என் மலர்
நீங்கள் தேடியது "ரெயிலை கவிழ்க்க சதி"
- சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடிய நாய் மீண்டும் அதே இடத்திற்கு வந்தது.
- ரெயில் நடு வழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கி தவித்தபடி நின்றனர்.
சேலம்:
ஈரோட்டில் இருந்து சேலம், ஜோலார்பேட்டை வழியாக சென்னைக்கு தினசரி ரெயிலாக ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரெயில் நேற்றிரவு 9 மணியளவில் வழக்கம் போல ஈரோட்டில் இருந்து புறப்பட்டு சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த மாவேலிபாளையத்தை கடந்து மகுடஞ்சாவடி அருகே வந்து கொண்டிருந்தது .
அப்போது ரெயில் என்ஜின் சக்கரத்தில் இரும்பு துண்டு சிக்கிய நிலையில் தரதரவென சிறிது தூரம் இழுத்து சென்றது. ஏதோ விபரீதம் நடப்பதை அறிந்த ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார்.
பின்னர் கீழே இறங்கி சென்று பார்த்தபோது தண்டவாளத்தில் பெரிய அளவிலான இரும்பு துண்டு வைக்கப்பட்டிருந்ததும் அது ரெயில் என்ஜினின் சக்கரத்தில் சிக்கி இருப்பதும் தெரிய வந்தது.
இதனால் ரெயில் என்ஜின் பழுதானதால் தொடர்ந்து இயக்க முடியாத நிலையில் ரெயில் இருப்பதை அறிந்த என்ஜின் டிரைவர் இது குறித்து ரெயில்வே கோட்ட கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே அங்கு விரைந்து வந்த ரெயில்வே அதிகாரிகள் மற்றும் சேலம், ஈரோடு ரெயில்வே போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்கும் நோக்கில் பெரிய அளவிலான 10 அடி நீளமுள்ள உடைந்த தண்டவாள துண்டை ரெயில்தண்டவாளத்தின் குறுக்கே மர்ம நபர்கள் வைத்து சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து மோப்பநாயும் வரவழைத்து ஆய்வு செய்தனர். சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடிய நாய் மீண்டும் அதே இடத்திற்கு வந்தது.
இதற்கிடையே ரெயில் நடு வழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கி தவித்தபடி நின்றனர். தொடர்ந்து சேலத்தில் இருந்து மாற்று என்ஜின் கொண்டு வரப்பட்டு அந்த என்ஜின் பொருத்தப்பட்டது.
பின்னர் 2 மணி நேரம் தாமதமாக இரவு 11.45 மணிக்கு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி சென்ற எக்பிஸ்பிரஸ் ரெயில் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
இதே போல ஈரோடு மார்க்கமாக சென்னை மற்றும் பெங்களூரு செல்லும் 3 ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் அந்த ரெயில்களில் பயணம் செய்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து ரெயில்வே டி.எஸ்.பி.பாபு மற்றும் போலீசார் நடத்திய விசாரணையில், இரவு நேரத்தில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தி இருக்கலாம் என்றும், மது போதையில் அங்குகிடந்த 10 அடி நீளமுள்ள உடைந்த தண்டவாள துண்டை ரெயில் தண்டவாளத்தின் குறுக்கே வைத்து சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த பகுதி காட்டுப்பகுதி என்பதால் அங்கு கேமராக்கள் இல்லை. ஆனாலும் அருகில் உள்ள காளி கவுண்டம்பாளையம், மாவேலிக்கரை, மகுடஞ்சாவடி பகுதியில் தண்டவாள பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றி திரிந்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் அந்த பகுதிகளில் உள்ள உள்ள கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து குடிபோதையில் சுற்றி திரியும் நபர்களை பிடித்து விசாரணை நடத்த உள்ளனர். தொடர்ந்து மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.
- தண்டவாளத்தில் ஜல்லிக்கற்கள் நொறுங்கி மாவு போல் கிடந்தன.
- ரெயிலை கவிழ்க்க சதி செய்தால் என்ன தண்டனை கிடைக்கும் என்பது குறித்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருப்பூர்:
திருப்பூர்- வஞ்சிபாளையம் இடையே காவிலிபாளையம் அருகே தண்டவாளத்தில் மர்மநபர்கள் சிலர் கற்களை வைத்திருந்தனர். அப்போது அந்த வழியே வந்த சரக்கு ரெயில் ஏறி சென்ற போது அந்த கற்கள் நொறுங்கியுள்ளது.
இது குறித்து என்ஜின் டிரைவர் திருப்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ரூவந்திகா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு தண்டவாளத்தில் ஜல்லிக்கற்கள் நொறுங்கி மாவு போல் கிடந்தன.
மர்மநபர்கள் தண்டவாளத்தில் வரிசையாக ஜல்லிக்கற்கள் வைத்திருந்த நிலையில் அதில் ரெயில் ஏறி சென்றது தெரியவந்தது. சிறிய கற்கள் என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தொடர்ந்து ரெயில் தண்டவாளத்தில் கற்களை வைத்தது யார்? ரெயிலை கவிழ்க்க சதி நடந்ததா? என்பது குறித்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அந்த பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. அங்கு மது அருந்த வந்த மர்மநபர்கள் போதையில் இது போன்ற செயலில் ஈடுபட்டனரா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தண்டவாளத்தில் கற்கள் வைத்து ரெயிலை கவிழ்க்க சதி செய்தால் என்ன தண்டனை கிடைக்கும் என்பது குறித்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- ரெயில்வே போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
- தண்டவாளத்தில் இருந்த போல்ட்- நட் மற்றும் சிறிய இரும்பு துண்டுகளை மர்ம நபர்கள் கழற்றி சென்று விட்டனர்.
திருவள்ளூர்:
சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர் வழியாக அரக்கோணம் நோக்கி செல்லும் ரெயில்கள் திருவாலங்காடு ரெயில் நிலையம் வழியாக கடந்து செல்லும். மின்சார ரெயில்கள், சரக்கு ரெயில்கள் மற்றும் விரைவு ரெயில்கள் போக்குவரத்திற்கு இந்த ரெயில்பாதை முக்கியமானதாக உள்ளது.
இதில் திருவாலங்காடு- அரிச்சந்திராபுரம் இடையே பிரதான தண்டவாளத்தில் இருந்து பிரியும் "லூப் லைன்" பாதை உள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை 1.15 மணியளவில் இந்த இணைப்பு தண்டவாளத்தில் இருந்த போல்ட்- நட் மற்றும் சிறிய இரும்பு துண்டுகளை மர்ம நபர்கள் கழற்றி சென்று விட்டனர். இதனால் அங்கிருந்த சிக்னலில் கோளாறு ஏற்பட்டது.

ரெயில் பாதையில் சிக்னல் கிடைக்காததால் சந்தேகம் அடைந்த திருவாலங்காடு நிலைய அலுவலர் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் உடனடியாக தண்டவாளத்தை ஆய்வு செய்தனர்.
அப்போது திருவாலங்காடு- அரிச்சந்திராபுரம் அருகே இணைப்பு தண்டவாளத்தில் இருந்த போல்ட்-நட் மற்றும் இரும்பு துண்டுகளை மர்ம நபர்கள் கழற்றி எடுத்துச் சென்றிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் பிரதான தண்டவாளத்தில் இருந்து லூப்லைனுக்கு மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. நள்ளிரவு நேரத்தில் அவ்வழியே மற்ற பயணிகள் ரெயில் மற்றும் சரக்கு ரெயில் எதுவும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இல்லையெனில் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும்.

இதுகுறித்து உடனடியாக ரெயில்வே அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இரவு நேரம் என்பதால் லூப்லைனை உடனடியாக சரிசெய்வதில் சிரமம் ஏற்பட்டது. பிரதான தண்டவாளத்தில் எந்த பிரச்சினையும் இல்லாததால் அவ்வழியே மற்ற ரெயில்கள் பாதிப்பு இல்லாமல் இயக்கப்பட்டன.
தகவல் அறிந்ததும் தெற்கு ரெயில்வே பாதுகாப்புப் படை ஐ.ஜி.ஈஸ்வர ராவ், சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத், தமிழக ரெயில்வே ஐ.ஜி ஏ.ஜி.பாபு திருத்தணி டி.எஸ்.பி.கந்தன், கைரேகை நிபுணர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் விரைந்து வந்தனர். சென்னையில் இருந்து மோப்ப நாய்கள் ஜான்சி, தாராவும் வரவழைக்கப்பட்டன.
போலீசார் மற்றும் அதிகாரிகள் தண்டவாளத்தில் போல்ட்-நட்டுகள் கழற்றப்பட்ட இடத்தில் இருந்த தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய்கள் அங்கிருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடி நின்றது.
அதிகாலை முதல் ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு தண்டவாளத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். காலை 8.30 மணி அளவில் தண்டவாள இணைப்புகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டது. பின்னர் அரக்கோணத்தில் இருந்து வந்த சரக்கு ரெயிலை சரி செய்யப்பட்ட தண்டவாளத்தில் இயக்கி சரிபார்த்தனர். திருவாலங்காட்டில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த சம்பவம் நடந்து உள்ளது.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் இறந்து உள்ள நிலையில் எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதட்டம் ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் திருவாலங்காடு அருகே தண்டவாளத்தில் இருந்து போல்ட்-நட்டுகளை மர்ம நபர்கள் கழற்றி சென்று உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரெயிலை கவிழ்க்கும் முயற்சியாக இது நடந்து இருக்கலாம் என்று ரெயில்வே போலீசாரும், அதிகாரிகளும் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக அரிச்சந்திராபுரம் பகுதியை சேர்ந்த சிலரிடம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இதேபோல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கவரப்பேட்டை ரெயில் நிலையத்தில் லூப்லைனில் போல்ட்-நட்டுகள் கழற்றப்பட்டதால் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் சிக்கியது.
சரக்கு ரெயில் மீது கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் 13 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 19 பயணிகள் காயமடைந்தனர். எனினும் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை.
இந்தநிலையில் தற்போது மீண்டும் திருவாலங்காடு அருகே அதேபோல் தண்டவாள லூப்லைன் பகுதியில் போல்ட்-நட்டுகள் கழற்றப்பட்டு உள்ள சம்பவம் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக அரக்கோணம் ரெயில்வே போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
- அரைமணி நேரம் ரெயில் தாமதமாக புறப்பட்டது.
- ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே தண்டவாளத்தில் கற்களை வைத்து ரெயிலை கவிழ்க்க தீட்டப்பட்ட சதி முறியடிக்கப்பட்டுள்ளது.
மங்களூர் செல்லும் பரசுராமன் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை குமரியில் இருந்து புறப்பட்டது. இரணியல் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை பார்த்த லோகோ பைலட் ரெயிலை நிறுத்தினார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதன்பின் தண்டவாளத்தில் இருந்த கற்களை அகற்றிய பின்னர் அரைமணி நேரம் ரெயில் தாமதமாக புறப்பட்டு சென்றது.
இதையடுத்து தண்டவாளத்தில் கற்களை வைத்தது யார்? என்பது குறித்து ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
- ரெயில் அதிர்ஷ்டவசமாக தப்பியிருக்கிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து மும்பைக்கு நேத்ராவதி எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. மொத்தம் 1,786 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் இந்த ரெயில் 43 ரெயில் நிலையங்களில் நின்று செல்கிறது. பயண நேரம் 32 மணி நேரம் ஆகும்.
இந்நிலையில் இந்த ரெயில் திருவனந்தபுரத்தில் இருந்து நேற்று காலை 9.15 மணிக்கு வழக்கம்போல் புறப்பட்டது. காசர்கோடு ரெயில் நிலையத்திற்கு அருகில் உள்ள பீரிச்சேரி ரெயில்வே கேட் பகுதயில் இரவு 8 மணியளவில் சென்றது. அப்போது என்ஜினில் ஏதோ சிக்கியது போல் பயங்கர சத்தம் கேட்டது.
இதுகுறித்து என்ஜின் பைலட், ரெயில்வே அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார். இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள் அந்த இடத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது ரெயில்வே தண்டவாளத்தின் குறுக்கே கற்கள் கிடந்தன. அவற்றின் மீது ஏறியதால் தான் ரெயில் என்ஜினில் பயங்கர சத்தம் கேட்டிருக்கிறது.

ஆனால் தண்டவாளத்தின் குறுக்கே கற்கள் போட்டது யார்? என்பது தெரியவில்லை. ரெயிலை கவிழ்க்க மர்மநபர்கள் செய்ய சதியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இகுறித்து தகவலறிந்த ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தண்டவாளத்தின் குறுக்கே போடப்பட்ட கற்களின் மீது நேத்ராவதி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியபோதும், அந்த ரெயில் அதிர்ஷ்டவசமாக தப்பியிருக்கிறது. இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- சம்பவ இடத்தில் 9 இரும்பு கம்பிகள் கிடந்தன.
- பிரேக் போட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
புதுடெல்லி:
புதுடெல்லியில் இருந்து பஞ்சாப் மாநிலம் பதிண்டாவுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. ரெயில் இன்று அதிகாலை பதிண்டா ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது ரெயில் தண்டவாளத்தில் இரும்பு கம்பிகள் கிடப்பதை என்ஜின் டிரைவர் பார்த்தார்.
ரெயில் மெதுவாக வந்ததால் டிரைவர் உடனடியாக பிரேக் போட்டு நிறுத்தினார். ரெயிலில் பாதுகாப்புக்கு வந்த போலீசார் தண்டவாளத்தில் இரும்பு கம்பிகள் வைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

சம்பவ இடத்தில் 9 இரும்பு கம்பிகள் கிடந்தன. அவற்றை போலீசார் அப்புறப்படுத்தினார்கள். பதிண்டாவின் பாங்கி நகரில் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. அதை கவிழ்க்கும் சதி செயலாக இது நிகழ்ந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
இதுபற்றி அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதை ரெயில் என்ஜின் டிரைவர் சரியான நேரத்தில் தண்டவாளத்தில் கம்பிகள் கிடப்பதை பார்த்து ரெயிலை நிறுத்தியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
நாடு முழுவதும் சமீபகாலமாக ரெயில் தண்டவாளத்தில் சந்தேகத்திற்கிடமான பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. ரெயில்களை கவிழ்க்க செய்வதற்கான சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக அவை இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு உத்தரபிரதேச மாநிலம் பிரேம்பூர் ரெயில் நிலையம் தண்டவாளத்தில் கியாஸ் சிலிண்டர் வைக்கப்பட்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ரெயில் என்ஜின் டிரைவர் பார்த்து அவசர பிரேக் போட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
போலீசார் விரைந்து சென்று சிலிண்டரை ஆய்வு செய்து தண்டவாளத்தில் இருந்து அகற்றினர். ஆய்வு செய்ததில், 5 லிட்டர் சிலிண்டர் காலியாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்துவதற்கு தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 7 இடங்களீல் ரெயிலை கவிழ்க்க சதி நடந்துள்ளது. உரிய நேர்த்தில் தண்டவாளத்தில் கிடந்த பொருட்கள் அகற்றப்பட்டதால் பெரும் சேதங்கள் தவிர்க்கப்பட்டு உள்ளன. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
- சிறார் நீதிமன்றத்தில் 4 மணி நேரம் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது.
- 2 சகோதரர்கள் மற்றும் 2 சிறுவர்கள் கைது.
நெல்லை:
நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு கடந்த 7-ந்தேதி மாலை 6.50 மணிக்கு பயணிகள் ரெயில் புறப்பட்டது.
அந்த ரெயில் இரவு 8 மணி அளவில் காயல்பட்டினத்தை கடந்து வீரபாண்டியன்பட்டனம் அருகே சென்றபோது தண்டவாளத்தில் சுமார் 5 அடி நீளமுள்ள கம்பி வேலி அமைக்க பயன்படுத்தப்படும் 3 கற்கள் வைக்கப்பட்டு இருந்தது.
இதைப்பார்த்து என்ஜின் டிரைவர், அதிர்ச்சி அடைந்து ரெயிலை நிறுத்த முயன்றார். ஆனால் அதற்குள் ரெயில் சக்கரங்கள் 2 கற்களில் ஏறி உடைத்துவிட்டு நின்றது.
இதையடுத்து தகவலை நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசாருக்கு அவர் தெரிவித்தார். பின்னர் 15 நிமிட தாமதத்திற்கு பின்னர் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
சம்பவ இடத்திற்கு ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா மோகன், சப்-இன்ஸ்பெக்டர் ராம கிருஷ்ணன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
தண்டவாளத்தில் கற்களை வைத்தது யார்? நாசவேலைக்காக கற்களை வைத்தார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது தண்டவாளத்தில் கற்களை வைத்தது வீரபாண்டியன்பட்டினம் அருகே உள்ள அடைக்கலாபுரத்தை சேர்ந்த 19 மற்றும் 18 வயதுடைய 2 சகோதரர்கள் மற்றும் 2 சிறுவர்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை போலீசார் பிடித்து விசாரணை செய்ததில், வாலிபர்கள் 2 பேரும் தண்டவாளத்தில் கல்லை வைத்து ரெயில் ஏறுவதை 'ரீல்ஸ்' வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதற்காக திட்டமிட்டிருந்ததும், அதன்படி தண்டவாளத்தில் கல் மீது ரெயில் ஏறுவதை அவர்கள் வீடியோ எடுத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அதில் 2 பேர் சிறார்கள் என்பதால் நீதிபதிகள் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு சிறார் நீதிமன்றத்தில் சுமார் 4 மணி நேரம் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது.
பள்ளிக்கு சென்று படிப்பது, வாழ்வில் முன்னேறுவது குறித்து அறிவுரை கூறப்பட்டது. மேலும் கைதான 2 வாலிபர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.






