search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கணவருடன் மதுகுடித்த இளம்பெண் தற்கொலை
    X

    கணவருடன் மதுகுடித்த இளம்பெண் தற்கொலை

    • வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.
    • தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை,

    பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை ஒடையகுளத்தை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 40). கூலி தொழிலாளி. இவரது மனைவி சித்ரா (36).

    இவர்களுக்கு கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது. ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சித்ராவிற்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. கணவன்-மனைவி இருவரும் அடிக்கடி மதுகுடித்து வந்தனர்.

    சம்பவத்தன்று வழக்கம் போல கணவன்-மனைவி இருவரும் வீட்டில் மதுகுடித்தனர். அப்போது திடீரென இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதனால் கருப்புசாமி கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே ெசன்று அருகில் உள்ள மோட்டார் அறையில் படுத்து தூங்கினார்.

    இதனை நினைத்து மனவேதனை அடைந்த சித்ரா விரக்தி அடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர்.

    இதுகுறித்து ஆனைமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவருடன் மதுகுடித்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×