தஞ்சையில், கட்டுமான பொருட்கள் திருடிய இருவர் கைது

இரும்பு கம்பிகள் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் திடீரென மாயமானது.நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி‌. காலனியை சேர்ந்த போஜராஜன் (வயது 25) மற்றும் 19 வயது சிறுவன் ஆகிய 2 பேர் கட்டுமான பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.
தஞ்சையில், கட்டுமான பொருட்கள் திருடிய இருவர் கைது
Published on

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை பார்வதி நகரில் ஒரு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் அங்கிருந்து இரும்பு கம்பிகள் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் திடீரென மாயமானது. இதுகுறித்து தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி. காலனியை சேர்ந்த போஜராஜன் (வயது 25) மற்றும் 19 வயது சிறுவன் ஆகிய 2 பேர் கட்டுமான பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து போஜராஜன் உள்ளிட்ட 2 பேரையும் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com