என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திண்டுக்கல்லில் மது குடிக்க பணம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது
- குடிபோதையில் வழிமறித்து செல்போனை பறித்துக்கொண்டு மதுகுடிக்க பணம் கேட்டனர்.
- போலீசார் 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகில் உள்ள தருமத்துப்பட்டியை சேர்ந்தவர் மாசிலாமணி. இவர் தனது அண்ணன் பாலாஜியுடன் திண்டுக்கல் பூ மார்க்கெட்டுக்கு பூக்களை விற்பனை செய்ய கொண்டு வந்தார். அப்போது அதே பகுதிைய சேர்ந்த 2 பேர் குடிபோதையில் அவர்களை மறித்து செல்போனை பறித்துக்கொண்டு மதுகுடிக்க பணம் கேட்டனர்.
உடனே அருகில் இருந்தவர்கள் அந்த வாலிபர்களை பிடித்து நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில் அவர்கள் கோணப்பட்டி தெற்குதெருவை சேர்ந்த ரமேஷ்(30), மருதாணிக்குளம் பகுதிைய சேர்ந்த விக்கிபாண்டி(35) என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
இதேபோல் அஞ்சுகுழிப்பட்டி வடக்குதெருவை சேர்ந்த மருதை மனைவி லட்சுமி(47). இவரிடம் அதேபகுதிைய சேர்ந்த முருகேசன் மகன் அழகுராஜா(27) குடிபோதையில் தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து சாணார்பட்டி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் அழகுராஜாவை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்