என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் தற்கொலை"

    • தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி 2 குழந்தைகளை சடலமாக மீட்டனர்.
    • 3 பேர் உடல்களையும் கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கயத்தாறு:

    நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே உள்ள பருத்திகுளம் மேலத்தெருவை சேர்ந்தவர் முத்தையா (வயது38). இவரது மனைவி முத்துலெட்சுமி (வயது 27). இவர்களுக்கு 5 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி முத்தமிழ் (4½), சுசிலாதேவி (3) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

    முத்தையா ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அவர் அடிக்கடி மதுகுடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையை கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.

    நேற்று காலை கறி குழம்பு வைப்பதற்காக முத்தையா கறி வாங்கி கொடுத்ததாகவும், முத்துலெட்சுமி குழம்பு வைக்க மாட்டேன் என்று மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து முத்தையா தனது மனைவி முத்துலெட்சுமி மற்றும் குழந்தைகளை கங்கைகொண்டானில் இருந்து பருத்திகுளத்தில் உள்ள முத்துலெட்சுமியின் தாயார் லட்சுமி வீட்டில் கொண்டு விட்டுள்ளார். அதோடு நேற்றிரவு முத்தையா குடித்து விட்டு பருத்திகுளம் சென்று முத்துலெட்சுமியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் முத்துலெட்சுமி மனமுடைந்துள்ளார்.

    இந்நிலையில் இன்று காலை முத்துலெட்சுமி தனது குழந்தைகளை அழைத்து கொண்டு பெருமாள் கோவில் காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது தாயார் லெட்சுமி தேடிப்பார்த்த போது அப்பகுதியில் உள்ள கிணற்று அருகே முத்துலெட்சுமி செருப்புகள் கிடந்ததை கண்டார். உடனே கிணற்றுக்குள் பார்த்த போது கிணற்றில் முத்தமிழ், சுசிலாதேவி ஆகிய 2 குழந்தைகளும் மிதந்தனர்.

    உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் கங்கைகொண்டான் தீயணைப்பு நிலைய அலுவலர் பர்னபாஸ் சாலமோன் தலைமையில் வீரர்கள் கிணற்றுக்கு விரைந்து சென்றனர்.

    மேலும் கங்கைகொண்டான் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி 2 குழந்தைகளை சடலமாக மீட்டனர். தொடர்ந்து முத்துலெட்சுமியும் சடலமாக மீட்கப்பட்டார். அவர் தனது குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்று விட்டு தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. 3 பேர் உடல்களையும் கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சடலமாக மீட்கப்பட்டதை பார்த்து அங்கிருந்த உறவினர்களும், கிராம மக்களும் கதறி அழுதனர். இந்த சம்பவத்தால் பருத்திகுளம் கிராமம் சோகத்தில் மூழ்கியது.

    இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், முத்தையா மற்றும் உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    • விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

    சூலூர்:

    கோவை சூலூர் அருகே காசிகவுண்டன்புதூர் பகுதி உள்ளது. வடமாநில பெண் இங்குள்ள தனியார் உணவு நிறுவனத்தில் வடமாநிலத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விடுதியில் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார்கள்.

    இங்கு ஒடிசாவை சேர்ந்த லம்போதர் மகிந்தா என்பவர் தனது 4 பிள்ளைகளுடன் வேலை செய்கிறார். இவரது 3-வது மகள் மீத்து மகிந்தா(வயது18).

    இந்த நிலையில் ஒடிசாவை சேர்ந்த அஜித் (20) என்ற வாலிபருடன் மீத்து மகிந்தாவுக்கு நிச்சயமானது. திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் திருமண ஏற்பாடுகள் விறு, விறுப்பாக நடந்து வந்தன.

    இந்த நிலையில் மீத்து மகிந்தா வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியான பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீத்து மகிந்தாவை மீட்டு பார்த்தனர். அப்போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் சூலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. மீத்து மகிந்தாவும், இதே கம்பெனியில் வேலை பார்க்கும் ஒடிசாவை சேர்ந்த பப்லு(20) என்ப வரும் காதலித்து வந்தனர். கடந்த ஒராண்டுக்கு முன்பு பப்லு தனது சொந்த ஊருக்கு சென்றார். அதன் பின்னர் அவர் திரும்பி வரவில்லை.

    இந்த நிலையில் தான் மீத்துவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயமானது. இதனை ஊருக்கு சென்ற முன்னாள் காதலன் பப்லு அறிந்து கொண்டார். அவர், கடந்த 15-ந் தேதி மீத்துவை திருமணம் செய்ய இருந்த அஜித்தின் செல்போனுக்கு, புதுப்பெண் மீத்துவுடன் தான் இருந்த புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளார்.

    இதை பார்த்ததும் அதிர்ச்சியான அஜித், தனக்கு இந்த திருமணம் வேண்டாம் என கூறி திருமணத்தை நிறுத்தி விட்டார். இதனால் மீத்துவுக்கு வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டது. வீட்டில் இருந்த நீத்து யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

    • திருமணத்தின்போது பிரீத்திக்கு 120 பவுன் நகை, சொகுசு கார், ரூ.25 லட்சம் வரதட்சணையாக பெற்றோர் கொடுத்ததாக கூறப்படுகிறது.
    • கடந்த மாதம் 11-ந்தேதி ஈரோட்டில் இருந்து புறப்பட்டு திருப்பூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.

    திருப்பூர்:

    திருப்பூர் கே.செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. தொழில் அதிபர். இவரது மனைவி சுகந்தி. இந்த தம்பதியின் மகள் பிரீத்தி (வயது 26). இவருக்கும், ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரத்தை சேர்ந்த என்ஜினீயரான சதீஸ்வர் (30) என்பவருக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    திருமணத்தின்போது பிரீத்திக்கு 120 பவுன் நகை, சொகுசு கார், ரூ.25 லட்சம் வரதட்சணையாக பெற்றோர் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    கணவர் மற்றும் மாமியாருடன் ஏற்பட்ட தகராறில் பிரீத்தி கோபித்துக்கொண்டு, கடந்த மாதம் 11-ந்தேதி ஈரோட்டில் இருந்து புறப்பட்டு திருப்பூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.

    பிரீத்தியின் பெற்றோர், சின்னக்கரையில் உள்ள சொத்தை சமீபத்தில் விற்பனை செய்துள்ளனர். இதில் பிரீத்தியின் பங்காக ரூ.50 லட்சம் வந்துள்ளது. அந்த பணத்தை சதீஸ்வர், தனக்கு கொடுக்குமாறு மனைவியிடம் தொடர்ந்து கேட்டதாக தெரிகிறது. இதனால் பிரீத்தி மனம் உடைந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெற்றோர் வீட்டில் சோகமாக இருந்து வந்துள்ளார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரீத்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் பற்றி அறிந்ததும் நல்லூர் போலீசார் விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வரதட்சணை கொடுமையால் பிரீத்தி தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினர், உறவினர்கள் குற்றம்சாட்டினர். மேலும் பிரீத்தியின் கணவர் வீட்டார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்பிறகே உடலை பெறுவோம் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வரதட்சணை புகார் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து திருப்பூர் ஆர்.டி.ஓ. மோகனசுந்தரம், பிரீத்தியின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார்.

    இந்தநிலையில் நல்லூர் போலீசார் பிரீத்தியின் கணவர் சதீஸ்வர், மாமனார் விஜயகுமார், மாமியார் உமா ஆகியோரிடம் விசாரணை நடத்திய நிலையில், இன்று காலை 3பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ., மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவினாசியில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் ரிதன்யா தற்கொலை செய்த நிலையில், திருப்பூரில் மீண்டும் மற்றொரு இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • பூஜா ஜெயினை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    • சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஹிமாயத் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் அருண்குமார் ஜெயின். தொழிலதிபர்.

    இவரது மனைவி பூஜா ஜெயின் (வயது 43). தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் 5-வது மாடியில் வசித்து வருகின்றனர்.

    நேற்று காலை அருண்குமார் ஜெயின் அலுவலகத்திற்கு சென்றார். அப்போது வீட்டில் பூஜா ஜெயின் அவரது பிள்ளைகள் மற்றும் வேலைக்கார பெண் வீட்டில் இருந்தனர். பூஜா ஜெயில் நீண்ட நேரம் தன்னுடைய அறையில் தனியாக இருந்தார்.

    மதியம் 2 மணி அளவில் அறையில் இருந்து வெளியே வந்த பூஜா ஜெயின் தான் கடவுளிடம் செல்வதாக கூறியபடி 5-வது மாடியில் இருந்து கீழே குதித்தார்.

    இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஹைதர் குடாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பூஜா ஜெயினை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் பூஜா ஜெயின் அறையை சோதனை செய்தனர். அப்போது அவரது அறையில் கடிதம் ஒன்று இருந்தது.

    அதில் நாம் தொடர்ந்து கடவுளை பற்றி தியானித்து அவருக்கு நம்மை அர்ப்பணித்தால் நாம் கடவுளிடம் நெருக்கமாகி சொர்க்கத்தை அடைவோம் என்ற சமண குருக்களின் பொன்மொழியை எழுதி வைத்திருந்தார்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • அங்கம்மாள் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் பெட்ட வாய்த்தலை பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு மகனுடன் வந்தார்.
    • சிறுவன் தாயின் கையை உதறிவிட்டு ஆற்றில் இருந்து கரையேறி விட்டதாகவும், அங்கம்மாள் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது.

    திருச்சி,

    திண்டுக்கல் குஜிலியம்பாறை இலந்தை கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் அங்கம்மாள் (வயது 33). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் பெட்ட வாய்த்தலை பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு மகனுடன் வந்தார்.

    பின்னர் முக்கொம்பு அணைப்பகுதியில் காவிரி ஆற்றில் மகனுடன் குதித்து தற்கொலைக்கு முயன்ற போது அச்சிறுவன் தாயின் கையை உதறிவிட்டு கரையேறி விட்டதாகவும், அங்கம்மாள் அங்கேயே குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் தகவல் அறிந்த திருச்சி தீயணைப்பு படை வீரர்கள்,ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய தீயணைப்பு படை வீரர்கள் சம்பவத்தன்று சென்று படகில் அங்கம்மாளை தேடினர். ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. இன்று 5-வது நாளாக திருச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடம் விரைந்துள்ளனர்.

    இது தொடர்பாக தீயணைப்பு படை வீரர்கள் கூறும் போது, தற்கொலை செய்ததாக கூறப்படும் பெண்ணின் உடலை அவரது மகன் கொடுத்த தகவலின் அடிப்ப டையில் இன்று வரை தேடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    பொதுவாக ஒருவர் தண்ணீரில் குதித்து தற்கொலை செய்தால் அந்த பிணம் 24 மணி நேரத்தில் மிதந்து விடும். ஆனால் 5 நாட்கள் ஆகியும் எந்த தகவலையும் உறுதிப்படுத்த முடியவில்லை. ஆகவே அவரது உடலை மணல் மூடி இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். கடந்த சில வருடங்களுக்கு முன்பு முசிறியில் ஆற்றில் தவறி விழுந்த மூன்று பேரின் உடல்களை மாதக்கணக்கில் தேடியும் கண்டறிய முடியவில்லை. பின்னர் 3 வருடம் கழித்து மணல் அள்ளியபோது மூன்று பேரின் மண்டை ஓடுகள் கிடைக்கப் பட்டன. எனவே அதிகாரிகள் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்றனர்.

    • கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாகவே தனலட்சுமி தனது மகன்களுடன் தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
    • குடும்ப தகராறில் 2 மகன்களுடன் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அலங்காநல்லூர் பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அ.கோவில்பட்டியை சேர்ந்தவர் அய்யனார் (வயது 40). விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி (38).

    இவர்களது மகன்கள் ஹரி கிருஷ்ணன்(14), குபேந்திர கிருஷ்ணன் (12). இவர்கள் இருவரும் அருகில் உள்ள அரசு பள்ளியில் படித்தனர். ஹரிகிருஷ்ணன் 9-ம் வகுப்பும், குபேந்திர கிருஷ்ணன் 7-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அய்யனார் மற்றும் அவரது மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று இரவும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அய்யனார் வீட்டில் இருந்து வெளியே சென்றிருக்கிறார்.

    வீட்டில் தனலட்சுமி தனது 2 மகன்களுடன் இருந்துள்ளார். கணவருடன் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதால் வாழ்க்கையில் வெறுப்படைந்த தனலட்சுமி தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.

    அதன்படி தனலட்சுமி தனது 2 மகன்களுக்கும் விஷத்தை குடிக்க கொடுத்து விட்டு, தானும் குடித்தார். இதில் அவர்கள் 3 பேரும் இறந்து விட்டனர். இந்நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்த அய்யனார் நள்ளிரவில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார்.

    அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை வெகுநேரமாக தட்டியும் தனலட்சுமி திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அய்யனார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது தனலட்சுமி மற்றும் 2 மகன்கள் வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக கிடந்தனர்.

    மனைவி மற்றும் மகன்கள் பிணமாக கிடந்ததை கண்டு அய்யனார் அதிர்ச்சி அடைந்தார். மனைவி மற்றும் மகன்கள் இறந்துவிட்டதால் தானும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்த அவர், மீதம் இருந்த விஷத்தை அவர் குடித்து விட்டார்.

    நள்ளிரவில் கதவை உடைக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அய்யனார் வீட்டிற்கு வந்தனர். அப்போது அங்கு அய்யனார் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்ததையும், தனலட்சுமி மற்றும் அவரது மகன்கள் பிணமாக கிடந்ததையும் பார்த்த அவர்கள், அது குறித்து அலங்காநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரமும் சம்பவ இடத்திற்கு வந்தார். அவர்கள் உயிருக்கு போராடிய அய்யனாரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    தற்கொலை செய்து கொண்ட தனலட்சுமி மற்றும் அவரது 2 மகன்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தனலட்சுமி தனது மகன்களுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாகவே தனலட்சுமி தனது மகன்களுடன் தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதுதொடர்பாக அய்யனாரிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

    அய்யனார் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதால் அவரிடம் போலீசாரால் உடனடியாக விசாரணை நடத்த முடியவில்லை. அபாய கட்டத்தை தாண்டியதும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    குடும்ப தகராறில் 2 மகன்களுடன் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அலங்காநல்லூர் பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கணவர் கண்டித்ததால் விபரீத முடிவை எடுத்தார்.
    • கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் பெண் வாலிபரை வீட்டிற்கு அழைத்து மது போதையில் உல்லாசமாக இருந்து வந்தார்

    கோவை,

    கோவை காட்டூரை சேர்ந்த 42 வயது பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் பெண்ணுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மது மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதன் பின்னர் அவருக்கு வாலிபர் ஒருவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.

    கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் பெண் வாலிபரை வீட்டிற்கு அழைத்து மது போதையில் உல்லாசமாக இருந்து வந்தார்.இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த பெண் மது குடித்தார். அப்போது அவரது கணவர் வீட்டிற்கு வந்தார். அவர் தனது மனைவி மது குடிப்பதை பார்த்து ஆத்திரம் அடைந்து தகராறு செய்தார். அப்போது 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து இளம்பெண்ணின் கணவர் கோபித்துக்கொண்டு வெளியே சென்றார்.

    இதன்காரணமாக மன வேதனை அடைந்த பெண் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய கணவர் கதவை தட்டினார். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தார்.

    வீட்டிற்குள் தனது மனைவி தூக்கில் பிணமாக தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

    பின்னர் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • ரகுமான், கோகிலா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்
    • அங்கு செல்வதற்குள் கோகிலா தூக்கில் தொங்கி உள்ளார்.

    திருச்சி,

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் ரகுமான் (எ)சக்தி லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார் .

    இவர் கோகிலா (வயது 22) என்ற இளம் பெண்ணை கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களுக்கு சாய் சஷ்டிகா என்ற ஒரு பெண் குழந்தையும், சாய் சர்வேஸ் என்ற 7 மாத கைக்குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது கோகிலா தூக்கிட்டு உள்ளார்.

    அப்போது சத்தம் கேட்டு பக்கத்து வீட்டை சேர்ந்த பாலமுருகன் என்பவர் கதவை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றார். அங்கு செல்வதற்குள் கோகிலா தூக்கில் தொங்கி உள்ளார். உடனடியாக பாலமுருகன் அவரை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளார். அங்கு மருத்துவர்கள் பரி சோதனை செய்த போது கோகிலா ஏற்கனவே இறந்தது விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் கோகிலாவுக்கு திருமண மாகி 2 1/2 ஆண்டு களே ஆவதால் திருச்சி ஆர்.டி.ஓ. மேல் விசாரணை மேற்கொண்டு உள்ளார்

    • ராணி சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொடுமுடி:

    கொடுமுடி அடுத்துள்ள ஏமகண்டனூர் பகுதியை சேர்ந்தவர் ராணி (வயது 46). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இவருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் இவரது தங்கை கல்யாணி யுடன் தங்கி வசித்து வந்தார். திருமணம் ஆகாமல் உடல் நிலை சரியில்லாமல் அவதி பட்டு வருகிறோம் என ராணி வேதனை அடைந்து வந்தார்.

    இந்நிலையில் கல்யாணி வேலைக்கு சென்று விட்டார். ராணி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது ராணி சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து ெகாண்டார்.

    கல்யாணியின் மகன் மணிகண்டன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு மூடப்பட்டு இருந்தது. சந்தேகமடைந்த அவர் மேலே ஏறி பார்த்தார். அப்போது ராணி தூக்கில் தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இத குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ராணியின் உடலை கைப்பற்றி கொடு முடி அரசு மருத்துவமனைக்கு பிரேதசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நாகராஜை பிரிந்து மணி 15 ஆண்டுகளாக தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
    • மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் ராமேகவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர் மணி (49). கூலி தொழிலாளி. இவரது கணவர் நாகராஜ். இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகளாகிறது. இதனிடையே நாகராஜை பிரிந்து மணி 15 ஆண்டுகளாக தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளாக அவருக்கு உடல்நிலை பாதிப்பால் அவதி அடைந்து வருகிறார். அதற்கு பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்று தெரிகிறது.

    இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத போது சாணி பவுடரை கரைத்து குடித்து மயங்கினார். இதை பார்த்த அவரது தந்தை கண்ணையன், மணியை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மணி உயிரிழந்தார். இதுகுறித்து கண்ணையன் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன்- மனைவி சண்டையால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூரை அடுத்து பெரிய ஏரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரேசன். இவரது மனைவி லட்சுமி ( வயது 46 ). இருவரும் கூலி தொழிலாளர்கள் . இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது

    இதில் மனமுடைந்த லட்சுமி நிலத்தில் இருந்த ஒட்டன் தழையை ( விஷம் ) அரைத்து குடித்துவிட்டு வீட்டில் மயங்கிய நிலையில் இருந்தார் . உடனடியாக அவரை , அவரது கணவர் சுந்தரேசன் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தார் . ஆனால் சிகிச்சை பலன் இன்றி லட்சுமி நேற்று இறந்து விட்டார் .

    இதுபற்றி தகவல் அறிந்ததும் வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர் .

    • போலீசார் தீவிர விசாரணை
    • இரவில் பெண் ஒருவர் ஆற்றில் குதித்ததாக பொதுமக்கள் தகவல்

    வேலூர்:

    வேலூர் பாலாற்றில் தற்போது ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனை ஏராளமான பொதுமக்கள் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் காட்பாடியில் இருந்து வேலூர் புதிய பஸ் நிலையம் வரக்கூடிய பழைய பாலாற்றின் பாலத்தின் மேலிருந்து நேற்று இரவு பெண் ஒருவர் ஆற்றில் குதித்ததாக விருதம்ட்டு போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் உடனடியாக விரைந்து சென்று பாலத்தின் மேலிருந்து பார்வையிட்டனர். மேலும் ஆற்றின் தண்ணீரில் பார்த்தனர். ஆனால் அங்கு யாரும் இல்லை. இருள் சூழ்ந்து காணப்பட்டது. அங்கு எதுவும் தெரியவில்லை.

    ஆற்றில் குதித்த பெண் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டாரா? அவரது கதி என்ன அல்லது வேண்டுமென்று யாராவது போலீசாரை அலைக்கழித்தார்களா என்பது தெரியவில்லை.

    இன்று காலையில் மீண்டும் போலீசார் பாலாற்று பகுதியில் பார்வையிட்டனர். மேலும் விருதம்பட்டு பகுதியிலிருந்து பெண் யாராவது காணாமல் போனார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதுவரை எந்த ஒரு பெண்ணும் காணாமல் போனதாக தகவல் வரவில்லை. ஆற்றில் பெண் உண்மையிலேயே குதித்தாரா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என போலீசார் தெரிவித்தனர்.

    ×