என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Train"

    • கலைப்புலி எஸ். தாணு இந்த படத்தை தயாரிக்கிறார்.
    • படத்தொகுப்பு பணிகளை ஸ்ரீவத் மேற்கொள்கிறார்.

    இயக்குநர் மிஸ்கின் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் "டிரெயின்" என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. கலைப்புலி எஸ். தாணு இந்த படத்தை தயாரிக்கிறார்.

    இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன், நரேன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை ஃபௌசியா பாத்திமா மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை ஸ்ரீவத் மேற்கொள்கிறார்.

    இந்நிலையில், 'டிரெயின்' படத்தின் முதல் பாடல் 'கன்னங்குழிக்காரா...' இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகிறது. கபிலனின் பாடல் வரிகளில் மிஷ்கின் இசையமத்துள்ள இப்பாடலை நடிகை ஸ்ருதி ஹாசன் பாடியுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுஉள்ளார்கள். 



    • ரெயிலில் ஏறும்போதும் இறங்கும்போதும் பலர் தவறி விழும் சம்பவம் அதிகரித்துள்ளது
    • அவரது உடனடி நடவடிக்கையால் ஒரு பெரும் விபத்து தடுக்கப்பட்டுள்ளது.

    தாம்பரத்தில் ரெயிலில் ஏறும் போது தவறி விழுந்த ஒரு பெண் பயணியை ரெயில்வே ஊழியர் ஒருவர் காப்பாற்றிய அதிர்ச்சி வீடியோவை தென்னிந்திய ரெயில்வே வெளியிட்டுள்ளது.

    அந்த பதிவில், "கடந்த 20 ஆம் தேதி தாம்பரத்தில், கடற்கரை நோக்கிச் செல்லும் ரெயிலில் ஏறும் போது தவறி விழுந்த ஒரு பெண் பயணியை, டிக்கெட் பரிசோதனை ஊழியரான நிதிஷ் குமார் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றினார்.

    அவரது உடனடி நடவடிக்கையால் ஒரு பெரும் விபத்து தடுக்கப்பட்டுள்ளது. இது அவரது கடமை உணர்வையும் பயணிகளின் பாதுகாப்பு மீதான அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அண்மை காலமாக ரெயிலில் ஏறும்போதும் இறங்கும்போதும் பலர் தவறி விழும் சம்பவம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன், நரேன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
    • கலைப்புலி எஸ். தாணு இந்த படத்தை தயாரிக்கிறார்.

    இயக்குநர் மிஸ்கின் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் "டிரெயின்" என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. கலைப்புலி எஸ். தாணு இந்த படத்தை தயாரிக்கிறார்.

    இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன், நரேன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை ஃபௌசியா பாத்திமா மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை ஸ்ரீவத் மேற்கொள்கிறார்.

    இந்நிலையில், 'டிரெயின்' படத்தின் முதல் பாடல் அடுத்த 48 மணி நேரங்களில் வெளியாகும் என தயாரிப்பாளர் தாணு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார். 

    • டிசம்பர் 26-ந் தேதி முதல் ரெயில் கட்டணம் உயர்த்தப்படுவதாக ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
    • கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதி தேதி ரெயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில் ஒரே ஆண்டில் 2வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் டிசம்பர் 26-ந் தேதி முதல் ரெயில் கட்டணம் உயர்த்தப்படுவதாக ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

    அதன்படி, 215 கி.மீ.க்கு மேல் பயணிக்கும் தூரத்திற்கு 1 கிலோ மீட்டருக்கு 1 பைசா வீதம் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

    215 கி.மீ.க்கு மேல் முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிக்க 1 கிலோ மீட்டருக்கு 1 பைசா கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.

    மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏசி அல்லாத பெட்டிகளில் பயணிக்க 1 கி.மீ.க்கு 2 பைசா உயர்த்தப்படும்.

    500 கி.மீ தூரம் ஏசி அல்லாத பெட்டியில் பயணிக்கும் பயணிகள் கூடுதலாக 10 ரூபாய் செலுத்த வேண்டும்.

    உதாரணமாக சென்னையில் இருந்து மதுரை மற்றும் கோவைக்கு செல்லும் ரெயில்களில் ரூ10 கட்டணம் கூடுதலாக செலுத்த வேண்டும்.

    இதுதவிர்த்து அனைத்து ஏசி வகுப்புகளுக்கும் 1 கிலோமீட்டருக்கு 2 பைசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    அதேநேரம், 215 கி.மீ வரை பயணிக்க கட்டண உயர்வு இல்லை. மேலும் புறநகர் ரெயில்கள் மற்றும் மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கட்டண உயர்வு மூலம் ரெயில்வே ரூ.600 கோடி கூடுதல் வருவாயை ஈட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    ரெயில்வே ஊழியர் ஊதியச் செலவு ரூ. 1,15,000 கோடியாகவும், ஓய்வூதியச் செலவு ரூ. 60,000 கோடியாகவும் அதிகரித்துள்ளதால் 2024-25 நிதியாண்டில் மொத்த ரெயில்வே துறையின் செலவு ரூ. 2,63,000 கோடியாக உயர்ந்துள்ளது.

    எனவே இந்த செலவுகளை சமாளிக்க பயணிகளுக்கான கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளதாக ரெயில்வே தெரிவித்துள்ளது.

    முன்னதாக கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதி தேதி ரெயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில் ஒரே ஆண்டில் 2வது முறையாக ரெயில்வே கட்டணங்களை உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.        

    • மொத்தம் 269 வழக்குகளில் இந்தத் தொகை இன்னும் நிலுவையில் உள்ளது
    • போதிய கண்காணிப்பு இல்லாதது மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதில் ஏற்பட்டுள்ள தாமதமே இந்த வருவாய் இழப்புக்கு மிக முக்கியக் காரணம்.

    தனியார் நிறுவனங்களிடமிருந்து இந்திய ரயில்வேக்கு வரவேண்டிய சுமார் 4,087 கோடி ரூபாய் நிலுவைத் தொகை வசூலக்கப்படவில்லை என்று மத்திய கணக்குத் தணிக்கையாளர் (CAG) அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.

    மொத்தம் 269 வழக்குகளில் இந்தத் தொகை இன்னும் நிலுவையில் உள்ளது.

    மேலும், இந்திய ரயில்வேயிடம் தற்போது 4.88 லட்சம் ஹெக்டேர் நிலம் உள்ளது. இதில் 62,740 ஹெக்டேர் நிலம் காலியாகவே கிடக்கிறது.

    இந்த நிலங்களை வணிக ரீதியாகப் பயன்படுத்தி வருமானம் ஈட்டுவதற்காக உருவாக்கப்பட்ட 'ரயில்வே நில மேம்பாட்டு ஆணையத்திடம்' (RLDA) வெறும் 1.6% நிலம் மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    மேம்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களிலும் கூட, நில உரிமை தொடர்பான சிக்கல்கள், ஆக்கிரமிப்புகள் மற்றும் சட்டப் போராட்டங்கள் காரணமாகப் போதிய வருமானம் ஈட்ட முடியவில்லை.

    போதிய கண்காணிப்பு இல்லாதது மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதில் ஏற்பட்டுள்ள தாமதமே இந்த வருவாய் இழப்புக்கு மிக முக்கியக் காரணம் என்று சி.ஏ.ஜி சுட்டிக்காட்டியுள்ளது.

    இதனால் ரயில் டிக்கெட் கட்டணங்கள் தவிர்த்து, நிலங்களை மேம்படுத்துவதன் மூலம் ஈட்ட வேண்டிய டிக்கெட் சாரா வருவாயில் இந்திய ரயில்வே மிகவும் பின்தங்கியிருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது.   

    • வடமாநிலத்தவர்கள் கும்பலாக இருக்கைகளை ஆக்கிரமிப்பதாக பயணிகள் புகார்
    • டிக்கெட் இல்லாமல் பயணித்த 80 பேருக்கு 300 வீதம் ரூ.24,000 அபராதம் விதிக்கப்பட்டது.

    மதுரையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற ரெயிலில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பக்தர்கள் டிக்கெட் எடுக்காமல் பயணித்துள்ளனர்.

    வடமாநிலத்தவர்கள் கும்பலாக இருக்கைகளை ஆக்கிரமிப்பதாக டிக்கெட் எடுத்த பயணிகள் டிக்கெட் பரிசோதகருக்கு புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து டிக்கெட் இல்லாமல் பயணித்த 80 பேருக்கு 300 வீதம் ரூ.24,000 அபராதம் விதிக்கப்பட்டது.

    அதில், ஒருசிலர் மட்டும் அபராதத்தை செலுத்தியுள்ளனர்; மற்றவர்கள் ஜெய்கோ என முழக்கமிட்டவாறு அபராதம் செலுத்தாமல் தப்பி ஓடினர்.

    ரெயிலில் 400க்கும் மேற்பட்ட உ.பி. பக்தர்கள் வந்த நிலையில் சுமார் 100 பேரிடம் மட்டுமே டிக்கெட் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • ஒரு பெட்டியில் சுமார் 23 டன் பார்சல்கள் ஏற்றி செல்ல முடியும்.
    • ரெயில்வே அனுமதித்த பொருட்கள் மட்டுமே எடுத்துசெல்ல முடியும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வேயில் முதன் முறையாக பார்சல்களை அனுப்புவதற்கான 12 பெட்டிகள் கொண்ட தனி ரெயில் அடுத்த மாதம் 12-ந்தேதி முதல் இயக்கப்படவுள்ளன. கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து சென்னை ராயபுரம் வரை இயக்கப்பட உள்ளது. ஒவ்வொரு பெட்டியிலும் ஒரு குறிப்பிட்ட ரெயில் நிலையங்களுக்கான பார்சல்களை ஏற்றுவதற்கு ஒதுக்கப்படும்.

    ஒரு பெட்டியில் சுமார் 23 டன் பார்சல்கள் ஏற்றி செல்ல முடியும். வாரத்தில் ஒரு நாள் இயக்கப்படும் இந்த ரெயில் மங்களூருவில் இருந்து டிசம்பர் 12-ந் தேதி புறப்பட்டு 13-ந் தேதி மதியம் 1.30 மணிக்கு சென்னை ராயபுரம் வந்தடையும். பின்னர், 16-ந்தேதி மாலை 3.45 மணிக்கு ராயபுரத்தில் இருந்து புறப்பட்டு மங்களூரு சென்றடையும்.

    இதில் ரெயில்வே அனுமதித்த பொருட்கள் மட்டுமே எடுத்துசெல்ல முடியும். ரெயிலில் அனுப்பப்படும் பார்சல்களுக்கு 3 பிரிவில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து செல்லும் இந்த ரெயிலானது சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, கோழிக்கோடு, கன்னூர் உள்ளிட்ட 12 ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். அடுத்தக்கட்டமாக சென்னையிலிருந்து திருச்சி, மதுரை வழியாக திருவனந்தபுரத்துக்கு இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த தகவலை தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் இதன் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.
    • இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மன்னர் சார்லஸ் பணிமனை ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.

    லண்டன்:

    இங்கிலாந்தின் சவுத் வேல்ஸ் நகரில் சுமார் ரூ.1,100 கோடி மதிப்பில் ரெயில் பணிமனை கட்டும் பணி நடந்து வந்தது.

    இதில் 36 புதிய டிராம் வண்டிகள் நிறுத்தப்பட்டு பராமரிக்கப்பட உள்ளது.

    இதற்கிடையே, கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் இதன் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.

    இந்நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்ற மன்னர் சார்லஸ் பணிமனை ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.

    அதன்பின் யாரும் எதிர்பாரா வகையில் திடீரென அவரே அந்த டிராம் வண்டியை சிறிது தூரத்துக்கு ஓட்டிச் சென்றார்.

    அதன்பிறகு டிராம் வண்டிக்குள் பொதுமக்களுடன் பயணித்தார். இச்சம்பவம் அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

    • உழவன் எக்ஸ்பிரஸ் நவம்பர் 10 முதல் 29 வரை தஞ்சாவூர் தாம்பரம் இடையே இயக்கப்படும்
    • குருவாயூர் விரைவு ரெயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்

    பராமரிப்பு காரணமாக சென்னை எழும்பூருக்கு கீழ்கண்ட ரெயில்கள் செல்லாது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    1. உழவன் எக்ஸ்பிரஸ் நவம்பர் 10 முதல் 29 வரை தஞ்சாவூர் தாம்பரம் இடையே இயக்கப்படும்

    2. கொல்லம் - சென்னை அனந்தபுரி அதிவிரைவு ரெயிலும் நவம்பர் 10 முதல் 29 வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

    3. ராமேஸ்வரம் - சென்னை சேது அதிவிரைவு ரெயிலும் இயக்கப்படும்10 முதல் 29 வரை தாம்பரம் மட்டுமே இயக்கப்படும்.

    4. ராமேஸ்வரத்தில் இரவு 8.50க்கு புறப்படும் ரெயில் தாம்பரத்திற்கு காலை 6.35 மணிக்கு வரும்

    5. ராமேஸ்வரம் - சென்னை விரைவு ரெயில் நவம்பர் 10 முதல் 29 வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

    6. ராமேஸ்வரத்தில் மாலை 17.50க்கு புறப்படும் ரெயில் தாம்பரத்திற்கு காலை 6.45 மணிக்கு வரும்

    7. மறு அறிவிப்பு வரும் வரை குருவாயூர் விரைவு ரெயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்

    8. சென்னை எழும்பூர் மும்பை சிஎஸ்எம்டி அதிவிரைவு ரெயில் எழும்பூருக்கு பதில் சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும்

    • ஹண்டிங்டன் நிலையத்தில் ரெயில் நிறுத்தப்பட்டு சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர்.
    • கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்துக்கு இங்கிலாந்து பிரதமர் கெர் ஸ்டார்மர் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    இங்கிலாந்தில் டான்காஸ் டரில் இருந்து லண்டன் கிங்ஸ் கிராஸ் பகுதிக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரெயில் கேம்பிரிட்ஜ்ஷையர் அருகே ஹண்டிங்டன் பகுதியில் வந்தபோது மர்ம நபர்கள் பயணிகள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தினார்கள். இதனால் பயணிகள் அலறியடித்து கொண்டு ஓடினார்கள். சிலர் கழிவறைக்குள் சென்று பதுங்கி கொண்டனர்.

    இதுகுறித்து பயணிகள் சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே ஹண்டிங்டன் நிலையத்தில் ரெயில் நிறுத்தப்பட்டு சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது ரெயிலில் இருந்து பயணிகள் பயத்துடன் அவசர அவசரமாக வெளியேறினார்கள்.

    இந்த கத்திக்குத்து தாக்குதலில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் 9 பேர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், பயங்கரவாத எதிர்ப்பு போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே தாக்குதல் நடத்திய நபர்களில் ஒருவர் பெரிய கத்தியை வைத்து இருந்தார் என்றும் எங்கே பார்த்தாலும் ரத்தம் இருந்தது என்றும் சம்பவத்தை நேரில் பார்த்த பயணி ஒருவர் அதிர்ச்சியுடன் தெரிவித்தார்.

    கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்துக்கு இங்கிலாந்து பிரதமர் கெர் ஸ்டார்மர் கண்டனம் தெரிவித்து உள்ளார். "ஹண்டிங்டன் அருகே ரெயிலில் நடந்த தாக்குதல் சம்பவம் பயங்கரமானது மற்றும் ஆழ்ந்த கவலைக்குரியது. பாதிக்கப்பட்ட அனைவருடனும் எனது எண்ணங்கள் உள்ளன.

    அவசர நடவடிக்கைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் போலீசாரின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும்" என்றார்.

    • தீபாவளி பண்டிகை நாடு ழுமுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
    • வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது.

    இன்றைய காலக்கட்டத்தில் பிழைப்பிற்காக நாட்டை விட்டோ அல்லது மாநிலம் தாண்டியோ செல்ல வேண்டிய நிலை உள்ளது. பெரும்பாலானவர்கள் சொந்த ஊர், குடும்பத்தினர்கள், உறவினர்களை விட்டு பிரிந்து சென்று பணி செய்யும் சூழ்நிலையில் ஆண்டுக்கு முறையோ, பல ஆண்டுகளுக்கு ஒரு முறையோ, பண்டிகை, சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவோ சொந்த ஊருக்கு வருவார்கள்.

    அந்த வகையில், சமீபத்தில் தீபாவளி பண்டிகை நாடு ழுமுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் ரெயில்கள் முன்பதிவு செய்தும், முன்பதிவில்லாமலும் படிக்கட்டுகளில் நின்று பயணிப்பது என்பது ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு நிகழ்வாகவே உள்ளது.

    இந்த நிலையில், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோவை பார்த்து, பலரும் அடடே! இது நமக்கு தோன்றாமல் போனதே என்று யோசிக்கும் அளவிற்கு உள்ளது.

    விஷால் என்பவர் பகிர்ந்து வீடியோவில், ஒரு நபர் ரெயில் கழிப்பறையை தனது படுக்கையறையாக மாற்றி பயணிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. பிளாட்பாரத்தில் ரெயில் வந்து நின்ற போது இந்த காட்சியை கண்டு அதிர்ச்சியடைந்த விஷால் வீடியோ எடுத்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த நபரிடம் சென்று கழிவறையை ஒரு படுக்கையறையாக மாற்றியுள்ளீர்கள் என்று கூறும் விஷால் அந்த நபர் வைத்துள்ள பொருட்களை வீடியோவில் காட்டுகிறார். மேலும் இதெல்லாம் உங்கள் வீட்டுப் பொருட்களா? என்று விஷால் கேட்க அந்த நபரோ, அலட்சியமாக ஆம் என்கிறார்.

    இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தள பயனர்களிடையே, இந்திய ரெயில்களின் நிலை, இடப்பற்றாக்குறை, பொது சொத்துக்களை பயணிகள் மதிக்காதது குறித்து விவாதத்தைத் தூண்டியுள்ளது. மேலும் விவாத பொருளாகவே மாறியுள்ளது.



    • அமிர்தசரஸ்-சஹர்சா கரிப் ரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஏசி பெட்டிகளில் தீ பிடித்தது.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்க பாடுபட்டனர்.

    பஞ்சாப் மாநிலத்தில் சிர்ஹிந்த் ரயில் நிலையம் அருகே அமிர்தசரஸ்-சஹர்சா கரிப் ரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஏசி பெட்டிகளில் தீ பிடித்தது.

    இதனையடுத்து ரெயில் நிறுத்தப்பட்டு அணைத்து பயணிகளும் உடனடியாக வெளியற்றப்பட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.

    இந்த விபத்தினால் ஒரு பெண் பயணிக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. ஆனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. 

    ×