search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "High Courts"

    • சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து இருந்தது.
    • மூன்று வாரங்களில் நிதி ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

    தமிழகம் முழுக்க கலைக்கல்லூரிகளில் மாணவிகளுக்கு தனி ஓய்வறை அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக ரூ. 8 கோடியே 55 லட்சம் தொகையை மூன்று வாரங்களில் ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மாநிலம் முழுக்க பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வைக்கப்பட்டுள்ள சானிடரி நாப்கின் எந்திரங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதாக வெளியான செய்தியின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து இருந்தது.

    இந்த வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுக்க கலைக்கல்லூரிகளில் மாணவிகளுக்கு தனி ஓய்வறை அமைக்க வேண்டும் என்றும் இதற்காக தமிழக அரசு ரூ. 8 கோடியே 55 லட்சம் ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    • புதிய தலைமை நீதிபதிகள் நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவு.
    • நீதிபதி சாம் கோஷியை தெலுங்கானா நீதிமன்றத்துக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

    கேரளா, தெலுங்கானா, குஜராத், ஒடிசா உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி, கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக ஆஷிஷ் ஜிதேந்திர தேசாய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    தெலுங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அலோக் ஆராதே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியாக சுனிதா அகர்வாலும், ஒடிசா உயர்நீதிமன்ற நீதிபதியாக சுபாஷிஷ் தலபாத்ராவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும், நீதிபதி சாம் கோஷியை தெலுங்கானா நீதிமன்றத்துக்கு பணி மாறுதல் வழங்கியும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    ×