சோழன் ஓவியம் எனக்கு மிகவும் சவாலாக இருந்தது.
என்னுடைய தொழில் ஆர்க்கிடெக்சர் ஆக இருந்தாலும் ஓவியத்தின் மேல் உள்ள எனது ஆர்வத்தினால் இதனை தற்போது தஞ்சையில் நான் மட்டுமே செய்து வருகிறேன். அதே நேரத்தில் விருப்பம் உள்ளவர்களுக்கு பயிற்சியும் அளித்து வருகிறேன். ஒரு சிலர் என்னை தொடர்பு கொண்டு அவர்களுக்கு ஏற்ற ஓவியங்களை ஆர்டர் கொடுக்கின்றனர். இந்த ஓவியம் வரைவதற்கு மிகவும் கவனம் தேவை. ஒரு நாள் முழுவதும் ஓவியம் வரைந்தால் இரவு தூக்கம் வராது. கண் எரிச்சல் ஏற்படும். பாதுகாப்பான கண்ணாடியை போட்டு வரைந்தாலும் அந்த பிரச்சனை சில சமயங்களில் ஏற்படும். இருந்தாலும் சவால் மிக்க இந்த ஓவியங்கள் வரைவதில் எனக்கு ஆர்வம் அதிகம் உள்ளது என்றார்.
- பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிர் விழும் அபூர்வ நிகழ்வு.
- ராம நவமியை முன்னிட்டு பிரதமர் மோடி பொது மக்களுக்கு தனது வாழ்த்து.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த ஜனவரி மாதம் 22-ந்தேதி பாலராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ராமர் கோவிலில் தற்போது ராமநவமி விழா நடந்து வருகிறது. விழாவின் 9-வது நாளான இன்று (17-ந்தேதி) ராம் லல்லாவின் சூரிய அபிஷேக மகோத்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
இதற்கிடையே, விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று பகல் 12.16 மணிக்கு கோவில் கருவறையில் கம்பீரமாக வீற்றிருக்கும் 51 இஞ்ச் உயரம் கொண்ட பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிர் விழும் அபூர்வ நிகழ்வு நடைபெற்றது.
ராம நவமியை முன்னிட்டு பிரதமர் மோடி பொது மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

இந்நிலையில், அசாமில் நல்பாரி பேரணியில் கலந்துக் கொண்ட பிரதமர் மோடி தனது டேப் (TAB) மூலம் ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிர் விழும் அபூர்வ நிகழ்வை கண்டுகளித்தார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், " எனது நல்பாரி பேரணிக்குப் பிறகு, ராம் லல்லாவில் சூர்ய திலகத்தைப் பார்த்தேன். கோடிக்கணக்கான இந்தியர்களைப் போலவே எனக்கும் இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம்.
அயோத்தியில் பிரம்மாண்டமான ராம நவமி வரலாற்று சிறப்புமிக்கது. இந்த சூர்ய திலகம் நம் வாழ்வில் ஆற்றலைக் கொண்டு வரட்டும்.
மேலும், இது நமது தேசத்தை பெருமையின் புதிய உயரங்களை அடைய ஊக்குவிக்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.






