என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
2-வது மனைவியுடன் குடும்பம் நடத்திய டிரைவர் தற்கொலை
- 5 வருடங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடந்தது.
- குடிபோதையில் கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது.
கோவை,
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 26). டிரைவர். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடந்தது. ஒரு மகன் உள்ளார்.
இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து கிருஷ்ணகுமாரை அவரது மனைவி பிரிந்து சென்றார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அவருக்கு குன்னூரை சேர்ந்த கணவரை விவாகரத்து செய்து வாழ்ந்து வந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
பின்னர் 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் 2 பேரும் கோவை வந்தனர். கிருஷ்ணகுமார் கருமத்தம்பட்டி அருகே உள்ள எம்.ராயர் பாளையத்தில் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலைக்கு சேர்ந்தார்.
சம்பவத்தன்று கிருஷ்ணகுமார் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணகுமார் மனைவியை தாக்கி வெளியே அனுப்பினார்.
பின்னர் வீட்டில் தனியாக இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட கிருஷ்ணகுமாரின் உடல் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிறகு அனுப்பி வைத்தனர். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்