என் மலர்
நீங்கள் தேடியது "மத்தியப்பிரதேசம்"
- இந்தூரில் கழிவு நீர் கலந்த குடிநீர் குடித்து 11 பேர் உயிரிழப்பு.
- விசாரணை நடத்த முதல்வர் குழு அமைத்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் தூய்மையான நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இங்குள்ள பாகிரத்புரா பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் கடந்த 24-ந்தேதி முதல் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கழிவுநீர் கலந்த மாசுபட்ட குடிநீரை குடித்ததுதான் இதற்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில் முதல்கட்டமாக 7 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த மேலும் 4 பேர் தற்போது பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசிய தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, விஷம் விநியோகிக்கப்படுகிறது என தனது விமர்சித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி, "நிர்வாகம் கும்பகர்ணன் போன்று தூங்கிக் கொண்டிருக்கையில் இந்தூரில் தண்ணீர் இல்லை, விஷம் விநியோகிக்கப்படுகிறது.
வீடுதோறும் துயரம் பரவியுள்ளது, ஏழைகள் நிர்க்கதியாய் உள்ளனர். இதற்கெல்லாம் மேலாக, பாஜக தலைவர்களின் ஆணவமான பேச்சுகள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தேவைப்பட்டது; அரசாங்கம் அதற்கு பதிலாக ஆணவத்தை கொடுத்துள்ளது.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தூர் கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்து பொதுமக்கள் உயிரிழந்தது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி பேசிய, மத்திய பிரதேச மாநில தலைவரும், பாராளுமன்ற விவகாரத்துறை துணை மந்திரியுமான கைலாஷ் விஜவர்கியா சர்ச்சைக்குரிய வகையில் பதில் அளித்த்திருந்தார்.
- கழிவுநீர் கலந்த மாசுபட்ட குடிநீரை குடித்தது தான் இதற்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது.
- குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இந்தூர்:
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் தூய்மையான நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இங்குள்ள பாகிரத்புரா பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் கடந்த 24-ந்தேதி முதல் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கழிவுநீர் கலந்த மாசுபட்ட குடிநீரை குடித்தது தான் இதற்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில் முதல்கட்டமாக 7 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த மேலும் 4 பேர் தற்போது பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மத்திய பிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ், 3 நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். ஒரு மண்டல அதிகாரி மற்றும் ஒரு உதவி பொறியாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்-மந்திரி மோகன் யாதவ் அறிவித்தார்.
குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இந்த பிரச்சனை கடந்த 6 மாதங்களாக நீடித்து வருவதாகவும், இதன் விளைவாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு இருப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் மீது பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தொடர்ந்து குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் அந்த பகுதியில் வசிக்கும் 1,400-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- நேற்றுவரை மூன்று பேர் உயிரிழந்தநிலையில், இன்று இறப்பு எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பகீரத்புராவில், கழிவுநீர் கலந்த குடிநீரைப் பருகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டிசம்பர் 25 அன்று இந்தூர் நகராட்சி மூலம் விநியோகிக்கப்பட்ட தண்ணீரின் சுவை வித்தியாசமாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் பகீரத்புரா குடியிருப்பாளர்கள் புகார் அளித்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அதனைத் தொடர்ந்து, பலரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் நேற்றுவரை மூன்று பேர் உயிரிழந்தநிலையில், இன்று இறப்பு எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.
மூன்றுபேர் உயிரிழந்ததை அடுத்து நேற்று நள்ளிரவில் முதலமைச்சர் மோகன் யாதவ் நகராட்சி மற்றும் பொதுச் சுகாதாரத் துறை அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுத்தார். இதன்படி, மண்டல அதிகாரி சாலிகிராம் சித்தோலே மற்றும் உதவிப் பொறியாளர் யோகேஷ் ஜோஷி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பொதுச் சுகாதாரப் பொறியியல் துறை கண்காணிப்புப் பொறியாளர் சுபம் ஸ்ரீவஸ்தவாவும் உடனடியாகப் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.
இது ஒரு சோகமான நிகழ்வு எனக்குறிப்பிட்டுள்ள அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தார். சிகிச்சையில் இருப்பவர்களின் முழு மருத்துவச் செலவையும் அரசே ஏற்கும் எனவும் தெரிவித்தார். இதனிடையே இச்சம்பவத்திற்கு அம்மாநில காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
- அவளுடைய எதிர்காலத்திற்கான என் பெற்றோரின் கனவுகளுக்கான இறுதிச்சடங்கு
- ஒரு இளம் பெண் தனது வாழ்க்கைத் துணையைத் தானாகவே தேர்ந்தெடுப்பது உண்மையிலேயே குற்றமா?
மத்தியப் பிரதேசத்தில் 23 வயது பெண் ஒருவர் தனது சொந்த விருப்பப்படி திருமணம் செய்துகொண்டதால், அவரது உருவப்பொம்மையை வைத்து குடும்பத்தினர் இறுதிச்சடங்கு செய்து, அதனை எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் உறவுகள், மரபுகள் மற்றும் சமூக சிந்தனை குறித்த கேள்வியையும் எழுப்பியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் விதிஷா நகரைச் சேர்ந்த சவிதா குஷ்வாஹா என்ற பெண் வீட்டிலிருந்து திடீரென காணாமல் போயுள்ளார். இதனால் குடும்பத்தினர் அவரை ஊர்முழுவதும் தேடியுள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால், போலீசிடம் புகாரளித்துள்ளனர். பல நாட்கள் தேடிய பிறகு, போலீசார் சவிதாவைக் கண்டுபிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு குடும்பத்தினரும் வரவழைக்கப்பட்டனர்.
போலீசார் சவிதாவை குடும்பத்தினருடன் செல்ல கூறியுள்ளனர். ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்த சவிதா, அவர்களுடன் செல்ல விருப்பமில்லை எனவும், தான் ஒருவரை காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொண்டு அவருடன் வாழ விரும்புவதாகவும் தெரிவித்தார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், துக்கத்திலும், கோபத்திலும் எடுத்த ஒரு முடிவு இப்போது இணையத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
சவிதாவின் குடும்பத்தினர் அவரைப்போன்றே ஒரு உருவப்பொம்மையை வடிவமைத்து, அதற்கு இறுதி சடங்குகள் செய்து, அதனை சவப்பெட்டியில் வைத்து மேள, தாளத்துடன் இறுதி ஊர்வலம் நடத்தினர். தொடர்ந்து இடுகாட்டிற்கு எடுத்துச்சென்று எரித்த குடும்பத்தினர் தங்கள் மகள் இறந்துவிட்டதாக ஊர்முழுவதும் அறிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்களை இணையத்தில் பார்த்த பலரும் ஒரு இளம் பெண் தனது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது உண்மையிலேயே குற்றமா? குடும்பம் மற்றும் சமூகத்தின் விதிமுறைகள் ஒருவரின் சொந்த வாழ்க்கையை விட முக்கியமானதாக மாறுகிறதா? என பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
மறுபக்கம் இதுதொடர்பாக பேசியுள்ள சவிதாவின் சகோதரர், "எங்கள் குடும்பத்தை பொறுத்தவரை இது சகோதரியின் இழப்பு மட்டுமல்ல. பல வருட வளர்ப்பு, நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகளின் சிதைவு. சவிதா வீட்டில் பாசமாக வளர்க்கப்பட்டார். அவளுடைய ஒவ்வொரு தேவையும், விருப்பமும் பூர்த்தி செய்யப்பட்டது. ஆனாலும், அவள் வீட்டை விட்டு வெளியேறியது குடும்பத்தை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது சவிதாவின் இறுதிச்சடங்கு அல்ல. அவளுடைய எதிர்காலத்திற்கான என் பெற்றோரின் கனவுகளுக்கான இறுதிச்சடங்கு" என தெரிவித்தார்.
- ஜபுவா மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.
- மேடையில் இருந்து பிரதமர் மோடி கவனித்தார். உடனே அவர் அந்த சிறுவனிடம் பேசினார்.
போபால்:
பிரதமர் நரேந்திர மோடி மத்திய பிரதேச மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு ரூ.7,500 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் ஜபுவா மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். பிரதமர் மோடி பேசிக் கொண்டிருந்தபோது அவரை பார்த்து உற்சாகமடைந்த சிறுவன் ஒருவன் அவரை நோக்கி உற்சாகமாக கையசைத்துக் கொண்டே இருந்தான்.
இதை மேடையில் இருந்து பிரதமர் மோடி கவனித்தார். உடனே அவர் அந்த சிறுவனிடம் பேசினார். 'மகனே, உன் அன்பை நான் பெற்றுவிட்டேன். தயவு செய்து உன் கையை தாழ்த்தி சாதாரணமாக வைத்துக் கொள். இல்லாவிட்டால் கை வலிக்க தொடங்கும்' என்றார்.
பிரதமர் மோடியின் சிறுவனை பார்த்து கூறிய இந்த வார்த்தைகள் கூட்டத்தில் இருந்த பொதுமக்கள் அனைவரையும் கவர்ந்தது. இந்த நிலையில் பிரதமர் மோடியை பார்த்து சிறுவன் கையசைத்ததும், சிறுவனை பார்த்து பிரதமர் மோடி பேசியதும் வீடியோவாக இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
- எங்களை தண்ணீர் கூட எடுக்க விடாமல் தடுக்கிறார்கள் சார் என்று அப்பெண் அந்த வீடியோவில் ஆதங்கப்படுகிறார்.
- அவர்களின் திருமணத்திற்கு எங்களை அழைப்பார்கள், ஆனால் குப்பை தொட்டி அருகில் எங்களை அமர சொல்வார்கள்.
இந்திய ஒற்றுமை நீதி பயணத்தில் மத்தியப்பிரதேச மாநிலம் புந்தேல்கண்டில் உள்ள பட்டியலின பெண்களிடம் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி உரையாடிய பழைய வீடியோ வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில், செருப்பு இல்லாமல் நாங்கள் கிராமத்திற்குள் நுழைந்தால் எங்களை 'கெட்ட சகுணம்' என கூறுவார்கள். செருப்பு இல்லாமல் ஏன் எங்கள் கிராமத்திற்குள் நுழைகிறீர்கள்?' என கேட்பார்கள் என ஒரு பெண் கூறுகிறார்.
அதற்கு, உங்கள் சமூகத்தில் மொத்தம் எத்தனை பேர்? என்று ராகுல்காந்தி கேட்கிறார். மொத்தம் 4 குடும்பங்கள் உள்ளன என அப்பெண் பதில் அளிக்கிறார்.
மேலும், தண்ணீர் இறைக்க கிணற்றுக்கு சென்றால் கூட மணிக்கணக்கில் காத்திருக்க சொல்வார்கள். தூரமா சென்று உட்கார் என துரத்துவார்கள் எங்களை தண்ணீர் கூட எடுக்க விடாமல் தடுக்கிறார்கள் சார் என்று அப்பெண் அந்த வீடியோவில் ஆதங்கப்படுகிறார்.
அதற்கு, யார் உங்களை இப்படி செய்கிறார்கள்? என்று ராகுல்காந்தி கேள்வி கேட்க, உயர்சாதியை சேர்ந்த மக்கள் தான். பிராமணர்கள், தாகூர், அகிர் சமூகத்தினர் தான் எங்கு சென்றாலும் எங்களை தடுப்பார்கள்.
அவர்களின் திருமணத்திற்கு எங்களை அழைப்பார்கள், ஆனால் குப்பை தொட்டி அருகில் எங்களை அமர சொல்வார்கள். இல்லையென்றால் கால்வாய் அருகே அமர சொல்வார்கள். சேரில் அமர்ந்து சாப்பிட்டால் எங்களை அங்கிருந்து விரட்டி அடிப்பார்கள். எப்படி நாங்கள் சாப்பிடுவது சார். எங்கள் இதயம் முழுவதும் துக்கம் தான் நிறைந்துள்ளது
இந்த வலிகளை எல்லாம் நாங்கள் தாங்கி கொண்டோம். ஆனால் எங்கள் குழந்தைகளால் தாங்க முடியாது. எல்லா திசைகளிலும் எங்களுக்கு பிரச்சனைகள் உள்ளது. இது சுதந்திர நாடு என சொல்கிறார்கள். ஆனால் இன்னும் நாங்கள் மோசமான நிலையில் தான் உள்ளோம். அனைத்து வகையிலும் மிகவும் மோசமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம்.
நீங்கள் என்னை செருப்பு அணிய அனுமதித்தால் அதை அணிவேன்... இல்லையென்றால் கையிலேயே வைத்திருக்கிறேன் என அப்பெண் சொல்ல, செருப்பை அணிந்து கொள்ளுங்கள் என்று அப்பெண்ணுக்கு ராகுல்காந்தி செருப்பு அணிவிக்கிறார்.
இறுதியில் எங்கள் பிரச்சினைகளை நீங்கள் தான் தீர்க்க வேண்டும் என்று அப்பெண் ராகுல்காந்தியிடம் கோரிக்கை வைக்கிறார்.
வட மாநிலங்களில் உள்ள பட்டியலின மக்களின் மோசமான நிலையை இந்த வீடியோ நமக்கு எடுத்து காட்டுகிறது.
- ரீனா 4 மாத கர்ப்பமாக இருந்துள்ளார்.
- அடிக்கடி வரதட்சணை கேட்டு ரீனாவை அவரது மாமியார் கொடுமைப்படுத்தியுள்ளார்.
மத்தியப்பிரதேசத்தில் கர்ப்பிணி பெண்ணின் கை கால்களை வெட்டி, தீ வைத்து எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தண்டி குர்த் கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கர்ப்பிணி பெண் ரீனா கொலை செய்யப்பட்டதாக நேற்று அக்கிராமத்தை சேர்ந்த ஒருவர் ரீனாவின் குடும்பத்திடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ரீனாவின் அவரது தந்தை ராம் பிரசாத் போலீஸ்காரர்களுடன் தண்டி குர்த் கிராமத்தை அடைந்த போது எரிந்து கொண்டிருந்த ரீனாவின் உடலின் அருகிலிருந்து அவரது மாமியார் தப்பியோடினார்.
பின்னர் எரிந்து கொண்டிருந்த ரீனாவின் உடலை அணைத்த குடும்பத்தினர், உடலை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரீனாவிற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு மிதுன் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. அவர்களுக்கு ஒன்னரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளார். தற்போது ரீனா 4 மாத கர்ப்பமாக இருந்துள்ளார்.
இந்நிலையில், அடிக்கடி வரதட்சணை கேட்டு ரீனாவை அவரது மாமியார் கொடுமைப்படுத்தியதாக ரீனாவின் குடும்பத்தினர் தெரிவித்தனர். கணவர் மற்றும் மாமியாரின் வரதட்சணை கொடுமையால் தான் ரீனா கொலை செய்யப்பட்டதாக அவரின் குடும்பம் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- எந்த ரேட்டில் புடவை வேணும் என்று கடைக்காரர் கேட்டுள்ளார்
- அங்கிள் என்று கூறியதை தாங்க முடியாமல் விஷாலிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
மத்யபிரதேசத்தில் மனைவி முன் தன்னை அங்கிள் என்று கூப்பிட்ட நபரை கணவர் சரமாரியாக தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மத்தியப்பிரதேச மாநிலம், போபாலின் ஜட்கேடி பகுதியில் உள்ள ஜவுளிக் கடைக்கு ரோகித் என்ற நபர் கடந்த சனிக்கிழமை தனது மனைவியுடன் துணி வாங்க வந்துள்ளார். கடையில் வேலை பார்த்து வந்த விஷால் சாஸ்த்ரி அவர்களுக்கு புடைவைகளை எடுத்து காட்டியுள்ளார்.
எந்த ரேட்டில் புடவை வேணும் என்று கேட்டதற்கு ஆயிரம் ருபாய் ரேஞ்சில் காட்டுங்கள் என்று ரோகித் சொல்லியுள்ளார். அதற்கு விஷால் கூறியதாவது, அங்கிள் அதற்கு மேல் உள்ள விலையிலும் புடவைகளை காட்டுகிறேன் என்று கூறியுள்ளார். தனது மனைவி முன் ஒருவன் தன்னைஅங்கிள் என்று கூறியதை தாங்க முடியாமல் விஷாலிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து தனது மனைவியுடம் வெளியேறிய ரோகித் உடன் சிலரை அழைத்துவந்து விஷலை கடைக்குள் இருந்து வெளியே இழுத்துவந்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மத்தியப்பிரதேசம் மாநிலம் டிண்டோரி மாவட்டத்தில் உள்ள ஷாபூரா கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் தவித்து வருகின்றனர். கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அக்கிராம மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
குழந்தைகள் மற்றும் பெண்கள் அன்றாட தேவைக்காக 1 கி.மீ. தூரம் நடந்து சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர். அங்குள்ள கிணற்றில் நீரானது அடிமட்டத்தில் உள்ளது. அதனை வாளி மூலம் இறைக்க முடியாததால் பெண்கள் படிக்கட்டுகள் இல்லாத கிணற்றுக்குள் இறங்கி தண்ணீர் இறைத்தனர்.

இதையடுத்து பஞ்சாயத்து நிர்வாகம் சார்பாக அக்கிராமத்திற்கு தினமும் 2 லாரி தண்ணீர் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறையால் பெண்கள் ஆபத்தான கிணற்றுக்குள் இறங்கி தண்ணீர் இறைக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Watercrisis
மத்தியப்பிரதேசம் மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள கடுயா கிராமத்தைச் சேர்ந்தவர் சீதாராம் ராஜ்புட். கடுயா கிராமத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அக்கிராமத்தை வறட்சி வாட்டி வதைத்து வருகிறது.

இந்நிலையில், 70 வயதான சீதாராம் தனது கிராமத்தின் குடிநீர் பிரச்சனையை போக்க எண்ணினார். இதனால் பெரிய கிணறு ஒன்றை தோட்ட நினைத்தார். தனி ஆளாக கிணறு தோண்டும் பணியை தொடங்கினார். மேலிருந்து ஏணி அமைத்து அதன் வழியாக மண்ணை தோண்டி மேலே எடுத்துச் செல்கிறார். இந்த வயதில் சீதாராமின் கிராமத்திற்காக செய்யும் செயல் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசிய சீதாராம், 'எங்கள் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனை சரிசெய்ய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் கிணறு தோண்டும் பணியை தொடங்கும். இதற்கு கிராமத்தை சேர்ந்த யாரும் உதவவில்லை. தனியாக நான் இதை செய்து முடிப்பேன்' என கூறினார். அவரின் முயற்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். #70yearoldman #Haduavillage






