search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொலை
    X
    கொலை

    பட்டறை தொழிலாளி வெட்டிக் கொலை

    பட்டறை தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
    மதுரை

    மதுரை காமராஜபுரம் திரு.வி.க. நகரைச் சேர்ந்த வர் ராஜேஷ்குமார் (வயது 40). இவர் அங்குள்ள அலுமினிய பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.  இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும்  ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 
     
    இந்த நிலையில் ராஜேஷ்குமார் நேற்று இரவு வீட்டில் படுத்து தூங்கினார்.   நள்ளிரவு நேரத்தில் மர்ம கும்பல் கதவை தட்டியது. ராஜேஷ்குமார் கதவை திறந்து வெளியே வந்து பார்த்தார். அப்போது அங்கு பதுங்கியிருந்த மர்ம கும்பல் அவரை அரிவாளால்  சரமாரியாக வெட்டியது. 

    இதில் படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதிலும்  சிகிச்சை பலனின்றி அவர் பரிதாப மாக இறந்தார். 

    இதுதொடர்பாக கீரைத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெத்துராஜ் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்தார்.

    மேலும் அலுமினிய பட்டறை தொழிலாளி ராஜேஷ் குமாரை  எதற்காக வெட்டிக் கொன்றனர்? அவரை கொலை செய்த கும்பல் எது? என்பது பற்றிய விவரம் தெரியவில்லை.

    ராஜேஷ்குமாரின் மனைவி சத்யாவுக்கு கீரைத்துறையைச் சேர்ந்த ஒருவர் மூலம் அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த வேலை வாங்கி  தரப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சத்யா வேலைக்கு செல்ல மறுத்து விட்டார். இருந்தபோதிலும்  அந்த நபர் வேலை வாங்கிக் கொடுத்ததற்காக பணம் கேட்டு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். எனவே சத்யா இதுதொடர்பாக கணவர் ராஜேஷ்குமாரிடம்   தெரிவித்து இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேஷ்குமார், நேரடியாக அந்த நபரின் வீட்டுக்கு சென்று தட்டி கேட்டு உள்ளார்.  அவரை அங்கிருந்த சிலர் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்து உள்ளனர். 

    இந்த பிரச்சினையால் ஆத்திரம் அடைந்த  சம்பந்தப்பட்ட நபர் நபர் கூலிப்படை வைத்து ராஜேஷ்குமாரை வெட்டிக் கொன்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தொடர்பாக கீரைத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை கே.புதூரில் ஓட்டல் ஊழியர் தவசி என்பவர் நேற்று முன்தினம் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் இன்று காலை சிறுவன் உள்பட 5 பேரை கைது செய்தனர்.

    இதற்கிடையில் தற்போது  அலுமினிய பட்டறை தொழிலாளி ராஜேஷ்குமார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்  நடந்துள்ளது  மதுரை மாநகர மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×