என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது"

    • குடிபோதையில் வழிமறித்து செல்போனை பறித்துக்கொண்டு மதுகுடிக்க பணம் கேட்டனர்.
    • போலீசார் 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகில் உள்ள தருமத்துப்பட்டியை சேர்ந்தவர் மாசிலாமணி. இவர் தனது அண்ணன் பாலாஜியுடன் திண்டுக்கல் பூ மார்க்கெட்டுக்கு பூக்களை விற்பனை செய்ய கொண்டு வந்தார். அப்போது அதே பகுதிைய சேர்ந்த 2 பேர் குடிபோதையில் அவர்களை மறித்து செல்போனை பறித்துக்கொண்டு மதுகுடிக்க பணம் கேட்டனர்.

    உடனே அருகில் இருந்தவர்கள் அந்த வாலிபர்களை பிடித்து நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    போலீசார் விசாரணையில் அவர்கள் கோணப்பட்டி தெற்குதெருவை சேர்ந்த ரமேஷ்(30), மருதாணிக்குளம் பகுதிைய சேர்ந்த விக்கிபாண்டி(35) என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    இதேபோல் அஞ்சுகுழிப்பட்டி வடக்குதெருவை சேர்ந்த மருதை மனைவி லட்சுமி(47). இவரிடம் அதேபகுதிைய சேர்ந்த முருகேசன் மகன் அழகுராஜா(27) குடிபோதையில் தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து சாணார்பட்டி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் அழகுராஜாவை கைது செய்தனர்.

    ×