என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

கொரட்டூர் அருகே 3 பேரை கொலை செய்ய அரிவாளுடன் பதுங்கி இருந்த 7 பேர் கும்பல் கைது

அம்பத்தூர்:
கொரட்டூரை அடுத்த மாதனாங்குப்பத்தில் பயங்கர ஆயுதங்களுடன் ரவுடிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி தலைமையில் தனிப்படைபோலீசார் இன்று காலை மாதனாங்குப்பம், பஜனை கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் அதிரடியாக புகுந்து சோதனை செய்தனர்.
அங்கு 7பேர் கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பது தெரிந்தது. இதையடுத்த அவர்கள் அனைவரையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள், ஆவடியை சேர்ந்த பிரகாஷ்,புத்தாகரம் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், கல்பாளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ், வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன், பெரம்பலூரை சேர்ந்த இசாக், திருமுல்லைவாயிலை சேர்ந்த கிருஷ்ணகுமார், வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த ஐசக் ராபர்ட் என்பது தெரிந்தது.
அவர்களிடம் இருந்து 5 ஆசிட் பாட்டில்கள், 5 மோட்டார் சைக்கிள், 7 செல்போன்கள், 2 கிலோ கஞ்சா மற்றும் 11 அரிவாள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
பிடிபட்டவர்கள் பெரம்பூரை சேர்ந்த 3 பேரை தீர்த்து கட்ட அரிவாளுடன் பதுங்கி இருந்தது. விசாரணையில் தெரியவந்தது. கைதான பிரகாஷ், பாலகிருஷணன் ஆகியோருக்கும் பெரம்பூரை சேர்ந்தவர்களுக்கும் இடையே நேற்றுமாலை தகராறு ஏற்பட்டு உள்ளது.
இந்த மோதலில் பெரம்பூரை சேர்ந்த 3 வாலிபர்களையும் ஒரே நேரத்தில் தீர்த்து கட்ட அவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.
சரியான நேரத்தில் போலீசார் அவர்களை கைது செய்ததால் கொலைதிட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது. கைதான 7 பேரிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
