search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Iron bars"

    • சிலம்பரசன், அவருடைய நண்பர் முகேஷ், நிசாகன் ஆகியோர் ஒரே மோட்டார் சைக்களில் அதி வேகமாக சென்றனர்.
    • இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து ஸ்டீபன்ராஜை அடித்து, உதைத்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த நிரவி மேலஓடுதுறை அந்தோனி யார் கோவில்தெருவைச் சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் (வயது 28). இவர், இரும்பு கம்பிகள் விற்பனை செய்யும் வேலை செய்துவருகிறார். இந்த நிலையில் நிரவி காமராஜர் நகரைச்சேர்ந்த சிலம்பரசன், அவருடைய நண்பர் முகேஷ், நிசாகன் ஆகியோர் ஒரே மோட்டார் சைக்களில் அதி வேகமாக சென்றனர். அவர்களை ஸ்டீபன்ராஜ், ஏன் தெருவில் அதிவேகமாக செல்கிறீர்கள். அங்கு நிறைய குழந்தைகள் உள்ளது. அவர்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டால் யார் பதில் சொல்வது என கண்டித்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து ஸ்டீபன்ராஜை அடித்து, உதைத்தனர். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தபோது, 3 பேரும் தப்பியோடிவிட்டனர். இதில் காயம் அடைந்த ஸ்டீபன்ராஜை, அங்குள்ளோர், காரைக் கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஸ்டீபன்ராஜ் நிரவி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • இரும்பு கம்பிகள் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் திடீரென மாயமானது.
    • நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி‌. காலனியை சேர்ந்த போஜராஜன் (வயது 25) மற்றும் 19 வயது சிறுவன் ஆகிய 2 பேர் கட்டுமான பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை பார்வதி நகரில் ஒரு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் அங்கிருந்து இரும்பு கம்பிகள் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் திடீரென மாயமானது. இதுகுறித்து தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி. காலனியை சேர்ந்த போஜராஜன் (வயது 25) மற்றும் 19 வயது சிறுவன் ஆகிய 2 பேர் கட்டுமான பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து போஜராஜன் உள்ளிட்ட 2 பேரையும் கைது செய்தனர்.

    • சாலை ஓரத்தில் குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான மூடப்படாமல் இருந்தது.
    • மக்கள் மற்றும் பாதசாரிகள் மாலைமலர் நாளிதழுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    கோத்தகிரி,

    கோத்தகிரி காந்திமைதானம் பகுதியில் இருந்து காமராஜர் சதுக்கம் செல்லும் வழியில் சாலை ஓரத்தில் குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான மூடப்படாமல் இருந்த குழியால் விபத்து ஏற்படும் அச்சம் இருப்பதாக கடந்த வாரம் மாலைமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இந்த செய்தியின் வாயிலாக சம்மந்தபட்ட அதிகாரிகள் மக்கள் நலனை கருத்தில் கொண்டு அந்த குழியினை இரும்பு கம்பிகள் மூலம் அடைத்தனர். இதனால் இப்பகுதி மக்கள் மற்றும் பாதசாரிகள் மாலைமலர் நாளிதழுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    • மணவெளி தொகுதி டி.என்.பாளையம் பகுதியில் மலட்டாறு பாலம் உள்ளது.
    • இந்தப் பாலத்தில் புதுவை பொதுப்பணித்துறை நீர் பாசன பிரிவு மழை நீர் சேகரிப்பதற்காக தடுப் பணை அமைத்துள்ளனர்.

    புதுச்சேரி:-

    மணவெளி தொகுதி டி.என்.பாளையம் பகுதியில் மலட்டாறு பாலம் உள்ளது. இந்தப் பாலத்தில் புதுவை பொதுப்பணித்துறை நீர் பாசன பிரிவு மழை நீர் சேகரிப்பதற்காக தடுப் பணை அமைத்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவு இளநிலை பொறியாளர் ஸ்ரீநாத் தடுப்பணையை ஆய்வு செய்தார். அப்போது தடுப்பணையில் வைக்குப்பட்டிருந்த ரூ.1லட்சம் மதிப்பிலான ஷட்டரில் இரும்பு கம்பிகள் அறுக்கப்பட்டு திருடு போனது தெரியவந்தது. இதனால் அதன்மூலம் தேக்கி வைக்கப்பட்டிருந்த நீரும் வெளியேறிவிட்டது.

    இது சம்பந்தமாக தவளக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் பிரபு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் தடுப்ப ணையில் இரும்பு கம்பிகளை திருடிய டி.என். பாளையம் புதுநகர் பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன் , சூர்யா மற்றும் போஸ்தரன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    மேலும் அவர்கள் அப்பகுதி வீடுகளில் இருந்த 4 மின்மோட்டார்கள், மினி லாரியில் இருந்த பேட்டரி பொருட்களும் திருடியது தெரியவந்தது. இதையடுத்து ரூ.1லட்சம் மதிப்புள்ள அந்த பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • சிதம்பரத்தில் இரும்பு கம்பிகள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • ஜாசி மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிசந்த் மற்றும் பாலியா மாவட்டத்தைச் சேர்ந்த அனிஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

    கடலூர்:

    சிதம்பரம் பைபாஸ் ரோட்டில் உள்ள கூத்தன் கோயில் பகுதியில் வசித்து வருபவர் லஷ்மி நாராயண ரெட்டி (42) இவர் அதே பகுதியில் தனியார் இன்ஜினியரிங் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது கடையில் இரும்பு கம்பிகளை திருடிய 2 நபர்களை பிடித்து அண்ணாமலை நகர் போலீசில் ஒப்படைத்தனர். இதனையடுத்து போலீசார் விசாரணை செய்ததில் உத்திரபிரதேசம் மாநிலம் ஜாசி மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிசந்த் மற்றும் பாலியா மாவட்டத்தைச் சேர்ந்த அனிஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

    ×