என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lover Suicide"

    • போலீஸ் விசாரணையில் ஒரே வீட்டில் உயிரிழந்த இருவரும் கல்லூரி மாணவன்-மாணவி என்பது தெரிய வந்தது.
    • காதலி அபிநயாவை ஆகாஷ் சரமாரியாக முகத்தில் தாக்கியதாக கூறப்படுகிறது.

    அம்பத்தூர்:

    சென்னை ஐ.சி.எப். ராஜீவ்காந்தி நகரில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு 19 வயதே ஆன இளம் ஜோடி வாடகைக்கு குடி வந்துள்ளனர்.

    இருவரும் தங்களுக்கு திருமணமாகி விட்டதாக கூறி ரூ.4 ஆயிரம் வாடகை கொடுத்து சிறிய வாடகை வீட்டில் தங்கியுள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு 10.30 மணி அளவில் வாலிபர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஜன்னல் வழியாக பார்த்து உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக ஐ.சி.எப். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    வாலிபர் தூக்கில் தொங்கியபடி காணப்பட்ட நிலையில் அவருடன் தங்கியிருந்த இளம்பெண் பலத்த காயத்துடன் பிணமாக கிடந்தார். இருவரின் உடலையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த போலீசார் அடுத்த கட்ட விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    போலீஸ் விசாரணையில் ஒரே வீட்டில் உயிரிழந்த இருவரும் கல்லூரி மாணவன்-மாணவி என்பது தெரிய வந்தது. அவர்களது பெயர் ஆகாஷ்-அபிநயா என்பதும் இருவரும் விழுப்புரத்தில் உள்ள அறிஞர் அண்ணா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளனர் என்பதும் தெரிந்தது.

    அபிநயா, பி.ஏ. ஆங்கில பொருளாதாரமும், ஆகாஷ் பி.எஸ்.சி.யும் படித்து வந்த நிலையில் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர்.

    இந்த நிலையில்தான் இருவரும் புராஜக்ட் வேலைக்காக சென்னை செல்வதாக கூறி விட்டு வந்ததும், இங்கு அவர்கள் கணவன்-மனைவி போல உல்லாசமாக குடும்பம் நடத்தி வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.

    ஐ.சி.எப். வீட்டில் கடந்த 10 நாட்களாகவே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று இரவும் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

    அப்போது காதலி அபிநயாவை ஆகாஷ் சரமாரியாக முகத்தில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் நிலைகுலைந்த அபிநயா சுருண்டு விழுந்து பலியாகி உள்ளார். இதனால் பயந்து போன ஆகாஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்த நிலையில் எதற்காக இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது என்று தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் இருவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இருவரின் மரணம் பற்றியும் பெற்றோர் மற்றும் உறவினர்களுகூகு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை கேட்டு அவர்கள் அதிர்ச்சியில் மூழ்கினார்கள். ஆசை ஆசையாய் வளர்த்த தங்களது பிள்ளைகள் இப்படி செய்து விட்டார்களே? என 2 குடும்பத்தை சேர்ந்தவர்களும் வேதனையில் கண்ணீர் வடித்தபடி உள்ளனர்.

    அறியாத பருவத்தில் ஏற்படும் காதலுக்கு ஆயுசு குறைவு என்பார்கள். அந்த வரிசையில் ஆகாஷ்-அபிநயாவின் காதலும் சேர்ந்துள்ளது.

    இளம் காதல் ஜோடி உயிரிழந்த சம்பவம் ஐ.சி.எம். பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அர்ச்சனாவை விட்டு விட்டு சத்யராஜ் வேறு ஒரு பெண்ணுடன் பழகியுள்ளார்.
    • அர்ச்சனா வீடியோ காலில் சத்யராஜ் உடன் பேசிய படியே தற்கொலை செய்தார்.

    திருவாரூர்:

    மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அருகில் உள்ள மருதூரை சேர்ந்தவர் அர்ச்சனா (வயது 24). இவர் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்ப்பதற்காக அங்கு வீடு எடுத்து தங்கி வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 12 ஆம் தேதி காலை வழக்கம் போல் அர்ச்சனா வீட்டிலிருந்து புறப்பட்டு தோழியுடன் அலுவலகத்திற்கு சென்றார்.

    மதிய உணவு இடைவேளைக்கு செல்லவேண்டிய நேரத்திற்கு அரைமணி நேரம் முன்னதாகவே தனக்கு வயிறு வலிப்பதாக கூறிவிட்டு அர்ச்சனா மட்டும் வீட்டிற்கு சென்றார். பின்னர் அவரது தோழி வீட்டிற்கு சென்று பார்த்த போது அங்கு அர்ச்சனா மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே நன்னிலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அர்ச்சனாவின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்து கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் அவரது செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் அர்ச்சனா கடைசியான பேசிய வீடியோகாலை பார்த்தனர். அதில் அவர் நாகை மாவட்டம் பஞ்சநதிகுளம் வடகாட்டை சேர்ந்த சத்யராஜ் (வயது 26) என்பவருடன் பேசியது தெரிய வந்தது. இதையடுத்து சத்யராஜை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அர்ச்சனாவும் சத்யராசும் காதலித்து வந்துள்ளனர்.

    ஆனால் அர்ச்சனாவை விட்டு விட்டு சத்யராஜ் வேறு ஒரு பெண்ணுடன் பழகியுள்ளார். இதனால் அர்ச்சனா சத்யராஜ் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த மனவேதனையில் அர்ச்சனா தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். அர்ச்சனா வீடியோ காலில் சத்யராஜ் உடன் பேசிய படியே தற்கொலை செய்தார்.

    அந்த காட்சியை அவரது காதலன் பார்த்து ரசித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அர்ச்சனாவை தற்கொலைக்கு தூண்டியதாக சத்யராஜ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பல்லடம் அருகே காதலியை தற்கொலைக்கு தூண்டியதாக காதலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    பல்லடம்:

    வால்பாறை முடீஸ் பகுதியை சேர்ந்தவர் திருமலைகுமார். இவரது மனைவி வசந்தா. இவர்களுக்கு மஞ்சுளா(20) என்ற மகளும், 13 வயதில் ஒரு மகனும் உள்ளனர். திருமலைகுமார் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி உப்பிலிபாளையத்தில் வாடகை வீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    கணவன்-மனைவி, மகள் மஞ்சுளா ஆகியோர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்தனர். அவர்களது மகன் அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தான்.

    இந்நிலையில் மஞ்சுளா தன்னுடன் பின்னலாடை நிறுவனத்தில் வேலை பார்க்கும் கார்த்திகேயன்(20) என்ற வாலிபரை காதலித்தார். இதுபற்றி தெரியவந்ததும் திருமலைகுமார், மனைவி, மகள், மகன் ஆகியோரை சொந்த ஊரான வால்பாறைக்கு அனுப்பி வைத்துவிட்டார்.

    அவர் மட்டும் தனியாக தங்கி வேலைபார்த்து வந்தார். காதலனை பிரிந்த மஞ்சுளா சொந்த ஊரில் இருந்து கொண்டு செல்போன் மூலம் தனது காதலனுடன் தொடர்பில் இருந்தார்.

    இந்த நிலையில் வால்பாறையில் இருந்து கடந்த 5-ந்தேதி பல்லடம் உப்பிலிபாளையத்தில் வசிக்கும் தனது பெரியம்மா வீட்டிற்கு மஞ்சுளா வந்தார். அங்கிருந்து மறுநாள் அதே பகுதியில் உள்ள காதலன் கார்த்திகேயன் வீட்டிற்கு சென்றார்.

    இது பற்றி அறிந்த திருமலைக்குமார் செல்போன் மூலம் மஞ்சுளாவை அழைத்து பேசி கண்டித்தார். மேலும் வீட்டிற்கு திரும்பி வருமாறு கூறினார். அதனை ஏற்க மறுத்த மஞ்சுளா தொடர்ந்து கார்த்திகேயன் வீட்டிலேயே தங்கியுள்ளார்.

    கார்த்திகேயன் வீட்டில் தங்கியிருந்த மஞ்சுளா வீட்டின் விட்டத்தில் தனது துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார் என்று கார்த்திகேயன் தரப்பினர் பல்லடம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மஞ்சுளா உடலை கைப்பற்றி பல்லடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் மஞ்சுளா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கார்த்திகேயனை வற்புறுத்தியுள்ளார். மஞ்சுளாவை கார்த்திகேயன் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளாத காரணத்தினால் அவர்களை சமாதானம் செய்த பின்னர் சிறிது காலம் கழித்து திருமணம் செய்து கொள்கிறேன். அது வரை உனது தந்தை வீட்டிற்கோ அல்லது விடுதிக்கோ சென்று தங்கி கொள்ளுமாறு கார்த்திகேயன் கூறியுள்ளார். அதனை மஞ்சுளா ஏற்றுக்கொள்ளவில்லை.

    நம்பி வந்த காதலன் இப்படி கூறியதால் மனவேதனை அடைந்த மஞ்சுளா கார்த்திகேயன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    இதைதொடர்ந்து காதலி மஞ்சுளாவை தற்கொலைக்கு தூண்டியதாக கார்த்திகேயனை பல்லடம் போலீசார் கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். #tamilnews
    ×