search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொலை
    X
    கொலை

    மேலூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் படுகொலை

    மேலூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண்ணின் கணவன் உள்பட 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த வைரவன்பட்டியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் மகன் பெரியகருப்பன் (வயது 20) தேங்காய் பறிக்கும் தொழிலாளி.

    இவரும், வைரவன்பட்டியை சேர்ந்த தனசேகரன் என்பவர் மனைவி முத்துச்செல்வியும் ஒரே இடத்தில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் பெரியகருப்பனும் தனசேகரன் மனைவியும் நெருங்கி பழகி வந்ததாகவும், அவர்களுக்கிடையே தகாத உறவு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பெரியகருப்பனுடன் தனது மனைவி தனியாக பேசி கொண்டிருப்பதை தனசேகரன் பார்த்து விட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக அவர் தனது நண்பர்கள் சிலரிடம் தெரிவித்துள்ளார்.

    இதைத் தொடர்ந்து நேற்று மாலை தனசேகரன் உள்ளிட்ட சிலர் பெரியகருப்பனை சந்தித்து அவருடன் தகராறு செய்துள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தனசேகரன் மற்றும் அவரது நண்பர்கள் பெரியகருப்பனை கடுமையாக தாக்கியுள்ளனர்.

    இதில் படுகாயமடைந்த பெரியகருப்பனை மீட்டு மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி பெரியகருப்பனின் தந்தை மணிகண்டன் கொட்டாம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பழனியப்பன், தனிப்பிரிவு ஏட்டு தினேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கொலை செய்த தனசேகரன் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மேலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×