என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எக்ஸ்பிரஸ் ரெயில்"

    • குருவாயூர்-கொல்லம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
    • வருகிற 22-ந் தேதி திருவனந்தபுரம்-கோட்டயம் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவனந்தபுரம் கோட்டத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, மதுரையில் இருந்து காலை 11.35 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16327) வருகிற 22-ந் தேதி கொல்லம்-குருவாயூர் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, குருவாயூரில் இருந்து புறப்பட்டு மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16328) 23-ந்தேதி குருவாயூர்-கொல்லம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. மேலும், இந்த ரெயில் மதியம் 12.10 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும்.

    சென்னை சென்டிரலில் இருந்து மதியம் 3.20 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12695) வருகிற 21-ந் தேதி கோட்டயம்-திருவனந்தபுரம் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    இதே வழித்தடத்தில் 25-ந்தேதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22207) பகுதிநேரமாக எர்ணாகுளம் - திருவனந்தபுரம் இடையே ரத்து செய்யப்படுகிறது. திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12696) வருகிற 22-ந் தேதி திருவனந்தபுரம்-கோட்டயம் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    இந்த ரெயில் கோட்டயத்தில் இருந்து இரவு 8.05 மணிக்கு புறப்படும். தாம்பரத்தில் இருந்து காலை 10.47 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16127) 25-ந் தேதி 2 மணி நேரம் 20 நிமிடம் தாமதமாக குருவாயூர் சென்றடையும். அதே தேதியில் குருவாயூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128) 2 மணி நேரம் 20 நிமிடம் தாமதமாக தாம்பரம் வந்தடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் 2026-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இந்த பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்பட்டு இருக்கும்.
    • வருகிற ஏப்ரல் மாதம் இறுதி வரையில் இது அமலில் இருக்கும்.

    நெல்லை:

    செங்கோட்டை -தாம்பரம் இடையே வாரத்தில் 3 நாட்கள் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 20681, 20682) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் கூடுதலாக ஒரு ஏ.சி. இரண்டடுக்கு பெட்டி, 2 ஏ.சி. மூன்றடுக்கு பெட்டி, 3 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி மற்றும் ஒரு பொது பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது.

    தாம்பரத்தில் இருந்து வருகிற 1-ந் தேதி (சனிக்கிழமை) முதல், செங்கோட்டையில் இருந்து 2-ந் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். வருகிற ஏப்ரல் மாதம் இறுதி வரையில் இது அமலில் இருக்கும்.

    வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் 2026-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இந்த பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்பட்டு இருக்கும்.

    இதே போல் நெல்லை வழியாக இயக்கப்படும் தாம்பரம் -நாகர்கோவில் (வண்டி எண் 22657, 22658) ரெயிலில் ஒரு ஏ.சி. இரண்டடுக்கு பெட்டி, 2 மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், ஒரு பொது பெட்டி ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும்.

    தாம்பரத்தில் இருந்து வருகிற நவம்பர் 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல், நாகர்கோவிலில் இருந்து 3-ந் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும். இவை ஏப்ரல் மாதம் இறுதி வரை அமலில் இருக்கும்.

    இந்த தகவலை தெற்கு ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பு அலுவலர் செந்தமிழ் செல்வன் தெரிவித்து உள்ளார்.

    • வருகிற டிசம்பர் 6-ந் தேதி முதல் இணைக்கப்படுகிறது.
    • செங்கல்பட்டில் இருந்து காக்கிநாடாவிற்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் டிசம்பர் 7-ந் தேதி முதல் இணைக்கப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பயணிகளின் வசதிக்காக தெலுங்கானா மாநிலம் காச்சிகுடாவில் இருந்து செங்கல்பட்டுக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண்-17652) படுக்கை வசதி பெட்டிக்கு பதிலாக ஒரு 2-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டி வருகிற டிசம்பர் 6-ந் தேதி முதல் இணைக்கப்படுகிறது.

    இதே மாற்றங்கள், செங்கல்பட்டில் இருந்து காச்சிகுடாவிற்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் (17651) டிசம்பர் 8-ந் தேதி முதல் இணைக்கப்படுகிறது.

    ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து செங்கல்பட்டுக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (17644) படுக்கை வசதி பெட்டிக்கு பதிலாக ஒரு 2-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டி வருகிற டிசம்பர் 7-ந் தேதி முதல் இணைக்கப்படுகிறது. இதே மாற்றங்கள், செங்கல்பட்டில் இருந்து காக்கிநாடாவிற்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் (17643) டிசம்பர் 7-ந் தேதி முதல் இணைக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • ஏசி பெட்டிகளின் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் போது துப்புரவு தொழிலாளர்கள் உடலைக் கண்டுபிடித்தனர்.
    • ​​இறந்த சிறுவனின் தாய் புகார் அளித்திருப்பது தெரியவந்தது.

    மகாராஷ்டிராவின் மும்பையில் ரெயில் குப்பைத் தொட்டியில் ஐந்து வயது சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இன்று, உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் இருந்து குர்லாவில் உள்ள லோக்மான்ய திலக் ரெயில் முனையத்திற்கு வந்து சேர்ந்த குஷிநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஏசி பெட்டிகளின் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் போது துப்புரவு தொழிலாளர்கள் உடலைக் கண்டுபிடித்தனர்.

    அவர்கள் தெரிவித்த தகவலின்பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர்.

     காவல்துறையினருக்குக் கிடைத்த காணாமல் போனோர் புகார்களை ஆய்வு செய்தபோது, இறந்த சிறுவனின் தாய் புகார் அளித்திருப்பது தெரியவந்தது.

    குஜராத்தின் சூரத்தைச் சேர்ந்த தனது உறவினர் விகாஸ் ஷா வெள்ளிக்கிழமை இரவு தனது மகனைக் கடத்திச் சென்றதாகக் தாய் புகார் அளித்திருக்கிறார். இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.  

    • சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடிய நாய் மீண்டும் அதே இடத்திற்கு வந்தது.
    • ரெயில் நடு வழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கி தவித்தபடி நின்றனர்.

    சேலம்:

    ஈரோட்டில் இருந்து சேலம், ஜோலார்பேட்டை வழியாக சென்னைக்கு தினசரி ரெயிலாக ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயில் நேற்றிரவு 9 மணியளவில் வழக்கம் போல ஈரோட்டில் இருந்து புறப்பட்டு சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த மாவேலிபாளையத்தை கடந்து மகுடஞ்சாவடி அருகே வந்து கொண்டிருந்தது .

    அப்போது ரெயில் என்ஜின் சக்கரத்தில் இரும்பு துண்டு சிக்கிய நிலையில் தரதரவென சிறிது தூரம் இழுத்து சென்றது. ஏதோ விபரீதம் நடப்பதை அறிந்த ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார்.

    பின்னர் கீழே இறங்கி சென்று பார்த்தபோது தண்டவாளத்தில் பெரிய அளவிலான இரும்பு துண்டு வைக்கப்பட்டிருந்ததும் அது ரெயில் என்ஜினின் சக்கரத்தில் சிக்கி இருப்பதும் தெரிய வந்தது.

    இதனால் ரெயில் என்ஜின் பழுதானதால் தொடர்ந்து இயக்க முடியாத நிலையில் ரெயில் இருப்பதை அறிந்த என்ஜின் டிரைவர் இது குறித்து ரெயில்வே கோட்ட கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனே அங்கு விரைந்து வந்த ரெயில்வே அதிகாரிகள் மற்றும் சேலம், ஈரோடு ரெயில்வே போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்கும் நோக்கில் பெரிய அளவிலான 10 அடி நீளமுள்ள உடைந்த தண்டவாள துண்டை ரெயில்தண்டவாளத்தின் குறுக்கே மர்ம நபர்கள் வைத்து சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து மோப்பநாயும் வரவழைத்து ஆய்வு செய்தனர். சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடிய நாய் மீண்டும் அதே இடத்திற்கு வந்தது.

    இதற்கிடையே ரெயில் நடு வழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கி தவித்தபடி நின்றனர். தொடர்ந்து சேலத்தில் இருந்து மாற்று என்ஜின் கொண்டு வரப்பட்டு அந்த என்ஜின் பொருத்தப்பட்டது.

    பின்னர் 2 மணி நேரம் தாமதமாக இரவு 11.45 மணிக்கு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி சென்ற எக்பிஸ்பிரஸ் ரெயில் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    இதே போல ஈரோடு மார்க்கமாக சென்னை மற்றும் பெங்களூரு செல்லும் 3 ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் அந்த ரெயில்களில் பயணம் செய்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து ரெயில்வே டி.எஸ்.பி.பாபு மற்றும் போலீசார் நடத்திய விசாரணையில், இரவு நேரத்தில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தி இருக்கலாம் என்றும், மது போதையில் அங்குகிடந்த 10 அடி நீளமுள்ள உடைந்த தண்டவாள துண்டை ரெயில் தண்டவாளத்தின் குறுக்கே வைத்து சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து அந்த பகுதி காட்டுப்பகுதி என்பதால் அங்கு கேமராக்கள் இல்லை. ஆனாலும் அருகில் உள்ள காளி கவுண்டம்பாளையம், மாவேலிக்கரை, மகுடஞ்சாவடி பகுதியில் தண்டவாள பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றி திரிந்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் அந்த பகுதிகளில் உள்ள உள்ள கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து குடிபோதையில் சுற்றி திரியும் நபர்களை பிடித்து விசாரணை நடத்த உள்ளனர். தொடர்ந்து மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

    • ரெயில்களில் சிலர் ஆபத்தை உணராமல் சாகச பயணம் செய்கின்றனர்.
    • சாகச பயணத்தில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வேயின் கீழ் நாள் தோறும் 350-க்கும் மேற்பட்ட ரெயில்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதுபோக, சென்னை கோட்டத்தில் மின்சார ரெயில் சேவையும் இயக்கப்படுகிறது. இதனால், லட்சக்கணக்கான பயணிகள் பயனடைந்து வருகிறார்கள்.

    இதற்கிடையே, பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு நீண்ட தூரத்தில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைத்து இயக்கப்படுகிறது. இவ்வாறு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரெயில்களில் சிலர் ஆபத்தை உணராமல் சாகச பயணம் செய்கின்றனர். சில நேரங்களில் இது உயிரிழப்பையும் ஏற்படுத்தி விடுகிறது.

    இதுபோன்ற சாகச பயணத்தில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனாலும் அதை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ரெயில் படிக்கட்டில் அமர்ந்து பயணித்தாலோ அல்லது படிக்கட்டில் தொங்கியபடி சாகச பயணம் மேற்கொண்டாலோ ரூ.1,000 அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ரெயில் ஓட்டுநர் அப்பெண்ணை கண்டு உடனடியாக பிரேக் போட்டார். ஆனால் ரயிலை உடனடியாக நிறுத்த முடியவில்லை.
    • அப்பெண் ஷகர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்ட்டார்.

    பீகாரில் தற்கொலை செய்ய தண்டவாளத்தில் குதித்த நடுத்தர வயது பெண் ரெயில் ஓட்டுனரின் சமயோஜித நடவடிக்கையால் உயிர்பிழைத்தார்.

    பீகாரில் பெகுசராய் பகுதியில் நேற்று முன் தினம் காலை சலோனா ரெயில் நிலையம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.

    சஹர்சாவிலிருந்து சமஸ்திபூருக்குச் செல்லும் பயணிகள் ரெயில், நிலையத்தை விட்டு வெளியேறியபோது அந்தப் பெண் திடீரென தண்டவாளத்தில் குதித்தார். ரெயில் ஓட்டுநர் அப்பெண்ணை கண்டு உடனடியாக பிரேக் போட்டார். ஆனால் ரெயிலை உடனடியாக நிறுத்த முடியவில்லை.

    இறுதியில் அப்பெண் என்ஜினுக்கு அடியில் சிக்கிக்கொண்டார். ஓட்டுநரும் உள்ளுர்வாசிகளும் உடனே விரைந்து ரெயிலுக்கு அடியில் சிக்கிய பெண்ணை சிறு காயங்களுடன் பத்திரமாக மீட்டனர். அப்பெண் ஷகர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்ட்டார்.

    குடும்பத் தகராறு காரணமாக அந்தப் பெண் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர்வாசிகள் அந்தப் பெண்ணை என்ஜினுக்கு அடியில் இருந்து மீட்ட காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

    • ரெயில் பெட்டியை தண்டவாளத்தில் நிறுத்தும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
    • ரெயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

    சென்னை தாம்பரத்தில் பணிமனைக்கு சென்ற விரைவு ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

    சென்னை தாம்பரத்தில் யார்டுக்கு சென்ற எக்ஸ்பிரஸ் விரைவு ரெயிலின் ஒரு பெட்டி திடீரென தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், ரெயில் பெட்டியை தண்டவாளத்தில் நிறுத்தும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    ரெயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும், விபத்துக்கான காரணம் குறித்து ரெயில்வே போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    • போத்தனூர் - இருகூர் வழியாக இயக்கப்படும் என தெற்கு ெரயில்வே அறிவித்துள்ளது.
    • சேலம் கோட்ட ெரயில்வே அதிகாரிகள் இத்தகவலை தெரிவித்துள்ளனர்.

    திருப்பூர்: 

    கோவையில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூருக்கு திங்கட்கிழமை தோறும் சிறப்பு ெரயில் (05304) இயக்கப்படுகிறது.திங்கட்கிழமை காலை 4:40மணிக்கு கோவையில் புறப்படும் இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி ரெயில் நிலையங்களில் நின்று ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா வழியாக பயணித்து புதன்கிழமை காலை கோரக்பூர் செல்கிறது. இன்று முதல் இந்த ெரயிலில் கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி சேர்க்கப்படுகிறது.

    ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் நவம்பர் 16-ந்தேதி வரை கோவை ரெயில் நிலையத்தில் நின்று செல்லாது. போத்தனூர் - இருகூர் வழியாக இயக்கப்படும் என தெற்கு ெரயில்வே அறிவித்துள்ளது.

    தினமும் காலை 6மணிக்கு கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (13352) 3-வது நாள் ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் சென்று சேரும். கோவைக்கு மதியம் 12:20க்கும், திருப்பூருக்கு மதியம் 1:10க்கும் வரும்.

    நவம்பர் இரண்டாவது வாரம் வரை போத்தனூர் - கோவை இடையே பொறியியல் மேம்பாட்டு பணி நடக்கிறது. இதனால் தன்பாத் எக்ஸ்பிரஸ் ெரயில் பாலக்காட்டில் இருந்து புறப்பட்டு மதியம், 12மணிக்கு போத்தனூரில் நிற்கும்.போத்தனூரில் இருந்து இருகூர் வழியாக திருப்பூருக்கு பயணிக்கும். கோவை ெரயில்வே சந்திப்புக்கு வராது.பொறியியல் மேம்பாட்டு பணியால், மதுரை - கோவை, ஷொர்Èர் - கோவை, கோவை - கண்Èர், கோவை - ஷொர்Èர் உள்ளிட்ட ெரயில்களின் இயக்கமும் இன்று முதல் மாற்றப்படுகிறது. சேலம் கோட்ட ெரயில்வே அதிகாரிகள் இத்தகவலை தெரிவித்துள்ளனர்.

    • மது அருந்திய வாலிபர் அந்த பாறாங்கற்களை தண்டவாளத்தில் எடுத்து வைத்து சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேக்கிறார்கள்
    • இரும்பு கம்பி மீது ரெயில் என்ஜின் மோதிய இடத்தில் கிடந்த கம்பியை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். ரெயிலை கவிழ்க்க சதி நடந்ததா? வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நேற்று மாலை பாறாங்கற்கள் இருந்தது. இதைப்பார்த்த ரெயில்வே ஊழியர்கள் அந்த பாறங்கற்களை அப்பு றப்படுத்தினார்கள்.

    பின்னர் இது குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது பாறாங்கற்கள் வைக்கப் பட்டிருந்த பகுதியில் மது பாட்டில்களும் இருந்தது.

    எனவே அந்த பகுதியில் இருந்து மது அருந்திய வாலிபர் அந்த பாறாங்கற்களை தண்டவாளத்தில் எடுத்து வைத்து சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேக்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை கன்னியாகுமரியில் இருந்து இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் வழியாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றது. அகஸ்தீஸ்வரம் அருகே மாடுகட்டி விளை பகுதியில் ரெயில் வந்து கொண்டிருந்தபோது ரெயில் தண்டவாளத்தில் இரும்புகம்பி ஒன்று சரிந்து கிடந்தது.இதில்  ரெயிலின் இன்ஜின் பெட்டி மோதியது.

    இரும்பு கம்பி மீது ரெயில் பெட்டி மோதியதில் என்ஜின் லேசான சேதம் ஏற்பட்டது. டிரைவர் ரெயிலை நிறுத்தாமல் இயக்கி சென்றார். இரும்பு கம்பி மீது ரெயில் பெட்டி மோதியது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து நாகர் கோவில் ரெயில்வே போலீசாரும் ரெயில்வே அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற் கொண்டனர். இன்று காலை யில் ரெயில்வே டி.எஸ்.பி. மற்றும் இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா, சப்-இன்ஸ்பெக்டர் ஜோசப் ராஜ் மற்றும் ரெயில்வே அதிகாரிகளும் சம்பவத்திற்கு சென்றனர்.

    இரும்பு கம்பி மீது ரெயில் என்ஜின் மோதிய இடத்தில் கிடந்த கம்பியை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். ரெயிலை கவிழ்க்க சதி நடந்ததா? வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    முதல் கட்ட விசார ணையில் பொது மக்கள் தண்டவாளத்தை கடந்து செல்லாமல் இருக்கும் வகையில் இரும்பு கம்பிகள் நடப்பட்டு இருந்தது. நேற்று மாலை அந்த பகுதியில் கொட்டி தீர்த்த கன மழையின் காரணமாக அந்த பகுதியில் இருந்த இரும்பு கம்பிகள் மழையில் சரிந்து தண்டவாளத்தில் விழுந்து இருப்பது தெரிய வந்துள்ளது.

    இருப்பினும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார் கள். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவின் காட்சி களை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அடுத்தடுத்து நடந்த இரண்டு சம்பவங்களும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மானாமதுரை வரை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • காரைக்குடி ரெயில் நிலையத்தில் இருந்து மானாமதுரை 50 கி.மீ. தூரத்தில் உள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, காரைக்குடி என 2 சந்திப்பு ரெயில் நிலையங்கள் உள்ளன. இதில் இந்தியாவில் பிரசித்தி பெற்ற புண்ணிய தலமாக உள்ள ராமேசுவரம், கன்னியாகுமரிக்கு மானாமதுரை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து பாதைகள் செல்கிறது.

    மதுரை-திருச்சி அகல ரெயில் பாதை அமைக்கபட்ட காலத்தில் ரெயில் சேவை நிறுத்தப்படாமல் தென்மாவட்டங்களுக்கு காரைக்குடி-மானா மதுரை சந்திப்பு வழியாகத் தான் ரெயில்கள் இயக்கப்பட்டன. மீட்டர் கேஜ் பாதையாக இருந்த போது மானாமதுரையில் இருந்து பகல் நேரத்தில் சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் வசதி இருந்தது.

    இதுதவிர கேரளா மாநிலம் கொல்லம், பாலக்காடுக்கும் ரெயில் வசதி இருந்தது. அகல ரெயில் பாதை வந்த பிறகு பல ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.

    ராமேசுவரத்தில் இருந்து மானாமதுரை , காரைக்குடி வழியாக தினசரி பகல் நேரத்தில் சென்னைக்கு ரெயில் வசதி கிடையாது. தற்போது திருச்சி வரை வரும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் சில ஆண்டுகளுக்கு முன் காரைக்குடி வரை விடப்பட்டு அங்கிருந்து சென்னைக்கு செல்கிறது.

    காரைக்குடி ரெயில் நிலையத்தில் இருந்து மானாமதுரை 50 கி.மீ. தூரத்தில் உள்ளது. மானாமதுரை ரெயில் நிலையத்தில் இருந்து தற்போது ரெயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டு கன்னியாகுமரியில் இருந்து பாண்டிசேரி வரை மின் பாதை வழிதடத்தில் நேரடியாக ரெயில்கள் செல்கிறது.

    எனவே சென்னையில் இருந்து காரைக்குடி வரும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மானாமதுரை வரை இயக்க வேண்டும் என்று தென்னக ரெயில்வே துறைக்கும் மதுரை, திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர்களுக்கும் மானாமதுரை பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • பாண்டோகிராப் கருவி உடைந்ததால் கோளாறு
    • பயணிகள் 2 மணி நேரம் அவதி

    அரக்கோணம்:

    சென்னை சென்டிரலில் இருந்து கோவை வரை செல் லும் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மதியம் 2.30-க்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது.

    ரெயில்திரு வள்ளூர் மாவட்டம் திருவா லங்காடு ரெயில் நிலையத்தை கடந்த போது என்ஜினின் மேல் பகுதியில் உயர் அழுத்த கம்பியில் உரசியவாறு வரும் மின்சாரத்தை சேகரிக்கும் 'பாண்டோகிராப்' என்ற கருவி உடைந்து சேதமானது. இதனால் ரெயில் இயங்கமுடியாமல் நடு வழியிலேயே நின்றது.

    இதனையடுத்து அரக்கோணத்தில் இருந்து ரெயில்வே மின்துறை பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    இதனால் சென்னையிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில், சென்னை-பெங்களூரூலால் பார்க் எக்ஸ்பிரஸ், சென்னை ஹூப்ளி வாராந்திர எக்ஸ் பிரஸ் ரெயில்கள் மற்றும் புறநகர் ரெயில்களும் ஆங்காங்கே நடு வழியில் நிறுத்தப்பட்டன.

    2 மணி நேரத்தில் கோளாறு சரிசெய்யப்பட்டதையடுத்து ரெயில் புறப்பட்டு சென்றது. அதன்பின் மற்றரெயில்களும் புறப்பட்டன. இந்த தாமதத் தால் பயணிகள் அவதி அடைந்தனர்.

    ×