என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madhyapradesh"

    • பா.ஜ.க மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து வாக்குகளை திருடுகிறார்கள்.
    • நாடு அதிகமான துன்பங்களை அனுபவித்து வருகிறது.

    வாக்கு திருட்டு குறித்து பாராளுமன்ற மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பலமுறை குற்றம்சாட்டி இருந்தார்.

    மக்களவை தேர்தல் மராட்டியம், கர்நாடகா உள்ளிட்ட சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க.வுக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக கூறி இருந்தார்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு அரியானா சட்டசபை தேர்தலில் 25 லட்சம் போலி வாக்காளர்கள் இருந்ததாக தெரிவித்தார்.

    இந்தநிலையில் அரியானாவை போல மத்தியபிரதேசம், சத்தீஸ்கரிலும் வாக்கு திருட்டு நடைபெற்றுள்ளதாக ராகுல்காந்தி இன்று மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார். மத்தியபிரதேச மாநிலத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க அவர் நேற்று மத்தியபிரதேசம் சென்றார்.

    இது தொடர்பாக அவர் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சில நாட்களுக்கு முன்பு நான் அரியானா குறித்து ஒரு விளக்க காட்சியை வழங்கினேன். வாக்கு திருட்டு நடப்பதை நான் தெளிவாக கண்டேன். 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டன. 8 வாக்குகளில் ஒரு ஓட்டு திருடப்பட்டது.

    அதைத்தொடர்ந்து தரவுகளை பார்த்த பிறகு மத்தியபிரதேசம், மராட்டியம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் வாக்கு திருட்டு நடைபெற்றதாக நான் நம்புகிறேன்.

    பா.ஜ.க மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து வாக்குகளை திருடுகிறார்கள். வாக்கு திருட்டு தொடர்பாக எங்களிடம் கூடுதல் ஆதாரங்கள் உள்ளன. அவற்றை படிப்படியாக வழங்குவோம். இப்போது கொஞ்சம் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.

    ஆனால் எனது பிரச்சினை என்னவென்றால் ஜனநாயகம் தாக்கப்படுகிறது. அம்பேத்கரின் அரசியலமைப்பு தாக்கப்படுகிறது. பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆகியோர் கூட்டு கூட்டாண்மையை உருவாக்கி இதை நேரடியாக செய்கிறார்கள்.

    இதன் காரணமாக நாடு அதிகமான துன்பங்களை அனுபவித்து வருகிறது. பாரத மாதாவுக்கு தீங்கு விளைவிக்கப்படுகிறது. பாரத மாதா சேதப்படுத்தப்படுகிறது.

    வாக்கு திருட்டு என்பது முக்கிய பிரச்சினை. தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துடன் (எஸ்.ஐ.ஆர்) இணைத்து மறைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு ராகுல்காந்தி கூறியுள்ளார்.

    • குழந்தைகளுக்கு ஒரு மரியாதைக்கு தட்டு கூட கிடைக்கவில்லை.
    • 20 ஆண்டுகளுக்கும் மேலான பாஜக அரசால் குழந்தைகளின் தட்டுகளை கூட திருடப்பட்டுள்ளன.

    மத்திய பிரதேசத்தில் குழந்தைகளுக்கு மதிய உணவை காகிதத்தில் வைத்து வழங்கிய வீடியோவை பார்த்து இதயம் நொறுங்கி போனதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    நான் இன்று மத்தியப் பிரதேசம் செல்கிறேன். மேலும், அங்குள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு பரிமாறப்படுகிறது என்ற செய்தியை செய்தித்தாள்களில் பார்த்ததிலிருந்து, என் இதயம் உடைந்து போயுள்ளது.

    நாட்டின் எதிர்காலம் தங்கள் கனவுகளில் தங்கியிருக்கும் அதே அப்பாவி குழந்தைகள் இவர்கள்தான், அவர்களுக்கு ஒரு மரியாதைத் தட்டு கூட கிடைக்காது.

    20 ஆண்டுகளுக்கும் மேலான பாஜக அரசால் குழந்தைகளின் தட்டுகளை கூட திருடப்பட்டுள்ளன. அவர்களின் 'வளர்ச்சி' வெறும் மாயை, ஆட்சிக்கு வருவதற்கான உண்மையான ரகசியம் 'முறைமை'.

    நாட்டின் குழந்தைகளை, இந்தியாவின் எதிர்காலத்தை, இவ்வளவு மோசமான நிலையில் வளர்க்கும் முதலமைச்சர் மற்றும் பிரதமருக்கு அவமானம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் பாகிஸ்தானுக்கு தக்காளி ஏற்றுமதி செய்வதை நிறுத்துவதாக அறிவித்துள்ளனர். #PulwamaAttack
    போபால்:

    புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா தீவிரப்படுத்தி உள்ளது.

    மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் பாகிஸ்தானுக்கு தக்காளி ஏற்றுமதி செய்வதை நிறுத்துவதாக அறிவித்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.

    மேலும் மத்தியப்பிரதேசத்தில் விளையும் தக்காளிக்கு பாகிஸ்தானில் வரவேற்பு இருந்தது. இதனால் விவசாயிகள் அதிக அளவில் ஏற்றுமதி செய்து வந்தனர்.


    காஷ்மீரில் புல்வாமாவில் மத்தியப்படை வீரர்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து நாடுமுழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதைத்தொடர்ந்து மத்தியப்பிரதேச மாநிலம் ஜபுவா மாவட்டம் பெத்லவாட் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பாகிஸ்தானுக்கு தக்காளி ஏற்றுமதியை நிறுத்திக் கொண்டனர்.

    பாகிஸ்தானில் ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை விற்கப்பட்ட தக்காளியை அவர்கள் குறைந்த விலையில் ரூ.500 முதல் ரூ.600 வரை விற்றனர். #PulwamaAttack
    மத்தியபிரதேசத்தில் டிரைவரை கொலை செய்து, உடலை ஆசிட்டில் கரைத்து, கொடூரமாக கொன்ற டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.#Madhyapradesh #Doctorarrested
    ஹோஷங்காபாத்:

    மத்தியபிரதேச மாநிலத்தின் ஹோஷங்காபாத்தில் உள்ள  ஆனந்த நகர் பகுதியைச் சேர்ந்த எலும்பியல் மருத்துவர்  சுனீல் மந்த்ரி (56). இவர் அரசு சிவில் மருத்துவமனையில் மருத்துவ அதிகாரியாக பணிபுரிகிறார். மந்த்ரியின் மனைவி வீட்டில் துணிக்கடை நடத்தி வந்தார். அவரது மறைவிற்கு பின் டிரைவர் வீரேந்திர பச்சோரி(30)யின் மனைவி கடையை நடத்தி வந்துள்ளார். இதையடுத்து டிரைவரின் மனைவிக்கும் டாக்டருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது.

    தன் மனைவியுடன் டாக்டருக்கு தகாத உறவு இருப்பதாக டிரைவர் சந்தேகித்துள்ளார். தன் மனைவியிடம் இருந்து விலகி விடுமாறு பலமுறை  கூறியுள்ளார். இதனை கேட்காத டாக்டர், டிரைவரை சமாதானம் செய்யும் பொருட்டு அவருக்கு சம்பளத்தை உயர்த்தி, ரூ.16000 சம்பளம் வழங்கியுள்ளார். இருப்பினும் டிரைவர் சமாதானமாகவில்லை. இதன்காரணமாக அவரை கொடூரமாக கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    கடந்த திங்கட்கிழமை மாலை டிரைவர், பல்லில் வலி இருப்பதாக டாக்டர் மந்த்ரியிடம் கூறியுள்ளார். சிகிச்சை அளிப்பதாகக் கூறி இரவு 9 மணியளவில் அறுவை சிகிச்சை செய்யும் கத்தியினைக் கொண்டு பல முறை கழுத்தில் கீறியுள்ளார். பின்னர் வீட்டின் பாத்ரூமில் வைத்து பல நூறு துண்டுகளாக நள்ளிரவு 1 மணிவரை  நறுக்கியுள்ளார்.

    மந்த்ரியின் வீட்டில் சந்தேகத்திற்கிடமான செயல்கள் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்தனர். அப்போது டாக்டர் பதற்றத்துடன் காணப்பட்டார். வீட்டின் படிகளில் ரத்தக்கறை படிந்திருந்தது. இதனால் போலீசாரின் சந்தேகம் உறுதி செய்யப்பட்டது.

    இது தொடர்பாக நடந்த விசாரணையில், அவர் பல நாட்களாக திட்டமிட்டு டிரைவரைக் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.  தடயங்களை அழிப்பதற்காக, டிரைவரின் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி அவற்றில் சில துண்டுகளை ஆசிட்டில் கரைத்தாகவும், உடைகளை சாலையில் வீசியதாகவும் கூறியுள்ளார். மேலும் பாத்ரூமில் இருந்து  பல பெரிய உடல் பாகங்கள் மற்றும் சிறிய துண்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Madhyapradesh #Doctorarrested
    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் முதல் மந்திரியாக பதவியேற்ற கமல்நாத், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் முதல் கோப்பில் இன்று கையெழுத்திட்டு உள்ளார். #Madhyapradesh #Kamalnath #FarmLoanWaiver
    போபால்:

    மத்திய பிரதேசத்தின் முதல் மந்திரியாக காங்கிரசை சேர்ந்த கமல்நாத் இன்று காலை பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அவருக்கு அம்மாநில கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    காங்கிரஸ் சார்பில் நடந்த சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தார்.

    இந்நிலையில், முதல் மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்ட கமல்நாத் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து முதல் கோப்பில் இன்று கையெழுத்திட்டார். #Madhyapradesh #Kamalnath #FarmLoanWaiver
    மத்தியப்பிரதேசத்தில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான சத்ரஜ் சிங் இன்று பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்துள்ளார். #SatrajSingh #Hoshangabad #Congress
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் ஹொஷங்காபாத் சட்டசபை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சத்ரஜ் சிங். முதல் மந்திரி சிவராஜ் சிங் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை மந்திரியாக பதவி வகித்தவர்.

    75 வயதுக்கு மேற்பட்ட மூத்த தலைவர்கள் தங்கள் பதவிகளில் இருந்து விலகி இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்று பாஜக சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வலியுறுத்தப்பட்டது.  அதன்படி, ம.பி.யில் இருந்து மந்திரி பதவியில் இருந்து விலக்கப்பட்டவர் சத்ரஜ் சிங்.



    இந்நிலையில், பாஜகவின் முன்னாள் மந்திரியான சத்ரஜ் சிங் இன்று பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஹொஷங்காபாத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஹொஷங்காபாத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற பாடுபடுவேன் என தெரிவித்தார்.
    #SatrajSingh #Hoshangabad #Congress 
    மத்தியப்பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல் மந்திரியின் மைத்துனர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #MadhyaPradeshElections #SanjaySinghMasani
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக சிவராஜ் சிங் சவுகான் பதவி வகித்து வருகிறார். ம.பி.யில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நவம்பர் 28-ம் தேதி நடைபெற உள்ளது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரசியல் கட்சிகள் அங்கு தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். மாநிலத்தில் ஆட்சியை தக்கவைக்க பாஜகவும், ஆட்சியை பிடிக்க காங்கிரசும் தீவிர களப்பணியாற்றி வருகின்றன. சட்டசபை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் பட்டியலை பாஜகவும், காங்கிரசும் வெளியிட்டுள்ளது. 



    இந்நிலையில், சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல் மந்திரியின் மைத்துனர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகானின் மைத்துனர் சஞ்சய் சிங் மாசானி. இவர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இவர் சவுகானின் மனைவி சாதனா சிங்கின் சகோதரர் ஆவார்.

    டெல்லியில் மத்தியப்பிரதேசம் காங்கிரஸ் தலைவர் கமல்நாத், கட்சியின் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் முன்னிலையில் சஞ்சய் சிங் மாசானி, காங்கிரசில் இணைந்தார். அப்போது அவர் கூறுகையில், மத்தியில் ஆளும் பாஜக செல்வந்தர்களின் நலனுக்காக உழைக்கும் மக்களை புறக்கணித்து வருகிறது என தெரிவித்தார். #MadhyaPradeshElections #SanjaySinghMasani
    மத்தியப்பிரதேசத்தில் பயணம் செய்துவரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கிரிக்கெட்டில் டெண்டுல்கர் ரன்களை அடித்து விளாசுவது போல் சிவராஜ் சிங் சவுகான் அறிவிப்புகளை அள்ளி வீசுகிறார் என குற்றம் சாட்டினார். #RahulGandhi #ShivrajSinghChouhan #SachinTendulkar
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் தலைநகர் போபாலில் சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தை  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது:

    உங்கள் அனைவருக்கு சச்சின் டெண்டுல்கரை பற்றி தெரியும். அவர் களத்தில் இருந்தால் நிச்சயம் 50. 60, 70 முதல் 100 ரன்களை எடுத்துவிடுவார்.



    அவரைப்போல், மத்தியப்பிரதேசத்தின் முதல் மந்திரி தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இதுவரை 21 ஆயிரத்துக்கு  மேற்பட்ட அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். ஆனால் அதனால் என்ன பயன்? ஒன்றும் நடக்கவில்லை.

    மேலும், வேலை வாய்ப்பின்மை, பாலியல் பலாத்காரம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் ஆகியவற்றில் மத்தியப்பிரதேசம் முதல் இடம் வகித்து வருகிறது என குற்றம் சாட்டினார். #RahulGandhi #ShivrajSinghChouhan #SachinTendulkar
    காங்கிரஸ் தலைவரான ராகுலுக்கு மிளகாய் எப்படி வயல்வெளிகளில் விளைகிறது என தெரியுமா? என முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கேள்வி எழுப்பியுள்ளார். #ShivrajSinghChouhan #RahulGandhi #Chilli
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள நர்சிங்கர்க் பகுதியில் நடைபெற்ற பேரணியில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    மத்தியப்பிரதேசம் மாநிலம் தலைநகரான போபாலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் செய்தார். அவர் 15 கிலோ மீட்டருக்கு சாலை வழியாக சென்று மக்களை சந்தித்துள்ளார். 

    ஆனால், அவருக்கு வயல்வெளிகளில் மிளகாய் மேல்புறமாகவா அல்லது கீழாகவா எப்படி விளைகின்றது என தெரியுமா? 
    விவசாயம் பற்றி தெரியாதவர் அதை பற்றி அக்கறை கொள்ளலாமா?

    ராகுல்ஜி உங்கள் காங்கிரஸ் அரசு விவசாயிகளுக்கு அதிகமாக 18 சதவீத வட்டியுடன் லோன்களை வழங்கி உள்ளீர்கள். நாங்களோ பூஜ்ய சதவீதத்தில் விவசாயிகளுக்கு கடன்களை வழங்கி வருகிறோம் என தெரிவித்துள்ளார். #ShivrajSinghChouhan #RahulGandhi #Chilli
    மத்தியப்பிரதேசத்தின் சிதி மாவட்டத்தில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் சென்ற வாகனம் மீது மர்ம நபர்கள் கல் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. #ShivrajSinghChouhan
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் சிதி மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பாதுகாப்பு படையினர் சூழ ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, சர்ஹட் தொகுதியில் அவரது வாகனம் சென்றபோது, மர்ம நபர்கள் சிலர் கார் மீது கல்லை வீசினர். இதில் முதல் மந்திரி அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த தாக்குதல் குறித்து மாநில பாஜகவினர் கூறுகையில், எதிர்க்கட்சி தலைவர் தொகுதியில் முதல் மந்திரியை குறிவைத்து தாக்குதல் நடந்துள்ளது என தெரிவித்தனர். ஆனால், பாஜகவின் குற்றச்சாட்டுக்கு எதிர்க் கட்சியினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

    முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் சென்ற கார் மீது மர்ம நபர்கள் கல் வீசியதால பரபரப்பு ஏற்பட்டது. #ShivrajSinghChouhan
    மத்திய பிரதேச மாநிலத்தில் தன்னுடன் பேச மறுத்ததால் தனது காதலியை வீடு புகுந்து கழுத்தை நெறித்து கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். #MadhyaPradesh
    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் தில்கவான் கிராமத்தில் வசிக்கும் 22 வயது வாலிபர் அமித் புர்மன். அதே கிராமத்தில் வசிக்கும் 16 வயது சிறுமியும் இவரும் காதலித்து வந்துள்ளனர்.

    இந்நிலையில், நேற்று இரவு அமித்துடன் அந்த சிறுமி செல்போனில் பேச மறுத்துள்ளார். தொடர்ந்து அவரது அழைப்புகளை அவர் புறக்கணிக்கவே, சிறுமியின் தங்கையிடம் அமித் தூது அனுப்பியுள்ளார். அப்படியும் அமித்துடன் சிறுமி பேசவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த அமித், சிறுமியின் தந்தை வீட்டில் இல்லாததை அறிந்து அவரது வீடு புகுந்து, தாயார் உட்பட அனைவரையும் தாக்கியுள்ளார். வெறிபிடித்ததை போல் நடந்துகொண்ட அமித், தன்னுடன் பேச மறுத்த தனது காதலியை கொடூரமாக தாக்கியதுடன், அவரது கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.

    இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் கொடூர காதலர் அமித் புர்மனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    அறிவு முதிர்ச்சி இன்றி காதல் போன்ற வாழ்வின் மிக முக்கிய கட்டங்களுக்குள் நுழைந்ததற்கு தண்டனையாக அமித் சிறையிலும், சிறுமி கல்லறையிலும் இருக்கிறார். #MadhyaPradesh
    மத்திய பிரதேசத்தில் பாம்பு கடித்து உயிரிழந்த தாயின் உடலை வாலிபர் பிரேத பரிசோதனைக்காக 38 கி.மீ. தூரம் மோட்டார் சைக்கிளில் கட்டி ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    ஜெய்ப்பூர்:

    மத்தியபிரதேச மாநிலம் திகாம்கர் மாவட்டத்தில் உள்ள மஸ்தாபூர் என்ற ஊரை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது தாயார் குன்வார் பாய்.

    சம்பவத்தன்று வீட்டுக்கு வெளியே சென்ற போது, குன்வார் பாயை பாம்பு கடித்து விட்டது. அவரை பக்கத்து கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றார். ஆனால், சிறிது நேரத்தில் அவர் இறந்து விட்டார்.

    இதுதொடர்பாக ராஜேஷ் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் அவரிடம் குன்வார்பாய் உடலை திகாம்கரில் உள்ள மாவட்ட ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரும்படி கூறினார்கள்.

    ஆனால், உடலை ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்ல போலீசார் வாகன வசதி செய்து தர மறுத்து விட்டனர். ராஜேசிடம் வாகன வசதி செய்வதற்கு போதிய பணமும் இல்லை.

    இதனால் வேறு வழியில்லாமல் குன்வார்பாய் உடலை தனது மோட்டார் சைக்கிளின் பின்பக்கம் கட்டி வைத்து திகாம்கர் ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றார்.

    அவரது ஊரில் இருந்து திகாம்கர் 35 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. அவ்வளவு தூரத்துக்கு பிணத்தை மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்றதை பலரும் வேடிக்கை பார்த்தனர்.

    சிலர் இந்த காட்சிகளை செல்போனில் பதிவு செய்து இணைய தளத்தில் வெளியிட்டனர். இந்த சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டர் அபிஜித் அகர்வால் கூறும்போது, 108 ஆம்புலன்சுக்கு அவர் தகவல் கொடுத்திருந்தால் ஆம்புலன்ஸ் அனுப்பி வைத்து இருப்போம்.

    அது போன்ற எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. ஆனாலும், பிரேத பரிசோதனை முடிந்த பிறகு உடலை ஆம்புலன்சில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தோம் என்று கூறினார்.

    சில மாதங்களுக்கு முன்பு ஒடிசா மாநிலத்தில் பணம் கொடுத்து வாகன வசதி செய்ய வழி இல்லாததால் தொழிலாளி ஒருவர் இறந்த தனது மனைவியின் உடலை பல கி.மீட்டர் தூரம் சுமந்து சென்ற சம்பவம் நடந்தது.

    இதேபோல் வாகன வசதி கிடைக்காமல் சைக்கிளிலும், மோட்டார் சைக்கிளிலும் பிணத்தை ஏற்றி செல்லும் அவலநிலை பல மாநிலங்களிலும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. 
    ×