என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "love"

    கலாரசிகனென்றால் காதல் கொண்டிருக்க வேண்டியது கலை மீதா? மாதவி மீதா?

    இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தில் இடம்பெற்ற கண்ணகி, கோவலன், மாதவி கதாபாத்திரங்கள் இன்றைய காலக்கட்டத்தில் இருந்திருந்தால் எப்படி இருக்கும்?. கதையமைப்புப்படி அவர்களை நியாயப்படுத்தி காட்டியிருப்பது சரிதானா என ஒரு சிறிய கலந்துரையலாடலை காணலாம்.

    கோவலனுக்கெல்லாம் கண்ணகிதான் கிடைப்பார்களோ?

    மனைவி இருக்கும்போது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் காதல்வயப்படுவது என்பது எவ்வளவு பெரிய துயர். அது கண்ணகி காலத்தில் இருந்தாலும் சரி, தற்போதைய 21ம் நூற்றாண்டாக இருந்தாலும் சரி. நாம் அன்பு கொண்டிருக்கும் ஒருவர், வேறு ஒருவர் மீது அன்பு கொண்டிருக்கிறார் என தெரியவந்தால் நம் மனநிலை எப்படி இருக்கும் என்பதை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. நாம் காதல் செய்யும் ஒருவர், நம்மை காதலித்தாக வேண்டும் என்ற அவசியம் இல்லை எனக் கூறலாம். ஆனால் அவர்கள் வேறு ஒருவர் மீது காதல் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிவது? இந்த உணர்வுதான் கண்ணகிக்கும் இருந்திருக்கும். 

    தான் உயிரினும் மேலாக காதல் கொண்டிருந்த தன் கணவன், நாடக மகள்மீது காதல் கொள்வதை கண்ணகி அறிகிறாள். அது 21ஆம் நூற்றாண்டு இல்லை என்பதால், கண்ணகியால் கோவலனிடம் கேள்வி எழுப்பியிருக்க முடியாது. ஆனால் அவளின் மனநிலை?. தன் காதலன் பிரிந்த நாள்முதல் கால்களில் சிலம்பு அணியவில்லை; காதுகளில் தோடு அணிவதில்லை; கண்களில் மை இடுவதில்லை; ஒளிபொருந்திய நெற்றியில் திலகமும் இடுவதில்லை; நீண்ட கருங்கூந்தல் எண்ணெயையும், பூவினையும் மறந்தது; அவள் கண்கள் உறக்கத்தை மறந்தன. வெறுமைத்தன்மை கண்ணகியை சூழ்ந்தது. யாருக்காக? வேறொரு ஒரு மங்கையிடம் காதல்கொண்ட ஒருவனுக்காக... அதாவது தனது கணவனுக்காக. மனது முழுவதும் பாரம். கணவன் வேறு பெண்ணிடம் காதல் கொண்டாலும், அவனை நினைத்தே இல்லறம் நடத்துகிறாள். அவனுடைய உறவினர்களையும் முகம் சுழிக்காமல் வரவேற்கிறாள். புகுந்த இடத்திலும், பிறந்த இடத்திலும் மனதில் இருக்கும் பாரத்தை வெளிக்காட்டாமல், யாருக்கென்றே தெரியாமல் ஒரு வாழ்க்கையை வாழ்கிறாள். தம் மருமகன் வேறு ஒரு பெண்ணுடன் உறவில் இருப்பதை கண்ணகியின் பெற்றோர் அறிகின்றனர். அறிந்து என் செய்வது?

    அவர்கள் அடிக்கடி வந்து தம்செல்வ மகளைக் கண்டுபோயினர். கணவன் வேறு பெண்ணிடம் சென்றாலும், அதை கேட்காமல், அந்த வருத்தத்தை வெளிக்காட்டாமல் இருந்ததால் அவள் கற்புக்கரசி என போற்றப்பட்டால். மாதவியிடம் மனக்கசப்பு எழ கண்ணகியிடம் வருகிறான் கோவலன். ஆனாலும் மாதவியிடம் வரும் சில கடிதங்களை எண்ணி வருந்துகிறான். கண்ணகி கற்புக்கரசியாக இருந்தாலும், மாதவியைத்தான் பிடிக்கும் என சொல்லாமல் சொல்கிறான். பேதை கண்ணகியும் கணவன் வேறு பெண்ணுடன் வாழ்ந்து வந்தாலும் ஏற்றுக்கொள்கிறாள். ஏனெனில், அது அவள் காதல் கொண்டவன் அல்லவா. மற்றொன்று அது 21ம் நூற்றாண்டு இல்லையே. கணவன் வேறு ஒருவரை வைத்திருந்தால் தூக்கி எறிய. ஆயினும் இப்போதும் அதேபோல பல கண்ணகிகள் வாழ்ந்து வந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

    காதல் கொண்டிருக்க வேண்டியது கலை மீதா? மாதவி மீதா?

    நூலின் ஆசிரியர் இளங்கோவடிகள் உட்பட பலரும் மாதவி மீதான கோவலனின் காதலை ஆதரிக்கின்றனர். காரணம் கலாரசிகனான கோவலன், கலைகளின் அரசியான மாதவி மீது காதல் கொள்கிறானாம். மற்றொன்று திருமணத்தின்போது கண்ணகிக்கு வயது 12. அதாவது சிறுபிள்ளை. அவளுக்கு ஒன்றும் தெரியாது. கலாரசிகன் என்றால் கலையின் மீதுதானே காதல் கொண்டிருந்திருக்கவேண்டும். கலையை நிகழ்த்தும் பெண்ணின் மீதுதான் காதல் வருமோ?. கண்ணகி ஏதும் அறியாதவள் என விளக்கம் கொடுப்பவர்கள், அந்த ஏதும் தெரியாதவளை கோவலன் ஏன் மணந்தான்? என கூறமாட்டார்கள். அதற்கு கோவலனும் பதில்கூறமாட்டான். கலையால் ஈர்க்கப்பட்டு, காதல் வயப்பட்டிருந்தால், ஏன் அவள் பாடிய பாடலின் அர்த்தத்தை தவறாக கொண்டு மீண்டும் கண்ணகியிடம் வந்து வாசம் செய்யவேண்டும்?. 


    கணவனுக்காக சிலம்பை கையில் கொண்டு மன்னனிடம் முறையிடும் கண்ணகி

    கற்புக்காக போற்றப்பட்டாளா கண்ணகி?

    இங்கு கண்ணகியின் காதலும் போற்றப்படுகிறது. மாதவியின் காதலும் போற்றப்படுகிறது. ஏனெனில் கோவலன் பிரிந்துவந்த பிறகும் வேறு ஆண்களை எண்ணாமல், கோவலனை எண்ணியே வாழ்ந்து வந்தால் மாதவி. அப்போது இருவரின் காதலும் புனிதம் என்றால் கோவலனின் காதல்? கலைமீது காதல் கொண்டு சென்றிருந்தால், அவளது பாடலை தவறாக புரிந்துகொண்டிருந்தாலும், மாதவி யாரை விரும்பியிருந்தாலும், கோவலன் அவளை விரும்பியிருக்கவேண்டும், கண்ணிகியைப்போல. கோவலன் கங்கையை வைத்து பாடிய பாடலை தவறாக புரிந்துதான் மாதவி அதற்கேற்ற பாடலை பாடினாள். கோவலனின் பாடலில் மாதவி புரிந்துகொண்டது என்ன? அவள் வேறு ஒரு பெண்ணிடம் காதல் கொண்டானோ என்று பயம். அப்போது ஒரு பேதையே, அதாவது கண்ணகியை விட்டு, கோவலன் மாதவியிடம் செல்லும்போது? கண்ணகியின் வலி?. ஆனால், கேட்டால் நாம் மாதவியை குறை கூற இயலாது. ஏனெனில் அது அப்போதைய குலவழக்கம். அவளை குற்றம் சொல்ல இயலாது. கடைசியாக கண்ணகிக்கு வருவோம். கண்ணகி கற்புக்காகத்தான் போற்றப்பட்டாளா? இங்கு கற்பு என்பது என்ன? ஏன் இந்த உலகில் கோவலன் மட்டும்தான் அழகனா என்ன? கோவலன் மாதவியிடம் காதல்கொண்டவாறு, கண்ணகி யாரிடமாவது காதல்கொண்டு கலை என்று கூறியிருக்கலாமே?

    அவள் கற்பை காத்து நல்லவள் என்றால், கோவலனின் கற்பு எங்கு சென்றது? அந்தகாலத்தில் ஆண்களுக்கு கற்பு இல்லை. பெண்களுக்கு மட்டும்தான் கற்பு. ஆனால் இப்போது? கற்பு ஒருவரின் காதலை தீர்மானிக்காது. காதல் கொண்டவரிடத்தில் வைத்திருக்கும் நேசம்தான் அதனை தீர்மானிக்கும். தன் காதலன் வேறொரு பெண்ணிடம் காதல் கொண்டானோ என்று அஞ்சி மாதவி பாடிய பாடல்தான் இருவரும் பிரியக் காரணம். இதுவும் ஒருவகை கோபம்தான். எங்கு தன்னைவிட்டு விலகிவிடுவானோ என அஞ்சி மாதவி வெளிப்படுத்தினால். கோவலன், மாதவி காதல்கொண்டாலோ என அவளை பிரிந்தான். ஆனால் தன் கணவன் தனக்கு எவ்வளவு பெரிய துரோகத்தை இழைத்தும், அவன்மீது கடைசிவரை அன்பு வைத்திருந்தால் கண்ணகி. இங்கு போற்றப்பட்டது அவளின் காதல். கற்பு அல்ல. மேலே முதலில் குறிப்பிட்டுள்ளவாறு இக்காலத்திலும் கண்ணகிகள் வாழ்கிறார்கள். கோவலன்போல மாதவியிடம் செல்லத்தெரியாமல் அல்ல. அதீத அன்பினால். முடிவில் இங்கு காதல்தான் கற்பு என்பதை பலரும் புரிந்துகொள்ளவேண்டும். 

    • நேசம், உல்லாசம் ஆகிய 2 படங்களில் அஜித் குமாருக்கு ஜோடியாக மகேஷ்வரி நடித்திருந்தார்.
    • கடைசி நாள் சூட்டிங்கின் போது அஜித்தை இனிமேல் பார்க்க முடியாதே என்று கவலையாக இருந்தேன்.

    அஜித் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் உலக அளவில் ரூ.230 கோடி வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிசந்திரன் தான் இயக்குவார் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், நடிகர் அஜித்தை காதலித்தேன் என்று பிரபல நடிகை மகேஸ்வரி கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    1997ம் ஆண்டு வெளியான நேசம், உல்லாசம் ஆகிய 2 படங்களில் அஜித் குமாருக்கு ஜோடியாக மகேஸ்வரி நடித்திருந்தார். அந்த சமயத்தில் அஜித்குமார் மீது தனக்கு கிரஷ் ஏற்பட்டது நடிகை மகேஸ்வரி கூறியுள்ளார்.

    இதுகுறித்து ஜெகபதி பாபுவின் டாக் ஷோவில் கலந்து கொண்டு பேசிய மகேஸ்வரி, "அஜித் என்றால் ரொம்ப பிடிக்கும். அவர் மீது பயங்கர கிரஷ். கடைசி நாள் சூட்டிங்கின் போது அஜித்தை இனிமேல் பார்க்க முடியாதே என்று கவலையாக இருந்தேன். அப்போது அஜித் என்னிடம் வந்து மகி, நீ எனக்கு தங்கச்சி மாதிரிமா. வாழ்க்கையில் உனக்கு என்ன தேவையாக இருந்தாலும் என்னை கூப்பிடு. நான் உனக்காக வருவேன் என்று கூறினார். அதை கேட்டதும் என் மனசே உடைச்சிடுச்சு" என்று தெரிவித்தார்.

    இதை கேட்டு அருகில் இருந்த நடிகை மீனா சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தார். மகேஸ்வரியும் மீனாவும் நெருங்கிய தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இவர்களின் திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் நடைபெற்றது.
    • இத்திருமணத்தை திராவிடர் கழக மாவட்டத் தலைவர் தலைமையேற்று நடத்தி வைத்தார்.

    சேலம், தாரமங்கலம் அருகே உள்ள ஓமலூரைச் சேர்ந்த 32 வயதான சரவணகுமார், தன்னுடைய டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணியாற்றும் 30 வயதான திருநங்கை சரோவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களின் திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் ஈரோடு, கோபிசெட்டிபாளையத்தில் உள்ள பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தில் நடைபெற்றது.

    இத்திருமணத்தை திராவிடர் கழக மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் மு. சென்னியப்பன் தலைமையேற்று நடத்தி வைத்தார். இவர்களின் திருமண வீடியோ இணையத்தில் வைரலையுள்ளது. பலரும் இந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

    • 52 வயதான ராணி தனது வயதை மறைத்து Filter மூலம் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் பதிவிட்டுள்ளார்.
    • 52 வயதான ராணிக்கு 4 குழந்தைகள் இருப்பது அருணுக்கு தெரிய வந்துள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் அருண் (26) என்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் மூலம் ராணி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

    52 வயதான ராணி என்ற பெண் தனது வயதை மறைத்து Filter மூலம் புகைப்படத்தை பதிவேற்றி இளம்பெண் போல அருணை ஏமாற்றி வந்துள்ளார்.

    முதல்முறையாக ராணியை அருண் நேரில் சந்தித்தபோதே அவளுக்கு 52 வயது என்றும் 4 குழந்தைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. தான் ஏமாற்றப்பட்டதை கண்டு கோபமடைந்த அருண், ராணியை ஏமாற்றி அவரிடம் இருந்து ரூ.1.5 லட்சம் பெற்றுள்ளார்.

    பின்னர் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டும், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும் அருணை ராணி அடிக்கடி வற்புறுத்தியுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த அருண், ராணியை ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள ஒரு இடத்திற்கு அழைத்து சென்று அவரது தாவணியை வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை தூக்கி வீசியுள்ளார்.

    ராணியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்திய போலீசார் அருணை கைது செய்தனர். கொலை செய்ததை அருண் ஒப்புக்கொண்டதால் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நீண்ட நேரம் காத்திருந்தும் அவருடைய காதலன் வரவில்லை.
    • போன் மூலம் காதலனுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டே இருந்தார்.

    காதலனுக்காக பெற்றோரை விட்டு ஓடி போய் ஏமாற்றமடைந்து வேறு ஒருவரை திருமணம் செய்யும் சம்பவங்கள் சினிமாவில் பார்த்திருக்கிறோம்.

    ஆனால் அது போன்ற ஒரு ஆச்சரியப்பட வைக்கும் சம்பவம் ஒன்று மத்தியபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.

    அங்குள்ள இந்தூர் பகுதியை சேர்ந்தவர் ஷ்ரத்தா திவாரி. கல்லூரி படிப்பை முடித்த இவர் வீட்டில் பெற்றோர் பராமரிப்பில் இருந்து வந்தார்.

    அப்போது அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்தனர். அவருடைய காதலன் எந்த சமயத்திலும் உன்னை கைவிடவே மாட்டேன் என அடிக்கடி வாக்குறுதி அளித்தார்.

    இது ஒருபுறம் இருக்க காதல் விவகாரம் ஷ்ரத்தா திவாரி வீட்டிற்கு தெரிய வந்தது. அவர்கள் இந்த காதலுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் ஷ்ரத்தா திவாரி வீட்டை விட்டு வெளியேறி காதலனை திருமணம் செய்ய முடிவு செய்தார். இது பற்றி அவருடைய காதலனிடம் தெரிவித்தார். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார்.

    சம்பவத்தன்று ஷ்ரத்தா திவாரி தன்னுடைய உடைமைகளை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு புறப்பட்டார். வீட்டில் இருந்த பெற்றோர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். அப்போது நான் எனது காதலனை திருமணம் செய்து கொண்டு தான் வருவேன் என கூறினார்.

    அவரிடம் பெற்றோர்கள் கெஞ்சி கதறி அழுது பார்த்தனர். ஆனால் தன்னுடைய காதலனை திருமணம் செய்வதில் ஷ்ரத்தா திவாரி உறுதியாக இருந்தார். பெற்றோரை உதறி விட்டு வீட்டை விட்டு வெளியேறிய அவர் காதலனிடம்ஏற்கனவே கூறியபடி அங்குள்ள ரெயில் நிலையத்திற்கு வந்தார்.

    நீண்ட நேரம் காத்திருந்தும் அவருடைய காதலன் வரவில்லை. போன் மூலம் காதலனுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டே இருந்தார். அவர் அழைப்பை எடுக்கவில்லை.

    ஒரு கட்டத்தில் காதலனிடம் இருந்து செல்போனில் அழைப்பு வந்தது. அதில் இப்போது எனக்கு திருமணத்தில் விருப்பமில்லை என கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

    காதலனை நம்பி பெற்றோரை உதறி விட்டு வந்த ஷ்ரத்தா திவாரி கதறி அழுதார். ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகள் அவரை வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்றனர். வீட்டிற்கும் செல்ல முடியாது காதலனும் கைவிட்டு விட்டார். என்ன செய்வது என்று தெரியாமல் ஷ்ரத்தா திவாரி நீண்ட நேரம் அழுது கொண்டே இருந்தார்.



    அந்த நேரத்தில் ரெயில் ஒன்று வந்தது. அந்த ரெயிலில் ஏறி இருக்கையில் அமர்ந்தார். அந்த பெட்டியில் ஷ்ரத்தா திவாரி கல்லூரியில் படித்த போது நண்பராக இருந்த கரண் என்பவர் இருந்தார்.

    இருவரும் நலம் விசாரித்துக் கொண்டனர். அப்போது கண்கலங்கியபடி இருந்த ஷ்ரத்தா திவாரியிடம் ஏன் இப்படி இருக்கிறாய் என கரண் கேட்டார்.

    திருமணம் செய்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறி வந்து விட்டேன். காதலன் கைவிட்டதால் அதுவும் நடக்கவில்லை. இனிமேல் என்னால் வாழ முடியாது என்றார்.

    கரண் அவரை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் எந்த பலனும் அளிக்கவில்லை. இறுதியாக கரண் நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்றார்.

    நம்பிக்கை துரோகம் செய்த காதலனை விட ஆபத்தில் உதவும் நண்பன் எவ்வளவோ மேல் என சிந்தித்த ஷ்ரத்தா திவாரி சம்மதம் தெரிவித்தார். இருவரும் அங்குள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் தம்பதியினர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர். போலீசார் இளம்பெண் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அவரது தந்தை நான் எனது மகளை 10 நாட்கள் கணவரிடம் இருந்து பிரித்து எனது வீட்டில் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 10 நாட்களுக்கு பிறகும் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் விரும்பினால் இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

    அதற்கு ஷ்ரத்தா திவாரி, கரண் இருவரும் சம்மதம் தெரிவித்தனர். அதன்படி இளம்பெண் பெற்றோருடன் சென்றார்.

    சினிமா போல் நடந்த இந்த சம்பவம் இந்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 2 பேரும் வேலைக்கு சென்று விட்டதால் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
    • மணமகள் சாரா குடும்பத்தினர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கோவைக்கு வந்தனர்.

    கோவை:

    கோவை நவ இந்தியா பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி பிரேமலதா. இவர்களது மகன் கவுதம்(வயது30). இவர் கனடாவில் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்தார்.

    கவுதம் கல்லூரியில் படித்தபோது அவருக்கு அமெரிக்கா வாஷிங்டன் டி.சி. பகுதியை சேர்ந்த ராபர்ட் டக்ளஸ் பிராட்-எலினிட்டா யசன்யா பிராட் தம்பதி மகள் சாரா(30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு கல்லூரி பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் கவுதம் மற்றும் சாரா ஆகியோரின் பெற்றோர் பங்கேற்றனர். அப்போது கவுதமும், சாராவும் தங்களது பெற்றோரிடம், தங்களுக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டனர்.

    அதற்கு அவர்கள் மேற்படிப்பு முடித்த பிறகு திருமணம் செய்து வைப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து கவுதமும், சாராவும் பட்ட மேற்படிப்பு முடித்து தற்போது கனடாவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.

    2 பேரும் வேலைக்கு சென்று விட்டதால் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

    மணமகள் சாராவின் பெற்றோர் தமிழ் கலாசாரத்தின் மீது பற்று கொண்டவர்கள் என்பதால் அவர்கள் தமிழ்நாட்டில் தங்கள் மகள் திருமணத்தை நடத்த விரும்பினர்.

    இதையடுத்து மணமகள் சாரா குடும்பத்தினர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கோவைக்கு வந்தனர். பின்னர் இங்கு திருமண ஏற்பாடுகளை இரு வீட்டு பெற்றோரும் செய்து வந்தனர்.

    நேற்று கொடிசியா வளாகத்தில் கவுதம்-சாரா திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணம் தமிழ்முறைப்படி நடந்தது. மணமகள் சாராவின் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்து மணமகன் கவுதம் திருமணம் செய்து கொண்டார்.

    இந்த திருமண விழாவில் மணமக்களின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் கனடா, அமெரிக்காவை சேர்ந்த உறவினர்கள் என பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். 

    • இருவரும் தொடர்ந்து பேசிய போது அவர்களின் விருப்பங்களும் ஒரே மாதிரியாக இருந்தது.
    • இவர்களின் காதல் கதை சமூக வலைதளங்களில் வைரலானது.

    அமெரிக்காவின் அலபாமா பகுதியை சேர்ந்த ஆசிரியை ஹாரீஸ். இவர் ஆங்கிலம் கற்பிப்பதற்காக சீனாவின் ஷென்யாங் நகருக்கு சென்றிருந்தார். அங்கு ஒரு நாள் ஆன்லைனில் நூடுல்ஸ் ஆர்டர் செய்திருந்த போது லியு என்ற உணவு வினியோக நிறுவன ஊழியர் நூடுல்ஸ் ஆர்டரை வினியோகம் செய்ய ஹாரீஸ் வீட்டிற்கு சென்றார். இருவரும் முதல் முறையாக சந்தித்த போது லியு ஆங்கிலத்தில் பேச முயன்றார்.

    அப்போது அவர், 'ஹலோ ஐ லவ் யூ' என்று தவறுதலாக கூறினார். இதை கேட்ட ஹாரீஸ் சிரித்துவிட்டார். தொடர்ந்து அவர்கள் உரையாடினர். இருவரும் செல்போன் எண்களை பரிமாறி ஒருவருக்கொருவர் மொழியை கற்க உதவினர். இந்த உரையாடல் அவர்களுக்கிடையே காதலை மலர செய்தது. இருவரும் தொடர்ந்து பேசிய போது அவர்களின் விருப்பங்களும் ஒரே மாதிரியாக இருந்தது. அவர்களின் உறவை மேலும் ஆழப்படுத்தியது.

    தொடர்ந்து காதல் மலர்ந்த 5 மாதங்களிலேயே இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் காதல் கதை சமூக வலைதளங்களில் வைரலானது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும் இந்த காதல் சினிமா பாணியில் இருப்பதாக பதிவிட்டனர். 

    • பெண்ணின் தந்தை திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் முறையிட்டார்.
    • அதிர்ச்சியடைந்த போலீசார் உடனே அவரை மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அருகே உள்ள கூனிச்சம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கீர்த்திவாசன் (வயது30). இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்தனர். நாளடைவில் கீர்த்திவாசனின் நடவடிக்கை பிடிக்காததால் அந்த பெண் அவருடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.

    இதற்கிடையே அந்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த கீர்த்திவாசன் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். மேலும் ஆத்திரமடைந்த கீர்த்திவாசன் அப்பெண்ணின் புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் அனுப்பியதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி அப்பெண் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனே அந்த பெண்ணின் தந்தை திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் முறையிட்டார்.

    இதையடுத்து கீர்த்திவாசனை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது காதலியை தன்னுடன் சேர்த்து வைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என கூறி மிரட்டினார்.

    இதனிடையே போலீசார் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போதே கீர்த்திவாசன் தான் மறைத்து வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து குடித்து விட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அதிர்ச்சியடைந்த போலீசார் உடனே அவரை மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே கீர்த்திவாசன் கவலைக்கிடமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.

    • சகோதரி உறவு முறையில் வருவதால் திருமணம் செய்து வைக்க முடியாது என்றும் இரு தரப்பு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • பிரியங்கா கர்ப்பம் அடைந்து 8 மாதங்கள் ஆகி விட்டதால் கர்ப்பத்தை கலைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

    திருப்போரூர்:

    திருப்போரூரை அடுத்த தண்டலம் ஊராட்சியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் சுரேந்திரன் (வயது28). இவருக்கும் சோழிங்கநல்லூரில் வசித்து வரும் உறவினர் மகளான பிரியங்காவுக்கும்(25) இடையே சிறுவயது முதலே பழக்கம் ஏற்பட்டது. என்ஜினீயரான பிரியங்கா போரூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    சுரேந்திரனின் தாயும், பிரியங்காவின் தாயும் உடன் பிறந்த சகோதரிகள் ஆவர். எனவே சுரேந்திரன்-பிரி யங்கா நட்பாக பழகி வந்ததை குடும்பத்தினர் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதற்கிடையே அவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இது பற்றி தெரிந்ததும் இரு குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முறை தவறிய காதலை எடுத்து கூறி அறிவுரை வழங்கினர். ஆனால் காதலர்கள் இருவரும் இதனை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தனிமையில் சுற்றி பழகி வந்தனர். இதற்கிடையே பிரியங்கா கர்ப்பம் அடைந்தார். இதனை கூறி அவர்கள் திருமணம் செய்து வைக்குமாறு குடும்பத்தாரிடம் கேட்டு உள்ளனர். ஆனால் இது வெளியில் தெரிந்தால் அவமானம் என்று கூறி கர்ப்பத்தை கலைத்து விடலாம் எனவும் சகோதரி உறவு முறையில் வருவதால் திருமணம் செய்து வைக்க முடியாது என்றும் இரு தரப்பு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் பிரியங்கா கர்ப்பம் அடைந்து 8 மாதங்கள் ஆகி விட்டதால் கர்ப்பத்தை கலைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் காதலர்கள் இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர்.

    திருமணம் செய்து வைக்க பெற்றோர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் மனவேதனை அடைந்த காதலர்கள் சுரேந்திரனும், பிரியங்காவும் நேற்று இரவு தண்டலம் பகுதியில் உள்ள பம்புசெட் அறையில் ஒரே கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டனர்.

    நீண்டநேரம் ஆகியும் வெளியே சென்ற சுரேந்திரன் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் தேடி சென்றபோது பம்பு செட் அறையில் சுரேந்திரனும், பிரியங்காவும் தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து திருப்போரூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் மற்றும் போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    முறைதவறிய காதலால் 8 மாத கர்ப்பிணி காதலனுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • முதியோர் இல்லத்தில் சந்தித்துக்கொண்ட இவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது
    • கேரளா உயர்கல்வி அமைச்சர் பிந்து முன்னிலையில் இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.

    கேரளாவில் அரசு நடத்தும் முதியோர் நல காப்பகத்தில் வசித்து வரும் விஜயராகவன் (79), சுலோச்சனா (75) ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    முதியோர் இல்லத்தில் சந்தித்துக்கொண்ட இவர்களுக்குள் காதல் மலரவே. கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் தற்போது அவர்களின் திருமணக் கனவும் நிறைவேறியது

    கேரளா உயர்கல்வி அமைச்சர் பிந்து, நகர மேயர் எம்.கே. வர்கீஸ் முன்னிலையில் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.

    இந்த அழகான தருணத்திற்கு சாட்சியாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன் என்று அமைச்சர் பிந்து தெரிவித்தார்.

    • முன்னாள் காதலன் தனது அந்தரங்க வீடியோக்களையும், படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டினார்.
    • தனது கடந்த காலத்தை பற்றி தனது புதிய காதலன் தெரிந்து கொள்வதை இளம்பெண் விரும்பவில்லை.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் வடக்கு பெங்களூருவில் உள்ள சசுவேகட்டாவை சேர்ந்த 19 வயது என்ஜினீயரிங் மாணவரும், 17 வயது இளம்பெண்ணும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்தனர். பிரிவுக்கு பிறகு அந்த பெண் வேறொரு வாலிபருடன் நெருக்கமாக பழகுவதை கண்டு முன்னாள் காதலனான என்ஜினீயரிங் மாணவர் கோபம் அடைந்தார்.

    காதலித்தபோது அந்த மாணவரும், அந்த பெண்ணும் பரிமாறிக் கொண்ட அந்தரங்க தகவல்கள், புகைப்படங்கள் மாணவனின் செல்போனில் இருந்தது. இதனால் அந்த பெண், மாணவனின் செல்போனில் உள்ள தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீக்கும்படி மாணவனிடம் தொடர்ந்து வலியுறுத்தினார். ஆனால் அவர் மறுத்துவிட்டார். எல்லாவற்றையும் நீக்கிவிடும்படி பலமுறை அந்த பெண் கேட்டபோது, மாணவன் தனது நண்பர்களிடம் அவற்றை காட்டியதாக கூறினார். மேலும் சமூக வலைதளங்களிலும் வெளியிடுவதாகவும் மிரட்டினார்.

    இதனால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். முன்னாள் காதலன் தனது அந்தரங்க வீடியோக்களையும், படங்களையும் வைத்திருப்பதை நினைத்து கவலைப்பட்ட அந்த பெண், தனது நெருங்கிய தோழியின் உதவியை நாடினார்.

    தனது கடந்த காலத்தை பற்றி தனது புதிய காதலன் தெரிந்து கொள்வதை அவர் விரும்பவில்லை. இந்த பிரச்சினையை தோழி தீர்த்து வைப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து தோழி ஏற்பாட்டின்பேரில் 12 பேர் கும்பல் கடந்த ஜூன் மாதம் 30-ந்தேதி இளம்பெண்னின் முன்னாள் காதலனான என்ஜினீயரிங் மாணவரை ஹெசரகட்டாவில் உள்ள ஏஜிபிலேஅவுட்டுக்கு காரில் கடத்தி வந்தனர்.

    அங்குள்ள ஏரிக்கு அருகிலுள்ள ஒரு வெறிச்சோடிய இடத்தை கார் அடைந்தது. பின்னர் அந்த மாணவரை தரையில் உட்கார வைத்து, மற்றவர்கள் சுற்றி நின்று பிரம்பு கம்பால் இரக்கமின்றி அடிக்க தொடங்கினர். மேலும் முன்னாள் காதலி வாலிபரை நிர்வாணப்படுத்தி ஓட, ஓட விரட்டி தாக்கினார். பின்னர் அந்த இளம்பெண் தனது செல்போனில் அதை வீடியோவாக எடுத்தார்.

    அப்போது அந்த பெண், அவரிடம் தனது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் நீக்குமாறு கூறினார். அதற்கு அவர் அனைத்தும் செல்போனில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக பதிலளித்தார். இருப்பினும், தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் சந்தேகம் அடைந்து மாணவரின் செல்போனை வாங்கி அதில் இருந்த அந்தரங்க புகைப்படங்களையும், வீடியோக்களையும் நீக்கினார்.

    இந்த சம்பவத்தில் காயம் அடைந்த முன்னாள் காதலன் இது குறித்து சோலதேவனஹள்ளி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் கடத்தல் கும்பல் சேஷாத்ரிபுரத்தை சேர்ந்த சிவசங்கர் (20), கணபதிநகரை சேர்ந்த யஷ்வந்த் படேல் (20), நெலமனகலை சேர்ந்த ஹேமந்த் (18), டி.தாசரஹள்ளியை சேர்ந்த சல்மான் கான் (23), உல்லாலை சேர்ந்த ராகுல் (20), தேஜாஸ் (18), ஹெசரகட்டாவை சேர்ந்த ராகேஷ் (21) மற்றும் யஷ்வந்த்பூரைச் சேர்ந்த ஷஷாங்க் கவுடா (19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    தலைமறைவாக உள்ள ஹேமந்த், சூர்யா மற்றும் விஷால் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் சல்மான் கான் ஒரு ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர், மற்றவர்கள் மாணவர்கள் ஆவர்.

    • இந்த அழகிய தருணத்தின் புகைப்படங்களை மார்க் ஸ்டீவர்ட் பகிர்ந்துள்ளார்.
    • இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

    ஹவாயில் உள்ள கிலோவியா எரிமலை வெடித்து சிதறும்போது, மார்க் ஸ்டீவர்ட் என்ற நபர் தனது நீண்ட நாள் காதலி ஒலிவியாவிடம் தனது காதலை தெரிவித்தார். அவரும் காதலை ஏற்றுக்கொண்டார்.

    இந்த அழகிய தருணத்தின் புகைப்படங்களை மார்க் ஸ்டீவர்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    புகைப்படங்களில், எரிமலைக்குழம்பு காற்றில் பறக்கிறது. மார்க் ஸ்டீவர்ட் தனது காதலியின் முன்பு மண்டியிட்டு மோதிரத்தை நீட்டியபடி உள்ளார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. 

    ×