search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "committed suicide"

    • சின்னதுரைக்கு அடி க்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது
    • சின்னதுரை தான் வீட்டில் வைத்திருந்த களைக்கொல்லி (விஷம்) மருந்தை குடித்து விட்டதாக கூறினார்

    ஈரோடு

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கொண்டு வன் ரெட்டியார் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னதுரை (வயது 54). இவரது மனைவி சம்பூரணம். அரசு பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    சின்னதுரைக்கு அடி க்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. வயிற்று வலி ஏற்படும் போதெல்லாம் சின்னத்திரை மிகவும் கஷ்ட ப்பட்டு வந்துள்ளார். இத ற்காக சிகிச்சை எடுத்தும் குணமாகவில்லை. சம்பவத்தன்று சின்ன துரை மற்றும் அவரது மனைவி, மகன் அந்தியூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றி ருந்தனர். பின்னர் சின்னதுரை மட்டும் வீட்டு க்கு வந்தார்.

    அன்று இரவு தனது மனைவிக்கு போன் செய்த சின்னதுரை தான் வீட்டில் வைத்திருந்த களைக்கொல்லி (விஷம்) மருந்தை குடித்து விட்டதாக கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி மகன் மற்றும் உறவினருடன் சென்று சின்னதுரையை மீட்டு சிகி ச்சைக்காக ஈரோ ட்டில் உள்ள ஒரு தனியார் மருத்து வமனையில் அனும தித்தனர்.

    அவரது நிலைமை மிகவும் மோசம் அடைந்த தால் பின்னர் மேல் சிகி ச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அழை த்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மரு த்துவர் சின்னதுரை வரும் வழியிலேயே இறந்து விட்ட தாக தெரிவித்தார். பின்னர் இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் இருந்து தர்மபுரிக்கு மாறுதல் செய்து உத்தரவு வந்தது.
    • இதனால் மனவேதனையில் தனது வீட்டிலேயே தூக்குபோட்டு தற்ெகாலை செய்து கொண்டார்.

    தேனி:

    தேனி அருகில் உள்ள பழனிசெட்டிபட்டியை சேர்ந்த கருப்பையா மகன் சங்கர்(35). இவர் மதுரையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் இருந்து தர்மபுரிக்கு மாறுதல் செய்து சங்கருக்கு உத்தரவு வந்தது. ஆனால் அங்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

    இதனால் மனவேதனையில் தனது வீட்டிலேயே தூக்குபோட்டு தற்ெகாலை செய்து கொண்டார். பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி மாவட்டம் அமச்சியாபுரம் தெற்குதெரு காலனியை சேர்ந்த முத்து மனைவி மீனாட்சி(63). இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த மீனாட்சி அரளிவிதையை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். க.விலக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜெயஸ்ரீ பிளஸ்-1 படித்து முடித்துவிட்டு பிளஸ்-2 செல்ல உள்ளார்.
    • டாக்டர்கள் ஜெயஸ்ரீ முன்னதாகவே இறந்துவிட்டதாக கூறினார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள டி. மழவராயனூர் கிராமத்தைச் ேசர்ந்தவர் யேசுடையான் மகள் ஜெயஸ்ரீ (வயது 16). திருவெண்ணெய்நல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து முடித்துவிட்டு பிளஸ்-2 செல்ல உள்ளார். 

    இந்நிலையில் வீட்டில் ஜெயஸ்ரீயின் அண்ணன் சமையல் செய்யவில்லை என ஜெயஸ்ரீயை திட்டினார். இதனால் மனம் உளைச்சலில் இருந்த இவர் பூச்சி மருந்தை சாப்பிட்டு மயங்கி கீேழ விழுந்தார். இதை பார்த்த அருகில் இருந்தவாக்ள் ஜெயஸ்ரீயை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு பணியில் இருந்த டாக்டர்கள் ஜெயஸ்ரீ முன்னதாகவே இறந்துவிட்டதாக கூறினார். இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பேரக்குழந்தைகளுடன் அனைவரும் நேற்று திருமண வீட்டுக்கு சென்று விட்டனர்
    • மாதன் கட்டிலில் பேச்சு மூச்சு இன்றி கிடந்தார்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த சின்ன களியூர், பகவதி நகரை சேர்ந்தவர் மாதன்(70). இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். மகளுக்கு திருமணம் ஆகி தாய் தந்தையுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 3 மாதமாக மாதனுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதனால் அவர் மன வேதனையில் இருந்துள்ளார்.

    இந்நிலையில் பக்கத்து தெருவை சேர்ந்த உறவினருக்கு திருமணம் என்பதால் மாதன் மனைவி அவரது மகள் பேரக்குழந்தைகளுடன் அனைவரும் நேற்று திருமண வீட்டுக்கு சென்று விட்டனர். வீட்டில் மாதன் மட்டும் தனியாக இருந்தார்.

    இந்நிலையில் மாதனுக்கு சாப்பாடு கொடுப்பதற்காக அவரது பேரன் வீட்டுக்கு வந்தார். அப்போது மாதன் கட்டிலில் பேச்சு மூச்சு இன்றி கிடந்தார்.

    இது குறித்த அவரது பேரன் அக்கம் பக்கத்தினர் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்தார். அனைவரும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் விவசாயத்திற்காக வைக்கப்பட்டிருந்த குருணை மருந்தை எடுத்து குடித்து மாதன் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது.

    உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே வரும் வழியிலேயே மாதன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை செய்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    பெத்தானியாபுரம் பாத்திமாநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (49).இவர் பல்வேறு இடங்களில் கடன் வாங்கி இருந்தார். கடனை திருப்பிச்செலுத்த முடியாமல் மன அழுத்தத்தில் இருந்தார். இந்த நிலையில் சுரேஷ் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மனைவி செல்வி கொடுத்த புகாரின்பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.

    பி.பி.குளம் முல்லைநகர் மாரிமுத்து மகன் வினோத்குமார்(30).இவர் சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்தார். வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தாயார் சுமதி கொடுத்த புகாரின்பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.

    • கவுதம் கோத்தகிரி பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார்.
    • வீட்டின் சமையல் அறையில் டி.வி. கேபிள் ஒயரால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார்.

    கோத்தகிரி,

    கோத்தகிரி பகுதிக்கு உட்பட்ட கார்சிலி பகுதியில் வசித்து வருபவர் ராபர்ட். இவரும் இவரது மனைவியும் குடும்ப பிரச்சினை காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இவர்களது மகன் கவுதம் கோத்தகிரி பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று ராபர்ட் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது கவுதம் வீட்டின் சமையல் அறையில் டி.வி. கேபிள் ஒயரால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார்.

    அதிர்ச்சியடைந்த ராபர்ட் அக்கம் பக்கத்தினரிடம் கூறினார். பின்பு அவர்கள் கோத்தகிரி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி கோத்தகிரி அரசு ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைத்தனர். கவுதம் எதனால் தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    கோத்தகிரி கெர்பேட்டா எஸ்டேட் பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ். இவரது மகன் ஸ்ரீனிவாசன் (22). இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். இரவு வீட்டில் உள்ள அனைவரிடமும் சகஜமாக பேசிவிட்டு தூங்க சென்றுள்ளார்.

    காலை 5 மணிக்கு செல்வராஜ் வேலைக்கு புறப்பட எழுந்தார். அப்போது வீட்டின் ஒரு அறையில் ஸ்ரீனிவாசன் தூக்கில் தொங்கியபடி பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டது ஏன் என்று தெரியவில்லை. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வாசு திடீரென விஷம் குடித்து வாந்தி எடுத்து கொண்டு இருந்தார்.
    • கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் பைரவர் நகர் பகுதியை சேர்ந்தவர் வாசு (வயது 52). விவசாயி. இவருக்கு அந்த பகுதியில் தோட்டம் இரு ந்தது. அவர் அங்கு விவசாயம் செய்து வந்தார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இவர் அந்த பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் வாசு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வங்கி மற்றும் தெரிந்த வர்களிடம் கடன் பெற்று சொந்தமாக வீடு வாங்கினார். ஆரம்பத்தில் கடன் கட்டி கொண்டு வந்தார். ஆனால் தொடர்ந்து அவரால் வங்கி கடன் செலுத்த முடியாமல் தவித்து வந்ததாக கூறப்படு கிறது.

    இதையடுத்து வாசு அவருக்கு சொந்தமான விவசாய வயலை விற்றார். அந்த பணத்தை கொண்டு கடனை அடை த்தார். இதை தொடர்ந்து அவர் கடனுக்காக தனது விவசாய தோட்டத்தை விற்று விட்டோமே என புலம்பி கொண்டு இருந்தார். இதையடுத்து அவர் மன வேதனையில் இருந்து வந்த தாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று வீட்டின் மாடியில் வாசு திடீரென விஷம் (பூச்சி மருந்து) குடித்து வாந்தி எடுத்து கொண்டு இருந்தார். இதை கண்ட அவரது மனைவி மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை 108 ஆம்புலன்சு மூலம் மீட்டு கோபி செட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த வாசு சிகிச்சை பல னின்றி பரிதாபமாக இற ந்தார்.

    இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • வீட்டில் தனியாக இருந்த சிறுமி சேலையால் தூக்குபோட்டு கொண்டார்.
    • இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் பகுதி யை சேர்ந்த வயது 17 சிறுமி ஒருவர் பிளஸ்-2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் அந்த சிறுமி கடந்த 1 ஆண்டுக்கு முன்பு சென்னையை சேர்ந்த ஒரு வாலிபருடன் செல்போனில் இன்ஸ்ட்ரா கிராம் மூலம் பழகி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று அவரது பெற்றோர் வேலை க்கு சென்று விட்டனர். வீட்டில் தனியாக இருந்த அந்த சிறுமி ஒரு அறையில் பேன் கொக்கியால் தனது தாயாரின் சேலையால் தூக்கு போட்டு கொண்டார்.

    இதை கண்ட அவரது உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.
    • தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை,

    பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை ஒடையகுளத்தை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 40). கூலி தொழிலாளி. இவரது மனைவி சித்ரா (36).

    இவர்களுக்கு கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது. ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சித்ராவிற்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. கணவன்-மனைவி இருவரும் அடிக்கடி மதுகுடித்து வந்தனர்.

    சம்பவத்தன்று வழக்கம் போல கணவன்-மனைவி இருவரும் வீட்டில் மதுகுடித்தனர். அப்போது திடீரென இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதனால் கருப்புசாமி கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே ெசன்று அருகில் உள்ள மோட்டார் அறையில் படுத்து தூங்கினார்.

    இதனை நினைத்து மனவேதனை அடைந்த சித்ரா விரக்தி அடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர்.

    இதுகுறித்து ஆனைமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவருடன் மதுகுடித்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • 34 வயது இளம்பெண் டெய்லர் கடை வைத்து நடத்தி வந்தார்.
    • ஜவுளிக்கடையில் வேலை பார்த்த திருமணமான வாலிபர் ஒருவருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது

    கோவை,

    கோவை அருகே உள்ள கிணத்துக்கடவை சேர்ந்த 34 வயது இளம்பெண். இவர் அந்த பகுதியில் டெய்லர் கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த 12 வருடங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடந்தது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இளம்பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து இளம்பெண் தனது கணவரை பிரிந்து கிணத்துக்கடவில் வசித்து வந்தார். பின்னர் இளம்பெண் கோவையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் வேலைக்கு சேர்ந்தார்.

    அப்போது அந்த ஜவுளிக்கடையில் வேலை பார்த்த திருமணமான வாலிபர் ஒருவருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

    பின்னர் அந்த வாலிபர் தனது மனைவிக்கு தெரியாமல் இளம்பெண்ணுடன் கிணத்துக்கடவு பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்து திருமணம் செய்யாமல் அவருடன் கடந்த 4 மாதங்களாக குடும்பம் நடத்தி வந்தார்.

    இந்தநிலையில் வாலிபர் இளம்பெண்ணை சரியாக கவனிக்காமலும், குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காமலும் இருந்து வந்தார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதன்காரணமாக இளம்பெண் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த அந்த பெண் திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தொங்கினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இளம்பெண்ணை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இளம்பெண் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.   

    தருமபுரியில் வெவ்வேறு இடங்களில் பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    தருமபுரி,

    தருமபுரி அருகேயுள்ள  இண்டூர் பங்குநத்தம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சங்கீதா  (வயது 39). கூலித்தொழிலாளிகள். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சங்கீதா மனமுடைந்து சம்பவத்தன்று தனது உடல் மீது மண் எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். 

    அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதேபோல தருமபுரி அருகேயுள்ள பொம்மிடி போலீஸ் சரகம் சிப்பிரெட்டி அள்ளி பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவரது மகன் ரவிச்சந்திரன் (வயது 21) என்ற பட்டதாரி வாலிபர் குடும்ப பிரச்சனையால் சம்பவத்தன்று எலி பேஸ்ட்டை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

     அவரை சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி ரவிச்சந்திரன் உயிரிழந்தார். இது குறித்து பொம்மிடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர். 
    ஈரோட்டில் வெவ்வேறு சம்பவங்களில் இளம்பெண் உள்பட 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    ஈரோட்டில் வெவ்வேறு சம்பவங்களில் இளம்பெண் உள்பட 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சித்தோடு அருகே உள்ள கங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன் (51).  இவருக்கு திருமணமாகி அமுதா என்ற மனைவியும் தமிழரசன் என்ற மகனும் உள்ளனர்.

    பத்மநாபன் ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதி யில் தறிப்பட்டறையை குத்தகைக்கு எடுத்து ஓட்டி வந்தார். தறி ஓட்டுவதற்கு சரியாக பணம் இல்லாததால் அவரது குடும்பத்தினர் அவருக்கு பணம் கொடுத்து உதவி வந்தனர். மேலும் அவருக்கு குடி பழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
    இந்த நிலையில் வீட்டில் உள்ள ஒரு அறையில் பத்மநாபன் சேலையால் தூக்கு போட்டு கொண்டார். 

    அம்மாபேட்டை அருகே உள்ள சென்னம்பட்டி பகுதிைய சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் குணசேகரன் (32). கூலி தொழிலாளி. இவருக்கு குடி பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் குணசேகரனுக்கு வயிற்று வலி அதிகமானதால் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து மதுவில் கலந்து குடித்து விட்டார். தொடர்ந்து அவர் தான் விஷம் குடித்ததை வீட்டில் இருந்தவர்களிடம் கூறினார்.
    இதையடுதது அவரை மீட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக பெருந்துறை ஐ.ஆர்.டி.டி. மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரி தாபமாக இறந்தார்.

    சிவகிரி அருகே உள்ள கொல்லாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜெக நாதன். இவரது மனைவி ஐஸ்வர்யா (27). இவர்க ளுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவருக்கு வயிற்று வலி இருந்ததாக கூறப்படுகிறது. 

    இந்த நிலையில் சமபத்தன்று ஐஸ்வர்யா திடீரென எலி பேஸ்ட் (விஷம்) குடித்தார். அக்கம் பக்கம் இருநதவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தொடர்ந்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    ஈரோடு மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி லிங்கம்மாள். இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். 
    இவர்களது இளைய மகன் பிரகாஷ் (40). பெயிண்டிங் வேைல செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவருக்கு குடி பழக்கம் இருந்ததாகவும் கூறப்படு கிறது. இவருக்கு திருமண மாகாததால் மன வருத்த த்தில் இருந்து வந்தார். மேலும் தற்கொலை செய்து கொள்வதாக அடிக்கடி கூறி வந்தார்.

    இந்த நிலையில் வேதனையில் இருந்து வந்த பிரகாஷ் வீட்டில் சேலையால் தூக்கு மாட்டி கொண்டார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும்  வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மொடக்குறிச்சி அருகே உள்ள சோலார் புதூர் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (40). இவருக்கு திருமணமாகி லோகேஸ்வரி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவரது மனைவி விஸ்வநாதனை பிரிந்து சென்று விட்டார். இவருக்கு குடி பழக்கம இருந்ததாகவும் மேலும்  கடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
    இந்த நிலையில் வீட்டில் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ×