search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cm kamalnath"

    மத்திய பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய முதல் மந்திரி கமல்நாத், மக்களுக்கு சேவை செய்யாவிட்டால் எனது மகனின் உடைகளை கிழித்து விடுங்கள் என தெரிவித்தார். #LokSabhaElections2019 #Kamalnath
    போபால்:

    மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் முதல் மந்திரியாக காங்கிரசை சேர்ந்த  கமல்நாத் பதவிவகித்து வருகிறார். இவர் சிந்த்வாரா தொகுதியில் இருந்து 9 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

    இதற்கிடையே, சிந்த்வாரா பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட தனது மகன் நகுல் நாத்தை களமிறக்கி உள்ளார் கமல்நாத்.

    இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய முதல் மந்திரி கமல்நாத்,  மக்களுக்கு சேவை செய்யாவிட்டால் எனது மகனின் உடைகளை கிழித்து விடுங்கள் என தெரிவித்தார்.

    இதுதொடர்பாக, தனோரா பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கமல்நாத் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், இந்த பிராந்தியத்துடன் 40 ஆண்டு காலமாக இணைந்து பணியாற்றி வருகிறேன். நீங்கள் கொடுத்த அன்பும், வலிமையும்தான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கிறது.

    நகுல் நிச்சயம் உங்களுக்கு சேவையாற்றுவார். அதற்கான பொறுப்பை நான் அவரிடம் ஒப்படைத்து இருக்கிறேன். உங்களுக்கு பணியாற்றுவதற்கு அவரை எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு சேவையாற்றவில்லை என்றால், அவரது உடைகளை கிழித்து விடுங்கள் என தெரிவித்தார். #LokSabhaElections2019 #Kamalnath
    மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் சிந்த்வாரா தொகுதியில் வேட்பு மனுதாக்கல் செய்த முதல் மந்திரி கமல்நாத் மகன் நகுல் நாத்துக்கு 660 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாக தெரிய வந்துள்ளது. #LokSabhaElections2019 #Chhindwara #NakulNath
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் முதல் மந்திரியாக பதவி வகிப்பவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கமல்நாத். இவரது மகன் நகுல் நாத் வரும் பாராளுமன்ற தேர்தலில் சிந்த்வாரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

    இந்நிலையில், சிந்த்வாரா பாராளுமன்ற தொகுதியில் நகுல் நாத் வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார். அப்போது அவர் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனது சொத்து மதிப்புக்களை தெரிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள சொத்துக்களின் விவரம் வருமாறு:

    அசையும் சொத்துக்களின் மதிப்பு 615 கோடி எனவும், அசையா சொத்துக்களின் மதிப்பு 42 கோடி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    தனக்கு 869 கிராம் எடையில் தங்க கட்டிகளும், 7 கிலோ வெள்ளி நகைகளும் உள்ளது. மேலும் 147 காரட் வைரம் மற்றும் கல் நகைகள் உள்ளிட்ட நகைகள் 78 லட்சம் என குறிப்பிட்டுள்ளார். #LokSabhaElections2019 #Chhindwara #NakulNath
    மத்தியப்பிரதேச முதல் மந்திரியின் சிறப்பு பணி அதிகாரி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். #Kamalnath #ITraid
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் கமல்நாத்.

    முதல் மந்திரியின் சிறப்பு பணி அதிகாரியாக பிரவீன் காக்கர் என்பவர் இருந்து வருகிறார். இவரது இல்லம் தலைநகர் போபாலில் உள்ள விஜய்நகர் பகுதியில் அமைந்துள்ளது.



    இந்நிலையில், டெல்லியில் இருந்து 15 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று அவரது வீட்டிற்கு இன்று அதிகாலை சென்று சோதனை நடத்தி வருகின்றனர். இதனை தவிர்த்து ஷோரூம் ஒன்றிலும் மற்றும் பிற இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது.

    இதேபோல், போபால், இந்தூர், கோவா மற்றும் டெல்லி உள்பட 50க்கு மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். #Kamalnath #ITraid
    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் முதல் மந்திரியாக பதவியேற்ற கமல்நாத், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் முதல் கோப்பில் இன்று கையெழுத்திட்டு உள்ளார். #Madhyapradesh #Kamalnath #FarmLoanWaiver
    போபால்:

    மத்திய பிரதேசத்தின் முதல் மந்திரியாக காங்கிரசை சேர்ந்த கமல்நாத் இன்று காலை பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அவருக்கு அம்மாநில கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    காங்கிரஸ் சார்பில் நடந்த சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தார்.

    இந்நிலையில், முதல் மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்ட கமல்நாத் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து முதல் கோப்பில் இன்று கையெழுத்திட்டார். #Madhyapradesh #Kamalnath #FarmLoanWaiver
    ×