என் மலர்
நீங்கள் தேடியது "விவசாயி தற்கொலை"
- 2024 ஆம் ஆண்டில், மகாராஷ்டிராவில் 2,635 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
- குறைந்த மகசூல், கடன் மற்றும் போதுமான நீர்ப்பாசன வசதிகள் இல்லாததால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 767 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெரும்பாலான விவசாயிகள் தற்கொலைகள் மகாராஷ்டிராவின் விதர்பாவில் நடந்துள்ளன.
மகாராஷ்டிர சட்டமன்றத்தில் விவசாயிகள் தற்கொலை புள்ளிவிவரங்கள் குறித்த கேள்விக்கு மாநில நிவாரணம் மற்றும் மறுவாழ்வு துறை அமைச்சர் மகரந்த் பாட்டீல் அளித்த பதில் மூலம் இந்த அதிர்ச்சி புள்ளிவிவரங்கள் தெரியவந்துள்ளன.
இந்த தற்கொலை வழக்குகளில், 373 குடும்பங்கள் நிதி இழப்பீடு பெற தகுதியுடையவை. ஆனால் அரசாங்கம் அவர்களில் 200 குடும்பங்களை தகுதியற்றவர்கள் என்று அறிவித்தது. 194 வழக்குகளில் விசாரணை நடந்து வருவதாகவும் அமைச்சர் பாட்டீல் தெரிவித்தார்.
தகுதியுள்ள 327 விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள வழக்குகளில் இழப்பீடு வழங்குவதை முடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அனைத்து கோட்ட ஆணையர்களும் விரைவில் நிலுவைத் தொகையை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவியை அதிகரிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கோரினர்.
முன்னதாக 2024 ஆம் ஆண்டில், மகாராஷ்டிராவில் 2,635 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர், இது 2023 இல் 2,851 ஆக இருந்தது.
2001 முதல் மகாராஷ்டிராவில் 39,825 விவசாயிகள் தற்கொலைகள் பதிவாகியுள்ளதாக ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. விவசாயிகளின் தற்கொலைகளில், 22,193 பேர் மாநிலத்தின் விவசாய நெருக்கடியுடன் தொடர்புடையவர்கள். குறைந்த மகசூல், கடன் மற்றும் போதுமான நீர்ப்பாசன வசதிகள் இல்லாததால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
விதர்பாவைத் தவிர, யவத்மால், அமராவதி, அகோலா, புல்தானா மற்றும் வாசிம் ஆகிய இடங்களில் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் தற்கொலைகள் பதிவாகியுள்ளன.
- சம்பவத்தன்று நல்லசாமி தங்கியிருந்த அறையின் கதவு நீண்ட நேரம் ஆகியும் திறக்காமல் இருந்ததால் விடுதி ஊழியர் சென்று பார்த்தார்.
- போலீசார் நேரில் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது நல்லசாமி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
கொடுமுடி:
திருப்பூர் மாவட்டம் முத்துக்கவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் நல்லசாமி. விவசாயி. இவர் உடல் நல பிரச்சனை காரணமாக வீட்டில் இருந்து வெளியேறி கொடுமுடியில் உள்ள தனியார் விடுதியில் தங்கினார்.
இந்நிலையில் சம்பவத்தன்று நல்லசாமி தங்கியிருந்த அறையின் கதவு நீண்ட நேரம் ஆகியும் திறக்காமல் இருந்ததால் விடுதி ஊழியர் சென்று பார்த்தார். அப்போது கதவு உள்புறமாக தாழ்போட்டு இருந்தது தெரிய வந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் கொடுமுடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் நேரில் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது நல்லசாமி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியார் விடுதியில் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கொடுமுடியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
- விக்கிரவாண்டி அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
- இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி ஒன்றியம் மதுரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் வயது 60. விவசாயி. இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததன் காரணமாக கடந்த சம்பவத்தன்று தாங்க முடியாமல் வயிற்று வலி ஏற்பட்டதால் விஷம் குடித்து தற்கொலை செய்தார்.
- தனக்கு சொந்தமான நிலத்தை விற்று அந்த கடனை அடைக்க முடிவு செய்துள்ளார்.
- மனமுடைந்த சின்னசாமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தொடுகனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 58).விவசாயியான இ வருக்கு கடன் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் தனக்கு சொந்தமான நிலத்தை விற்று அந்த கடனை அடைக்க முடிவு செய்துள்ளார்.
ஆனால் அவரது குடும்பத்தினர் அதை ஏற்கவில்லை.மேலும் சின்னசாமியின் மனைவி கோபித்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதில் மனமுடைந்த சின்னசாமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து கே.ஆர்.பி.அணை போலீசார் வழக்கு விசாரித்து வருகின்றனர்.
இதேபோல தளி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி. நாராயணசாமி (42) என்பவர் குடிக்க மனைவி பணம் த ரவில்லை என்பதால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து தளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- திருவண்ணாமலை அருகே மனைவி, 4 குழந்தைகளை கொன்று விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அருகே உள்ள கீழ்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் பழனி (வயது 40) விவசாயி. இவரது மனைவி வள்ளி(37), மகள்கள் திரிஷா 15), மோனிஷா (14), பூமிகா (9), சிவசக்தி (7) மகன் தனுசு (4) பழனி ஒரவந்தவாடி மதுரா மோட்டூர் கிராமத்தில் கொரட்டாம்பட்டு கிராமத்தில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார்.
அந்த நிலத்தின் ஒரு பகுதியில் குடிசை வீடு ஒன்று உள்ளது. அதில் சுமார் 4 ஆண்டுகளாக தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இன்று காலை வீட்டின் கூரையில் பழனி தூக்கில் பிணமாக தொங்கினார். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் உள்ளே சென்று பார்த்த போது பழனியின் மனைவி வள்ளி, மகள்கள் திரிஷா, மோனிஷா, சிவசக்தி, மகன் தனுசு ஆகியோர் வெட்டி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். அவருடைய மகள் பூமிகா என்பவர் மட்டும் வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனைக் கண்டு திடுக்கிட்ட பொதுமக்கள் திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பூமிகாவை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பழனி அவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் உட்பட 6 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பழனி மற்றும் அவரது மனைவி குழந்தைகள் கொடுவாளால் வெட்டப்பட்டுள்ளனர். பழனி அவருடைய மனைவி மகள்கள் மற்றும் மகனை வெட்டி கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பழனிக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் மனைவி குழந்தைகளை கொன்று விட்டு அவரும் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கடந்த 15-ந் தேதி நிலத்திற்கு வாங்கி வைத்தி ருந்த பூச்சிமருந்தைகுடித்து வீட்டிலேயே மயங்கி விழுந்தார்.
- திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் நா கராஜ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள இளந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் கனகராஜ் (வயது 47). இவர் விவசாயி. இவருக்கு தீராத வயிற்று வலி இருந்த தால், கடந்த 15-ந் தேதி நிலத்திற்கு வாங்கி வைத்தி ருந்த பூச்சிமருந்தைகுடித்து வீட்டிலேயே மயங்கி விழுந் தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகி ச்சைக்காக அனுமதித்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு இறந்துவிட்டார். இது குறித்து கனகராஜின் மனைவி தேவி (36) அளித்த புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் நா கராஜ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- பல ஆண்டுகளாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது.
- இது குறித்து காவேரிப்பட்டனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள திம்மாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பரசுராமன் (வயது 51) விவசாயி.
இவருக்கு உடல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகளுக்கு மருத்துவம் பார்த்து வந்து உள்ளார்.
பல ஆண்டுகளாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது.
தீராத வயிற்று வலியால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மனவேதனையில் இருந்த பரசுராமன் கடந்த 20-ஆம் தேதி விஷம் குடித்து உள்ளார்.
உறவினர்கள் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.
இது குறித்து காவேரிப்பட்டனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.
- அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
- இந்த விவகாரத்தில் அக்ஸா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
மேற்கு வாங்க மாநிலத்தை சேர்ந்தவர் கணேஷ்மல். இவர் தற்போது குடும்பத்துடன் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகேயுள்ள உளிபெண்டா பகுதியில் தாகி வேலை பார்த்து வருகிறார்.
இவரது மகன் அக்ஸா (வயது 17). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
இந்த விவகாரத்தில் அக்ஸா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கணேஷ்மல் கொடுத்த புகாரின் பேரில் தளி போலீசர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல தேன்கனி கோட்டை அருகேயுள்ள டி. புதூர் பகுதியை சேர்ந்த விவசாயி காளியப்பன் என்பவர் குடிபழக்கத்தை வீட்டில் கண்டித்ததால் மனமுடைந்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது மகள் மோனிஷா தந்த புகாரின்பேரில் கெலமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீஸ் நிலையம் முன்பு விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சதீஸ்கண்ணன் கொடுத்த புகாரின்பேரில் சங்கர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
கொடைரோடு:
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகில் உள்ள பொட்டிசெட்டிபட்டி கன்னிமார்நகரை சேர்ந்த பாண்டி மகன் சதீஸ்கண்ணன்(23). இவர் பள்ளபட்டியில் உள்ள சிப்காட்டில் வேலைபார்த்து வந்தார். இவர் தனக்கு சொந்தமான தோட்டத்திற்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ந்தேதி சென்றபோது அதேபகுதியை சேர்ந்த சங்கர், நாச்சியப்பன், சின்னக்கருப்பு மற்றும் சிலர் அவரிடம் தகாத வார்த்தைகளால் திட்டி நிலத்தை அபகரிக்கும் தோணியில் பேசி வந்தனர்.
மேலும் குடும்பத்தோடு கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் நிலக்கோட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் புகார் மனு அளித்தார். இதனைதொடர்ந்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டது.
ஆனால் கோர்ட்டு உத்தரவிட்டும் எந்தவித நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை. இதனால் பாண்டி(50) அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்திற்கு வந்து தனது புகார் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேட்டவாறே தான் கொண்டுவந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் பாண்டியை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் சதீஸ்கண்ணன் கொடுத்த புகாரின்பேரில் சங்கர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். போலீஸ் நிலையம் முன்பு விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சம்பவத்தன்று மதியம் மணி வாந்தி எடுத்து கொண்டிருந்தார்.
- இது குறித்து அவரிடம் கேட்டபோது விஷ மாத்திரையை தின்று விட்டதாக கூறியுள்ளார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை, செம்மண் குழிக்காடு பெரிய காட்டுத்தோட்டத்தை சேர்ந்தவர் மணி (66). விவசாயி. இவரது மனைவி விஜயா (58). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் மணி கடந்த ஒரு வருடமாக பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
சம்பவத்தன்று மதியம் மனைவி விஜயா ரேஷன் கடைக்கு போய்விட்டு திரும்பி வந்து பார்த்தபோது மணி வாந்தி எடுத்து கொண்டிருந்தார்.
இது குறித்து அவரிடம் கேட்டபோது நோய் காரணமாக வாழப்பிடிக்காமல் விஷ மாத்திரையை தின்று விட்டதாக கூறியுள்ளார். உடனடியாக விஜயா அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்துள்ளார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அறச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பணம் கொடுத்த பிறகும் தனது வீடு மற்றும் நிலத்தை அபகரித்ததால் மனமுடைந்த விவசாயி தற்கொலை செய்து கொண்டார்
- புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி அருகே பசுமை நகரரை சேர்ந்தவர் தவமணி(48). விவசாயி. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு போடியை சேர்ந்த சிற்றரசன் என்பவருக்கு தனது காலி இடத்தை கிரையம் செய்து கொடுத்து ரூ.3லட்சம் கடன் வாங்கினார். அதன்பின்னர் பணத்தை திருப்பி செலுத்திவிட்ட நிலையில் சிற்றரசன் தவமணிக்கு இடத்ைத எழுதி கொடுக்க மறுத்துவிட்டார்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த இடத்தை பாண்டி என்பவருக்கு கிரையம் செய்து கொடுத்துவிட்டார். இதனைதொடர்ந்து பாண்டி, தவமணியிடம் இந்த இடம் தனக்கு சொந்தம் என்றும், வீடு மற்றும் காலியிடத்தை காலி செய்யுமாறும் தகராறு செய்து வந்துள்ளார்.
இதனால் மனஉளைச்ச லில் இருந்த தவமணி வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போடி தாலுகா போலீசில் தவமணியின் மனைவி மகாலட்சுமி புகார் அளி த்தார். அதன்பேரில் போலீ சார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- வாசு திடீரென விஷம் குடித்து வாந்தி எடுத்து கொண்டு இருந்தார்.
- கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் பைரவர் நகர் பகுதியை சேர்ந்தவர் வாசு (வயது 52). விவசாயி. இவருக்கு அந்த பகுதியில் தோட்டம் இரு ந்தது. அவர் அங்கு விவசாயம் செய்து வந்தார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இவர் அந்த பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் வாசு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வங்கி மற்றும் தெரிந்த வர்களிடம் கடன் பெற்று சொந்தமாக வீடு வாங்கினார். ஆரம்பத்தில் கடன் கட்டி கொண்டு வந்தார். ஆனால் தொடர்ந்து அவரால் வங்கி கடன் செலுத்த முடியாமல் தவித்து வந்ததாக கூறப்படு கிறது.
இதையடுத்து வாசு அவருக்கு சொந்தமான விவசாய வயலை விற்றார். அந்த பணத்தை கொண்டு கடனை அடை த்தார். இதை தொடர்ந்து அவர் கடனுக்காக தனது விவசாய தோட்டத்தை விற்று விட்டோமே என புலம்பி கொண்டு இருந்தார். இதையடுத்து அவர் மன வேதனையில் இருந்து வந்த தாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று வீட்டின் மாடியில் வாசு திடீரென விஷம் (பூச்சி மருந்து) குடித்து வாந்தி எடுத்து கொண்டு இருந்தார். இதை கண்ட அவரது மனைவி மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை 108 ஆம்புலன்சு மூலம் மீட்டு கோபி செட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த வாசு சிகிச்சை பல னின்றி பரிதாபமாக இற ந்தார்.
இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.






