என் மலர்

    நீங்கள் தேடியது "கொலை"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பட்டறை தொழிலாளி கொலையில் போலீசில் புகார் கொடுப்பதாக மிரட்டியதால் கொன்றோம் என கைதான அரசு ஆஸ்பத்திரி ஊழியர் வாக்குமூலம் அளித்தனர்.
    மதுரை

    மதுரை காமராஜபுரம், திரு.வி.க. நகரை சேர்ந்த அலுமினிய பட்டறை தொழிலாளி ராஜேஷ்குமார் (வயது40)  மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

    அப்போது சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து, காவல் நிலையத்தில் விசாரித்தனர்.  அவர்கள் மருதுசூர்யா (30), தெப்பக்குளம் சி.எம்.ஆர் ரோடு சந்தோஷ் (24), வண்டியூர் தக்காளி சதீஷ் (28) என்பது தெரியவந்தது. அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தியதில் ராஜேஷ்குமாரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.

    இதையடுத்து மருதுசூர்யா, தக்காளிசதீஷ், சந்தோஷ் ஆகிய 3 பேரையும் கீரைத்துறை போலீசார் கைது செய்தனர். போலீசில் மருதுசூர்யா கொடு த்துள்ள வாக்குமூலத்தில்  கூறியிருப்பதாவது:-
    நான் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தினக்கூலி பணியாளராக வேலை பார்த்து வருகிறேன்.  கொரோனா காலகட்டத்தில் கிருமி நாசினி  தெளிப்பதற்காக திரு.வி.க நகருக்குச் சென்றேன். அப்போது எனக்கு ராஜேஷ்குமாரின் மனைவி சத்யாவுடன் பழக்கம் ஏற்பட்டது. 

    அலுமினிய பட்டறையில் ராஜேஷ்குமார் வேலை பார்ப்பதால் சத்யா குடித்தனம் நடத்த போதிய பணமின்றி அவதிப்பட்டு வந்தார். நான் அவரிடம்  உங்களையும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் வேலைக்கு சேர்த்து விடுகிறேன். தினந்தோறும் 500 ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தை  கூறினேன். அவரும் ஒப்புக் கொண்டார். 

    இதனைத்தொடர்ந்து   2 பேரும் நெருங்கி பழகினோம்.  நானும் சத்யாவும் நெருங்கி பழகுவது, ராஜேஷ் குமாருக்கு தெரியவந்தது.  அவர் சத்யாவை வேலைக்கு அனுப்பவில்லை. இதனால் நான் அவளுடன் பழக முடியாமல் தவித்து வந்தேன். இருந்தபோதிலும் நாங்கள் இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்தோம்.
     
    இது எப்படியோ ராஜேஷ் குமாருக்கு தெரிந்துவிட்டது. அவர் என்னுடன் பேச கூடாது என்று சத்யாவிடம் சண்டை போட்டார்.   ராஜேஷ்குமார் நேற்று முன்தினம் என்னை தேடி வந்தார். அப்போது அவர்  நீ என் மனைவியுடன் இனிமேல் செல்போனில் பேசக்கூடாது. மீறி பேசினால் போலீசில் புகார் கொடுப்பேன் என்று மிரட்டினார். எனவே அவரை கொல்ல வேண்டும் என்ற வெறி ஏற்பட்டது. 

    இது குறித்து நான் எனது நண்பர்களான  ஆட்டோ டிரைவர் தக்காளி சதீஷ், பழ வியாபாரி சந்தோஷ் ஆகியோரிடம்  பேசினேன். அப்போது ராஜேஷ்குமாரை நள்ளிரவில் கொல்ல முடிவு செய்தோம். அதன்படி நாங்கள் 3 பேரும் திரு.வி.க நகருக்கு சென்றோம். அங்கு சத்யா வீட்டின் கதவைத் தட்டினோம். 
    அப்போது ராஜேஷ்கு மார் வெளியே வந்தார். அவரை நாங்கள் கத்தியால் சரமாரியாக குத்தினோம்.  அவர்    அலறியபடி மயங்கி கீழே விழுந்தார். அதன்பிறகு   சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்று விட்டோம். 

    இவ்வாறு  அவர் வாக்கு மூலம் கொடுத்துள்ளதாக தெரிகிறது.      
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கணவர் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக குழந்தைகளை பெற்ற தாய் கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
    ராய்காட் :

    மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டம், மஹாத் தாலுகாவில் உள்ளது காரவலி கிராமம்.  

    இந்த பகுதியை சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர், அங்குள்ள கிணற்றுக்குள் தனது 6 குழந்தைகளை அடுத்தடுத்து வீசி எறிந்துள்ளார். 

    அலறியபடி தண்ணீருக்குள் விழுந்த அவர்கள் மூழ்கிய நிலையில், இதுகுறித்து அறிந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். 

    உடனடியாக விரைந்து சென்ற போலீசார் அந்த பகுதியினர் உதவியுடன் கிணற்றுக்குள் கிடந்த குழந்தைகளை மீட்ட போது அவர்கள் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.  

    நீரில் மூழ்கியவர்களில் 18 மாதமே ஆன பச்சிளம் குழந்தை உள்பட 10 வயதுக்கு உட்பட்ட ஐந்து பெண் குழந்தைகளும் அடங்கும். 

    அந்த பெண்ணை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.  குடும்ப தகராறின்போது அந்த பெண்ணை அவரது கணவர் வீட்டை சேர்ந்தவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. 

    இதனால் வெறுப்படைந்த அவர், பெற்ற தனது குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.   

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பட்டறை தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
    மதுரை

    மதுரை காமராஜபுரம் திரு.வி.க. நகரைச் சேர்ந்த வர் ராஜேஷ்குமார் (வயது 40). இவர் அங்குள்ள அலுமினிய பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.  இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும்  ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 
     
    இந்த நிலையில் ராஜேஷ்குமார் நேற்று இரவு வீட்டில் படுத்து தூங்கினார்.   நள்ளிரவு நேரத்தில் மர்ம கும்பல் கதவை தட்டியது. ராஜேஷ்குமார் கதவை திறந்து வெளியே வந்து பார்த்தார். அப்போது அங்கு பதுங்கியிருந்த மர்ம கும்பல் அவரை அரிவாளால்  சரமாரியாக வெட்டியது. 

    இதில் படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதிலும்  சிகிச்சை பலனின்றி அவர் பரிதாப மாக இறந்தார். 

    இதுதொடர்பாக கீரைத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெத்துராஜ் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்தார்.

    மேலும் அலுமினிய பட்டறை தொழிலாளி ராஜேஷ் குமாரை  எதற்காக வெட்டிக் கொன்றனர்? அவரை கொலை செய்த கும்பல் எது? என்பது பற்றிய விவரம் தெரியவில்லை.

    ராஜேஷ்குமாரின் மனைவி சத்யாவுக்கு கீரைத்துறையைச் சேர்ந்த ஒருவர் மூலம் அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த வேலை வாங்கி  தரப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சத்யா வேலைக்கு செல்ல மறுத்து விட்டார். இருந்தபோதிலும்  அந்த நபர் வேலை வாங்கிக் கொடுத்ததற்காக பணம் கேட்டு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். எனவே சத்யா இதுதொடர்பாக கணவர் ராஜேஷ்குமாரிடம்   தெரிவித்து இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேஷ்குமார், நேரடியாக அந்த நபரின் வீட்டுக்கு சென்று தட்டி கேட்டு உள்ளார்.  அவரை அங்கிருந்த சிலர் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்து உள்ளனர். 

    இந்த பிரச்சினையால் ஆத்திரம் அடைந்த  சம்பந்தப்பட்ட நபர் நபர் கூலிப்படை வைத்து ராஜேஷ்குமாரை வெட்டிக் கொன்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தொடர்பாக கீரைத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை கே.புதூரில் ஓட்டல் ஊழியர் தவசி என்பவர் நேற்று முன்தினம் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் இன்று காலை சிறுவன் உள்பட 5 பேரை கைது செய்தனர்.

    இதற்கிடையில் தற்போது  அலுமினிய பட்டறை தொழிலாளி ராஜேஷ்குமார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்  நடந்துள்ளது  மதுரை மாநகர மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பாகிஸ்தானில் திருமண வயது வராத மகளை ஒரு லட்ச ரூபாய்க்காக திருமணம் செய்து கொடுக்க முயன்ற போது தடுத்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    டாடு :

    பாகிஸ்தானின் லக்கி ஷா சதார் பகுதியைச் சேர்ந்தவர் சுல்பிகர் ஜிஸ்கானி. இவரது மனைவி பாப்லி ஜிஸ்கானி. சுல்பிகர் ரூ. 1 லட்சத்திற்காக தனது மகள் ஹுமேராவை ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முயன்றுள்ளார். இதைத் தடுத்த பாப்லியை சுல்பிகர் கழுத்தை நெறித்து கொன்றுள்ளார்.

    இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து பாப்லியின் சகோதரர் முனவ்வர் அளித்த புகாரின் பேரில் போலீசார் சுல்பிகரை கைது செய்துள்ளனர். மேலும் ஏற்கெனவே, சுல்பிகர் தன்னுடைய இரண்டு மகள்களையும் இதுபோல பணத்திற்காக விற்று விட்டதாகவும் முனவ்வர் தெரிவித்துள்ளார்.

    விரைவில் இதுகுறித்த விசாரணை தொடங்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். செஹ்வான் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, பாப்லி ஜிஸ்கானியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மதுரையில் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை உத்தங்குடி மெயின் ரோடு அருகே தட்டான்குளம் பகுதியில் வாலிபர் ஒருவர் அரிவாள் வெட்டு காயங்களுடன் இறந்து கிடப்பதாக கே.புதூர் போலீசுக்கு இன்று தகவல் வந்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அங்கு வாலிபர் ஒருவர் அரிவாள் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். அவர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அண்ணாநகர் உதவி கமிஷனர் சூரக்குமரன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார்.

    இதனைத் தொடர்ந்து அங்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி விட்டு நின்று விட்டது. மேலும் தடயவியல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் கைரேகை மாதிரிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இதனைத் தொடர்ந்து கே.புதூர் போலீசார் கொலை செய்யப்பட்ட வாலிபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து வாலிபரை கொலை செய்த நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் ஒத்தக்கடை மாயாண்டி புரத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் தவசி (20) என்பதும் அவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இவர் நேற்று இரவு அந்த பகுதியில் நண்பர்களுடன் ஒன்றாக சுற்றித் திரிந்ததாக பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர்.

    நேற்று இரவு தவசி நண்பர்களுடன் அந்த பகுதியில் ஒன்றாக உட்கார்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.

    அப்போது நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அம்பத்தூரில் வாலிபர் கடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்பத்தூர்:

    அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டு அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் உதயகுமார் (28). தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மோசஸ் என்பவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு தகராறு ஏற்பட்டது.

    இந்நிலையில் நேற்று இரவு உதயகுமார் மோசசின் வீட்டுக்குச் சென்று அவரது தாயாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மோசஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் 7 பேர் கொண்ட கும்பல் உதயகுமாரை அடித்து அங்கிருந்து கடத்தி சென்று அதே பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து கத்தியால் வெட்டி கொலை செய்தனர்.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து அம்பத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த உதவி கமிஷனர் கனகராஜ், இன்ஸ்பெக்டர் ராமசாமி ஆகியோர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர்.

    போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உதயகுமாருக்கு, மோசசுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது தெரியவந்தது. அதன் காரணமாக இந்த கொலை நடந்து இருக்கலாமா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் விசாரணை செய்துவருகின்றனர்.

    இக்கொலை சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் சரண், அவரது நண்பர் அப்புன், ஆகியோரை கைது செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள மோசஸ் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே பெற்றோர் பணம் தராததால் ஆத்திரமடைந்த ராணுவ வீரர், தம்பியை கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    ஒட்டப்பிடாரம்:

    தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள மேலமுடிமண் பெருமாள்கோவில் தெருவை சேர்ந்தவர் லெட்சுமண 
    பெருமாள். இவருக்கு செல்வக்குமார்(வயது 24), கார்த்தி(22) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    செல்வக்குமாருக்கு திருமணமாகி ஜெயந்தி என்ற மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவர் காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். தனது மனைவியின் ஊரான விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அமீர்பாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    கார்த்தி ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவருக்கு திருமணமாகி மாலினி(22) என்ற மனைவி உள்ளார். இவர் தனது பெற்றோருடன் ஒன்றாக வசித்து வந்தார். சமீபகாலமாக கார்த்திக்குக்கு பணம் தேவைப்பட்டுள்ளது. இதனால் அவர் தனது பெற்றோரிடம் பணம் கேட்டுள்ளார். உடனே அவரது தாயாரும் தன்னிடம் இருந்த நகை மற்றும் ரூ.1 லட்சம் பணத்தை கார்த்திக்கிடம் கொடுத்துள்ளார்.

    இதுபற்றி அறிந்த செல்வக்குமார், தனக்கும் பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் அவரது பெற்றோர், கார்த்தி பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு வந்ததால் கொடுத்தோம் என்று கூறி உள்ளனர். ஆனாலும் செல்வக்குமார் அடிக்கடி பணத்தை கேட்டு சண்டை போட்டு வந்துள்ளார்.

    சமீபத்தில் விடுமுறையையொட்டி சொந்த ஊருக்கு வந்த செல்வகுமார், நேற்று இரவு தனது பெற்றோர் வீட்டுக்கு வந்தார். அங்கு லெட்சுமண பெருமாள் மற்றும் கார்த்தியிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    அப்போது வாக்குவாதம் முற்றவே, தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் கார்த்தியை செல்வக்குமார் குத்தினார். இதில் கார்த்தியின் மார்பில் கத்திக்குத்து விழுந்தது.

    உடனே அருகில் நின்று கொண்டிருந்த அவரது உறவினர் கண்ணன், தடுக்க முயன்றார். அவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில், சரிந்து விழுந்த கார்த்தி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

    பின்னர் அங்கிருந்து செல்வக்குமார் தப்பி ஓடினார். இதுகுறித்து தகவல் அறிந்த ஒட்டப்பிடாரம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வக்குமாரை மீட்டு ஒட்டப்பிடாரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக கார்த்தியின் மனைவி மாலினி அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வக்குமாரை கைது செய்தனர்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கொரட்டூர் அருகே 3 பேரை கொலை செய்ய அரிவாளுடன் பதுங்கி இருந்த 7 பேர் கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்பத்தூர்:

    கொரட்டூரை அடுத்த மாதனாங்குப்பத்தில் பயங்கர ஆயுதங்களுடன் ரவுடிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி தலைமையில் தனிப்படைபோலீசார் இன்று காலை மாதனாங்குப்பம், பஜனை கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் அதிரடியாக புகுந்து சோதனை செய்தனர்.

    அங்கு 7பேர் கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பது தெரிந்தது. இதையடுத்த அவர்கள் அனைவரையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    விசாரணையில் அவர்கள், ஆவடியை சேர்ந்த பிரகாஷ்,புத்தாகரம் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், கல்பாளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ், வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன், பெரம்பலூரை சேர்ந்த இசாக், திருமுல்லைவாயிலை சேர்ந்த கிருஷ்ணகுமார், வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த ஐசக் ராபர்ட் என்பது தெரிந்தது.

    அவர்களிடம் இருந்து 5 ஆசிட் பாட்டில்கள், 5 மோட்டார் சைக்கிள், 7 செல்போன்கள், 2 கிலோ கஞ்சா மற்றும் 11 அரிவாள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    பிடிபட்டவர்கள் பெரம்பூரை சேர்ந்த 3 பேரை தீர்த்து கட்ட அரிவாளுடன் பதுங்கி இருந்தது. விசாரணையில் தெரியவந்தது. கைதான பிரகாஷ், பாலகிருஷணன் ஆகியோருக்கும் பெரம்பூரை சேர்ந்தவர்களுக்கும் இடையே நேற்றுமாலை தகராறு ஏற்பட்டு உள்ளது.

    இந்த மோதலில் பெரம்பூரை சேர்ந்த 3 வாலிபர்களையும் ஒரே நேரத்தில் தீர்த்து கட்ட அவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.

    சரியான நேரத்தில் போலீசார் அவர்களை கைது செய்ததால் கொலைதிட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது. கைதான 7 பேரிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மதுரையில் ஊராட்சி செயலர் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை வரிச்சியூரை அடுத்த தட்சனேந்தல் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 52). இடையபட்டி ஊராட்சி செயலாளரான இவர் கருப்புக்கால் காளி அம்மன் கோவிலில் பூசாரியாக வேலை பார்த்து வந்தார்.

    லட்சுமணன் இன்று அதிகாலை கோவிலுக்கு பூஜை செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். அப்போது வரிச்சியூர்-தச்சனேந்தல் மெயின்ரோட்டில் மர்ம கும்பல் அவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டது. இதையடுத்து லட்சுமணனுக்கும், அந்த கும்பலுக்கும் வாக்குவாதம் வலுத்தது.

    இதில் ஆத்திரம் அடைந்த மர்ம கும்பல், லட்சுமணனை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் அவருக்கு தலை மற்றும் மார்பு ஆகிய பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது.

    அரிவாள் வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிய லட்சுமணனை அந்த பகுதியை சேர்ந்த சிலர் மீட்டு, ஆம்புலன்சில் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே லட்சுமணன் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக கருப்பாயூரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையில்சில தகவல்கள் கிடைத்தன. லட்சுமணனின் தந்தை சன்னாசிக்கு 2 மனைவிகள் உள்ளனர். இதில் 2-வது மனைவியின் மகன் லட்சுமணன், கருப்புக்கால் காளியம்மன் கோவிலில் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார்.

    இது சன்னாசியின் முதல் மனைவியின் மகன்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக இரு குடும்பத்தினருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்திருக்கிறது. இதன் காரணமாக அவர்கள் லட்சுமணனை வெட்டி கொன்றனரா?

    அல்லது வேறு பிரச்சினை காரணமாக யாரேனும் அவரை கொலை செய்தார்களா? என்பது தெரியவில்லை இதுதொடர்பாக கருப்பாயூரணி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையான லட்சுமணனுக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கடந்த ஞாயிற்றுக்கிழமை பெண்ணின் காதலன் போஜாசா பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    ராஜஸ்தான்:

    ராஜஸ்தான் மாநிலம், பிகானேர் மாவட்டத்தில் திருமணமான 45 வயது பெண், ஸ்ரீதுங்கர்கர் பகுதியில் ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். 

    அவரது உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து போலீசார் கூறுகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த பெண்ணின் காதலன் போஜாசா பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. 

    அதன் பின்னர் நடைபெற்ற விசாரணையில் பெண்ணின் கணவர் தான், காதலனை கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார்  தெரிவித்தனர்.

    தனது காதலனை கணவர் கொலை செய்ததை அறிந்த அந்த பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் கண்டறியப்பட்டது.

    அந்த பெண்ணின் உடல் பிகானேரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், உடற்கூறு ஆய்விற்கு பின்னர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.



    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print