என் மலர்
நீங்கள் தேடியது "stomach ache"
- விக்கிரவாண்டி அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
- இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி ஒன்றியம் மதுரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் வயது 60. விவசாயி. இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததன் காரணமாக கடந்த சம்பவத்தன்று தாங்க முடியாமல் வயிற்று வலி ஏற்பட்டதால் விஷம் குடித்து தற்கொலை செய்தார்.
- திருவெண்ணைநல்லூர் அருகே குருணை மருந்து குடித்து 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- வயிற்று வலி இருந்ததாக கூறப்படுகிறது. வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று வீட்டில் இருந்த குருணை மருந்தை சாப்பிட்டு மயங்கி கிடந்தார்.
விழுப்புரம் :
திருவெண்ணைநல்லூர் அருகே கடுத்தாட்கொண்டூர் பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி. அவரது மனைவி ஜெயந்தி (வயது 38). இவருக்கு முன்னதாகவே தீராத வயிற்று வலி இருந்தது. நேற்று ஜெயந்தி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். மன உளைச்சலில் இருந்த ஜெயந்தி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் குருணை மருந்து எடுத்து குடித்துவிட்டு மயங்கி நிலையில் கிடந்தார். இதை அக்கம் பக்கம் உள்ளவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ஜெயந்தி இறந்தார்.
இதுகுறித்து திரு வெண்ணை நல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெ க்டர் நாகராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போன்று திருவெண்ணை நல்லூர் அருகே கொத்தனூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (24) இவர் விழுப்புரம் ஸ்ரீராம் பைனான்சில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 2 வருடம் ஆகிறது 10 மாத கைக்குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் இவருக்கும் வயிற்று வலி இருந்ததாக கூறப்படுகிறது. வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று வீட்டில் இருந்த குருணை மருந்தை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இவரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு முண்டியம் பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக வெங்கடேசன் இறந்தார். இதுகுறித்து வெங்க டேசன் மனைவி சத்யா திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன், தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ள காளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகள் மேனகா (வயது 20). இவர் ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். இவருக்கு நேற்று திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. உடனே அவரை பரமத்தி வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மேனகாவை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். புகாரின் பேரில் பரமத்தி வேலூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெய்வேலி:
நெய்வேலி புதுநகர் 21-வது வட்டம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ், கூலித்தொழிலாளி. இவரது மனைவி பிரியா (வயது 27). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டு ஆகிறது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. நேற்று மாலையில் வீட்டில் இருந்த பிரியா திடீர் என்று விஷத்தை எடுத்து குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை பிரியா இறந்தார்.
இதுகுறித்து நெய்வேலி தெர்மல் போலீசில் பிரியாவின் தந்தை ரங்கன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிரியாவுக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு வந்தது.
இதற்கு அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் நோய் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.