என் மலர்
நீங்கள் தேடியது "High Court"
- கோவில் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களை பதிவேற்றம் செய்தால் முறைகேடு செய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
- கோவில் தொடர்பான விவரங்களை வெளியிட என்ன தடை இருக்கப் போகிறது?
சென்னை:
தமிழகத்தில் உள்ள கோவில்கள் தொடர்பான டெண்டர்கள், ஒப்பந்தங்கள், நிலங்கள் தொடர்பான பதிவேடுகள் உள்ளிட்டவற்றை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்து அறநிலைத்துறை இணையதளத்தில் வெளியிட கோரி டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து அறநிலையத் துறை சிறப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆஜராகி கோவில் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களை பதிவேற்றம் செய்தால் முறைகேடு செய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
ஏற்கனவே வருவாய் துறையின் தமிழ் நிலம் என்ற இணையதளம் உள்ளது. அந்த இணையதளத்தில் நிலத்தின் வகைப்பாடு குறித்து அனைத்து விவரங்களும் உள்ளது.
இது குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய தயாராக உள்ளோம். ஏற்கனவே ஐகோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு இதேபோல் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது என்று கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, கோவில் தொடர்பான விவரங்களை வெளியிட என்ன தடை இருக்கப் போகிறது? இது தொடர்பாக ஒரு முறையான திட்டம் கொண்டு வர வேண்டும்? என தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை நவம்பர் 12-ந்தேதிக்கு தள்ளிவைத்து விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
- தனது கட்சிக்காரரின் மின் இணைப்பை மீண்டும் வழங்கக் கோரி வழக்கறிஞர் மகேஷ் திவாரி வாதிட்டுக் கொண்டிருந்தார்.
- வழக்கறிஞரின் நடத்தை குறித்து கவனத்தில் கொள்ளுமாறு நீதிபதி கேட்டுக் கொண்டார்.
ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியை வழக்கறிஞர் ஒருவர் மிரட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அக்டோபர் 16 அன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, நீதிபதி ராஜேஷ் குமாருக்கும், வழக்கறிஞருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
நிலுவையில் உள்ள கட்டணங்கள் காரணமாகத் துண்டிக்கப்பட்ட தனது கட்சிக்காரரின் மின் இணைப்பை மீண்டும் வழங்கக் கோரி வழக்கறிஞர் மகேஷ் திவாரி வாதிட்டுக் கொண்டிருந்தார்.
ஆனால், மொத்த நிலுவைத் தொகையில் 50 சதவிகிதம் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற முந்தைய தீர்ப்பை நீதிபதி குமார் மேற்கோள் காட்டினார்.
இறுதியில், வழக்கறிஞர் தனது கட்சிக்காரர் அந்த தொகையை டெபாசிட் செய்ய ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்தது.
ஆனால் வழக்கறிஞர் மகேஷ் திவாரி தனது வாதங்களை முன்வைத்த விதம் குறித்து நீதிபதி குமார் ஆட்சேபம் தெரிவித்தார். நீதிமன்றத்தில் இருந்த ஜார்க்கண்ட் மாநில வழக்கறிஞர் கவுன்சிலின் தலைவரை அழைத்து, வழக்கறிஞரின் நடத்தை குறித்து கவனத்தில் கொள்ளுமாறு நீதிபதி கேட்டுக் கொண்டார்.
அப்போது மகேஷ் திவாரி, நீதிபதி இருக்கையை நோக்கிச் சென்று, "நான் என் வழியில்தான் வாதிடுவேன்" என்றும் நீதிபதியைப் பார்த்து "வரம்பை மீறாதீர்கள்" என்றும் எச்சரித்தார். மேலும் "நாடு நீதித்துறையால் எரிந்துகொண்டிருக்கிறது" என்றும் அவர் கூறினார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் வழக்கறிஞர் மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிந்துள்ளது.
- நீதிபதி ரவீந்திர மைதானியும் இதேபோல எந்தக் காரணமும் குறிப்பிடாமல் விலகினார்.
- ஒரு தனிநபரின் வழக்குகளில் இருந்து இவ்வளவு நீதிபதிகள் விலகுவது இந்திய நீதித்துறை வரலாற்றில் இதுவே முதல்முறை.
உத்தரகாண்டை சேர்ந்த இந்திய வனத்துறை அதிகாரி (IFS) அதிகாரி சஞ்சீவ் சதுர்வேதி அரசின் பல்வேறு மட்டங்களில் நடைபெறும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பவராக அறியப்படுபவர் ஆவார்.
இந்த ஊழல்கள் குறித்து அவர் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் பல்வேறு வழக்குகளை தொடர்ந்திருக்கிறார்.
ஆனால் இந்த வழக்குகள் விசாரிக்கப்படுவதில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் தடங்கல் குறித்து பலரும் கவலை தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே மத்திய அரசு ஊழியர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் செயல்பட்டு வரும் மத்திய நிர்வாக தீர்ப்பாயம் (CAT) க்கு எதிராக சஞ்சீவ் சதுர்வேதி தொடர்ந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து உத்தரகண்ட் உயர் நீதிமன்ற நீதிபதி அலோக் வர்மா விலகியுள்ளார். இது, சதுர்வேதியின் வழக்குகளில் இருந்து ஒரு நீதிபதி விலகுவது இது 16வது முறையாகும்.
இவருக்கு முன், கடந்த செப்டம்பர் 26 அன்று, நீதிபதி ரவீந்திர மைதானியும் இதேபோல எந்தக் காரணமும் குறிப்பிடாமல் விலகினார்.
சதுர்வேதி தொடர்ந்த வெவ்வேறு வழக்குகளில் இருந்து உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள், உயர் நீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகள், கீழமை நீதிமன்றங்களின் இரண்டு நீதிபதிகள் மற்றும் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் எட்டு நீதிபதிகள் இதுவரை விலகி உள்ளனர்.
நீதிபதிகள் வழக்குகளை விசாரிக்காமல் விலகுவதற்கான காரணம் கூறப்படாத நிலையில் ஊழலை மூடி மறைக்க முயற்சி நடக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒரு தனிநபரின் வழக்குகளில் இருந்து இவ்வளவு நீதிபதிகள் விலகுவது இந்திய நீதித்துறை வரலாற்றில் இதுவே முதல்முறை.
- மதுரை மற்றும் டெல்லிக்கு சென்று இருந்த த.வெ.க. வக்கீல் குழு நிர்வாகிகள் இன்று காலை சென்னை திரும்பி இருந்தனர்.
- இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் விஜய் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுத்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
சென்னை:
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த மாதம் 27-ந்தேதி கரூர் அருகே வேலுச்சாமிபுரத்தில் பிரசாரம் செய்த போது கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர்.
நாட்டையே அதிர்ச்சியில் உலுக்கிய இந்த சம்பவத்துக்கு த.வெ.க. தலைவர் விஜய் தான் காரணம் என்று பல்வேறு கட்சிகளும் குற்றம் சுமத்தி வருகின்றன. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று த.வெ.க. சார்பில் சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
த.வெ.க. உள்பட மொத்தம் 7 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. நேற்று அந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சி.பி.ஐ. விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தனர்.
மேலும் நெடுஞ்சாலைகளில் அரசியல் கூட்டங்கள் நடத்த கூடாது என்று உத்தரவிட்டனர். அதோடு த.வெ.க. தலைவர் விஜய்யை கண்டித்து பல்வேறு கருத்துக்களையும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதோடு கூடுதல் இழப்பீடு கோரி மனுதாக்கல் செய்யலாம் என்றும் அந்த மனுவுக்கு தமிழக அரசும், விஜய்யும் 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்குகளின் விசாரணையை தொடர்ந்து த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் முன்ஜாமின் கேட்டு தாக்கல் செய்து இருந்த மனுக்களை நீதிபதிகள் ஆய்வு செய்தனர். பிறகு நீதிபதிகள் அவர்கள் இருவருக்கும் முன்ஜாமின் வழங்க மறுத்து மனுக்களை தள்ளுபடி செய்தனர்.
இது தொடர்பாக நீதிபதிகள் கூறுகையில், "கரூர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில் அவர்கள் இருவரும் பொறுப்பு ஏற்க வேண்டும். காவல்துறை அனுமதி வழங்கிய நேரத்தை மீறியுள்ளனர். எனவே மனுதாரர்கள் கோரிக்கையை ஏற்க முடியாது" என்று தெரிவித்தனர்.
இதற்கிடையே கரூர் சம்பவம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தினேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு மீது நீதிபதி செந்தில்குமார் நேற்று பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். அவர் வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு விசாரணை குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டார்.
அது போல த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜூனா வன்முறையை தூண்டும் வகையில் எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது நீதிபதி செந்தில் குமார் வெளியிட்ட உத்தரவில், "ஆதவ் அர்ஜூனா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரை கிளை நீதிபதிகளின் இந்த அதிரடி உத்தரவுகள் விஜய்க்கும், தமிழக வெற்றிக் கழகத்துக்கும் ஏற்பட்ட பின்னடைவாக கருதப்படுகிறது.
இதையடுத்து த.வெ.க. தலைவர் விஜய் இன்று சென்னையில் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். வக்கீல் பிரிவினரையும் அவர் அழைத்து இருந்தார். மதுரை மற்றும் டெல்லிக்கு சென்று இருந்த த.வெ.க. வக்கீல் குழு நிர்வாகிகள் இன்று காலை சென்னை திரும்பி இருந்தனர்.
அவர்களுடன் விஜய் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை நடத்தினார். ஐகோர்ட் தெரிவித்துள்ள கருத்துக்களின் அடிப்படையில் எந்தெந்த விஷயங்களில் பதில் அளிப்பது என்றும் நீண்ட நேரம் ஆய்வு செய்யப்பட்டது.
சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரை ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டு உள்ள உத்தரவுகளின்படி செயல்படும் பட்சத்தில் அது த.வெ.க.வுக்கு எதிராக அமைந்து விடும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கரூர் நெரிசல் சம்பவத்துக்கு சி.பி.ஐ. விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுக கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மற்றும் டெல்லியில் உள்ள மூத்த சட்ட வல்லுனர்களுடன் விஜய் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் அது கட்சி வளர்ச்சிக்கும், எதிர்கால திட்டங்களுக்கும் உதவியாக இருக்குமா? என்றும் கேட்டறிந்தார்.
இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் விஜய் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுத்து இருப்பதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக சுப்ரீம் கோர்டை அணுகுவது பற்றி அவர் ஆலோசித்து வருகிறார். ஓரிரு நாளில் இது தொடர்பான தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை மறுநாள் (திங்கட்கிழமை) விஜய் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்யப்படக் கூடும் என்று தெரிகிறது.
இதற்கிடையே புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் கைது செய்யப்பட்டால் அது தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கவும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
- தலைமறைவாக உள்ள நிலையில் அவர்களின் முன்ஜாமீன் மனுக்களை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
- கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
கரூர்:
கரூரில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் நடத்தும் ரோடு ஷோவுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க கோரியும், அதுவரை எந்த அரசியல் கட்சிகளுக்கும் ரோடு ஷோ நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என உத்தரவிட கோரியும் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தினேஷ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என். செந்தில்குமார் கரூர் கூட்ட நெரிசல் பலி தொடர்பான வழக்கை விசாரிக்க வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ராகர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டார். இந்த குழுவிடம் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கரூர் போலீசார் ஒப்படைக்க வேண்டும் எனவும் கூறினார்.
ஏற்கனவே இந்த வழக்கினை முதலில் கரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் விசாரணை நடத்தினர். பின்னர் விசாரணை அதிகாரி மாற்றப்பட்டு கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரேமானந்தன் நியமிக்கப்பட்டார்.
இந்த வழக்கில் கரூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழக செயலாளர் மதியழகன், மத்திய மாவட்ட நிர்வாகி மாசி பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சம்பவம் நடந்த பகுதியில் பதிவான சி.சி.டி.வி. பதிவுகளை போலீசார் கைப்பற்றினர். மேலும் காயமடைந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவர்கள் தலைமறைவாக உள்ள நிலையில் அவர்களின் முன்ஜாமீன் மனுக்களை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
இந்த நிலையில் ஐகோர்ட்டு உத்தரவின்படி சிறப்பு புலனாய்வு குழு இன்று விசாரணையை தொடங்கியது. இந்த சிறப்பு புலனாய்வு குழுவில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விமலா, சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. சியாமளாதேவி ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். அது மட்டுமில்லாமல் கூடுதல் துணை போலீஸ் சூப்பரண்டுகள், துணைபோலீஸ் சூப்பிரண்டுகளும் சிறப்பு புலனாய்வு குழுவில் இடம் பெற இருக்கிறார்கள்.
ஐ.ஜி.அஸ்ராகார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினர் இன்று கரூர் வந்தனர். முதல்கட்டமாக குழுவினர் சம்பவம் நடந்த கரூர் வேலுச்சாமி புறம் பகுதியை பார்வையிடுகிறார்கள். அதன் பின்னர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரிடம் தனித்தனியாக விசாரணை நடத்துகிறார்கள். காவல்துறையால் கைப்பற்றப்பட்ட சி.சி.டி.வி. பதிவுகள், டிரோன் பட காட்சிகள் ஆகியவற்றை ஆய்வுக்கு உட்படுத்தி விசாரணையை தீவிர படுத்த உள்ளனர்.
முன்னதாக வழக்கின் அத்தனை ஆவணங்களையும் கரூர் போலீசார் இன்று சிறப்பு புலனாய்வு குழு தலைமை அதிகாரி அஸ்ராகர்க்கிடம் ஒப்படைத்தனர். சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உள்ளிட்டோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்தது.
அவர் சம்பவம் நடந்த கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பின்னர் உயிரிழந்த 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை சந்தித்து குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் சிறப்பு புலானாய்வு குழுவும் விசாரணையை தொடங்கி உள்ளதால் கரூரில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரம், காயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனை, உயிரிழந்தோரின் கிராமங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
- தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத்.
- கூவத்தூரில் இசை கச்சேரி நாளை நடக்க இருக்கிறது
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். இவரது இசையில் சமீபத்தில் கூலி திரைப்படம் வெளியானது. படத்தில் இடம் பெற்ற பாடல்கள் மற்றும் பின்னணி இசை பெரும் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.
அனிருத்தின் இசை கச்சேரி கடந்த மாதம் ஐதராபாத்தில் நடைப்பெற இருந்தது ஆனால் ரசிகர்களின் பெரும் வரவேற்பு இருந்ததால் இன்னும் பெரிய இடத்தில் வைக்கலாம் என முடிவு செய்து அதனை நிறுவனம் ரத்து செய்தது.
பின் சென்னைக்கு அருகில் உள்ள கூவத்தூரில் இசை கச்சேரி நாளை நடக்க இருக்கிறது. இந்நிலையில் இந்த இசை கச்சேரி நடத்த கூடாது எனவும் மாவட்ட ஆட்சியரிடம் அனுபதி பெறாமல் இதனை நடத்துகின்றனர் எனவும் செய்யூர் தொகுதி எம்.எல்.ஏ பனையூர் பாபு தரப்பில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு முறையீடு செய்துள்ளன.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தற்பொழுது தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில் கான்செர்ட் நடத்த எந்தவித தடையும் இல்லை என தீர்ப்பளித்துள்ளது.
- திண்டுக்கல் நீதிமன்றம், அமைச்சர் ஐ பெரியசாமியை விடுவித்து உத்தரவிட்டிருந்தது
- உயர்நீதிமன்ற நீதிபதி, திண்டுக்கல் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தார்.
2006 - 2010 வரை அமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக அமைச்சர் ஐ. பெரியசாமி, அவரது மனைவி மற்றும் மகன்கள் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம், அமைச்சர் ஐ பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி, திண்டுக்கல் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தார்.
மேலும், அடுத்த 6 மாதங்களின் விசாரணையை முடிக்க வேண்டும் என்று தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக் காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
மேலும் இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் பதில் அளிக்கவும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
- முன்னால் அமர்ந்திருந்த ஒருவர் உடனடியாக நீதிமன்ற ஊழியர்களுக்குத் தெரிவித்தார்.
- ஊழியர்கள் அவரை நாற்காலிகளில் படுக்க வைத்து முதலுதவி செய்தனர்.
தெலுங்கானாவின் ஐதராபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் 45 வயதான நாகேஸ்வர ராவ் என்ற வழக்கறிஞர் மாரடைப்பால் இறந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.
நாகேஸ்வர ராவ் காத்திருப்போர் அறையில் அமர்ந்திருந்தபோது திடீரென மார்பில் வலி ஏற்பட்டது. அவரது அசௌகரியத்தைக் கண்டதும், முன்னால் அமர்ந்திருந்த ஒருவர் உடனடியாக நீதிமன்ற ஊழியர்களுக்குத் தெரிவித்தார்.
இதன் பின்னர், ஊழியர்கள் அவரை நாற்காலிகளில் படுக்க வைத்து முதலுதவி செய்தனர். ஆனால் அவரது நிலை மிகவும் மோசமாகியது.
அவர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனைக்குப் பிறகு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
முதற்கட்ட விசாரணையில் அவரது மரணத்திற்கு மாரடைப்புதான் காரணம் என்று தெரியவந்துள்ளது.
- உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது சர்ச்சையில் சிக்கியுள்ளது.
- இது வெட்கமற்ற செயல் என்றும், ஜனநாயகத்தை கேலி செய்வது என்றும் காங்கிரஸ் விமர்சித்துள்ள
மகாராஷ்டிர பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளரும், கட்சியின் மும்பை ஐடி பிரிவின் முன்னாள் தலைவருமான ஆர்த்தி சாத்தேவை மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது. இந்நிலையில் அவர் தற்போது மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாகி நியமிக்கப்பட்டார்.
ஆர்த்தி சாத்தே பிப்ரவரி 2023 முதல் ஜனவரி 2024 வரை கட்சிப் பதவிகளை வகித்தார். பின்னர் அவர் ராஜினாமா செய்தார்.
இது வெட்கமற்ற செயல் என்றும், ஜனநாயகத்தை கேலி செய்வது என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி, மக்களவை சபாநாயகரிடம் அவசர தீர்மானம் ஒன்றை காங்கிரஸ் எம்.பி. ஹிபி ஈடன் அளித்தார்.
இருப்பினும், ஆர்த்தி தனது கட்சி உறுப்பினர் பதவியை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ராஜினாமா செய்ததாகவும், இப்போது அவருக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் பாஜக கூறுகிறது.
- இந்தத் தீர்ப்பை எதிர்த்து மாநில அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
- போக்சோ சட்டத்தின் பிரிவு 7 இன் கீழ் பாலியல் தொல்லைக்கான அளவுகோல்களை பூர்த்தி செய்யாது என்று தெரிவித்தார்.
"ஐ லவ் யூ" என்று சொல்வது மட்டும் பாலியல் தொல்லை ஆகாது, தெளிவான பாலியல் நோக்கம் இல்லாவிட்டால் அது பாலியல் சீண்டலாகக் கருதப்படாது என்று சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தம்தரி மாவட்டத்தில் உள்ள குரூட் காவல் நிலையப் பிரிவில் 15 வயது சிறுமி ஒருவர், தான் வீட்டிற்குச் செல்லும் வழியில் இளைஞர் "ஐ லவ் யூ" என்று சொன்னதாகவும், இதற்கு முன்பும் பலமுறை தொல்லை கொடுத்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
அவரது புகாரின் அடிப்படையில், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்தது.
இருப்பினும், போதிய ஆதாரம் இல்லாததால் விசாரணை நீதிமன்றம் ஏற்கனவே இளைஞரை விடுவித்திருந்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மாநில அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த மனுவை விசாரித்த உய்ரநீதிமன்ற நீதிபதி சஞ்சய் எஸ் அகர்வால், "ஐ லவ் யூ" என்று ஒருமுறை மட்டும் சொல்வது, தொடர்ந்து அல்லது பாலியல் ரீதியாகத் தூண்டும் நடத்தை இல்லாமல், போக்சோ சட்டத்தின் பிரிவு 7 இன் கீழ் பாலியல் தொல்லைக்கான அளவுகோல்களை பூர்த்தி செய்யாது என்று தெரிவித்தார்.
அட்டர்னி ஜெனரல் ஃபார் இந்தியா வெர்சஸ் சதீஷ் (2021) வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டி, பாலியல் ரீதியான சைகை பாலியல் தொல்லையின் வரம்பிற்குள் வர வேண்டுமானால், அதற்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.
இதையடுத்து, மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து, இளைஞரின் விடுதலையை நீதிபதி உறுதி செய்தார்.
- கர்ப்பிணிப் பெண் இறந்த சம்பவத்தில் மருத்துவமனை இயக்குநர் அசோக் குமார் ராய் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
- போதுமான உள்கட்டமைப்பு இல்லாமல் நோயாளிகளை அனுமதிப்பதாகவும் குறிப்பிட்டது.
தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளை ஏடிஎம்களாகப் பார்க்க முடியாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மயக்க மருந்து செலுத்துவதில் ஏற்பட்ட தாமதத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் இறந்த சம்பவத்தில் மருத்துவமனை இயக்குநர் அசோக் குமார் ராய் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தன் மீதான குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி மருத்துவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பிரசாந்த் குமார் தலைமையிலான அமர்வு, தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளை ஏடிஎம் மிஷன்களாகவும், பணம் கறக்கும் கினிப் பன்றிகளாகவும் பார்க்கின்றன.
பல தனியார் மருத்துவமனைகள் மற்றும் நர்சிங் ஹோம்கள் போதுமான உள்கட்டமைப்பு இல்லாமல் நோயாளிகளை அனுமதிப்பதாகவும் குறிப்பிட்டது.
மருத்துவர் நோயாளியை அனுமதித்து, அறுவை சிகிச்சைக்கு குடும்ப உறுப்பினர்களிடமிருந்து அனுமதி பெற்றதாகவும், ஆனால் மயக்க மருந்து இல்லாததால் சரியான நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றும் கூறி, சட்ட நடவடிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி அசோக் குமார் ராயின் மனுவை நிராகரித்தது.
- 145 உறுப்பினர்களின் கையெழுத்துகளுடன் கூடிய நோட்டீஸ் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
- ஆம் ஆத்மி மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் இதில் அடங்குவர்.
டெல்லியில் உள்ள நீதிபதி யாஷ்வந்த் வர்மாவின் வீட்டில் தீ விபத்தின் போது எரிந்த ரூபாய் நோட்டுக் கட்டுகள் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதைத்தொடர்ந்து அவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டும் உறுதியானது.
இந்நிலையில் அவரைப் பதவியிலிருந்து நீக்கக் கோரி மக்களவை மற்றும் மாநிலங்களவை தலைவர்களிடம் எம்.பிக்கள் திங்கட்கிழமை நோட்டீஸ் அளித்துள்ளனர்.
மக்களவையில் 145 உறுப்பினர்களின் கையெழுத்துகளுடன் கூடிய நோட்டீஸ் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திமுக தலைவர் டி.ஆர். பாலு உள்ளிட்டோர் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.
இதே தீர்மான நோட்டீஸை 63 மாநிலங்களவை உறுப்பினர்கள் சபாநாயகரிடம் அளித்தனர். ஆம் ஆத்மி மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் இதில் அடங்குவர்.






