search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 people arrested"

    • கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள எலப்பார்பட்டியை சேர்ந்தவர் சித்ராதேவி (வயது35). இவரும் அதே ஊரைச் சேர்ந்த நாகசூர்யா (22) என்பவரும் சந்தேகபப்படும்படியாக நின்றுகொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந் தனர். வடமதுரை சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து தலைமையிலான போலீசார் அவர்களிடம் சோதனை நடத்தி 650 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    இன்ஸ்பெக்டர் ஜோதி முருகன் ஆலோசனையின்படி கைது செய்யப்பட்ட 2 பேரும் வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்ப ட்டனர். நாகசூர்யா மீது ஏற்கனவே கஞ்சா விற்றது தொடர்பாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைதான நிலையில் மீண்டும் சிறைக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பார் ஊழியரை 2 வாலிபர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர்.
    • புகாரின்பேரில் வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடியைச் சேர்ந்தவர் பாரதி (வயது 30). இவர் இரட்டை வாய்க்கால் அருகே உள்ள மது பாரில் வேலை பார்த்து வருகிறார். தினமும் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை வியாபாரம் நடக்கும். இந்த நிலையில் சம்பவத்தன்று பாரை திறப்பதற்காக பாரதி சென்றார்.

    அப்போது அங்கு மருதுபாண்டி, முருகன் ஆகியோர் பொதுவெளியில் சத்தம் போட்டுக் கொண்டு இருந்தனர். மேலும் பாரதியை பாரை திறக்க ஏன் தாமதமாக வருகிறாய் என கேட்டு தகராறு செய்தனர். அவரை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கினர்.

    நாங்கள் பெரிய ரவுடி எனக்கூறி பீர் பாட்டிலை உடைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இது குறித்து போடி நகர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மருதுபாண்டி மற்றும் முருகனை கைது செய்தனர்.

    • கட்டி வைக்கப்பட்டிருந்த ஆட்டுக்குட்டியை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திருடிச் சென்றனர்.
    • புகாரின் பேரில் போலீசார் ஆடு திருடிய 2 பேரை கைது செய்தனர்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அரியபித்தாம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன். இவர் சொந்தமாக ஆடு, மாடுகளை வைத்து வளர்த்து வருகிறார். நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் வீட்டு முன்பு கட்டி வைக்கப்பட்டு இருந்த ஒரு ஆட்டுக்குட்டியை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திருடிச் சென்றனர்.

    இது குறித்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் ஜெகதீஸ்வரன் புகார் அளித்தார். நேற்று இரவு ஆத்துமேடு பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல் அளித்த னர்.

    பின்னர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்ததில் ஆட்டு க்குட்டியை திருடியதை ஒத்துக் கொண்டனர். நாயக்கனூரைச் சேர்ந்த போஸ் (வயது32), தோப்பூரைச் சேர்ந்த ஜெயபாலாஜி(27) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ஆட்டுக்குட்டியை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.

    • போலீசார் கோட்டூர் காலனி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.
    • கஞ்சா கடத்தி வந்த 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    வீரபாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோகுல கண்ணன் தலைமையிலான போலீசார் கோட்டூர் காலனி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.

    அப்போது வீரபாண்டியைச் சேர்ந்த சுபாஷ்குமார் (வயது 21), சின்னமனூரைச் சேர்ந்த முனீஸ்வரன் (19) ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் 320 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக கடத்தி வந்தனர்.

    போலீசார் அவர்களை கைது செய்து கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய வயல்பட்டியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரை தேடி வருகின்றனர்.

    • போலீசார் ரோந்தின் சென்றபோது கே.சி.பட்டியில் 2 பேர் லாட்டரி சீட்டுகள் விற்றது தெரியவந்தது.
    • 2 பேரையும் போலீசார் கைது செய்து லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் அருகே கே.சி.பட்டி, குப்பமாள்பட்டி உள்ளிட்ட மலைக்கிராமங்களில் தாண்டிக்குடி போலீசார் ரோந்து பணியில் ஈடு பட்டனர். அப்போது கே.சி.பட்டியில் 2 பேர் லாட்டரி சீட்டுகள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அதில், அவர்கள் குப்பமாள்பட்டியை சேர்ந்த செந்தில் (வயது 38), பெரும்பாறையை சேர்ந்த ராம்குமார் (34) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் அவ்வழியாக நடந்து சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர்.
    • வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

    பழனி:

    பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி தனியார் மில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் அவ்வழியாக நடந்து சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். அந்தபெண் சத்தம் போடவே அருகில் இருந்த பொதுமக்கள் அந்த வாலிபர்களை பிடிக்க முயன்றனர்.

    ஆனாலும் அவர்கள் பைக்கில் சென்றபோது பொதுமக்கள் துரத்திச் சென்று மாவட்ட எல்லையான ெகாழுமத்தில் 2 பேரையும் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.பின்னர் இது குறித்து பழனி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்டது கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்த காதர் மகன் நியாஸ்தீன் (வயது33), காதர் அலி மகன் உமர்முக்தார் பாரூக் (26) என தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

    இவர்கள் இதற்கு முன் வேறு யாரிடமாவது வழிப்பறி செய்துள்ளார்களா? இக்கும்பலில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மது போதையில் வாலிபரின் தலையில் பீர்பாட்டிலால் அடித்ததால் படுகாயமடைந்தார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து 2 வாலிபர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை சுண்ணாம்பு காளவாசல் பகுதியைச் சேர்ந்தவர் காமாட்சி மகன் தினேஷ் (வயது 27). ஜோதிடர். இவரது மைத்துனர் மாரிமுத்து. இவர்கள் 2 பேரும் நிலக்கோட்டை அருகே உள்ள கோட்டை பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பேசிக்கொண்டு இருந்தனர்.

    அப்போது அங்கு வந்த சரவணன் மகன் முத்துமணி (வயது 25), முனியாண்டி மகன் அலெக்ஸ் குமார் (22) ஆகிேயார் மோட்டார் சைக்கிளில் மது போதையில் ஏறி தகராறு செய்தனர். அப்போது அங்கு கிடந்த பீர் பாட்டிலை எடுத்து முத்துமணி ஆத்திரத்தில் மாரிமுத்து தலையில் அடித்தார். இதில் மாரிமுத்து மண்டை உடைந்து ரத்தம் பீறிட்டு வெளியே வந்தது.

    இதைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடவே முத்துமணி, அலெக்ஸ்குமார் ஆகியோர் தப்பி ஓடி விட்டனர். இதனைத் தொடர்ந்து மாரிமுத்து நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இதுகுறித்து தினேஷ் நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மயில்ராஜிடம் அளித்த புகாரின் படி வழக்கு பதிவு செய்து முத்துமணி, அலெக்ஸ் குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.

    • வீடு புகுந்து பணத்தை திருடியவர்கள் குறித்து தனிப்படை போலீசார் விசாரித்து வந்தனர்.
    • சிசிடிவி காமிரா காட்சிகள் மூலம் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1,25,000 பணம், கார் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் கோவிந்தாபுரம் நாயக்கர் புது தெரு 3 வது தெருவை சேர்ந்தவர் சரண்யா.(வயது 37).இவரது வீட்டில் கடந்த 12ந் தேதி இரவு வீட்டின் கதவை உடைத்து பணம் ரூ 1,50,000 த்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.இது குறித்து திண்டுக்கல் நகர் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இதையடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க திண்டுக்கல் எஸ்.பி. பாஸ்கரன் தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    அதனைத் தொடர்ந்து டவுன் டி.எஸ்.பி.கோகுல கிருஷ்ணன் மேற்பார்வையில்,நகர் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில்,சப் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி,நகர் உட்கோட்ட குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரபாண்டியன்,ஜார்ஜ் எட்வர்டு,தலைமை காவலர்கள் ராதாகிருஷ்ணன்,முகம்மது அலி, விசுவாசம்,சக்திவேல் ஆகியோர் இணைந்து விசாரணை நடத்தினர்.அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.அந்த காட்சியில் பதிவான வாலிபர்களின் புகைப்படம் மூலம் போலீசார் அவர்களை தேடினர்.

    அதனைத் தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் மணிகண்டன்,சக்திவேல் ஆகியோர் உதவியுடன் விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர்கள் சீலப்பாடியைச் சேர்ந்த முகமது பிலால் (வயது 30),கோபால் நகரைச் சேர்ந்த நாகேந்திரன் (24)ஆகிய 2 பேர் என்பது தெரிய வந்தது.இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1,25,000 பணம்,கார் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.பின்னர் முகமது பிலால்,நாகேந்திரன் ஆகிய 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • வாழைத்தார்களை வெட்டி குவித்து வைத்ததை நோட்டமிட்ட மற்ற விவசாயிகள் செல்போன் மூலம் தகவல் கொடுத்து மற்றவர்களை ஒருங்கிணைத்தனர்.
    • அவர்கள் அந்த கும்பலை நெருங்கியபோது அரிவாள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

    உத்தமபாளையம்:

    உத்தமபாளையம் பகுதிகளில் உள்ள தோட்டங்களில் வாழைத்தார் திருடிச்செல்லும் சம்பவம் அதிகரித்தது. இந்த நிலையில் உத்தமபாளையம்-கோம்பை சாலையில் வாழைத்ேதாட்டம் அருகே சந்தேகப்படும்படியாக ஒரு கார் நின்றது.

    அதிலிருந்த சிலர் பாதர்கான்பாளையத்தை சேர்ந்த விவசாயி தோட்டத்தில் புகுந்தனர். அங்கு வாழைத்தார்களை வெட்டி குவித்து வைத்தனர். இதனைநோட்டமிட்ட மற்ற விவசாயிகள் செல்போன் மூலம் தகவல் கொடுத்து மற்றவர்களை ஒருங்கிணைத்தனர்.

    அவர்கள் அந்த கும்பலை நெருங்கியபோது அரிவாள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து காரை மடக்கி பிடிக்க முயன்றபோது 2 பேர் சிக்கினர். அவர்களை உத்தமபாளையம் போலீசில் விவசாயிகள் ஒப்படைத்தனர்.

    போலீசார் விசாரணையில் வாழைத்தார் திருடியது யோகேஸ்வரன் மற்றும் சூர்யா என தெரியவந்தது. மேலும் தப்பி ஓடிய புதியவன், அசோக், மாரி ஆகியோரை தேடி வருகின்றனர்.

    • கம்பம்-குமுளி சாலையில் அப்பாச்சி பண்ணை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
    • சோதனையில் யானை தந்தம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    கம்பம்:

    கம்பம் வனப்பகுதியில் யானை தந்தம் கடத்தப்படுவதாக மத்திய வ னவிலங்கு குற்றகா ட்டுப்பாட்டு பணியக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மத்திய வனவிலங்கு குற்றகட்டுப்பாட்டு பணியக இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையில் கம்பம் மேற்கு ரேஞ்சர் ஸ்டாலின் மற்றும் வனத்துறையினர் கம்பம்-குமுளி சாலையில் அப்பாச்சி பண்ணை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கர்நாடக பதிவெண் கொண்ட பைக்கை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் அவர்கள் யானை தந்தம் கடத்தியது தெரியவந்தது. இதனைதொடர்ந்து யானை தந்தத்தை பறிமுதல் செய்து 2 பேரையும் கம்பம் கிழக்கு வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் கூடலூர் கன்னிகாளி புரத்தை சேர்ந்த சுரேஷ்கண்ணன்(32), கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கடைசிகடவு பகுதியை சேர்ந்த முகேஷ்கண்ணன் (28) என்பதும், யானை தந்தத்தை பைக்கில் கடத்தி வந்ததும் தெரியவந்தது. 2 பேரையும் கைது செய்து எங்கிருந்து யானை தந்தம் கடத்தி வந்தனர். இந்த சம்பவத்தில் ேவறு யாருக்கும் தொடர்புள்ளதா என வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையோர பள்ளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் நத்தம் போலீசார் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது விபத்தில் இறந்தாரா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
    • இந்நிலையில் தொழிலாளியை கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வீமாஸ் நகரில் டாஸ்மாக் கடை அருகே கடந்த 6-ம் தேதி ஒரு வாலிபர் இறந்து கிடந்தார். இது குறித்து அப்பகுதி மக்கள் நத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் வந்து விசாரணை நடத்தியதில் இறந்தவர் லிங்கவாடி எல்.வலையபட்டியைச் சேர்ந்த அழகுப்பிள்ளை மகன் சீனி (வயது 35) என்பது தெரிய வந்தது. இவர் தேங்காய் வெட்டும் தொழில் செய்து வந்தார்.

    சாலையோர பள்ளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் நத்தம் போலீசார் அவர் கொலை செய்யப்பட்டா ரா? அல்லது விபத்தில் இறந்தாரா? என்ற கோண த்தில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    விசா ரணையில் சீனி கொலை செய்ய ப்ப ட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்தது. இத னைத் தொட ர்ந்து அதே பகுதி யை சேர்ந்த சில ரிடம் போலீ சார் தீவிர விசா ரணை மே ற்கொ ண்ட னர்.

    சம்பவம் நடந்த அன்று வத்தி பட்டியில் ஆசை என்ப வரின் பெட்டி க்கடையில் சீனி பொரு ட்கள் வாங்கி னார். அப்போது அவர்களுக்கு இடையே வாய்த் தகராறு ஏற்பட்டு ள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆசை, தென்னரசு, ரஜினி என்ற நல்லியப்பன் மற்றும் பாபு ஆகிய 4 பேரும் சேர்ந்து சீனி யை தாக்கினர்.

    அதன்பி ன்னர் சீனி அங்குள்ள டாஸ்மாக் கடைக்கு மது வாங்க செ ன்றார். அப்போது பின் தொட ர்ந்து வந்த அவர்கள் 4 பேரும் டா ஸ்மாக் கடை யில் மீண்டும் தகராறு செய்து தாக்கினர். இதனால் சீனி பரிதாபமாக உயிரிழந்தார் என்பது தெரிய வந்தது. முதலில் சந்தேக மர ணமாக வழக்குப்பதிவு செய்த நிலையில் பின்னர் இது கொலை வழக்காக மாற்ற ப்பட்டது.

    வழக்கில் தொடர்பு டைய புதுக்கோ ட்டையை சேர்ந்த தென்னரசு, வலைய பட்டி ஆசை ஆகிய 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். மேலும் தலைமறை வாக உள்ள வலையப ட்டியைச் சேர்ந்த ரஜினி மற்றும் கவராயபட்டியை சேர்ந்த பாபு ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட சீனிக்கு சின்னப்பிள்ளை என்ற மனைவியும், 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

    • பஸ்சுக்குள் ஏறிய வாலிபர்கள் திடீரென கத்தியை காட்டி பணம் கேட்டு டிரைவரிடம் தகராறு செய்தனர். பயணிகள் சத்தம்போட்டதால் தப்பி ஓடினர்.
    • புகாரின்பேரில் போலீசார் வாலிபர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ஒட்டுப்பட்டியைச் சேர்ந்த ஜெயகாந்தி (வயது 50). இவர் திண்டுக்கல் அரசு பஸ் டிப்போவில் டிரைவ ராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் பயணிகளை ஏற்றிக்கொண்டு நில க்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது செங்கோட்டை பிரிவு அருகே 2 வாலிபர்கள் அரசு பஸ்சை வழிமறித்தனர். அவர்கள் பஸ் ஏறுவதற்காக த்தான் கையை காட்டுகின்ற னர் என்று நினைத்து பஸ்சை நிறுத்தினார். பஸ்சுக்குள் ஏறிய அவர்கள் திடீரென கத்தியை காட்டி பணம் கேட்டு டிரைவரிடம் தகராறு செய்தனர். இதனால் அங்கிருந்த பயணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து சத்தம் போட்டனர்.

    இதனால் அந்த 2 வாலிபர்களும் தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்க ட்ராஜிடம் டிரைவர் ஜெய காந்தி புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். விசாரணையில் அவர்கள் செங்கோட்டை யைச் சேர்ந்த இமானுவேல் (29) அஜய்குமார் (22) ஆகிேயார் என தெரிய வந்தது.

    இதனைத் தொட ர்ந்து சப் இன்ஸ்பெக்டர் அருண்பிர சாத் தலைமை யிலான போலீசார் செங்கோ ட்டைக்கு விரைந்து சென்று அவர்கள் 2 பேரையும் கைது செய்து நிலக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் திண்டு க்கல் சிறையில் அடைக்கப்ப ட்டனர். அரசு பஸ்சிலேயே பயணிகள் இருக்கும் போது கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×