என் மலர்
நீங்கள் தேடியது "இளம்பெண்"
- இந்த 2 வினாடி வீடியோ இணையத்தில் வைரலாகி 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
- இளம் பெண், ஆட்டோ ரிக்ஷாவில் பயணிக்கும்போது கேமராவைப் பார்க்கிறாள்.
இளம்பெண் ஒருவரின் 2 வினாடி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், வெள்ளை நிற உடையணிந்து, வெள்ளி நகைகள் மற்றும் அச்சிடப்பட்ட பந்தனா அணிந்த இளம் பெண், ஆட்டோ ரிக்ஷாவில் பயணிக்கும்போது கேமராவைப் பார்க்கிறாள்.
இந்த 2 வினாடி வீடியோ இணையத்தில் வைரலாகி 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இதன்மூலம் ரூ. 5 லட்சம் வருவாயை அப்பெண் ஈட்டியது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
- நிர்வாண படங்களை குடும்பத்தினருக்கு அனுப்பி விடுவோம் என்று மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.
- போலீசார் வழக்குப்பதிந்து கவுரி, அன்சிகா, முகம்மது அபிப் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் "ஹனி டிராப்" மோசடி அதிகளவில் நடந்துவருகிறது. இதில் வாலிபர்கள் மட்டுமின்றி வயதானவர்கள், வியாபாரிகள் உள்ளிட்டவர்களும் சிக்கி லட்சக்கணக்கில் பணத்தை இழந்து வருகின்றனர்.
அவமானம் கருதி பலர் பணத்தை இழந்த விவகாரத்தை வெளியே கூறுவதில்லை. இதனால் "ஹனி டிராப்" மோசடியில ஈடுபடும் கும்பல் தொடர்ந்து கைவரிசை காட்டியபடி இருக்கிறது. இந்தநிலையில் வாலிபர் ஒருவர் "ஹனி டிராப்" மோசடியில் சிக்கி ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இழந்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
அவர் கூறிய புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், 2 பெண்கள் உள்பட 3 பேரை கைது செய்துள்ளனர். அது பற்றிய விவரம் வருமாறு:-
கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கு, மாவேலிக்கரையை சேர்ந்த கவுரி நந்தா என்ற 20 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி வாலிபருடன், இளம்பெண் நட்பாக பழகி வந்துள்ளார்.
இதையடுத்து அந்த வாலிபரை ஆசைவார்த்தை கூறி கோழிக்கோடு குந்த மங்கலம் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு வருமாறு அழைத்தார். அதன்பேரில் அந்த வாலிபரும் இளம் பெண்ணின் வீட்டுக்கு சென்றிருக்கிறார். அப்போது அந்த வாலிபரை அந்த இளம்பெண் நிர்வாண படங்கள் எடுத்துள்ளார்.
பின்பு அந்த படங்களை காண்பித்து இளம்பெண் கவுரி நந்தா, மேலும் அவருடன் இருந்த திருரங்கடி பனஞ்சேரியை சேர்ந்த அன்சிகா(28), மற்றும் அவரது கணவர் முகமது அபிப் ஆகியோர் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
நிர்வாண படங்களை குடும்பத்தினருக்கு அனுப்பி விடுவோம் என்று மிரட்டி பணம் கேட்டுள்ளனர். இதையடுத்து அந்தவாலிபர் தன்னிடம் இருந்த பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் கவுரி உள்ளிட்ட 3 பேரும் அந்த வாலிபரை தொடர்ந்து மிரட்டி ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பறித்துள்ளனர்.
இதனால் அவர்களின் மீது அந்த வாலிபர், போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கவுரி, அன்சிகா, முகம்மது அபிப் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
- வீட்டுக்கு வந்ததும் நீதுவுக்கு வாந்தி-மயக்கம் என பல உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது.
- நீதுவின் உடலில் ரத்தஓட்டம் சீராக இல்லாமல் போனதால் இடது காலில் 5 விரல்கள் மற்றும் வலது கையில் 3 விரல்களை துண்டிக்கும் நிலை ஏற்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் முத்தத்தரா ஸ்ரீவராகம் பகுதியை சேர்ந்த இளம்பெண் நீது (வயது31). இவர் திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல மென்பொருள் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.
இந்தநிலையில் அவர் தனது வயிற்று பகுதியில் இருந்த கொழுப்புகளை நீக்குவதற்காக திருவனந்தபுரம் கஜக்கூட்டம் பகுதியில் உள்ள தனியார் அழகுசாதன மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதற்காக அந்த மருத்துவமனையில் நீதுவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 22-ந்தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது.
அறுவை சிகிச்சை முடிந்து மறுநாள் வீடு திரும்பினார். வீட்டுக்கு வந்ததும் நீதுவுக்கு வாந்தி-மயக்கம் என பல உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. மேலும் அவருக்கு ரத்த அழுத்தமும் மிகவும் குறைந்தது. இதையடுத்து நீதுவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மருத்துவமனையை, அவரது கணவர் பத்மஜித் தொடர்பு கொண்டு பேசினார்.
ஆனால் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மருத்துவர்கள் இல்லை. ஆகவே மறுநாள் வருமாறு மருத்துவமனை தரப்பில் கூறியிருக்கின்றனர். ஆனால் நீதுவின் உடல்நிலை மிகவும் மோசமாகியபடியே இருந்தது. இதனால் நீதுவை அவரது கணவர் வேறொரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தார்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் நீதுவின் உடலில் ரத்தஓட்டம் சீராக இல்லாமல் போனதால் இடது காலில் 5 விரல்கள் மற்றும் வலது கையில் 3 விரல்களை துண்டிக்கும் நிலை ஏற்பட்டது.
அவற்றை அகற்றாவிடில் நீதுவின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால், அவரது கையில் 3 விரல்களும், காலில் 5 விரல்களும் வெட்டி அகற்றப்பட்டன. கொழுப்பு அகற்றும் அறுவை சிகிச்சை தவறாக செய்ததன் காரணமாகவே தனது மனைவி 9 விரல்களை இழந்துவிட்டதாக நீதுவின் கணவர் பத்மஜித் குற்றம்சாட்டினார்.
மேலும் அதுகுறித்து நீதுவுக்கு கொழுப்பு அகற்றும் அறுவை சிகிச்சை செய்த தனியார் அழகுசாதன மருத்துவமனையின் மீது போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், அந்த மருத்துவமனையின் உரிமையாளரான டாக்டர் பிபிலாஷ் மீது வழக்கு பதிந்தனர். மேலும் அவரது மருத்துமனை உடனடியாக மூடப்பட்டது.
கொழுப்பு அகற்றும் அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளம்பெண் 9 விரல்களை இழந்த சம்பவம் திருவனந்தபரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- என் முதுகில் தட்ட மர்ம நபர் 3-வது முறையாகவும் யூடர்ன் எடுத்து என்னை பின் தொடர்ந்து வருவதை பார்த்தேன்.
- எப்போதும் பரபரப்பாக காணப்படும் அந்த பகுதியில் நான் பொதுமக்களிடம் உதவி கேட்டேன்.
பெங்களூரு:
பெங்களூருவை சேர்ந்த ஒரு இளம்பெண் கடந்த மாதம் 30-ந் தேதி இரவு நடந்து சென்றபோது பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் அத்துமீறியுள்ளார். இதையடுத்து அந்த நபரிடம் இருந்து தப்பிக்க அந்த பெண் கடுமையாக போராடினார். அப்போது சாலையில் நடந்து சென்ற மக்கள், வாகனத்தில் சென்றவர்களிடம் உதவி கேட்டும் யாரும் அந்த இளம்பெண்ணுக்கு உதவி செய்ய முன் வரவில்லை. இதையடுத்து அவர் போலீசில் புகார் செய்து உள்ளார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண் தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து ஒரு தனியார் டி.வி.யில் பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். அது பற்றிய விவரம் வருமாறு,
பெங்களூருவில் போக்குவரத்து நிறைந்த ஐ.டி. பூங்கா பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு 11.30 மணியளவில் மாரத்தஹள்ளி பகுதியில் உள்ள ஈகோவேர்டில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபர் திடீரென எனது முதுகில் தட்டினார். எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. யாரோ ஒருவர் பொறுப்பற்ற முறையில் சென்றதால் தன்மீது அவரது கை மோதியிருக்கும் என்று கருதினேன். ஆனாலும் மீண்டும் அதேபோல் என் முதுகில் தட்டினார். இதையடுத்து யாரோ ஒருவர் வேண்டும் என்றே இதுபோல் செய்கிறார் என்று தெரியவந்தது. இதையடுத்து நான் உதவி கேட்டு கத்தினேன். ஆனால் யாரும் உதவ முன்வரவில்லை.
என் முதுகில் தட்ட மர்ம நபர் 3-வது முறையாகவும் யூடர்ன் எடுத்து என்னை பின் தொடர்ந்து வருவதை பார்த்தேன். இதையடுத்து நான் உதவிக்காக மீண்டும் கத்தினேன். அப்போது நிறைய பேர் அங்கு இருந்தனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் அந்த பகுதியில் நான் பொதுமக்களிடம் உதவி கேட்டேன். மேலும் அந்த வழியாக வந்த ஆட்டோ டிரைவர்களை நிறுத்தி உதவி கேட்டேன். ஆனால் எனக்கு உதவ யாரும் முன்வரவில்லை. இந்த சம்பவத்திற்கு பின்பு நான் அவசர அவசரமாக ஈகோவேர்டில் உள்ள பாதுகாப்பு அறைக்கு சென்றேன். அங்கு எனக்கு உதவி கிடைத்தது.
பின்னர் மறுநாள் போலீசில் புகார் செய்தேன். இதையடுத்து போலீசார் அந்த மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்திற்கு பிறகு தான் அதிக எச்சரிக்கையுடன் இருப்பதாகவும், இதுபோன்ற சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது என்பது எனக்கு தெரியும். இவ்வளவு கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பாதுகாப்பு காவலர்கள் கொண்ட பகுதியில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தது என்பது மிகவும் ஆச்சரியமான விசயமாக கருதுகிறேன் என்றார். இந்த சம்பவம் தற்போது பெங்களூருல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
- போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெங்களூரு:
மேற்கு வங்காள மாநிலம் கூச் பெகர் பகுதியை சேர்ந்த சுமார் 20 வயது இளம்பெண் ஒருவர் கேரளாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி மங்களூருவில் உள்ள நிறுவனங்களில் வேலை தேடுவதற்காக தனது நண்பர்களுடன் அந்த இளம்பெண் வந்தார். அப்போது அவர்களுக்குள் திடீரென்று தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் இளம்பெண்ணின் செல்போன் சேதம் அடைந்தது. இதையடுத்து அவர் செல்போனை பழுது பார்க்க ஒரு ஆட்டோவில் ஏறி சென்றார்.
அப்போது அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது. பின்னர் இரவு ரெயில் நிலையத்தில் தன்னை இறக்கி விடும்படியும், சொந்த ஊருக்கு செல்ல இருப்பதாகவும் இளம்பெண் ஆட்டோ டிரைவரிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஆட்டோ டிரைவர் இளம்பெண்ணை ரெயில் நிலையத்துக்கு அழைத்து செல்லாமல் உல்லால் அருகே முன்னூர் பகுதியில் உள்ள நேத்ராவதி ஆற்றங்கரைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து இளம்பெண்ணை அவர் வலுக்கட்டாயமாக மதுவை குடிக்க வைத்ததாக தெரிகிறது.
இதனால் அவர் சுயநினைவை இழந்துள்ளார். பின்னர் ஆட்டோ டிரைவர், தனது நண்பர்கள் 2 பேரை அங்கு வரவழைத்துள்ளார். அங்கு வைத்து 3 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
இதையடுத்து அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த நிலையில் அதிகாலை 1.30 மணி அளவில் அவருக்கு சுயநினைவு திரும்பியது. அப்போது தான் தன்னை ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் கூட்டு பலாத்காரம் செய்தது அவருக்கு தெரியவந்தது.
இதையடுத்து அவர் உள்ளூர் மக்கள் மற்றும் ஒய்சாலா போலீசார் உதவியுடன் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து அந்த பெண், உல்லால் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
மேலும் இளம்பெண் ஆட்டோ டிரைவருக்கு கூகுள் பே மூலம் பணம் செலுத்தியிருந்தார். அதன் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் முல்கியை சேர்ந்த பிரபுராஜ் (வயது 38) என்பது தெரியவந்தது. மேலும் அவர் தான் இளம்பெண்ணை கடத்தி சென்றதும், தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.
பின்னர் போலீசார் ஆட்டோ டிரைவர் பிரபுராஜ், அவரது நண்பர்களான கும்பாலாவை சேர்ந்த மிதுன் (30), மணீஷ் (30) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் குடும்பத்தினர் அவரை ராகுலுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
- திருமணத்திற்கு பிறகும் ராகுலின் மனைவி அவரது காதலனுடன் பேசி, பழகி வந்துள்ளார்.
போபால்:
மத்திய பிரதேச மாநிலம் புர்ஹான்பூர் பகுதியை சேர்ந்தவர் கோல்டன் பாண்டே என்ற ராகுல் (வயது25). இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 17 வயதான மைனர் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
ஆனால் அந்த பெண் யுவராஜ் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் குடும்பத்தினர் அவரை ராகுலுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
திருமணத்திற்கு பிறகும் ராகுலின் மனைவி அவரது காதலனுடன் பேசி, பழகி வந்துள்ளார். அப்போது ராகுலை கொலை செய்ய இருவரும் திட்டம் தீட்டி உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 13-ந்தேதி ராகுல் தனது மனைவியுடன் ஷாப்பிங் சென்றுள்ளார். இருவரும் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர். இந்தூர்-இச்சாப்பூர் நெடுஞ்சாலையில் உள்ள கல்லூரி அருகே சென்ற போது ராகுலின் மனைவி தனது செருப்பு கழன்று கீழே விழுந்து விட்டது. எனவே மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு கூறியுள்ளார்.
உடனே ராகுல் மோட்டார் சைக்கிளை நிறுத்திய போது அங்கு மறைந்திருந்த யுவராஜின் நண்பர்கள் 2 பேர் பீர்பாட்டிலால் ராகுலை சரமாரியாக தாக்கினர். மேலும் உடைந்த பாட்டிலால் ராகுலின் உடலில் சுமார் 36 முறை குத்திக்கொலை செய்தனர்.
பின்னர் ராகுலின் மனைவி தனது கள்ளக்காதலன் யுவராஜ்க்கு வீடியோ கால் மூலம் பேசியுள்ளார். அப்போது கொலை செய்யப்பட்ட ராகுலின் உடலை காட்டியுள்ளார். பின்னர் ராகுலின் உடலை காட்டுப்பகுதியில் வீசி விட்டு 3 பேரும் தலைமறைவாகி உள்ளனர்.
இந்நிலையில் வெளியே சென்ற ராகுல் மற்றும் அவரது மனைவியையும் காணவில்லை என அவர்களது உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது ராகுல் உடல் காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ராகுலை அவரது மனைவி தனது கள்ளக்காதலனின் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்யதது தெரியவந்தது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த ராகுலின் மனைவி, அவரது கள்ளக்காதலன் யுவராஜின் நண்பர்களான லலித் பாட்டீல் மற்றும் ஒரு சிறுவன் என மொத்தம் 4 பேரை கைது செய்தனர்.
- பைக் மோதி இளம்பெண் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
- போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகனத்தை அதிவேகமாக ஓட்டி வந்தவர்களை விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
புதூர் ராமலட்சுமி நகரை சேர்ந்த பாண்டி மகள் காதம்பிரியா (24). சம்பவத்தன்று காலை இவர் தல்லாகுளம் கோகலே ரோட்டில் நடந்து சென்றார். வணிக வளாகம் அருகே, வேகமாக வந்த பைக் மோதியது.
இதில் காதம்பிரியா படுகாயம் அடைந்தார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மதுரை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகனத்தை அதிவேகமாக ஓட்டி வந்த தேனி மாவட்டம், சிப்பலாக்கோட்டை, அம்பிகை கோவில் தெருவை சேர்ந்த மணிவண்ணன் (34) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊமச்சிகுளம், புது நத்தம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சேர்ந்த ராஜாராம் மனைவி தனம் (80). இவர் வெளியூருக்கு செல்வதற்காக, குடிநீர் வடிகால் வாரிய காலனி பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார்.
வேகமாக வந்த பைக் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மூதாட்டி தனத்தை உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிவேகமாக பைக்கை ஓட்டி வந்த மதுரை இளம்பூர் இளங்கோ முருகன் ராம்பாபு (22) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்நிலையில் கடந்த 5-ந் தேதி தாய் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற நீதுலால் திடீரென கைக்குழந்தையுடன் மாயமாகி உள்ளார்.
- ஸ்டாலின் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு
கன்னியாகுமரி :
மார்த்தாண்டத்தை அடுத்த பாகோடு கோய்க்கா விளையை சேர்ந்தவர் ஸ்டாலின் (வயது 24).
இவர் பாகோடு பட்ட விளையை சேர்ந்த நீதுலால் (22) என்பவரை செப்டம்பர் 2019-ல் திருமணம் செய்தார். இதை அடுத்து அவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உண்டு. இந்நிலையில் கடந்த 5-ந் தேதி தாய் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற நீதுலால் திடீரென கைக்குழந்தையுடன் மாயமாகி உள்ளார்.
இதுகுறித்து ஸ்டாலின் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
- ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை
கன்னியாகுமரி:
களியக்காவிளை போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட கூட்டப்புளி கிழங்குவிளையைச் சேர்ந்தவர் பிஜு (வயது 38) இவர் படந்தாலுமூட்டில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார்.
இங்கு திருமணமான 20 வயது இளம்பெண் வேலை செய்து வந்துள்ளார். அவரை மிரட்டி அருகே நின்று, பிஜு போட்டோ எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கர்ப்ப மாக இருந்ததால், இளம் பெண் பணிக்கு வரவில்லை என தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பிஜு, இளம்பெண்ணுடன் தான் இருக்குமாறு எடுத்த போட்டோக்களை அவரது கணவர் மொபைல் போனுக்கு அனுப்ப போவ தாக மிரட்டி உள்ளார். மேலும் மற்றொரு மொபைல் போனிலிருந்து அந்தப் போட்டோக்களை பெண்ணின் கணவருக்கு அனுப்பி உள்ளார். இதனால் பெண்ணுக்கும் கணவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தாயார் வீட்டுக்கு வந்த பெண் எறும்பு பொடி(விஷம்) யை தண்ணீரில் கலக்கி குடித்து உள்ளார்.
இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து களியக்கா விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்கு மார் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து பிஜூவை தேடி வருகின்றனர்.
- மணமகனுக்கு நோய் இருப்பதாக புகார் கூறியதால் பரபரப்பு
- போலீசார் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம் பெண்ணிடம் விசாரணை
கன்னியாகுமரி:
திருவட்டாரை அடுத்த செவரக்கோடு மருதாக்க விளையைச் சேர்ந்த 32 வயது வாலிபருக்கும் வெள்ளாங்கோடு பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது.
பெற்றோரை இழந்த இளம்பெண் கான்வெ ண்டில் படித்து வளர்ந்தவர். இவர்களது திருமணம் நேற்று நடை பெறுவதாக இருந்தது.தேமானூரில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் மாலை 3 மணிக்கு திருமணம் நடத்த திட்டமிடப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.
உறவினர்கள் உள்பட பலரும் விழாவுக்கு வந்த நிலையில், மணப்பெண் வீட்டில் இருந்து யாரும் வராதது பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக விசாரித்தபோது, மணமகனுக்கு மஞ்சள் காமாலை நோய் இருக்கிறது. எனவே திருமணத்தில் எங்களுக்கு விருப்பமில்லை என மணமகள் வீட்டார் கூறி உள்ளனர். இதனைக் கேட்டு மணமகன் வீட்டாரும் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக திருவட்டார் போலீசில் மணமகன் புகார் செய்தார்.எனக்கு நோய் இருக்கிறது என நான் ஏற்கனவே கூறியுள்ளேன். என்னை திட்டமிட்டு அவமானப்ப டுத்தி, மனதளவில் வேதனைப்படுத்தி யுள்ளார்கள் என புகாரில் அவர் கூறியிருந்தார்.
மேலும் மணப்பெண்ணை அழைத்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம் பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், மணமகனுக்கு மஞ்சள் காமாலை நோய் இருப்பது எனக்கு இன்று காலையில் தான் தெரியும். ஏற்கனவே இவருக்கு நோய் இருப்பது தெரிந்திருந்தால் திருமணத்திற்கே சம்மதித்து இருக்க மாட்டேன்.
ஏற்கனவே தாய், தந்தையை இழந்து, உறவினர் பாதுகாப்பில்தான் வளர்ந்து வருகிறேன். எனவே இவரை திருமணம் செய்ய முடியாது என கூறியதாக போலீசார் தெரிவித்தனர். திருமண நாளில் மணமகள் திருமணத்தை நிறுத்தியது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற இளம்பெண் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
- இதனை கண்ட தீயணைப்பு வீரர்கள் அவரை தடுத்து அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் பரளை பகுதியை சேர்ந்தவர் லட்சுமி(வயது 26). இவர் நேற்று தனது கைக்குழந்தையுடன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்தார். அவர் தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் வாழ்வதாகவும், திருமணத்தின் போது பெற்றோர்கள் கொடுத்த 10 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்தை தர மறுக்கிறார் என்றும், அவரிடம் இருந்து தனது நகை மற்றும் பணத்தை மீட்டுத் தருமாறு கலெக்டரிடம் மனு அளித்துவிட்டு வெளியே வந்தார்.
பின்னர் லட்சுமி திடீரென்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் தன் மீதும் தன் குழந்தை மதிவர்ஷிதா மீதும் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை கண்ட தீயணைப்பு வீரர்கள் அவரை தடுத்து அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர். போலீசார் பேரிகாட் அமைத்து நுழைவு வாயில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போதிலும் போலீசாருக்கு 'டிமிக்கி' கொடுத்து பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மனு கொடுக்க வந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் கையில் வைத்திருந்த மண்எண்ணை கேனை தன் மீதும் குழந்தை மீதும் தனக்குத்தானே ஊற்றி தற்கொலைக்கு முயன்றதாக கேணிக்கரை சப்-இன்ஸ்பெக்டர் கார்மேகம் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் இளம்பெண் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
- சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அடுத்த நைனா கார்டு பகுதி சேர்ந்தவர் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
- விரத்தி அடைந்த அனு ஸ்ரீ இன்று காைல பூச்சி கொல்லி விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அடுத்த நைனா கார்டு பகுதி சேர்ந்தவர் அனுஸ்ரீ (வயது 26). இவருக்கும் நைனா காடு பங்களா தோட்டம் பகுதியை சேர்ந்த கவுதம் என்பவருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக தம்பதிக்கு இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மன வேதனை அடைந்த அனுஸ்ரீ பெற்றோர் வீட்டில் குடியிருந்து வந்தார். இருப்பினும் தொடர்ந்து தொந்தரவு கொடுக்கவே விரத்தி அடைந்த அனு ஸ்ரீ இன்று காைல பூச்சி கொல்லி விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






