என் மலர்
நீங்கள் தேடியது "love"
- பெற்றோர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் காதல் ஜோடி பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சென்று வந்தனர்.
- வைரமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ரிசர்வ்லைன் இந்தி ராநகர் பகுதியைச் சேர்ந்த வர் பாஸ்கரன் மகன் வைர முத்து (வயது 25). ராஜபா ளையத்தை தலைமையிட மாக கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 11-வது பட்டாலியனில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார்.
ஆண்டிராய்டு போனில் அதிக நேரத்தை செலவிட்ட வைரமுத்து முகநூல் கணக்கும் வைத்திருந்தார். அதில் ஏராளமான நண்பர்களையும் கொண்டிருந்தார். இதற்கிடையே ஈரோட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வைரமுத்துவுடன் நண்பராக தன்னை இணைத்துக்கொண்டார்.
நட்பை கடந்த உறவு அவர்களிடையே நீடித்தது. அதுவே காலப்போக்கில் காதலாக மாறியது. இருவரும் தங்களது காதலை பரஸ்பரம் தெரிவித்துக்கொண்டனர். எப்படியும் தங்களது காதலை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் காதல் ஜோடி பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சென்று வந்தனர்.
இதற்கிடையே வைரமுத்துவின் பெற்றோர், தங்களது மகன் திருமண வயத்தை எட்டிவிட்டதால் பெண் பார்க்கும் படலத்தை தொடங்கினர். இதுபற்றி மகனிடமும் தெரிவித்த அவர்கள் அழகான பெண்ணை தேடித்தேடி கடைசியில் ஒருவரை முடிவு செய்தனர். விரைவில் நிச்சயதார்த்தம் நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்தனர்.
அப்போதுதான் வைரமுத்து தனது தந்தையிடம், தான் ஈரோட்டை சேர்ந்த ஒருவரை காதலிப்பதாகவும், அவரையை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதைக்கேட்டு தலையில் இடிவிழுந்தது போல் உணர்ந்த வைரமுத்துவின் தந்தை பாஸ்கரன், அது ஒருபோதும் நடக்காது. உனக்காக நாங்கள் ஒரு பெண்ணை பார்த்துவிட்டோம். நிச்சயதார்த்தம் நடத்தப்பட உள்ளது, அவரைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று கண்டிப்புடன் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே இளம் பெண்ணின் வீட்டிலும் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுபற்றி அவர் காதலனிடம் கூறி புலம்பியுள்ளார். இதையடுத்து மனவிரக்தியில் இருந்த வைரமுத்து பணியிலும் நாட்டமின்றி காணப்பட்டார். தனது காதல் ஈடேறாது என்று எண்ணிய வைரமுத்து தற்கொலை முடிவுக்கு வந்தார்.
நேற்று இரவு வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய அவர் தனி அறையில் தூங்க சென்றார். நள்ளிரவில் திடீரென்று எழுந்த அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் மகன் எழுந்து வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அவரது அறைக்கு சென்று பார்த்தபோது அவர் தூக்கில் பிணமாக தொங்கினார்.
பின்னர் இதுகுறித்து அவர்கள் கொடுத்த புகாரின்பேரில் சிவகாசி டவுன் போலீசார் விரைந்து வந்து தற்கொலை செய்துகொண்ட வைரமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- திட்டக்குடி அருகே பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்த 2 வாலிபர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.
- மாணவி தினமும் ராமநத்தத்திற்கு வந்து அங்கிருந்து நடந்து இந்த பள்ளிக்கு வருவது வழக்கம்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த தொழு தூரில் அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு தொழு தூர், ராமநத்தம், வேப்பூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து மாணவ, மாணவிகள் இங்கு வருவர். வேப்பூரில் இருந்து பிளஸ்-2 மாணவி தினமும் ராமநத்தத்திற்கு வந்து அங்கிருந்து நடந்து இந்த பள்ளிக்கு வருவது வழக்கம்.
இந்நிலையில் பிளஸ்-2 மாணவியை பின்தொடர்ந்து 2 வாலி பர்கள் வந்தனர். அப்போது அந்த வாலிபர்கள் மாணவி யிடம் காதலிக்க வற்புறுத்தி தொடர்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனை அந்த மாணவி தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதைகேட்ட மாணவியின் தாய் வாலிபரிடம் சென்று இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கூறினார்.
ஆனால் நேற்று பள்ளிக்கு வந்த மாணவியிடம் மது போதையில் அதே வாலி பர்கள் சில்மிஷம் செய்த னர். இதுகுறித்து மாணவியின் தாய் ராமநத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் ராமநத்தத்தை சேர்ந்த விஜய் (வயது 26), பிரவீன்குமார் (22) ஆகிய 2 வாலிபர்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
- இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு இன்பமும், எலும்புகளுக்கு மருந்தாகவும் அமையும்.
- பொல்லாதவைகளை எல்லாம் பேசுவது பாவம் என்று வேதாகமம் சொல்கிறது.
"மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்". (நீதிமொழிகள் 18:21)
அன்பானவர்களே, நம் ஒவ்வொருவருடைய நாவில் இருந்து வெளிப்படும் வார்த்தைகளுக்கும் ஒரு வல்லமை உண்டு. இனிய சொற்கள் தேன்கூடு போல் ஆத்துமாவுக்கு இன்பமும், எலும்புகளுக்கு மருந்தாகவும் அமையும்.
அதனால் தான் நமது நாவில் இருந்து வெளிப்படும் வார்த்தைகள் நன்மை நிறைந்ததாக, ஆசிர்வாதம் அளிப்பதாக இருக்க வேண்டும் என்று முன்னோர்களும், பெரியோர்களும் சொல்லி இருக்கிறார்கள்.
நாம் அனுதினமும் நாவினால் 'என்னுடைய வாழ்க்கையில் நான் நிச்சயமாக நன்றாக இருப்பேன், சுகமாக இருப்பேன், வாழ்வில் உயர்வுகள் வரும்' என்று பேசி, அதற்கான முயற்சிகள் செய்யும் போது நாம் விரும்பியவை நிச்சயமாக நம்மைத் தேடி வரும்.
அதை விட்டு மாறாக நாவினால் ஒருவருக்கு முன்பாக முகஸ்துதியுடன் பேசுவது, அவர் அந்த இடத்திலிருந்து சென்ற உடன் அவர்களைப் பற்றி குறை கூறுவது, இல்லாத, பொல்லாதவைகளை எல்லாம் பேசுவது பாவம் என்று வேதாகமம் சொல்கிறது.
புதிய ஏற்பாட்டில் வேதம் சொல்கிறது: "கப்பல்களைப் பாருங்கள், அவைகள் மிகப் பெரியவைகளாயிருந்தும், கடுங்காற்றுகளால், புயல்களால், அலைகளால் அடிபட்டாலும் அவைகளை நடத்துகிறவன், போகும் படி யோசிக்கும் இடம் எதுவோ அவ்விடத்திற்கு நேராக மிகச் சிறிய சுக்கானாலே திருப்பப்படும்".
ஒரு சிறிய நெருப்பு பொறி எவ்வளவு பெரிய காட்டையும் கொளுத்தி விடுவதுபோல சிறிய உறுப்பான நாக்கில் இருந்து வெளிப்படும் வார்த்தைகள் நல்ல, கெட்ட செயல்களுக்கு காரணமாக அமைகிறது.
உருவத்தில் பெரிய யானை, காட்டுக்கு ராஜாவான சிங்கம் உள்பட பல்வேறு உயிரினங்களை மனிதன் தன் திறமையால் அடக்கி ஆள்கின்றான். ஆனால் அவனால் தன் நாக்கை அடக்க முடியவில்லை. அதில் இருந்து வெளிப்படும் வார்த்தைகள் மரணத்தை தரும் விஷத்தை போன்று உள்ளது.
ஒரே நாவினாலே பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம், அதே நாவினாலே தேவனுடைய சாயலின் படி உண்டாக்கப்பட்ட மனுசனை சபிக்கிறோம். ஒரு நபரை நேரில் பார்க்கும் போது இனிக்க இனிக்க பேசுகிறோம், அவர் அவ்விடத்தில் இருந்து சென்றவுடன், அவரைப் பற்றி தவறாக, கேவலமாக, பொய்யாக, கெட்ட வார்த்தைகளுடன் பேசுகிறோம். வீண் பேச்சுக்கள், கட்டுக்கதைகளை நமக்கேற்றவாறு புனைந்து உண்மை போல மற்றவர்களை நம்ப வைத்து பேசுகிறோம்.
ஒரே நீரூற்றிலிருந்து, இனிப்பும், கசப்புமான தண்ணீர் சுரக்குமா யோசித்துப் பார்ப்போம். நாம் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தைகளும் இறைவனின் கணக்கில் உள்ளது என்பதை மறக்க வேண்டாம்.
வேதம் சொல்கிறது: 'சகோதரரே, ஒருவருக்கொருவர் விரோதமாய்ப் பேசாதிருங்கள். சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன் இறைவனுடைய கட்டளைகளை, போதனைகளை குற்றப்படுத்துகிறவனாக இருப்பான். மற்றவர்களைக் குறை சொல்லி குற்றப்படுத்துவதற்கு நாம் யார்?. யோசித்துப் பாருங்கள், அன்பானவர்களே.
'இன்னும் கோள் சொல்கிறவனுடைய வார்த்தைகள் விளையாட்டுப் போலிருக்கும், ஆனால் அவைகள் மற்றவர்கள் மனதை முள் போல குத்தும். மூடருடைய வார்த்தைகள் விவாதத்தில் நுழையும், அவன் வாய் அவனுக்கு அடிகளை வரவழைக்கும். அவனுடைய வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளே அவனுக்கு கேடாக அமைந்து விடும்'.
'ஒருவனுடைய வாயின் இனிய வார்த்தைகளால் அவனுடைய வயிறு நிரம்பி, அவன் வாழ்வில் திருப்தி அடைவான். இனிய வாய்மொழிகள் ஆழமான நீரூற்றுப் போலிருக்கும், அதிலிருந்து ஆசீர்வாதமான வற்றாத ஜீவ நதி புரண்டோடும். இனிய சொற்கள் தேன்கூடு போல ஆத்துமாவுக்கு இன்பமும், எலும்புகளுக்கு அரு மருந்தாகவும் அமையும்'.
ஆம் பிரியமானவர்களே, நாம் பேசும் வார்த்தைகள் மற்றவர்களுக்கு அருமருந்தாக அமைய வேண்டும். நம் வாயின் வார்த்தைகள் எதிர்மறையான காரியங்களை பேசாமல், நேர்மறையான காரியங்களை மட்டுமே பேச வேண்டும். நம் வாயின் வார்த்தைகளுக்கு வல்லமை உண்டு. நன்றாயிருப்போம், வாழ்ந்து சுகமாயிருப்போம். சிறப்பான, வளமான எதிர்காலம் நமக்கு உண்டு என்று அனுதினமும் அதைப் பற்றி பேசி, அதற்கான முயற்சிகளை எடுத்து வந்தால், நிச்சயமாக காரியங்கள் கைகூடும்.
ஆகவே நம் வாயின் வார்த்தைகளால் நம்மையும், நாம் சந்திக்கும் அனைத்து நண்பர்கள், உறவினர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தி, ஆறுதல்படுத்தி, அன்பு செலுத்தினால் நிச்சயமாக நன்மைகள் நம்மைத் தேடி வரும், இறைவனின் ஆசிர்வாதங்களும் நதி போல நம்மைச் சுற்றி வரும். அது ஒரு வற்றாத ஜீவ நதி, அது பாயும் இடமெல்லாம் செழிப்பை உண்டாக்கி,அனேகருக்கு ஆசிர்வாதமாக விளங்கும்,
அது போல நம் நாவின் வார்த்தைகள் நமக்கும், நம்மைச் சார்ந்தவர்களுக்கும் ஆசிர்வாதமாக, செழிப்பாக விளங்க, நம்மை மாற்றுவோம், மாறுவோம். ஆமேன்.
"சொற்களின் மிகுதியால் பாவமில்லாமல் போகாது, தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான், பேசாதிருந்தால் மூடனும் ஞானியெனப்படுவான், நீதிமானுடைய வாய் ஜீவ ஊற்று".
அன்பானவர்களே தேவையான, நலமான விஷயங்களை மட்டும் பேசுவோம், நன்மைகள் பெறுவோம், உலகெங்கும் அன்பை பரவச்செய்வோம்.
- ரோஜாக்களை விரும்பாத நபர்கள் எவருமில்லை.
- பெண்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் அழகு உருவம் கொண்டது.
ரோஜாக்களை விரும்பாத நபர்கள் எவருமில்லை. பெண்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் அழகு உருவம் கொண்டது. உலகெங்கும் பல்வேறு நிறங்களில் ரோஜாக்கள் பூத்துக்குலுங்குகின்றன. கூந்தலை அலங்கரிப்பதோடு அன்பு, பாராட்டு மற்றும் நன்றியை வெளிப்படுத்துவதற்கு ரோஜாக்கள் பரிமாறப்படுகின்றன. அவற்றுள் தனித்துவ குணம் கொண்ட சில ரோஜாக்கள் உங்கள் பார்வைக்கு..
பீச் வண்ண ரோஸ்:
மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு போன்ற நிறங்களின் கலவையை பிரதிபலிக்கும் பீச் வண்ண ரோஜாக்கள் நன்றியுணர்வை குறிக்கின்றன. அடக்கம், அனுதாபம் போன்றவற்றை வெளிப்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன.
மஞ்சள்:
மஞ்சள் நிற ரோஜாக்கள் நட்பு மற்றும் மகிழ்ச்சியை குறிக்கின்றன. நண்பர்களுக்கிடையேயான அன்பையும், பாராட்டுகளையும் வெளிப்படுத்த இவை சிறந்த தேர்வாக அமைகின்றன.
ஆரஞ்சு:
ஆரஞ்சு நிற ரோஜாக்கள் உற்சாகம், ஆசை மற்றும் கவர்ச்சியை குறிக்கின்றன. ஈர்ப்பை வெளிப்படுத்துவதற்கு அவை பகிரப்படுகின்றன.
வெள்ளை:
வெள்ளை நிற ரோஜாக்கள் தூய்மை, அப்பாவித்தனம் மற்றும் வாழ்வின் புதிய தொடக்கங்களை குறிக்கின்றன. தம்பதியினரிடையே நிலவும் தூய அன்பை குறிக்க திருமண நிகழ்வுகளில் பயன்படுத்தப்படுகின்றன.
இளஞ்சிவப்பு:
இளஞ்சிவப்பு நிற ரோஜாக்கள் வெவ்வேறு நிறங்களில், வெவ்வேறு உணர்ச்சிகளை குறிப்பிடுகின்றன. வெளிர் இளஞ்சிவப்பு ரோஜாக்கள் போற்றுதலையும், அனுதாபத்தையும் தெரிவிக்கின்றன. அதே சமயம் அடர் இளஞ்சிவப்பு ரோஜாக்கள் நன்றியையும், பாராட்டையும் குறிப்பிடுகின்றன.
நீலம்:
நீல நிற ரோஜாக்கள் மர்மம், சாத்தியமில்லாதது போன்ற உணர்வை குறிக்கின்றன.
சிவப்பு:
இது காதலின் அடையாள சின்னமாக விளங்குகிறது. இரு மனங்களுக்கு இடையே புதைந்திருக்கும் ஆழமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும், காதல், அன்பு, ஆசையின் வெளிப்பாட்டை பகிரவும் உதவும் தூதுவனாக பயன்படுகிறது, சிவப்பு ரோஜா.
- அனிதா பி.ஏ.முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
- பண்ருட்டி போலீசில் அவரது தாய் அஞ்சலாட்சிபுகார் கொடுத்தார்.
கடலூர்:
பண்ருட்டி அருகே உள்ள முத்தாண்டிகுப்பம் அடுத்த அன்னக்காரன் குப்பம் வடக்கு தெருவை சேர்ந்தவர் குமரவேல். இவரது மகள் அனிதா (23). இவர், பி.ஏ.முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.நேற்று அதிகாலை 4 மணிக்கு வீட்டிலிருந்தவர் காணாமல் போனார். பல இடங்களில் தேடி யும் கிடைக்காததால். பண்ருட்டி போலீசில்வஅவரது தாய் அஞ்சலாட்சிபுகார் கொடுத்தார். புகாரில் பெத்தான்குப்பத்தை சேர்ந்த சிவமணியை (30) அனிதா காதலித்து வந்ததாகவும் அவரை திருமணம் செய்து கொண்டதாகவு ம்கூறியுள்ளார்.
- திருமணத்திற்கு முன்பு சஞ்சய் தனது காதலியிடம் உனக்கு நிலாவில் நிலம் வாங்கி தருகிறேன் என கூறியிருந்தாராம்.
- காதல் மனைவிக்கு நிலாவில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி மனைவிக்கு பிறந்தநாள் பரிசளித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் மகாட்டோ. இவர் காதல் திருமணம் செய்தவர். திருமணத்திற்கு முன்பு சஞ்சய் தனது காதலியிடம் உனக்கு நிலாவில் நிலம் வாங்கி தருகிறேன் என கூறியிருந்தாராம். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அவர் காதலியை கரம் பிடித்தார்.
இந்நிலையில் தனது வாக்குறுதியை காப்பாற்றும் வகையில் சஞ்சய் தனது காதல் மனைவிக்கு நிலாவில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி மனைவிக்கு பிறந்தநாள் பரிசளித்துள்ளார். இதுகுறித்து சஞ்சய் கூறுகையில், திருமணத்துக்கு முன் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக தனது மனைவிக்கு நிலாவில் இடம் வாங்கி பரிசளிக்க திட்டமிட்டேன். இதுதொடர்பாக எனது நண்பர்களிடம் ஆலோசித்தேன். அவரது உதவியுடன் லூனா சொசைட்டி இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் நிலாவில் நிலம் வாங்கினேன். பின்னர் நிலம் வாங்கியதற்கான பதிவு சான்றை எனது மனைவியிடம் கொடுத்தபோது அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தாக கூறினார்.
- போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்
- பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்
புதுக்கோட்டை
ஆலங்குடி அருகே கீரமங்கலம் தர்மர் கோவிலை சேர்ந்தவர் சரவணன் மகன் மணிகண்டன் (வயது 23). சிவகங்கை மாவட்டம், புதுவயல் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கணேசன் மகள் பிரதீபா (20). இவர்கள் 2 பேரும் காதலித்து வந்தனர்.
இந்நிலையில் பிரதீபாவை காணவில்லை என்று அவரது தாய் உமா சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே மணிகண்டன்-பிரதீபா இருவரும் பழனி கோவிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இதுகுறித்து ஆலங்குடி போலீசார் சாக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த போலீசார் காதல் ஜோடி இருவரையும் சாக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
- சந்திர கிரகத்துக்கு திங்கள் கிழமைகளில் வெள்ளை அலரி மலர் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.
- புதன் கிரகத்துக்கு புதன் கிழமைகளில் துளசி கொண்டு பூஜிக்கலாம்.
ராகு கால பூஜைக்கான மலர்கள்
ராகு கால நேரம் என்பது வாரத்தில் அனைத்து நாட்களிலும் உண்டு.
இதில் செவ்வாய் கிழமை மற்றும் வியாழக் கிழமைகளில் செய்யப்படும் ராகு கால பூஜை மிகவும் சிறப்பானது.
இதைத்தவிர மற்ற நாட்களிலும் ராகு கால பூஜை செய்யலாம்.
ஒவ்வொரு கிழமைகளில் ஒவ்வொரு விதமான மலர்களைக் கொண்டு பூஜை செய்வதால் வாழ்வில் நிம்மதியும் வளங்களும் பெருகும்.
சூரிய கிரகத்துக்கு ஞாயிற்று கிழமைகளில் பாரிஜாதம் மற்றும் வில்வ மலர்களைக் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.
சந்திர கிரகத்துக்கு திங்கள் கிழமைகளில் வெள்ளை அலரி மலர் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.
செவ்வாய் கிரகத்துக்கு செவ்வாய் கிழமைகளில் செவ்வரளி, செந்தாமரை மற்றும் செம்பருதி மலர் கொண்டு ராகு கால பூஜை செய்வது செவ்வாய் தோஷம் விலகும்.
புதன் கிரகத்துக்கு புதன் கிழமைகளில் துளசி கொண்டு பூஜிக்கலாம்.
வியாழக்கிழமைகளில் குரு கிரகத்துக்கு மஞ்சள் நிற மலர்கள் மற்றும் சாமந்தி மலர் கொண்டு பூஜை செய்யவேண்டும்.
சுக்கிரனுக்கு வெள்ளிக் கிழமைகளில் வெள்ளை அரளி கொண்டு பூஜை செய்யலாம்.
சனி பகவானுக்கு சனிக் கிழமைகளில் நீல நிற சங்கு மலர் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.
மேற் கண்ட ஒவ்வொரு தினத்திலும் குறிப்பிட்ட மலர்களைக் கொண்டு பூஜை செய்தால் இல்லத்தில் அமைதி மற்றும் சுபிட்சம் பெருகும்.
- மாலை 6 மணிக்கு தீபாராதனை முடிந்ததும், 6.30 மணிக்கு புஷ்பாஞ்சலி நடைபெறும்.
- மஞ்சள் மலர்களுக்கு மகிழ்ச்சியை அள்ளித்தரும் அபார சக்தி உண்டு.
இறைவன் காலடியில் மலர் போடுங்கள்!
ஒரு கூடை அரளியைச் சேகரித்துக்கொண்டு, ஒவ்வொரு நாமமாகச் சொல்லி நிதானமாக இறைவனுக்கு அர்ப்பணம் செய்து பாருங்கள்.
அதுவும் மலர்களை சுவாமியின் மீது தூக்கி வீசாமல், அழகாக ஒவ்வொரு மலராக அலங்காரம் செய்வது போல் சுவாமி காலடியில் வைத்துப்பாருங்கள்.
உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளும், இனம் புரியாத ஆனந்தம் உள்ளுக்குள் வந்து உட்கார்ந்து கொள்ளும்.
நாள் முழுவதும் சந்தோஷமாகக் கழியும்.
மஞ்சள் மலர்களுக்கு மகிழ்ச்சியை அள்ளித்தரும் அபார சக்தி உண்டு.
அய்யப்பனுக்கு புஷ்பாஞ்சலி
மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டதும் முதலில் அய்யப்பனுக்கு புஷ்பாஞ்சலி நடத்தப்படும்.
மாலை 6 மணிக்கு தீபாராதனை முடிந்ததும், 6.30 மணிக்கு புஷ்பாஞ்சலி நடைபெறும்.
தாமரை, செண்பகம், முல்லை, பிச்சி, அரளி, துளசி உள்பட பல்வேறு மலர்கள் புஷ்பாஞ்சலிக்கு பயன்படுத்தப்படும்.
புஷ்பாஞ்சலி செய்ய விரும்பும் பக்தர்கள் ரூ.8,500 செலுத்தி ரசீது பெற்று சென்றால் அவர்கள் பெயரில் அய்யப்பனுக்கு புஷ்பாஞ்சலி செய்யப்படும்.
புஷ்பாஞ்சலிக்கு தேவையான மலர்களை பக்தர்கள் கொண்டு செல்ல வேண்டியதில்லை.
கோவில் சார்பில் மலர்கள் பயன்படுத்தப்படும்.
தரமற்ற பூக்கள் பூஜைக்கு பயன்படுத்துவதை தடுக்கவே இந்த ஏற்பாட்டை திருவாங்கூர் தேவசம் போர்டு செய்துள்ளது.
- வீட்டில் இருந்து வெளியே சென்ற இளம்பெண் பின்னர் திரும்பி வரவில்லை.
- கடந்த 3 மாதங்களாக இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் வாலிபர் ஒருவருடன் பழகிவந்தது தெரியவந்தது.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த காட்டாவூர் பகுதியை சேர்ந்த 28 வயது இளம் பெண் கணவருடன் வசித்து வந்தார். இவர்களுக்கு கடந்த 2019 -ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற இளம்பெண் பின்னர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவிலலை.
இதுகுறித்து பொன்னேரி போலீஸ்நிலையத்தில் இளம்பெண்ணின் கணவர் புகார் செய்தார். விசாரணையில் மாயமான இளம்பெண் கடந்த 3 மாதங்களாக இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் வாலிபர் ஒருவருடன் பழகிவந்தது தெரியவந்தது.
இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராம் காதலனுடன் ஓட்டம் பிடித்து இருப்பது தெரிந்தது. இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொன்னேரி அடுத்த மாதவரம் முஸ்லிம் நகரை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி மாயமானார். இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.