என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சுந்தராபுரத்தில் பெண் உள்பட 2 பேர் கைது
- பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த ஒரு பெண், வாலிபரை வழிமறித்தார்.
- 3 அழகிகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
குனியமுத்தூர்,
கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் சிவகுமார்(33)கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று சுந்தரபுரம் மதுக்கரை ரோடு பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றார்.அப்போது பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த ஒரு பெண், சிவகுமாரை வழிமறித்து, தன்னிடம் அழகிகள் இருப்பதாகவும், அவர்களுடன் ஜாலியாக இருக்கலாம் எனவும் தெரிவித்தார். அவருடன் ஒரு ஆண் ஒருவரும் நின்று கொண்டிருந்தார். அதிர்ச்சியடைந்த சிவகுமார் இதுகுறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போத்தனூர் இன்ஸ்பெக்டர் நடேசன் இருவரையும் பிடித்து விசாரித்தார்.
விசாரணையில் அந்தப் பெண் சுந்தராபுரம் உழவர் சந்தை பின்புறம் அமைந்துள்ள அன்னை இந்திரா நகரில் வசிக்கும் உமாவதி(46) என்பதும், அவருடன் நின்றிருந்தவர் சுக்கிரவார்பேட்டையை சேர்ந்த செல்வம் (51) என்பதும் தெரிய வந்தது.
மேலும் அன்னை இந்திரா நகரில் சம்பந்தப்பட்ட அந்த வீட்டிற்கு சென்று சோதனை நடத்தி, அங்கிருந்த 3 அழகிகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். உமாவதியையும் செல்வத்தையும் போத்தனூர் போலீசார் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்