search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "swami darshan"

    • பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிர் விழும் அபூர்வ நிகழ்வு.
    • ராம நவமியை முன்னிட்டு பிரதமர் மோடி பொது மக்களுக்கு தனது வாழ்த்து.

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த ஜனவரி மாதம் 22-ந்தேதி பாலராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ராமர் கோவிலில் தற்போது ராமநவமி விழா நடந்து வருகிறது. விழாவின் 9-வது நாளான இன்று (17-ந்தேதி) ராம் லல்லாவின் சூரிய அபிஷேக மகோத்சவம் கோலாகலமாக நடைபெற்றது.

    இதற்கிடையே, விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று பகல் 12.16 மணிக்கு கோவில் கருவறையில் கம்பீரமாக வீற்றிருக்கும் 51 இஞ்ச் உயரம் கொண்ட பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிர் விழும் அபூர்வ நிகழ்வு நடைபெற்றது.

    ராம நவமியை முன்னிட்டு பிரதமர் மோடி பொது மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். 

    இந்நிலையில், அசாமில் நல்பாரி பேரணியில் கலந்துக் கொண்ட பிரதமர் மோடி தனது டேப் (TAB) மூலம் ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிர் விழும் அபூர்வ நிகழ்வை கண்டுகளித்தார்.

    இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், " எனது நல்பாரி பேரணிக்குப் பிறகு, ராம் லல்லாவில் சூர்ய திலகத்தைப் பார்த்தேன். கோடிக்கணக்கான இந்தியர்களைப் போலவே எனக்கும் இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம்.

    அயோத்தியில் பிரம்மாண்டமான ராம நவமி வரலாற்று சிறப்புமிக்கது. இந்த சூர்ய திலகம் நம் வாழ்வில் ஆற்றலைக் கொண்டு வரட்டும்.

    மேலும், இது நமது தேசத்தை பெருமையின் புதிய உயரங்களை அடைய ஊக்குவிக்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    • கடந்த மார்ச் 26ந்தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
    • அறங்காவலர் குழு தலைவர் கீர்த்தி சுப்பிரமணியம் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே காரணம்பேட்டையில் கூப்பிடு பிள்ளையார் திருக்கோவில் அமைந்து ள்ளது. இந்த நிலையில் சிறிய அளவில் இருந்த கோவில் காரணம்பேட்டை ஆன்மீகப் பெரியோர்களால் சீரமைக்கப்பட்டு, சிறப்பாக கட்டி முடிக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் கடந்த மார்ச் 26ந்தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது மண்டல பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கூப்பிடு பிள்ளையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மேளதாளங்களுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சுவாமி தரிசனம் செய்த அவருக்கு பரிவட்டம் கட்டப்பட்டு, கோவில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளை தலைவர் காரணம்பேட்டை சின்னச்சாமி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கீர்த்தி சுப்பிரமணியம் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • காலை கணபதி ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம் உள்ளிட்ட பல ஹோமங்கள் நடத்தப்பட்டு குதிரை, பசு கண் திறப்பு நிகழ்வு நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேலம் சாலை சரவணா தியேட்டர் எதிரில் உள்ள முனியப்பன், கருப்பண்ண சுவாமி கோவிலில் குதிரை, பசு கண் திறப்பு விழா நடைபெற்றது. காலை கணபதி ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம் உள்ளிட்ட பல ஹோமங்கள் நடத்தப்பட்டு குதிரை, பசு கண் திறப்பு நிகழ்வு நடைபெற்றது.

    யாகசாலை பூஜைகளை சுவாமிநாத சிவாச்சாரியார், சத்யோஜாத வேத சங்கர சிவாச்சாரியார் மற்றும் குழுவினர்கள் நடத்தினர். சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் மேலும் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சாமி தரிசனம் செய்தார். #SrirangamTemple #Edappadipalaniswami
    திருச்சி:

    கரூர், திருச்சி, புதுக்கோட்டையில் நடைபெறும் அ.தி. மு.க. நிர்வாகிகளின் இல்ல திருமண விழாக்களில் பங்கேற்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வந்தார்.

    கரூர் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு இரவு திருச்சி வந்த அவருக்கு மாவட்ட எல்லையான பெட்டவாய்த் தலையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இரவு பயணியர் விடுதியில் தங்கிய அவர் இன்று காலை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    முன்னதாக ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கோவில் இணை ஆணையர் ஜெயராமன், தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் ஆகியோர் தலைமையில் பூரண கும்ப மரியாதை செலுத்தி வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து ரெங்கா ரெங்கா கோபுரம் வழியாக முதல்வர் பழனிசாமி கோவிலுக்குள் வந்தார். அங்குள்ள பிரகாரத்தில் கோவில் யானை ஆண்டாள் அவரை ஆசீர்வாதம் செய்தது. யானைக்கு அவர் பழங்கள் வழங்கினார்.

    அதனை தொடர்ந்து ஆரியப்பட்டாள் வாசல் வழியாக முதல்வர் பழனிசாமி சென்று மூலவர் ரெங்கநாதரை தரிசனம் செய்தார். பின்னர் தாயார் சன்னதியில் உள்ள ரெங்கநாச்சியாரை தரிசனம் செய்துவிட்டு உபகோவிலான மேட்டழகிய சிங்கப்பெருமாள் கோவிலுக்கு வந்தார். அங்கு பயபக்தியுடன் அவர் சாமி கும்பிட்டார்.

    இதையடுத்து அங்கு தயார் நிலையில் இருந்த பேட்டரி காரில் ஏறி பயணம் செய்த எடப்பாடி பழனிசாமி சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு சென்றார். தொடர்ந்து ராமானுஜர் சன்னதிக்கு சென்றுவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். அப்போது கோவில் நிர்வாகம் சார்பில் ரெங்கநாதர் கோவில் புத்தகம் மற்றும் மூலவர் படம் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது.

    முதல்வர் வருகையையொட்டி உதவி கமி‌ஷனர் ராமச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சிவசுப்பிரமணியன், உமாசங்கர் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஸ்ரீரங்கம் தீயணைப்பு துறையினரும் தயார் நிலையில் இருந்தனர்.

    அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், சரோஜா, வளர்மதி, எஸ்.பி.வேலுமணி, எம்.பி.க்கள் ப.குமார், ரத்தினவேல், கலெக்டர் ராசா மணி, முன்னாள் அமைச்சர் பூனாட்சி, உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் முதல்வருடன் சென்றனர்.

    முன்னதாக கோவிலுக்கு வந்த முதல்வருக்கு கட்சி நிர்வாகிகள் அணிவிக்க வைத்திருந்த சால்வைகள் மற்றும் பரிசு பொருட்கள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பிரகாரத்தை அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி சுற்றி வந்தபோது எடுத்தபடம்.

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோவிலினுள் தரிசனம் செய்த நேரத்தில் பாதுகாப்பு கருதி பக்தர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

    முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரெங்கநாதரை தரிசனம் செய்து முடித்த பின்னர் அவர் கோவிலை சுற்றி வலம் வருவதற்காக இரண்டு பேட்டரி கார்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஆனால் அவர் ரெங்கநாதரை தரிசனம் செய்த பிறகு ரெங்கநாச்சியார் என்று அழைக்கப்படும் தாயார் சன்னதிக்கு மேள, தாளம் முழங்க நடந்தே வந்து சாமி தரிசனம் செய்தார். #SrirangamTemple #Edappadipalaniswami
    ×